Friday, 11 June 2021

காதலா ? காமமா ?

   காதலா ? காமமா?

                        


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


         ஒருவரது ஜாதகத்தில்  காதல் உணர்வு பற்றியும் மற்றும் காம உணர்வு பற்றியும் அறிந்து கொள்ள  உதவும் ஸ்தானம் மற்றும் காரக கிரகம் பற்றியும் இந்த பதிவில் அறிந்து கொள்ள முயல்வோம்.


   காம உணர்வு பற்றி அறிந்துகொள்ள 

மூன்று, ஏழு மற்றும் பன்னிரண்டாம்  இடங்கள் போன்ற ஸ்தானங்கள் உதவி புரிகிறது.


      கிரகங்களில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பகவானை கொண்டு அறிந்து கொள்ள முயலலாம்.


  மூன்றாமிடம் ஒருவரது வீரியத்தன்மை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. 

       காம வாழ்வில் அவனது/ அவளது செயல் திறனையும் மற்றும் அதில் ஈடுபடும் ஆர்வத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது.


   மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியும் ,காம காரகன் கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய்  சுபத்தன்மை அடைந்து இருப்பின் முறையான வழியில் காம உணர்வினை வெளிப்படுத்தும் தன்மை சாதகரிடம் மிகுதியாக காணப்படும். மாறாக பாவ கிரகங்களான சனி,ராகு மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரக தொடர்பு ஏற்பட்டு பாவதன்மை அடைந்திருப்பின் முறையற்ற வழியில் மற்றும் தரங்கெட்ட முறையில் காம உணர்வினை வெளிப்படுத்துவனாகவும் மற்றும் அனுபவிப்பவனாகவும் இருப்பான்.


       ஏழாம் இடம் என்பது தனக்கு வரும் வாழ்க்கை துணையின்  கற்புநிலை மற்றும் அவர்களுக்கு இடையே உருவாகும் 

காம உறவின் நிலை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.


                        


   

  ஏழாம் இடம் மற்றும் அதன் ‌அதிபதி , களத்திரகாரகன் சுக்கிரன் உடன் இயற்கை சுப கிரகங்கள்  தொடர்புகொண்டு சுபத்துவ நிலையினை அடைந்த நிலையில் "மலரினும் மெல்லிது காமம், சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்" 


" ஊடலில் தோற்றவர் வென்றார்" என்ற வகையில் வள்ளுவர் காட்டும் வழி நின்று தனக்கு வரும் இணையோடு மென்மையான முறையில் அன்பான முறையில் மனதை கவரும் வகையில் காம களியாட்டங்களில் ஈடுபடுவார்கள்.


  12-ஆம் இடம் என்பது அயன, சயன ,முக்தி போன்றவற்றை தரும் ஸ்தானமாகும். இங்கு சயனம்  என்பது படுக்கை சுகம் அல்லது கட்டில் சுகத்தை  குறிக்கும் ஸ்தானமாகும்.


     நவகிரகங்களில் களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் காமகாரகன் செவ்வாய் உடன் பாவ கிரகங்களான சனி, ராகு போன்றவை தனித்தனியாக அல்லது சேர்ந்தோ ஜாதக கட்டத்தில் மூன்று,ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடங்களுடன் சுபத்துவம் பெறாத நிலையில் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் மாறுபட்ட சற்று கூடுதலான காம உணர்வு உடையவராகத் திகழ்வார்.


    மூன்று, ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் பகவான் சுபத்துவ நிலை அடைந்து இருப்பின் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயரிய  நிலையில் படுக்கை சுகத்தில் திருப்தி அடையும் நிலையை குறிக்கும். பாவத்துவம் ஆன நிலையில் 

"பல மலரில் தேன் பருகும் வண்டுபோல" திருப்தியற்ற நிலை உடையவராக இருப்பார்.


   சுக்கிர பகவானை காதலுக்கு உரிய கிரகமாக கருதமுடியாது. இதனை "களத்திரகாரகன்" என்றும் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க உதவும் கிரகம் என்றும் கொள்ளலாம். 


   ஒருவரது ஜாதகத்தில் நீடித்த தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் ஆனவர் வக்கிரம், அஸ்தமனம் மற்றும் பகை வீடு ஏறி நிற்கும் பொழுது தாம்பத்திய சுகம் கிடைப்பதில் காலதாமதம் ஆகும் அல்லது தாம்பத்திய சுகம் மறுக்கப்படும்.


   ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் பாவத்துவ நிலை அடையாமல் இருந்து சுக்கிரன் தொடர்புடைய தசா, புத்தி  மற்றும் அந்தரங்களிலோ அல்லது சுக்கிரன் தொடர்புடைய வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் தசைகளிலும் ஒருவர் நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகத்தை அவர் பெறுவார் என்ற வகையில் அந்த நேரத்தில் அவருக்கு திருமணம் நடக்க வைக்கும்.


   ஒருசிலருக்கு இளவயதில் சுக்கிர தசை வந்து பாவத்துவ நிலையை அடைந்து இருப்பின் பெற்றோர்களை விட்டு கண்டதும் காதல் என்ற வகையில் உடலியல் கவர்ச்சிக்கு ஆட்பட்டு தனக்கு பிடித்தவருடன் வீட்டைவிட்டு ஓடிச் செல்லும் நிலையோ அல்லது காதல் வயப்படும் நிலையோ ஒருவருக்கு உண்டாகும். இதனால்தான் 

"குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்பார்கள்.


   ஒருவரது ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஏழுக்குடையவர்கள் தொடர்புகொண்டு சுபத்துவ நிலையினை அடைந்து இருப்பின் காதல் வயப்படும் உணர்வினை ஜாதகருக்கு உரிய தசா புத்திகளில் தரும்.குறிப்பாக சுக்கிரன் தசைகளிலோ அல்லது சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் வீடுகளுடன் தொடர்பு கொண்ட கிரகங்கள் புத்திகளிலோ இவர்களது காதல் நிறைவேறும் .


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் உடன் ஐந்து , ஏழு மற்றும் ஒன்பதுக்குடையவர்கள் சுபத்துவ நிலையில் தொடர்பு கொள்ள காதல் கைகூடும்..


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647


        செல்

    9715189647

      7402570899


My website

   www.astroravichandransevvai.in

                           


  அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம்.


                      


No comments: