லக்கினம் மற்றும் லக்கினாதிபதி காட்டும் பலன்கள் -(1)
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
இலக்கினாதிபதி மற்றும் ஜீவன காரகனான பத்துக்குடையவன் ஆகிய இருவரும் மறைவிட ஸ்தானமான 6, 8 ,12-ல் மறைந்து வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாமல் பலவீனப்பட்டு இருந்தால் ஜாதகருக்கு கஷ்ட ஜீவனம் உண்டாகும்.
அதே நேரத்தில் மாறாக லக்கினாதிபதியும் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியும் பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில்
(1,4,5,7,9,10) இருந்தால் ஜாதகன் பிறந்த ஊரிலேயே பிரபலமாக இருப்பான். பலருக்கும் உதவி செய்பவராகவும் இருப்பார்.
லக்கினாதிபதி ,
தனம், பாக்கியம் மற்றும் ஜீவன மற்றும் லாபாதிபதி ஆகிய ஸ்தானங்களும் மற்றும் அதிபதிகள் பலம் பெற்று தங்களுக்குள் பரிமாறி நின்று உரிய திசை அமைப்பு நடைமுறையில் இருக்கும் காலத்தில் கோடீஸ்வரராக திகழ்வார்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி பலமிழந்து ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாமல் பலவீனப்பட்டு நின்றால் வாழ்வில் என்றும் தீராத பிரச்சினைகள் தொடர்ந்து வரும்.
லக்னத்தில் ராகு அல்லது கேது நின்றால் திருமணத்திற்கு தாமதம் ஆகும். இந்த அமைப்பு "சர்ப்ப தோஷம்' அமைப்பாகும் இதனால் கல்வியில் தடை பெறும்.
லக்கினத்தில் அல்லது 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் பகவான் ஆனவர் சூரியனுடன் கூடி நின்றால் ஜாதகரின் மனைவி மலடி ஆக இருப்பாள். இது பெண்களுக்கு இந்த அமைப்பு களத்திர தோஷமாகும்.
லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டு அதிபதியும் ஒன்றாகக்கூடி சனியுடன் இணைந்து மறைவிட ஸ்தானமான
6, 8, 12-ல் மறைந்தால் சாதகர் விஷத்தால் மரணம் அடைவார். இவருடன் ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால் தூக்கிலிட்டு மரணம் அடைவார். ( இங்கு உயிரைக் குறிப்பது லக்கினாதிபதி ஆகும்) அரசு தண்டனைகளும் சிறைவாசமும் கிடைக்கும்.
லக்னாதிபதியும் , மறைவு ஸ்தானமான பன்னிரண்டாம் இட அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் துர்ப்பாக்கிய ஏழ்மை நிலை உண்டாகும். இன்னல்கள் பல அடைவார்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் சுக மற்றும் பாக்கியாதிபதி மறைவு ஸ்தானமான எட்டில் அமர்ந்தால் வறுமை நிலை உருவாகும்.
லக்னத்தில் சனி, ராகு மற்றும் செவ்வாய் கூடி நின்றால் விரைவாத நோய் உண்டாகும். லக்னத்தில் சூரியன் மற்றும் சந்திரன் கூடி நின்றால் அந்தப் பெண் அறிவு தேர்ச்சியோடு இருப்பாள். சூரியன் புதன் கூடி நின்றால் நுட்பமான அறிவு புகழும் அடைவான்.
லக்கினத்தில் ராகு நின்று லக்னாதிபதியும் பலவீனமடைந்து இருந்தால் கல்வித் தடைபடும் . மேலும் வித்தைக்காரர் புதனுடன் ராகு பகவான் எட்டு பாகைக்குள் நெருக்கமாக கூடி என்றால் கல்வியில் நாட்டம் இருக்காது.
லக்னாதிபதியுடன் ஐந்தாம் வீட்டு அதிபதி கூடி நின்றால் அல்லது பார்வை மற்றும் பரிவர்த்தனை பெற்றாலும் காதல் திருமணத்திற்கு வழி வகுக்கும். மேலும் இவ்வகை இணைவு ஐந்தில் அமர ராஜயோகத்தைக் கொடுக்கும்.
ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி பலம் பெற்றால் அந்த கிரக தசை யோக தசையாக அமையும். அந்தவகையில் லக்னாதிபதி அமர்ந்த வீடு பலம் பெற்றிருந்தால் வாழ்க்கையில் ஒரு உன்னதமான உச்சநிலை அது தொடர்புடைய தசை காலங்களில் வந்தே தீரும் .
லக்னத்தில் சுபகிரகங்கள் அமர்ந்து சுபகிரக பார்வை பெற்று நிற்பதும், மேலும் லக்னாதிபதியானவர் பலம் பெற்று சுபத்துவம் பெற்ற நிலையில் நிற்பதும் ஜாதகருக்கு நல்லதைச் செய்யும் யோகம் உண்டாகும். செல்வ சுகம், இளகிய மனம் , ஏற்றத்தாழ்வுகள் மறந்து அனைவரிடமும் பரோபகார சிந்தனையுடன் பழகி வரும் குணம் உண்டாகும்.அதனால் வசதிகளையும் புண்ணியத்தையும் சமமாக அடைவார்.
ஒருவரது ஜாதகத்தில் இலக்கணத்தையும் மற்றும் ராசியையும்
ராசி கட்டம் மற்றும் அம்ச கட்டங்களில் சனி பார்த்தால் முன் பிறப்பில் "விட்ட குறை தொட்ட குறையாக" விட்டுப் போனதை பூர்த்தி செய்யவே மீண்டும் இப்பிறப்பு எடுத்துள்ளார் என கட்டாயம் கூறலாம்.
லக்கினத்தில்
குரு, சந்திரன் பலம்பெற்று அமர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ , இதேபோல லக்கினத்தில் லக்னாதிபதி பலம் பெற்று அமர்ந்தால் அல்லது பார்த்தால் ஜாதகன் படிப்படியாக முன்னேற்றம் அடைவர்.
லக்கினமும் , ராசியும் இணைவது வாழ்க்கையில் உயர்வான நிலையை அளிக்கும்.
லக்கினத்தில் நான்காம் வீட்டு அதிபதி அமைந்தாலும் அல்லது களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் அமர்ந்து லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சுலபமாக சொந்த வீடு அமையும் யோகமும் உண்டாகும்.
லக்கினத்தில் குரு அமர்ந்து உள்ள சாதகம் பாக்கியசாலி, பூர்வீக சொத்துகள், நல்ல தந்தை நல்ல புத்தி சாலித்தனம் ஜாதகர்களிடம் காணப்படும்.
லக்கினாதிபதியும், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான ஐந்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து ஐந்தில் அமர்ந்து உள்ள சாதகர் யோகத்தை அடைவார்.
லக்னாதிபதியுடன் சத்ரு ஸ்தானாதிபதியான ஆறாம் வீட்டு அதிபதி இணைந்து இருந்தால் வாழ்வில் என்றும் பிரச்சனை தீராது தொடர்ந்து வரும். சுபத்துவம் பெற்ற நிலையில் பலன் மாறுபடும்.
லக்கினாதிபதி மறைவு ஸ்தானமான 12-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் பிறந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் வாழும் நிலையைத் தரும். இவரின் வாழ்க்கை இவருக்கு பயன்படாது. திருப்பணிகள் அதிகமாக செய்வார். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். லக்கினாதிபதி 12-ஆம் இடத்தில் பலமில்லாமல் இருந்தால் பிறரின் உதவியின்றி தனித்து வாழ முடியாது. இலக்கனம் மற்றும் பன்னிரண்டாம் அதிபதிகள் பரிவர்த்தனை துர்பாக்கியத்தை கொடுக்கும். இது
அவயோகம் நிலையாகும்.
தொடரும்...
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
My website
www.astroravichandransevvai.in
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்..
No comments:
Post a Comment