உங்கள் சாதகப்படி சகோதரர்களால் புகழ் அடையும் யோகம் உங்களுக்கு உண்டா ?
கிரகங்கள் படுத்தும் பாடு -( 19 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான் " என்பார்கள்.
ஒருவர் அதிக சகோதரர்களை பெற்றிருந்தால் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்ற அர்த்தத்தில்
இந்த பழமொழி கூறப்பட்டது.ஆனால் இன்றைய காலகட்டங்களில் பொருளாதாய உலகில் அதிக சகோதர்களை பெற்றவர்கள் அவர்களுக்குள்ளே சொத்து தகராறு வந்து ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு பரம எதிரியாகி கோர்ட் ,கேஸ் என சென்று விடுகிறார்கள்.
இந்த பழமொழி கூறப்பட்டது.ஆனால் இன்றைய காலகட்டங்களில் பொருளாதாய உலகில் அதிக சகோதர்களை பெற்றவர்கள் அவர்களுக்குள்ளே சொத்து தகராறு வந்து ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு பரம எதிரியாகி கோர்ட் ,கேஸ் என சென்று விடுகிறார்கள்.
"எனவே ஒரு சிலருக்கு உடன் பிறந்த சகோதர / சகோதரிகளால் ஆதரவும்,பெருமையும் கிடைப்பதற்கு காரணம் அவரது சாதகங்களில் இளைய சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடமும் அதன் அதிபதியான கிரகமும்,அதேபோல மூத்த சகோதர ஸ்தானமான பதினொராமிடமும் அதன் அதிபதியும் பாவரின் பார்வை ,நட்சத்திர சாரம் மற்றும் சேர்க்கை அற்று பலம் பெற்றிருக்க வேண்டும்.இதேபோல சகோதர காரகனாகிய செவ்வாயும் பலம் பெற்றிருக்க வேண்டும்.
மாறாக ஒரு சிலருக்கு சகோதரனே இல்லாமல் போவதும் அப்படி இருப்பினும் எதிரியாகிவிடுவதற்கும் காரணம் என்னவாக இருக்கும என ஆய்ந்து நோக்கில் "சிலரது சாதகங்களில் சகோதரகன் செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் அமர்ந்து "காரக பாவ நாஸ்தியை" செய்துவிடுகிறது.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் சிலருக்கு சுபர் பார்வை மற்றும் சேர்க்கை இல்லாமல் இருப்பின் சகோதரர்களை இல்லாமல் செய்துவிடும்.மீறி இருப்பினும் அவர்களால் எந்நாளும் தொல்லையை தந்துவிடும்.
இதேபோல மூன்று ,பதினொன்று ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் பாவ ஸ்தானம் வாங்கி இருந்தாலும் அல்லது அதில் ராகு,கேது போன்ற பாவிகள் இருந்தாலும் மேற்கண்ட ஸ்தானதிபதிகள் பாவிகளோடு சேர்ந்திருந்தாலோ அல்லது பார்வை மற்றும் சாரம் பெற்றவர்களும் மேலும் சகோதர காரகனான செவ்வாயும் பாவிகளோடு கூடி இருந்தாலும் தொல்லை தரும் சகோதரர்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள்(சில நேரங்களில் சகோதர தோஷமாகி சகோதரர்கள் இல்லாமல் போவதுமுண்டு .அது அதன் கிரக வலிமையைப் பொறுத்தது )
மூன்று ,பதினொன்று ஸ்தானாதிபதியும் மற்றும் சகோதர காரகனான செவ்வாயும் நீசம் மற்றும் மறைவு ஸ்தானங்களில் இருப்பின் சகோதரர்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.
ஆதலால் உடன் பிறந்தவர்களால் ஆதரவும் ,புகழும் கிடைப்பதற்கும் ,அவர்களே எதிரியாக மாறி நம்மிடம் போட்டி போட்டு எதிர்த்து நிற்பதற்கும் நமது சாதகத்தில் உள்ள " கிரகங்கள் படுத்தும் பாடு "தான் காரணம் என ஒரு ஞானம் பெற்ற சோதிடர்கள் வாயிலாக நாம் தெரிந்துகொண்டால் நமது விதிப்பலன் என எண்ணி அதனால் வரும் பிரச்சினைகளை ஒரளவு குறைக்கலாம்.இதுதான் சாதகம் பார்த்துக் கொள்வதின் பயன் ஆகும்.
சகோதரகாரகன் செவ்வாய் மற்றும் இளைய ,மூத்த சகோதர ஸ்தானாதியும் உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் போன்ற வகையில் பலமடைந்து இருப்பின் சகோதரர்களால் அன்பும் ஆதரவும் பெற்று சமூகத்தில் புகழ் அடைவார்கள்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் : 97 151 89 647
Cell; 740 257 08 99
Cell; 740 257 08 99
My Whatsup : 97 151 89 647
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
Do you want to know more information in Astrology ? Click my website
AstroRavichandransevvai.blogspot.com
*******************************
No comments:
Post a Comment