சுக்கிரன் பகவான் தரும் யோகபலன்கள்- (4)
#கிரகங்கள் படுத்தும் பாடு -( 118 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
சுக்கிர பகவான் தரும் கலையுணர்வு;
சுக்கிர பகவான் ஒருவரை கலை மற்றும் காவிய உணர்வுடையவனாக மாற்றி அழகுபார்க்கிறது.
சுக்கிரபகவான் புதன்பகவானோடு தொடர்பு கொள்ளும்போது ஒருவரை காதல் உணர்வு மிக்கவராக மாற்றி காதல் கவிதைகள் ,காதல் கதைகள் மற்றும் காதல்பாடல்கள் முதலியவை எழுதி புகழ்பெறவைக்கிறது.இவற்றுடன் சுப குரு தொடர்பு கொள்ளும்போது விரசமில்லாத பாடல்கள் எழுத வைக்கிறது.
.அதேநேரத்தில் இவற்றுடன் சனி,செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு பெற காம விரசம் நிரம்பிய பாடல்களை எழுதி புகழ்பெறுவார்.
ஞானகாரகன் கேதுபகவான்,அல்லது ஆன்மிக செம்மல் குருபகவான் கலைக்காரகன சுக்கிரன் + புதன் உடன் இணைய காவிய இரசனை உடையவனாகவும் ,தத்துவம் மற்றும் ஆன்மீக நாட்டம் உடையவனாக ஒருவரை மாற்றி அதுசார்ந்த கதைகள்,கவிகள் மற்றும் பாடல்கள் எழுதி புகழ்பெற வைக்கிறது.
சுக்கிரபகவான் மூன்றாமிடத்து தொடர்பு பெறும்போது ஒருவரை #இசையில் ஆர்வமுடையவனாக மாற்றுகிறது.ஒரு சிலர் இசைகலைஞர்களாக புகழ்வடைவதற்கும்,இசைகருவிகள் இசைத்து வித்வானாக திகழ்வதற்கும் இவ்வித தொடர்பேயாகும்.
சுக்கிரபகவான் ஆனவர் லக்கனம் ,ஐந்தாமிடம் மற்றும் பத்தாமிடம் தொடர்பானது ஒருவரை நாடகம்,நடிப்பு மற்றும் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் ஈடுபட வைக்கிறது.இங்கு புதன்பகவானும் தொடர்பு பெறும்போது ஒருவரை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்,செய்தி வாசிப்பாளராகவும் மாற்றிவிடுகிறது.
சுக்கிரபகவானால் அருளப்படும் சுகபோகங்கள்;-
ஒருவரது சாதகத்தில் சுக்கிரபகவான் மறைவு ஸ்தானத்தை தவிர்த்து (3,6,8,12) பிற இடங்களில்( 1,2,4,5,7,9,10 மற்றும் 11 ) பலம் பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் சாதகரை கார் ,பங்களா,நிலம்,பூமி,தோட்டத்துடன் கூடிய வீடுகள்,ஆபரணங்கள்,அடுக்குமாடி,செகுசு ரக நவீனம் நிறைந்த மாடலான வீடுகள்,பங்களா,வீட்டினில் கலையம்சம் நிறைந்த பொருட்கள்,நல்ல அழகான மனைவி,வாசனை திரவியங்கள் மற்றும் விதவிதமா கார்கள் போன்றவற்றை தந்து ஆடம்பர வாழ்வை அளிப்பதில் சுக்கிரபகவானின் பங்கு அலாதியானது.
மேலும் உயர்பதவி பெறுவதற்கும் ,பொன் மற்றும் பொருள் பெறுவதற்கும் ,தனம் நிறைந்து மகிழ்ச்சியுடன் சுகபோகங்களில் திளைக்கவும்,நல்ல மனைவியை தேர்ந்தெடுத்து அவளோடு மனம் நிறைவோடு காமரசம் பருகி மனம் சாந்தியடைவதற்கும்,ஆடை ,ஆரண்யம் ,வண்டி வாகனம் மற்றும் சொகுசுபங்களாவோடு சுகபோகங்களை நிறைந்த வாழ்வினை அளிப்பதில் நவகோள்களில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரபகவானே ஆகும்.
நமக்கு பராசுர முனிவரால் அருளப்பட்ட மொத்த நூற்றிஇறுபது வருடங்களை சமம்ற்ற ஒன்பது பாகமாக பிரித்து அதில் சுக்கிர திசைக்கு மட்டும் இருபது வருடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.ஒருவரது சாதக கட்டத்தில் சுக்கிர பகவான பாவிகள் சேர்க்கையற்று மேற்கொண்ட சுபஸ்தானங்களோடு தொடர்பு கொண்டு இளவயதில் பள்ளிபருவத்தில் சுக்கிரதிசை வராமல் வாலிப வயதில் வரும்போது உதாரணமாக இருபது வயதில் வரும்போது நாற்பது வயதிற்குள் உலகின் அத்தனை ஐஸ்வரியங்களையும் மற்றும் சுகபோகங்களையும் அனுபவித்துவிடுவார்கள்.இவர்கள் பாக்கியவான்கள் ஆவார்.
சுக்கிரபகவானை பலமாக பெற்றவர்கள் எப்படியாவது வாழ்ந்து சுகபோகங்களை அனுபவித்துவிடவேண்டும் என எண்ணுவார்கள்..இவர்கள் பொருள் ஈட்டுவதில் உள்ள வழிமுறைகளை (அதாவது நேர்வழி மற்றும் எதிர்வழி ) பற்றி கவலைப்படாதவர்கள் .அவர்கள் சமூகத்தில் பொருள்படைத்ததன் மூலம் சமூக அந்தஸ்தை பெறமுயல்வார்கள்.அதற்காக எவ்வித கீழான முறைகளை பற்றியும் கவலை படாதவர்கள்.இவர்களே பணம் ஈட்டலே வேதமாகும்.ஆனால் எப்பொழுதும் சுகவிரும்பிகளாகவே இருப்பதால் மன அடிப்படையில் வெற்றிடம் ஏற்பட்டு அதன்பலனாக நிறைவின்மை ஏற்பட்டு மேலும் மேலும் சேர்க்கும் குணம் ஏற்பட்டு மன அமைதியற்றவர்களாக இருப்பார்கள்.
சுக்கிரபகவானால் வழங்கப்படும் தவறான பழக்கவழக்கங்கள்;-
சுக்கிரபகவான் ஒருவரது சாதகத்தில் மறைவிடங்களான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிட தொடர்பு பெற்றவர்கள் எதிர்மறை பலன்களை தரும்.அதாவது பெண்களால் அவமானம்,திடீர் இழப்புகள் ,தனவிரயம்,கொளரவகுறைவு,அவமரியாதை மற்றும் மர்மஸ்தானங்களில் வியாதி போன்றவைகளை ஒருவனுக்கு அளிக்கும்.
சிலர் விலையுர்ந்த மதுபானங்களை நவநாகரீக ஹோட்டல்களில் அருந்துபவர்களாகவும் மற்றும் தவறான பெண்கள் தொடர்பு உடையவர்களாகி அதனால் அவமானங்களையோ அல்லது வலி ,வேதனையை பெறுபவராகவும் மாறிவிடுவார்கள்.
சிலர் லாட்டரி ,ரேஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழப்பவர்களாகவும் அதனால் மன அமைதி இழப்பவர்களாகவும் இருப்பர்.
அதேநேரத்தில் குருபலம் மிக்கவர்கள் இப்படிதான் வாழவேண்டும் எனும் வரையரை உடையவர்களாக இருப்பார்கள்.மனநிறைவுபெற்றவர்களாக இருப்பார்கள்.
சுக்கிரனால் வழங்கப்படும் மனநிலைகள்;-
ஒருவருக்கு அன்பு,பாசம் ,காதல் ,இன்பம் மற்றும் என்றும் ஆனந்தம் மற்றும் அவற்றை அடையக்கூடித மனநிலைகள்,தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்,காசு,பணம் ,சொந்தவீடு மற்றும் பெண்களிடம் மோகமும் மற்றும் அதை அடையக்கூடிய மனநிலைகள்.
சுக்கிரனால் வழங்கப்படும் வியாதிகள்:-
கட்டி,பிளவை.,கண் சம்பந்தபட்ட வியாதிகள் ,எய்ட்ஸ் எனும் பாலியியல் வியாதி,விந்து வீர்யம் குறைவு ,மர்மஸ்தான உறுப்புகளில் வியாதி,பெண்களின் சுழற்சி அடிப்படையிலான மாதவிடாய் சுழற்சி மாறுபடல் மற்றும பெண்கள் பருவமடைதல் காலதாமதம் போன்றவை.
தொடரும்.......
(தங்களது குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் சாதகபலன்களை விரிவாக ஆராய்ச்சி செய்து #போன்வழியாகவே எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.மேலும் திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்து கொரியரில் அனுப்பிவைத்தல் போன்ற சேவைகளை பெறலாம்.கட்டணம் உண்டு)
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ் அப்
97 151 89 647
97 151 89 647
(பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் மாவட்டத்துடன் வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்யவும்)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலைவேதியியல ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலைவேதியியல ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.
எனது வெப்சைட் முகவரி
AstroRavichandransevvai.blogspot.com
.........................................
No comments:
Post a Comment