"" காசு பணம் துட்டு money money""
Econamical source ( தனயோகம் )
"கிரகங்கள் படுத்தும் பாடு - ( 140 )
"காசேதான் கடவுளப்பா -அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா !
கைக்கு கை மாறும் பணமே -உன்னை
கைபற்ற நினைக்குதே மனமே "
ஒருவருக்கு தனயோகம் உண்டாக "பாவார்த்த ரத்னாகரம் "என்னும் ஸம்ஸ்கிருத நூலில் பத்து சுலோகங்கள் கூறப்பட்டுள்ளது.அதனை மொழிபெயர்த்து உள்ளர்த்தத்தை சோதிட ரத்னாகாரம் என்ற நூல் அழகாக விளக்குகிறது.
தனயோகத்தை தரக்கூடிய ஸ்தானம் பணிரெண்டு ராசிகளில் இரண்டாமிடத்திற்கே உரியது.இதேபோல தனகாரகன் என அழைக்கபடுவது குருபகவானே ஆகும்.
பொதுவாக தனயோகம் பெற மேற்கண்ட தனஸ்தானமும் மற்றும் தனகாரகனும் பலமடைந்து இருக்க வேண்டும்.
தனகாரகன் ஆனவர் லக்கனம் ,ஐந்தாமிடம் ,ஏழாமிடம் ,ஒன்பதாமிடம் ,பத்தாமிடம் மற்றும் லாபஸ்தானம் ஆகிய ஸ்தானங்களோடு இணைந்து சுபஸ்தானமேறி சுபரின் பார்வை பெற்றிருந்தாலோ ,
அல்லது
மேற்கண்ட ஸ்தானங்களோடு பரிவர்தனை பெற்றாலோ தனயோகம் உண்டாகும்.
பொதுவாக தனயோகம் பெற மேற்கண்ட தனஸ்தானமும் மற்றும் தனகாரகனும் பலமடைந்து இருக்க வேண்டும்.
தனகாரகன் ஆனவர் லக்கனம் ,ஐந்தாமிடம் ,ஏழாமிடம் ,ஒன்பதாமிடம் ,பத்தாமிடம் மற்றும் லாபஸ்தானம் ஆகிய ஸ்தானங்களோடு இணைந்து சுபஸ்தானமேறி சுபரின் பார்வை பெற்றிருந்தாலோ ,
அல்லது
மேற்கண்ட ஸ்தானங்களோடு பரிவர்தனை பெற்றாலோ தனயோகம் உண்டாகும்.
பாவார்த்த ரத்னாகரம் என்ற நூலின்படி சுலோகம் -1
இரணடுக்குடைய கோளும் ஐந்தாமிட கோளும் பரிவர்தனை பெற்றால் தனயோகம் உண்டாகும் என்கிறார்.
இங்கு ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம் ஆகும்.எனவே தனஸ்தானதிபதியானவர் பூர்வ புண்ணியஸ்தானத்துடன் பரிவர்தனை செய்து காணப்படும்போது சாதகருக்கு அவர் செய்த பூர்வபுண்யத்திற்கு ஏற்பவே அவருக்கு தனயோகம் உண்டாக வாய்ப்புகள் உருவாகிறது.
எனவே முற்பிறப்பில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்பவே இப்பிறப்பில் தனயோகம் கிடைக்கிறது.ஆகவே இப்பரிவர்தனையானது பூர்வபலனுக்கு தகுந்தபடியே யோக அமைப்பாகவோ அல்லது அவயோக அமைப்பாகவோ மாறுகிறது.
ஆனால் அதேநேரத்தில் ஐந்தாவது திரிகோணம் பெற்ற கோள் எதுவாக இருப்பினும் நன்மையை செய்யும் என்ற வகையில் இந்த பரிவர்த்தனை யோக பரிவர்தனையாக கொள்ளலாம்.
அடுத்தபடியாக கூறப்பட்டுள்ள தன-லாப பரிவர்த்தனை (2,11 ) :-
தனாதிபதியும் மற்றும் லாபாதிபதியும் தங்களது வீடுகளை மாற்றி அமைவது யோகம்தான்.ஆனால் அதேநேரத்தில் தனயோகம் என்பது இங்கு பாதக மற்றும் மாரகங்களை தொடாமல் கூறப்பட்டவை.
உதாரணமாக துலாம் லக்கன காரர்களுக்கு தன -லாப பரிவர்த்தனை எடுத்து ஆராய்ந்து பார்க்கும்போது துலாம் லக்கனம் சரராசி என்ற வகையில் பதினொன்றாம் அதிபதியான சூரியன் பாதகாதிபதியாகும்.அதேபோல மாராகாதிபதி இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியான செவ்வாய் ஆகும்.
எனவே துலாராசிக்கு இரண்டுக்குடைய (தனம் ) கோள் மாரகர் மற்றும் பதினொன்றுக்குடைய கோள் (லாபாதிபதி) பாதகாதிபதி .ஆதலால் இவ்வகை பரிவர்த்தனை தனயோகத்தை கொடுத்தாலும் அதேநேரத்தில் கண்டாதி தோசத்தையும் தந்துவிட வாய்ப்புகள் உண்டு.
அதிலும் இரண்டுக்குடைய செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் அமரின் விதிப்படி பதினொன்றில் அமரும் கோளே வலுப்பெற்ற பாதகாதியாக செயல்படும்.
எனவே பலனளிக்கும்போது சோதிடர்களாகிய நாம் இதுபோன்ற சூட்சும உண்மைகளை அறிந்து பலனளிக்க வேண்டும்.தன-லாப பரிவர்த்தனை என்றவுடன் உடனே யோகங்களை அள்ளி தந்துவிடும் என புகழ்ந்து பலன் கூறி அனுப்பாமல் அதேநேரத்தில் மாரக-பாதக பரிவர்த்தனையானது சில பாதகங்களையும் தந்துவிடும் என எச்சரித்து அதற்கான பரிகார வழிபாடுகளை சொல்லி அனுப்புவது சோதிடர்களாகிய நமது கடமையாகும்.
இதுபோன்ற யோகம் தரக்கூடிய நிலையில் நமக்கு பாதகங்கள் தராமல் இருக்க ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் செய்தல் ,மாற்றுதிறனாளிகளுக்கு அங்க அவய தானம் செய்தல் மற்றும் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு சீருடைகள்,நோட்டு ,புத்தகங்கள் வாங்கி கொடுத்தல் போன்ற தானங்களை தனது வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி செய்யும்போது மாரக-பாதகங்களில் இருந்து விடுபடவோ அல்லது குறையவோ வாய்ப்புகள் உண்டு.
சுலோகம் இரண்டின்படி
ஐந்து மற்றும் ஒன்பதுக்குடைய கோள்கள் (திரிகோணாதிபதிகள் ) அந்தந்த வீட்டிலேயே ஆட்சி பெற்றிருப்பது தனயோகத்தை ஈட்டும் என கூறப்பட்டுள்ளது.இங்கு இவைகள் பரிமாறிக் கொள்வதும் தனயோகத்தை அதன் தசை காலங்களில் ஒருவருக்கு வழங்கும்.பூர்வபுண்ணியாதிபதியும் மற்றும் பாக்கியாதிபதியும் ஒரு சாதகனுக்கு வலுப்பெற்றால் அச்சாதகனின் வாழ்க்கையானது சிறப்பாக அமையும் என்ற வகையில் மேற்கண்ட கூற்றும் மெய்யே ஆகும்.
சுலோகம் மூன்றின்படி
தன-லாப கோள்கள் ஐந்து அல்லது ஒன்பது கோள்களுடன் சேர்க்கை பெற்று இருப்பதும் தனயோத்தை தரும்.
இதில் விதிவிலக்கு தன-லாப கோள்களானது 5,9 ஐ தவிர வேறு கோள்களுடன் கூட்டு சேர்ந்தால் தனயோகம் உருவாகாது என இச்சுலோகத்தில் சூட்சும உண்மையாக வைத்துள்ளார்.அவ்வாறு சேர்ந்தால் ஒரளவு தனமே கிடைக்கும் என ஐந்தாவது சுலோகத்தில் கூறுகிறார்.
இதில் விதிவிலக்கு தன-லாப கோள்களானது 5,9 ஐ தவிர வேறு கோள்களுடன் கூட்டு சேர்ந்தால் தனயோகம் உருவாகாது என இச்சுலோகத்தில் சூட்சும உண்மையாக வைத்துள்ளார்.அவ்வாறு சேர்ந்தால் ஒரளவு தனமே கிடைக்கும் என ஐந்தாவது சுலோகத்தில் கூறுகிறார்.
சுலோகம் -6
இரண்டாம் வீட்டுக்குடைய கோளுடன் தனகாரகன் குருபகவானும் மற்றும் வித்தைகாரகன் புதன்பகவானும் சேர தனயோகம் மிகுதியாக உண்டாகும்.
இங்கு இரண்டாம் வீட்டில் குருபகவான் நிற்பது "அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்தவுண்டு "என்றாலும் குருபகவான் புதனோடு சேர்ந்திருப்பதாலும் மேலும் இரண்டாமிடத்தில் இருக்கும்போது ஜீவனஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக அவை பார்த்துவிடும் என்பதாலும் அவை தனயோகத்திற்கு பங்கத்தை தராது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு சாதகம் பார்க்க வருபவர்களுக்கு பலனளிக்க பழகவேண்டும்.
சுலோகம் -7
லக்கினாதிபதி,தனாதிபதி மற்றும் லாபாதிபதி ஆகிய கோள்கள் அவரவர் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதும் தனயோகத்தை ஒருவருக்கு வாரி வழங்கும்.
சுலோகம் -8
தன-லாப கோள்கள் இலக்கினத்தில் இடம்பெறுவதும் தனயோகத்தை தரும்.
சுலோகம் -9
அந்தந்த காரகர்கள் தங்களது பாவத்தில் இருப்பின் "காரகபாவ நாஸ்தியை "தரும் என்ற வகையில் தனகாரகன் குருபகவான் தனஸ்தானத்தில் அமராமல் இருப்பது நல்லதாகும்.
சுலோகம் -10
சந்திரபகவான் ஏழுக்குடைய கோளாகிய தனஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் இருந்தால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.
தொடர்ந்து பார்ப்போம்....
(தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து எழுதுதல் போன்ற சேவைகளை #போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம்.)
தொடர்புகொள்ள
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
செல்
740 257 08 99
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC ,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்
கறம்பக்கு,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.
No comments:
Post a Comment