Friday, 11 June 2021

மறைவிட ஸ்தனங்கள் (6,8,12) அல்லல் தருமா ? நன்மை? தருமா ?

மறைவிட ஸ்தானங்கள் (6-8-12 ஆம் இடம் )

அல்லல் தருமா? நன்மை தருமா?


                  


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     6 -8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கிரகங்களும்,

       6 -8 -12ஆம் இடங்களுக்கு அதிபதிகளாக வருகின்ற கிரகங்களும் ,


         6- 8- 12ஆம் இடத்து அதிபதிகளோடு சேர்ந்து இருக்கின்ற கிரகங்களும்,


       பகை வீட்டிலோ அல்லது நீச்ச வீட்டிலோ இருக்கின்ற கிரகங்களும், 


      பாவ கிரகங்களோடு இருக்கின்ற கிரகங்களும் தீமைகளைச் செய்திடும் அல்லது நன்மைகளை நல்குவதில்லை.


   இது பொதுவான அடிப்படை விதியாகும்.இந்த பொது விதியானது சில விதிகளின் அடிப்படையிலும், ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடும்.


அவற்றை பற்றி சிந்திப்போமோக,


   1) 6- 8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கோள்கள் இலக்கனத்தின் அடிப்படையில் அவர்கள் பாவர்களாக வந்தால்

 அவை நன்மைகளை வழங்கும் வாய்ப்பு அதிகம் உண்டு.


  2) 6- 8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கிரகங்கள்  இயற்கை சுப கிரகமான வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவற்றின்  தொடர்பினை அடையும் பொழுது அவை சுபத்துவம் ஆகி அதன் தசா புக்தி காலங்களில் யோக பலன்களை தந்து விடுவது உண்டு.


  3)  6 -8- 12ஆம் இடங்களில் நின்றிருக்கும் கோள்கள், அந்த

 6 -8- 12க்கு உரிய சிறப்பு யோகங்களில் சம்பந்தப்பட்டிருந்தால் நன்மைகளை மிகுதியாக வழங்கும்.


 4) இயற்கை பாவ கிரகங்கள் ஆகிய செவ்வாய், சனி, சூரியன் ராகு மற்றும் கேதுக்கள் ஆறாமிடத்தில் நின்று இருக்கும்போது நன்மைகளையே அதிகம் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்.


  3) 6- 8 -12-ஆம் இடத்திற்கு அதிபதியாக வருகின்ற கிரகங்களுக்கு, திரிகோண ஸ்தானமான 5, 9  ஆம் ஆதிபத்தியம்

 இருக்குமானால் அவர்கள் நன்மையையே அதிகம் நல்க வேண்டியது ஆகிறார்கள்.


 4) 6- 8- 12ம் இட  

அதிபதிகளோடு இதர கிரகங்கள் சேரும் போது அந்த சேர்க்கையில் ஏதாவது வலுவான யோக அமைப்பு உருவாகுமானால் அந்த இதர கிரகங்கள் நன்மைகளையே அதிகம் வழங்குவார்கள்.


 5) 6-8-12 ஆம் இட அதிபதிகள் எந்த இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் அதை இயற்கைச் சுபக்கிரகமான வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தொடர்பினை பெரும்பொழுது அந்த அதிபதிகள் அதன் தசை காலங்களில் நற்பலனை தந்து விடுகிறது.


 6) பகை வீட்டிலும், நீச வீட்டிலும் இருக்கின்ற கிரகங்கள் ஸ்தான பலத்தாலும், இதர கிரகங்களின் நல்ல சேர்க்கை மற்றும் பார்வையாலும், நீசபங்க யோகம் போன்றவற்றாலும் பலப்பட்டு நன்மைகளை அதிகம் நல்கக்கூடியவர்களாக மாறிவிடுகின்றது.


 இவ்வாறு விதிகள் மற்றும் விதிவிலக்குகள் ஆகிய இரண்டையும் சேர்த்து பார்த்தே பலன்களை நிர்ணயிக்க வேண்டும்.


எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த ஒரு ஜாதகத்திலும் முழுக்க, முழுக்க அதிக நன்மையை மட்டும் வழங்குகின்ற கிரகம் என்று எதுவும் இருக்க முடியாது. அதே போல முழுக்க , முழுக்க அதிக கெடுதல் மட்டும் வழங்கும் கிரகம் என்று எதுவும் இருக்க முடியாது வேண்டுமென்றால் நன்மைகளை அதிகம் வழங்கும் கிரகம் மற்றும் தீமைகளை அதிகம் வழங்குகின்ற கிரகம் என்று தான் கிரகத்தினை வகைப்படுத்த முடியும்.


நன்மைகளை அதிகம் வழங்கும் கிரகங்களை "லக்கின யோகர்கள்" என்று கூறப்படுகின்றன. தீமையே அதிகம் நல்கும் கோள்களை 

"லக்கினப் பாவர்கள்" என்று கருதப்படுகிறது.


கிரகங்கள் அமைந்திருக்கின்ற விதங்களை பொருத்து லக்கின யோகர்கள் தீமைகளை அதிகம் வழங்க கூடியவர்களாகவும், லக்கினப் பாவர்கள் நன்மைகளை அதிக வழங்கக் கூடியவராகவும் மாறிவிடக்கூடும்.எனவே ஜாதகத்தில் எதையும் அறுதியிட்டு கூற முடியாது.


  இயற்கைப் பாபக் கிரகமாக சனி, செவ்வாய், சூரியன், ராகு  மற்றும் கேதுக்கள் இருக்கும் இடம் மற்றும் தொடர்பு பெறும் கிரகங்களை பொருத்தும் நன்மைகளை செய்து விடுவது உண்டு.


  இதே போல இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தான் பெற்ற மற்றும் தொடர்பு பெறும் ஸ்தானத்தை பொருத்தும் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் கிரகங்களை பொருத்தும் கெடுதலை தந்து விடுவதும் உண்டு.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

  9715189647


       செல்

  9715189647

‌.  7402570899


My website

www.astroravichanransevvai.in


அன்புடன்

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன் 

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: