திருமணபொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு--( 186 )
திருமணத்திற்க்கு பொருத்தம் பார்ப்பது என்பது மிகவும் உன்னத பணி ஆகும்.திருமண பொருத்தம் பார்க்கும்போது தம்பதிகள் இருவரது சாதகங்களை தீர ஆராய்ந்து பார்ப்பது அவசியம் ஆகும்.
தம்பதிகள் இருவரது சாதகத்தில் நட்சத்திர பொருத்தம் பார்ப்பதை விட சாதக கட்டபொருத்தம் பார்ப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று ஆகும்.
இருவரது சாதகத்தினிலும் லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளிலும் லக்கனம்,குடும்பம்,களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்யஸ்தானம் ஆகிய நான்கு இடங்களில் இருக்கும் மற்றும் பார்வை செய்யும் கிரகங்கள் ஆகியவற்றினை நன்கு ஆராய்ச்சி செய்து பார்க்கப்படவேண்டும்.
மேலும் அந்த ஸ்தான அதிபதிகள்,களத்திரகாரகன் சுக்கிர பகவான்,காம காரகன் செவ்வாய் பகவான் ஆகியவற்றை ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட நான்கு ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள் உடன் இயற்கை பாவிகளான ராகு, கேது, சனி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் எவ்வித வகையில் தொடர்பு அற்று இருக்கவேண்டும்..இதனை ஆராய்ந்து கவனிக்கப்படவேண்டும்.இதேபோல இந்த ஸ்தான அதிபதிகளுடன் சேர்க்கையற்று இருக்கவேண்டும் அல்லது மேற்கண்ட ஸ்தான அதிபதிகள் மறைமுக ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பணிரெண்டாம் செல்லாமல் இருத்தல் நலம் பயக்கும்.
தம்பதிகள் இருவரது சாதகத்திலும் புத்திரஸ்தானம் என அழைக்கப்படும்
ஐந்தாமிடம் ,புத்திரகாரகன் குருபகவான் ஆகிய இரண்டையும் அரவுகளான ராகு,கேது பகவான் எவ்வகையிலும் தொடர்பு அற்று இருத்தல் வேண்டும். புத்திரகாரகன் மற்றும் புத்திர ஸ்தானாதிபதி ஆகிய இரண்டுடன் மறைவிட அதிபதிகள் தொடர்பு அற்று இருக்கவேண்டும்.
ஐந்தாமிடம் ,புத்திரகாரகன் குருபகவான் ஆகிய இரண்டையும் அரவுகளான ராகு,கேது பகவான் எவ்வகையிலும் தொடர்பு அற்று இருத்தல் வேண்டும். புத்திரகாரகன் மற்றும் புத்திர ஸ்தானாதிபதி ஆகிய இரண்டுடன் மறைவிட அதிபதிகள் தொடர்பு அற்று இருக்கவேண்டும்.
சனிபகவான் லக்கனம், ராசி,ஏழம் இடம் மற்றும் ஏழாமிட அதிபதி இவைகளை தம்பதிகள் இருவரது சாதகத்திலும் பார்க்காமல் இருத்தல் நலம்.
சனிபகவான் சுக்கிரன் உடன் இணைந்தோ அல்லது பார்வை பெற்றோ இருப்பின் அந்த பெண்ணோ அல்லது ஆணோ மற்றவர் மீது தீராத காதல் கொண்டவர்களாக இருப்பர்.
பெண்களது சாதகத்தில் இரண்டாம் வீடு என்பது பலம் பெற்று குருஅல்லது சுக்கிரன் அல்லது புதன் இரண்டாம் வீட்டில் இருப்பின் அந்த பெண்ணின் பிறந்த வீடும்,புகுந்த வீடும் புகழ்பெற்று விளங்கும்.
தாம்பத்ய வாழ்வில் இருவரும் முழு நிறைவோடு இன்பம் பெற்று சரிநிகராக திகழ பெண் சாதகத்தில் உள்ள செவ்வாய் பகவானையும்,ஆண் சாதகத்தில் உள்ள சுக்கிரன் பகவானையும் நன்கு ஆராய்ந்து கவனிக்கப்படவேண்டும்.
தம்பதிகள் இருவரது சாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் இரண்டும் ஒன்றுக்கொன்று கேந்திர ம் பெற்றிருப்பது ஒருவர் மீது ஒருவர் தீராத காதல் கொண்டவராக திகழ்வர்.
ஏழாம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன் இருக்கும் ஆண் மகனுக்கு எட்டாம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன் உள்ள பெண்ணை திருமணம் செய்யக்கூடாது.அவ்வாறு திருமணம் செய்தால் அந்த ஆண் மகனால் அந்த பெண்ணை தாம்பத்ய சுகத்தில் திருப்தி செய்ய முடியாது.
இருவரது சாதகத்திலும் ஏழாம் அதிபதியானது ஏழாம் வீட்டிற்க்கு 6,8,12 ல் மறையக்கூடாது.யாரவது ஒருவரது சாதகத்தில் இருக்கலாம்.
இருவரது சாதகத்திலும் ஏழாம் அதிபதியானது ஏழாம் வீட்டிற்க்கு 6,8,12 ல் மறையக்கூடாது.யாரவது ஒருவரது சாதகத்தில் இருக்கலாம்.
நன்றி நன்றி நன்றி.
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
தொடர்புக்கு
வாட்ஸ்அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website click here
AstroRavichandransevvai.blogspot.com
...................................................................
No comments:
Post a Comment