Wednesday, 6 December 2017

போராடி வெற்றிபெறும் மனப்பான்மை யாருடைய சாதகத்தில் உண்டு

போராடி வெற்றி பெறும் மனப்பான்மை யாருடைய சாதகத்தில் உண்டு ?

                       
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 134 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

             ஒரு மனிதனின் வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் மற்றும் அவமானங்கள் வந்தாலும் அவற்றால் உண்டாகும் மன உலைச்சல்களையும் ,வேதனைகளையும் கண்டு துவண்டுவிடாமல் அவற்றையே படிகட்டாக கொண்டு அதில் ஏறி சிலர் சிகரம் தொடுவதற்கும் மற்றும் ஒரு சிலர் அந்த வேதனைகளையும் ,துன்பங்களையும் உள் மனதிற்கு கொடுத்து வெம்பி , வெதுங்கி தனது அறிவையையும் மற்றும் திறமையினையும் மங்க செய்து தாழ்ந்து போகிவிடுகிறவர்கள் பலர் உண்டு.சில நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுவதுமுண்டு.

             ஒரு மனிதன் போராடி வெல்வதற்கும் ,போராட்ட குணமின்றி மங்கி சிதைவதற்கும் அவனது சாதக கட்டத்தில் உள்ள "கிரகங்கள் படுத்தும் பாடே " காரணம் ஆகும்.இந்த நவகிரகங்கள் மனித வாழ்வில் நிகழ்த்தும் கோளாட்டத்தை பரம்பொருள் எனக்கருளிய ஞானத்தை கொண்டு உங்களோடு தொடர்ந்து எழுதி வருகிறேன்.

                ஒரு மனிதனது துணிச்சலான போராட்ட குணத்தை தருவதில் சில ராசிகளுக்கும் அதன் அதிபதிகளுக்கும் அலாதியான பங்கு உண்டு.குறிப்பாக ஒரு மனிதனுக்கு துணிச்சல்,வீரம் மற்றும் போராட்ட குணத்தை தரக்கூடிய செவ்வாய்பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் மற்றும் விருட்சக ராசி காரர்களுக்கும் ,மேலும் ஆத்மாகாரகன் என அழைக்கப்படும் சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசி காரர்களுக்கும் போராட்ட குணமும,போராடி வெல்லும் தன்மையும் உண்டு(killer instinct ).

               இதேபோல பொதுவாக சமூகத்தில் ஆட்சிபுரிபவர்களாக(Ruling power)  ,விட்டுகொடுக்கும் தன்மையில்லாத தலைமையேற்கும் குணம் மிக்கவர்களாக(dominat power) பெரும்பாலும் மிதுனம்,,கடகம் மற்றும் சிம்ம ராசி காரர்களுக்கு உண்டு.

               ஏனைய ராசியை கொண்டவர்களுக்கு போராடி வெற்றி பெறும் ஆளுமை தன்மையில்லை என நான் சொல்ல வரவில்லை.ஏனைய மற்ற ராசிகளைவிட இந்த ராசிகளுக்கு சற்று அதிகம் போராட்ட குணம் இருக்கும்..ஆனால் மேற்கண்ட மேஷம்,மிதுனம்,கடகம் மற்றும் விருட்சக ராசியாக இருந்தாலும் அவர்களது சாதகங்களில் செவ்வாய் மற்றும் சூரியன் நீசம்,அஸ்தமம் போன்ற பலமிழந்து ,மேலும் லக்கனாதிபதியும் வலிமையிழந்து இருப்பின் பலனில் மாற்றம் உண்டு.

              எனவே எந்த ராசியாக இருந்தாலும் அவர்களது சாதகத்தில் செவ்வாய்பகவான் ,சூரியபகவான்  ஆகிய இருவரும் பலமடைந்து இருக்கவேண்டும்.இவ்விரு கிரகங்கள் மட்டும் பலமடைந்து இருந்தாலும் ,மனவலிமைகாரகன் சந்திரபகவானும் ஒருவரது சாதகத்தில் பலமடைந்து நல்ல மனவலிமையோடு போராடி வெற்றி பெற கூடியவராக திகழ்வார்.எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் எந்த கஷ்டம் வந்த சூழலிலும் போராடி வெற்றிபெற லக்கனாதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும்.

            மேற்கண்ட அமைப்பை பெற்றவர்கள் தமது வாழ்வில் அட்டமாதிபதி,ஆறாமாதிபதி மற்றும் பாதகாதிபதியின் திசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களிலோ அல்லது கோசாரப்படி அட்டம சனி,ஏழரை சனி காலங்களிலோ அவமானம் ,வம்பு மற்றும் வழக்குகளை சந்தித்தாலும் மனதிடத்துடன் போராடி பொறுமை காத்து நல்ல திசை வரும் காலங்களில் சாதனையளராக மாறிவிடுவார்கள்.
  தமிழ் மூதாட்டி ஓவையார் தனது "மூதுரை " நூலில் இத்தகைய தன்மையுடையவரின் குணநலத்தை கொக்கு வழி நின்று விளக்குவார்.
"ஓடுமீன்  ஓட உறுமீன்  வரும்வரை
வாடியிருக்குமாம் கொக்கு " என்கிறார்.

            தக்க மனவலிமையுடையவர்கள் சிறுமீன்களையெல்லாம் ஓட விட்டு தனக்கான பெரிய மீன்வரும்வரை கொக்கானது ஒற்றைக்காலில் பறந்துகொண்டு நின்று தவமிருப்பதுபோல  பொறுமையாக காத்திருந்து கவர்ந்து செல்வதுபோல  தக்க காலம் வரும்வரை காத்திருப்பார்"என்கிறார்.

            சிலர் இதுபோன்ற கஷ்டமான சூழலில் தற்கொலை முயற்சி வரை சென்றுவிடுவதற்கான காரணம் அவர்களது சாதகங்களில் போராடி வெற்றி பெறும் தன்மையில்லாமைக்கு அவர்களது சாதகங்களில் செவ்வாய்,சூரியன் மற்றும் சந்திரன் பலம் இழந்து காணப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களது சாதகத்தில் "லக்கனாதிபதி,மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதி தொடர்பெற்று பலம் குறைந்து இவற்றில் ஏதேனும் திசை நடந்தாலே கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனநிலையின்றி சிலர் தற்கொலை முயற்சி செய்ய கூடும்.

            இதேபோல சனி மற்றும் செவ்வாய்பகவான் மறைவுஸ்தானமான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிட தொடர்பு பெறுவது.
லக்கனத்தோடு விரய தொடர்பு பெறுவதும் மேற்கண்ட அமைப்பை தரும்.

             ஒருவரது சாதகத்தில் லக்கனம் மற்றும் ராசியின் இருபுறங்களிலும் பாவகிரகங்கள் அமர்ந்து "பாவகர்த்தாரி யோகம் "பெற்றிருந்தாலோ அல்லது இவ்விரு அதிபதிகள் பலவீனமடைந்து இருந்தாலோ அல்லது இவ்விரு அதிபதிகளும் மறைவிடங்களிலோ அல்லது பாவர்களின் சேர்க்கை பெற்றிருந்தாலோ போராட்ட குணமின்றி சோம்பேறிதனமிக்கவராக இருப்பர்.

நன்றி
(தங்களது சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் துல்லியமாக ஆராய்ந்து போன் வழியாகவே பலன் அளிக்கப்படும்.
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்காணும் எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும்)

செல்
740 257 08 99
  97 151 89 647

வாட்ஸாஅப் எண்
97 151 89 647

                              
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
  M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
My Email id
masterastroravi@gmail.com
My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
***** ***** **** **** **** **** **** ****

No comments: