Saturday, 16 December 2017

கிரகங்கள் படுத்தும் பாடு--( 20 )

கிரகங்கள் படுத்தும் பாடு -(20)

                                    
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
         மானிட வாழ்வில்  கிரகங்கள்  புரியும் கோளாட்டத்தை விளக்கும் தொடர் பதிவு.

      சிலர் கடவுள் ஈடுபாடு மிக்கவராகவும்,ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்க வேண்டும் கூர்ந்து நோக்கில் அவர்களது சாதக கட்டத்தில் வேத விற்பனர் குரு பகவானும்,கர்மக்காரகன் சனி பகவானும் மற்றும் ஞானக்காரன் கேது பகவானும்  பலம் பெற்றிருக்க வேண்டும்.

                ஒருவருடைய சாதகத்தில் குரு அல்லது சனியுடன் கேது பகவான் இணைந்து இரண்டு ,பணிரெண்டு அல்லது ஐந்து ,ஒன்பது இவற்றில் ஏதாவது இடத்தில் இணைந்து பலம் பெற வேண்டும்.

                சனி பகவானையோ அல்லது கேது பகவானோ குருவினால் பார்க்கப்பட வேண்டும்.

                  கேது பகவானகப்பட்டவர் இரண்டு ,ஐந்து ,ஒன்பது மற்றும் பணிரெண்டாமிடத்தில் அமர வேண்டும்.
மூன்று கோள்கள் இணைந்து பத்தாமிட தொடர்பு பெற்றிருத்தல் வேண்டும்.
தர்ம -கர்மாதிபதி யோகம் பெற்றிருக்க வேண்டும்.


                                 

            லக்கனத்திற்கு நான்காமாதிபதியும்,ராசிக்கு நான்காமாதிபதியும் கூடி சுப ஸ்தானம் ஏற வேண்டும்.

         குரு பகவான் பலம் பெற்றிருக்க வேண்டும்.

            கடக கேதுவும், மகர ராகுவும்  ஆன்மீகத்தில் ஈடுபட வைக்கும்.
ஐந்தில் செவ்வாய் ,கேது இணைவு
சூரியனுடன் குரு இணைவு  ஆன்மீகத்தின் ஈடுபாடும் மற்றும் ஆன்மீக அமைப்பின் மீது தலைவராக்கி பார்க்கும்.

              இரண்டில் சுக்கிரன்,புதன் இணைவு ஐந்தில் கேது இணைவு.
ஒருவரது சாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவம் பெற்றிருக்கும்.
2,4,7,8,10,12 ஆம் இடங்களில் கர்மஸ்தானாதிபதி எனும் பத்தாம் வீட்டு அதிபதியுடன் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் தொடர்பு சன்யாச யோகத்தை கொடுக்கும்.

               ஒரு சிலர் ஈடுபாடு  இல்லாதவர்களுக்கு குருவோடு ராகு இணைந்து "குரு சண்டாள யோகம் "பெற்றிருப்பதே ஆகும்.

            இதுபோன்ற அமைப்பை பெற்றிருப்பவர்கள் பகுத்தறிவு உடையவர்களாக இருப்பார்
சனி ,செவ்வாய்  பார்வை ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி மற்றும் குருவிற்கு கிடைத்தாலும் அந்த அமைப்பை பெற்றவர்கள் நாத்திக தன்மை உடையவராகிறார்.
                                            
அன்புடன்
சோதிடர் ரவிசச்சந்திரன்
   M.SC,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆராய்சியாளர
கறம்பக்குடி
புதுகஙோட்டை மாவட்டம்.

செல் :97 151 89 647
               740 257 08 99

My whatsup no: 97 151 89 647

(போன் வழியாக சாதக ஆலோசனை பெறவழி உண்டு.கட்டணம் உண்டு..பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும் )


No comments: