Saturday, 16 September 2017

தின/வார/மாத ராசி பலன் மற்றும் பெயர்ச்சி பலன்கள் பார்த்து குழப்பி கொள்பவர்களுக்கான சிறப்பு பதிவு

தின/வார/ மாத ராசி பலன் மற்றும் பெயர்ச்சி பலன்கள் பார்த்து குழப்பி கொள்பவர்களுக்கான  சிறப்பு பதிவு
*************************************

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 170 )

செவ்வாய்ப்பட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

        எனது சக ஆசிரியர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டர் பைக்கில் புறப்பட்டு வரும்போது வாகன விபத்தில் மாட்டிக்கொண்டு ஒரு சில காயங்களுடன் உயிர்தப்பினார்.அவரை பார்க்க சென்றிருந்தபோது என்னிடம் நான் ஒரு சோதிடர் என்பதால் "ரவி காலையிலே காலாண்டர் கிழிக்கும்போது இன்று என் ராசிக்கு விபத்து என போட்டிருந்தது அதன்படியே நடந்துப்போச்சு "என்று சொன்னார்.
அந்த நேரத்தில்  அவரிடம் எதிர்வாதம் செய்வது சரியல்ல என விட்டாலும் என் மனதிற்குள் இது தொடர்பான ஒரு  விளக்கமான பதிவு ஒன்று வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு இப்பதிவை அணுகுகிறேன்.

தின/வார/மாத ராசி பலன்களை நாம் எவ்வாறு அணுகவேண்டும்
*****************************************
மேற்கண்ட எனது சக ஆசிரியரின் ஜாதகம் என்னிடம் இருந்ததால் அவருடைய ஜாதகத்தை எடுத்து அன்றைய கிரக நிலைகளோடு,தசா புத்திகளையும் ஆராய்ந்து பார்த்தபோது விபத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை.பிறகு காரணம் காலையிலே அவருக்கு இன்று நமக்கு விபத்து நடக்கபோகிறது என்ற எண்ணத்தில் மனதை குழப்பிக்கொண்டதால்தான் அந்த பயத்தோடு வண்டியை ஓட்டியதால் ஏற்பட்டிருக்கலாம்.

தினந்தோறும் ஊடகங்களில் வழியாக கணித்து கூறப்படும் தின/வார/மாத ராசி பலன்களல்லாம் தவறா?

யார் சொன்னது தவறு என இதுபோல் கூறப்படும் அனைத்து பலன்களும் ஒட்டுமொத்தமாக கூறப்படும் பொதுவான சூட்சும பலன்களாகும்.இப்பலன்களை உலகத்தில் உள்ள உதாரணமாக அனைத்து கடக ராசி காரர்களும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளக்கூடாது.அப்பலன்கள் அனைத்தும் அன்றைய தின/வார/மாதத்தில் வானமண்டலத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு கூறப்படும் கோசார பலன்களே.

அதை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்

நம்முடைய பிறந்த நேரத்தில் உள்ள கிரகநிலைகளை தற்போது உள்ள கோசார கிரக நிலையோடு ஒப்பிட்டு அவை நமக்கு நன்மையை தருமா அல்லது தீமையை தருமா ?மற்றும் தசா நிலைகளையையும் ஒப்பிட்டு அவைகளும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கூறும் பலம்போல எடுத்துக்காட்டாக "நீண்ட நாளாக வம்பு வழக்கில் உள்ள சொத்து கிடைக்கும் "
என அவர்கள் பலன் கூறி இருப்பின் கட்டாயம்  அந்த பலன் நடக்கும்

சிலர் ராசி பலன் தினந்தோறும் பார்க்கிறேன் அதுபடி எதுவும் நடக்கவே இல்லை. இதெல்லாம் சுத்த பொய் எனகூறுபவர்களுக்கான விளக்கம்;-

இந்த மாதம்  உங்களுக்கு "நீண்ட நாள் பிரிந்திருந்த தம்பதிகள் பிறக்கும்,குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்,பதவி உயர்வு கிடைக்கும் மொத்தத்தில் இந்த மாதம் கடக ராசிக்கு அணுகூலமான மாதமாகும்.என கூறினார்கள் ஒரு பலனும் நடக்கவில்லை.இவையெல்லாம் பொய்,பித்தலாட்டம்  என வருத்தப்படுபவர்களே இதோ உங்களுக்கான விளக்கம்

இதுபோல் நடைபெறாதர்க்கு உங்களுடைய ஜெனன கால கிரக நிலைக்கும், அக்கிரகங்கள் தற்பொழுது  உள்ள கட்டநிலைமைகளையும் உற்று பார்த்து அவை உடன்பாடாக இல்லாமல் பாவ நிலைபெற்று இருந்தாலும், இப்பொழுது நடைபெறும் தசை புத்திகள் கெட்ட ஸ்தானம் பெற்று பாவியாக இருந்தால் அத்தகைய  அமைப்புகள்
உடையவர்களுக்கு கடக ராசியாக
இருந்தாலும் பலன்தராது.

பார்வையில் தவறு இருந்தால் பலன்களும் தவறாகும்;-

எனவே ஊடகங்களின் வழியாக பலன்களை  பார்க்கும்போது அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.அவை அனைத்தும் ஒருவிதமான சூட்சும சூத்திரங்களாகும்.அவற்றை நம் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்து பலன் அறிந்துகொள்ள வேண்டும்.இதற்கு முழுமையான ஜோதிட ஞானம் உள்ளவர்களின் ஆலோசனையைப்பெற்று முடிவு எடுக்கவேண்டும்.
அவை மருத்துவரின் உதவியின்றி காய்சலுக்கு வைத்தியம் பார்த்துக்கொள்வதுபோல் ஆகும். காய்சலின் தன்மையும்,நமது உடல்நிலையை பொறுத்து வைத்திய தன்மை மாறுவதுபோல ,ஜாதக தின ராசி பலன்களும் கோசார மற்றும் தசை புத்திகளை ஒப்பிட்டுத்தான் பலன் எடுத்துக்கொள்ளவைண்டும்.

இதை விட்டுவிட்டு கடக ராசிக்கு பிணி என போட்டிருக்கிறான் வியாதி வருமோ ?!  என மனதிற்குள் பயப்பட்டால் அந்த எண்ணமே நமக்கு வியாதியை கொடுத்துவிடும் .

ஒருவருக்கு ஜெனன கால திசை இருப்பிலிருந்து கணக்கிடப்பட்டு தற்பொழுது நடைபெறும் திசையை கணக்கிடவேண்டும்.நடப்பு திசையானது யோக திசையாக இருப்பின் கோசாரப்படி ஏழரை அல்லது அஷ்டம சனி இருப்பின் சாதகருக்கு பெரிய இன்னல்களை தந்துவிடுவதில்லை.இது போன்ற அமைப்பு உடையவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சனிபெயர்ச்சி பலன்கள்   பயமுறுத்தி எழுதப்பட்டாலும்  யோக திசை நடப்பில் இருப்பதால் யோக பலனில் சற்று குறைவு உண்டாகலாமே ஒழிய பெரிய பயம் ஒன்றும் இல்லை.

நடப்பு திசையும் பலவீனமாக இருந்து ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் இருப்பில் சனிபெயர்ச்சி பலன்களில் கூறப்பட்டதைவிட சற்று கூடுதலாக இன்னல்களை தரும் என கூறி பதிவை நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA ,BEd,
வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி  ஆன்லைன் ஜோதிட ஆராய்சி நிலையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

செல் : 9715189647
             740 257 08 99

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

My email
masterastroravi@gmail. com

My website
AstroRavichandransevvai.blogspot.com

------------------

No comments: