முக்தி அடையும் யோகம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவரது ஜாதகத்தில் "பன்னிரண்டாம் இடத்தில் கேது பகவான் இடம்பெற்றிருந்தால் முக்தியோகம் என்று சொல்கிறார்களே அது உண்மையா! " என ஒரு முகநூல் நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதற்கு விளக்கம் தரும் வகையில் இந்த பதிவு அமைகிறது.
பொதுவாக
"முக்தி யோகம்" என்பது அக நோக்குதல் ஆகும்.தனது மூச்சை இடைவிடாது ஒரு காட்சி பொருளாக நின்று விருப்பு வெறுப்பற்று கவனித்தல் ஆகும்.
நாம் சுவாசிக்கும் மூச்சிற்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.மூச்சு தாறுமாறுக இயங்க மூச்சுடன் தொடர்பு கொண்ட மனது கண்டபடி அலை பாய்கிறது.
மூச்சு அடங்க, முச்சுடன் தொடர்பு கொண்ட மனம்
தன் வசப்படுகிறது.இது ஒரு கொடுப்பினை ஆகும்.இதற்கு உண்டான அமைப்பு ஜாதகத்தில் உண்டு.
ஒரு ஜாதகத்தில் முக்தி பெறும் அமைப்பு தரும் முதன்மையான கிரகங்கள் குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகும்.
சில நேரங்களில் ஒளி கிரகமான சூரிய மற்றும் சந்திர பகவானும் காரண கர்த்தா ஆவார்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன், குரு இணைவு சூரியன் மற்றும் குரு சமசப்தம பார்வை ஆன்மிகத்தில் உயர் நிலை அடைய வைக்கிறது. அதே போல சூரியன் மற்றும் சந்திரன் சமசப்தமமாக பார்த்துக் கொள்ளும் பௌர்ணமி யோக அமைப்புகளும் ஆன்மீக நிலையை உயர்வைக் காட்டுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் சனி மற்றும் கேது பகவானை தனித்தனியாகவோ பார்த்தாலும் அல்லது சனி மற்றும் கேது இணைந்து குருபகவானால் பார்க்கப்படும் அமைப்பை பெற்றவர்களும் ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைவார்கள்.
பன்னிரெண்டாம் இட அதிபதி பலமடைந்து நின்று பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து அந்த கேது பகவான் உடன் சனி பகவான் இணைந்து நின்று குரு பகவானால் பார்க்கப்படும் அமைப்பு பெற்று பங்கப்படாத குரு பகவானால் பார்க்கப்படும் அமைப்பு பெற்று அதன் தசையும் நடப்பில் உள்ள காலங்களில் முக்தி பெறும் யோகம் உண்டாகும்.
ஒருவர் முக்தி அடையும் யோகம் பெற திரிகோண ஸ்தானமான 1, 5 ,9ஆம் இடங்களும் அதன் அதிபதிகளும் பலமடைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படவேண்டும்.
நன்றி!
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment