Saturday, 9 December 2017

சாதகப்படி தங்களுக்கு இனிய இல்லறம் அமைய ?

சாதகப்படி தங்களுக்கு இனிய இல்லறம் அமைய ?


                                         

கிரகங்கள் படுத்தும் பாடு-( 185 )

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

         இனிய இல்லறம் ஒருவருக்கு அமைய அவரது சாதக கட்டத்தில் குடும்ப ,களத்திர ஸ்தானதிபதிகள் (2,7)
அல்லது லக்கன, களத்திர ஸ்தானாதிபதிகள் (1,7) ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவராக இருப்பின் இணைபிரியா அன்புடையவராக இல்வாழ்வில் திகழ்வார்கள்.

     லக்கனாதிபதியானது களத்திர ஸ்தான அதிபதியான ஏழாம் அதிபதியையோ அல்லது களத்திரகாரகர் சுக்கிரனை பார்த்தால் ஈடுயிணையில்லா அன்பு உடையவர்களாக இல்வாழ்வில் திகழ்வார்கள்.

        ஏழாம் அதிபதி உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளில்  பலமடைந்து இருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதி நீசபங்க யோகம் பெற்று இருந்தாலும் தம்பதிகள் இருவரிடையே அன்புடையவர்களாக திகழ்வர்.

           இதேபோல சுக ,களத்திர ஸ்தானாதிபதிகள் (4,7) ,ஜீவன,களத்திர ஸ்தானாதிகள்(7,10 ) இவ்விரு அமைப்புகள் ஒருவருக்கு ஓருவர் சம்பந்தம் இல்வாழ்க்கை இனிக்கும்.

                                  

            திருமணம் ஆன தம்பதிகள் பொருளாதார வாழ்வில் முழுவதும் திருப்தி உடையவர்களாக திகழ அவர்களது சாதகத்தில் லக்கன,தன மற்றும் களத்திர ஸ்தானாதிபதிகள் (1-2-7 ) ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று இருந்தால் சகல ஐஸ்வர்யங்கள் நிறைந்தவர்களாக திகழ்வர்.

            மணமகனின் லக்கனாதிபதி இருக்கும் இடம் மணமகளின் ராசியாக அமைவதும்,மணமகளின் லக்கனாதிபதி இருக்கும் இடம் மணமகனின் ராசிக்கு ஏழாம் இடமாக அமைவது நலம்.

         குருபகவான் அல்லது பூரண சந்திரன் ஏழாம் இடத்தில் இருப்பது தம்பதிகளிடையே ஒற்றுமையை அதிகரிக்கும்.

          களத்திர ஸ்தானாதிபதியானது மறைவிட ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பணிரெண்டாம் இடத்தில் நின்று கொண்டிருந்தால்  அடிக்கடி பிரயாணம் செய்பவராக அல்லது மருத்துவ கணவராக அமைய அவர்களுக்கு இடையே பலவீனம் நீங்கி இல்வாழ்வு சிறக்கும்.

                                   

        மணமுடிக்க இருக்கும் மணமகனின் சாதகத்தில் சனி ஏழாம் அதிபதியாக இருந்து ஜென்ம விரோதியான செவ்வாய் பகவான் வீட்டில் இருப்பின் அயல்நாட்டில் பணிபுரியும் கணவராக இருந்தால் அவர்களது இல்லறம் நல்லறமாக அமையும்.

       திருமணம் செய்து கொள்ள கூடிய காலங்களில் தம்பதிகளுக்கு இடையே வயது இருவரும் இரட்டை படையாகவோ அல்லது ஒற்றை படையாகவோ இல்லாமல் இருந்தால் நலம்.

        இருவரது சாதகங்களில் யோக பங்கம் இல்லாமல் இருப்பின் இல்லறம் சிறக்கும்.உதாரணமாக பையன் சாதகத்தில் கெஜ-கேசரி யோகம் இருந்து பையனின் சாதகத்தில் சகடையோகம் இருக்க கூடாது.

      தம்பதிகள் இருவரது சாதகங்களிலும் பதினொறு மாத இடைவெளியில் ஒரு திசை முடிந்து மறுதிசை ஆரம்பிக்காமல் இருப்பின் சிறப்பு தரும்.

                                

   தம்பதிகள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் காலத்தில் மறைவிட ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பணிரெண்டாம் இட அதிபதி திசையானது நடைபெறாமல் இருப்பின் திருமணத்திற்க்கு உகந்தது.

        இருவருக்கும் பகை திசைகள் நடைபெறாமல் இருத்தல் நலம் பயக்கும்.மேலும் 7,8 மற்றும் 11,12 க்குரியவர்கள் திசை சந்திப்புகள் இல்லாமல் இருப்பின் சிறப்பு தரும்.

    தம்பதிகள் இருவருக்கும் ஒத்த ராசி இருப்பின் ஒத்து வாழ நியதி இல்லை "என சொல்வதன் நோக்கம் என்னவெனில் காரணம் தம்பதிகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அமையும் பட்சத்தில் ஒரே ராசியும்,ஒரே திசையும் நடக்க வாய்ப்பு உண்டு என்பதால் ஆகும்.இருவருக்கும் நடைபெறும் திசையானது  யோக திசையாக இருக்கும் பட்சத்தில் மணமுடிக்க இல்லறம் இனிக்கும்.

           இருவரது சாதகத்தில் உள்ள சூரியன் ஒன்றுக்கொன்று கேந்திர ஸ்தானத்தில் அமைவது நல்லது.

        பெண்ணின் சந்திரன் இருக்கும் இடம் பையனின் ஏழாம் அதிபதியின் வீடாகவோ அல்லது பையனின் சுக்கிரன் இருக்கும் ஏழாம் அதிபதியின் உச்ச வீடாகவோ அல்லது பையனின் சுக்கிரன் வீடாகவோ  அமைய இல்லறம் நல்லறமாக அமையும்.

  நன்றி நன்றி நன்றி. !

                               

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  தொடர்புக்கு

  வாட்ஸ்அப்
    97 151 89 647

      செல்
     740 257 08 99
           97 151 89 647

                                      
      அன்புடன்
   சோதிடர் ரவிச்சந்திரன்
        M.Sc ,MA ,BEd
  சோதிட ஆராய்ச்சியாளர்,
   ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My Blogspot
  AstroRavichandransevvai.blogspot.com
.............................................................................

No comments: