Friday, 11 June 2021

காரக பாவ நாஸ்தி

 காரக பாவ நாஸ்தி-புது விளக்கம்


                 


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒரு சில விஷயத்தை(matter) ஆராய்ந்து பார்ப்பதற்கு சாதக கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானமும் மற்றும் அந்த ஸ்தானத்துடன் தொடர்புடைய காரகமும் இருக்கும்.


   ஒருவருக்கு கிடைக்க கூடிய தனத்தையும் மற்றும்  புத்திரத்தையும் ஆராய்ந்து பார்க்க தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடமும் மற்றும் புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடமும் உள்ளது. இவ்விரண்டிற்கும் தன மற்றும் புத்திர காரகர் குரு பகவான் உள்ளார்.


  சகோதர ஸ்தானத்தை பற்றி பார்க்க மூன்றாம் இடமும் மற்றும் சகோதர காரகன் செவ்வாய் பகவானும் உள்ளார்.


     தாய் ஸ்தானத்தை பற்றி அறிந்து பார்க்க 4-ஆம் இடமும் மற்றும் தாய்க்கு காரகரான சந்திர பகவான் உள்ளார் .


        தந்தை ஸ்தானத்தினை பற்றி ஆராய்ந்து பார்க்க ஓன்பதாம் இடமும் மற்றும் தந்தைக்கு காரகரான சூரிய பகவான் உள்ளார்.


     களத்திர ஸ்தானத்தை பற்றி ஆராய்ந்து பார்க்க ஏழாம் இடமும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் பகவானும் உள்ளார்.


 ஒரு காரகர் தங்களின், காரக ஸ்தானத்தில் நின்று இருந்தால் அந்த ஸ்தானம் சார்ந்த நற்பலன்கள் கெடும் என்பதையே" காரக பாவ நாஸ்தி" என்கிறோம்.


   உதாரணமாக  மனைவிக்கு பொறுப்பு வகிக்கும் கிரகமான களத்திரகாரகன் சுக்கிரன்

களத்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகனுடைய மனைவிக்கு கெடுதல் நேரும் என்பதை சோதிட வல்லுநர்கள் கணித்து ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.


இவ்வாறாக காரகர்கள் அந்த காரக ஸ்தானத்திலேயே நின்று இருப்பதையே காரக பாவ நாஸ்தி என்று கூறுவோம்.


      இந்த அடிப்படையில்  தந்தைக்கு காரகரான சூரியன் ஒன்பதாம் இடத்தில் நின்று இருப்பதையும்,


  மாதுர் காரகன் சந்திரன் நான்காம் இடத்தில் நின்று இருப்பதையும், 


  குரு பகவான்  இரண்டாம் மற்றும் ஐந்தாம் இடத்தில் நின்று இருப்பதையும் காரக பாவ நாஸ்தி என்று அழைக்கப்படுகிறது.


  ஆனால் அதே நேரத்தில் கல்விக்கு காரகனாகிய புதன் கல்வி ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திலோ அல்லது வித்தை  ஸ்தானமான நான்காம் இடத்தில் நின்றிருப்பது காரக பாவ நாஸ்தி என்ற பிரிவில் வருவதில்லை.


   புதன்பகவான் மேற்கண்ட இரண்டு மற்றும் நான்காம் இடத்தில் நிற்பது கல்வியும் மற்றும் வித்தையும் மேம்படுத்தும் அமைப்பாகத்தான் இருக்கிறது.


 அதேபோல வாகன காரகனாகிய சுக்கிரன் வாகன ஸ்தானமான நான்காம் இடத்தில் இருப்பதையும் காரக பாவ நாஸ்தி என்று கூற இயலாது . நான்காம் இடத்தில் சுக்கிர பகவான் நிற்பதுவே மிகுந்த வாகன யோகத்தை தரக்கூடிய அமைப்பாகும்.


 விதிவிலக்கு


   காரக பாவ நாஸ்திக்கு இன்னொரு விதிவிலக்கும் இருக்கிறது .

அதாவது காரக கிரகம் அந்த காரக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பது காரக பாவ நாஸ்தி ஆகாது.


       உதாரணமாக மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அது காரக பாவ நாஸ்தி அல்ல. மேஷத்திற்கு ஏழாம் வீடு  சுக்கிரனின் ஆட்சி வீடு ஆகிறது. அங்கே சுக்கிரன் நின்றிருப்பது மனைவிவழியில் சாதகனுக்கு நன்மை தரக்கூடிய அமைப்பாகும். மனைவிக்கு நன்மை தரக்கூடியவை என்றும் கூறுவதே பொருத்தமாகும்.


 மேற்கண்ட எல்லாம் பொதுப் பலன்களே உடன் சேரும் மற்றும் பார்க்கும் கிரகங்கள் ஏற்ப பலன்கள் மாறுபடும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


 காரக பாவ நாஸ்தி ஏற்பட்டிருப்பதாலேயே அந்தகாரகம் சார்ந்த நற்பலன்கள் எதுவும் நடக்காது என்று தீர்மானித்து விடக்கூடாது. ஒருபக்கம் காரக பாவ நாஸ்தி ஏற்பட்டிருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த காரக ஸ்தானாதிபதி நன்னிலை இருக்கலாம் அப்போது அந்தகாரகம் சார்ந்த நற்பலன்கள் கிட்டும்.


   உதாரணமாக மீன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன் நின்று காரக பாவ நாஸ்தி அடைந்திருந்தாலும் ,அந்த காரகம் தொடர்புடைய ஏழாம் இட அதிபதியான புதன் பகவான் நன்னிலையில் இருப்பின் அந்தகாரகம் சார்ந்த பலன்கள் நற்பலன்களாக அமையும்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்

‌.  9715189647

       செல்

   9715189647

   7402570899

                           



அன்புடன் 

சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ  கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம்

No comments: