Friday, 22 September 2017

சாதக கட்டத்தில் எவை பலமான கிரகம் ? எவை பலவீனமான கிரகம் ? எப்படி செரிந்துகொள்வது ?

சாதக கட்டத்தில் எவை பலமான கிரகம்? எவை பலவீனமான கிரகம்? எப்படி தெரிந்து கொள்வது ?

**************** கிரகங்கள்படுத்தும்பாடு-(

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் பலம் பெற்றுள்ளது என எவ்வாறு தெரிந்து கொள்வது என்றால்
அக்கிரகம் சுபராக இருப்பின் (குரு,சுக்கிரன்,பாவியோடு சேராத புதன்,வளர்பிறைச்சந்திரன்) அவை ஆட்சி,உச்சம்,நட்பு பெற்று சுபர் நட்சத்திர சாரம் பெற்று கோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலோ (3,6,8,12)சூட்சும வலுப்பெற்று பாவியோடு (சனி,ராகு,கேது ,செவ்வாய்) சேராமல் சுபர் பார்வை பெற்று இருக்க வேண்டும்.மேலும் அவை லக்கனத்திற்கு பாவராகவோ, பாதகாதிபதியாகவோ,மாரகாதிபதியாகவோ இருக்க கூடாது.

              அதே நேரத்தில் அவை பாவியாக இருப்பினும்
அக்கிரகம் கேந்திரங்களில் இருந்து சுப சாரம் ,சுபர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்து  அவை லக்கனத்திற்கு
பாவராகவோ,மாரகராகவோ,மற்றும் பாதகாதிபதியாக அல்லாமல் இருக்கவேண்டும்.

            மேற்கண்ட அமைப்பை பெற்ற கிரகம் பலம் பெற்ற கிரகங்கள் ஆகும். அதன் தசைகளில் பலவித நன்மைகளை அந்த
காரகத்திற்கு ஏற்றால் போல் கொடுக்கும்.

பலவீனமான கிரகம்

              ஒரு கிரகத்தின் வலுவற்ற தன்மை       கண்டறிய
அக்கிரகம் சுப கிரகமாக இருப்பினும்
அவை நீசம் பெற்று இருந்தாலோ(விதிவிலக்கு:நீசம் பெற்ற கிரக வீட்டின் அதிபதி ஆட்சி, உச்சம் மற்றும் சந்திர கேந்திரம் பெற்றால் நீசத்தன்மை பங்கப்பட்டு நீசபங்க ராஜயோகம் தரும்),
அக்கிரகம் உச்சம்பெற்று வக்கிரம் பெற்றிருந்தாலோ
(உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற கூடாது அவ்வாறு இருப்பின் அக்கிரகம் நீச தன்மை பெறும்) ,
அஸ்தமனம்,பகை,வக்ரம் பெற்று இருந்தாலும்,மறைவிடங்களில் (6,8,12)இருந்தாலும் மற்றும் அவை பாவர் சாரம் ,சேர்க்கை மற்றும் பார்வை பெற்று இருந்தாலும் அவை பலகீனமான கிரகம் .மேலும் அவை லக்கனத்திற்கு பாதகாதிபதி,மாரகாதிபதியாக இருப்பின் அக்கிரகம் அதன் தசா புத்திகளில் பலவித இன்னல்களை தரும்.

            மேற்கண்ட அடிப்படையில் ஒரு கிரகம் பலமா,பலமற்றதா என தெரிந்து கொள்ள முடியும்.பலமான கிரகத்தின் தசை நல்ல பலன்களையும்,பலமற்ற கிரகத்தின் தசை தீய பலன்களையும் தருகிறது.

                எனவே ஒரு கிரகம் சுபராக இருந்தும் அவற்றின் தசை தீமை செய்வதற்கும்,
ஒரு கிரகம் பாவியாக இருப்பினும் அவர் தசைகளில் நல்லது நடப்பதற்கும் மேற்கண்ட விதி முறைகளே காரணம் ஆகும்.

               எனவே ராகு ,சனி ..போன்ற கிரகங்கள் பாவியாக இருந்தாலும் இவர்களது தசைகளில் அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டபட்டவர்கள் கூட கோடீஸ்வராகவோ,பெரிய அரசியல்வதியாகவோ,தொழில்நிபுணராகவோ மாறி இருப்பதை பார்த்திருக்கிறேன் மற்றும் படித்திருக்கிறேன்.

            இதேபோல் குரு,சுக்கிரன்...போன்ற கிரகங்கள் சுபராக இருந்தாலும் இவர்களது தசையில் எவ்வளவு வசதியுடையவராக இருந்தாலும் ,புகழுடையவராக இருந்தாலும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் கடன்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.

எனவே ஒரு கிரகம் நல்லது செய்யுமா அல்லது கெடுதலை செய்யுமா என்பது அது அவர்களுடைய கட்ட ஸ்தானத்தை பொருத்து அவை பலமா/பலவீனமா என அறிந்துதான் கண்டறிய முடியும்.

எனவே நவகிரகங்களில்
"எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே
அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும் கட்ட இருப்பினிலே"
என கூறிக்கொண்டு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
முதுநிலை ஆசிரியர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம்சக்தி சோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
Cell : 740 257 08 99
Whats up no; 97 151 89 647
(இருந்த இடத்திலிருந்து போன் வழியாக சாதகம் பார்க்க விரும்புவோர் மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்புகொள்க.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும்)

No comments: