". லக்கனமே அச்சாணி " - மானிட தேர் நன்முறையில் வலம் வர..
கிரகங்கள் படுத்தும் பாடு -( 29 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
ஒருவருடைய சாதகத்தில் லக்கனத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.அவ்வாறு இருப்பின் அது சாதகரின் குணநலன்களையும்,உடல் நலன்களையும் பாதிப்பதோடு அந்த பாவ கிரகம் ஏழாம் இடத்தையும் பார்வை செய்வதால் திருமண தடையை செய்வதோடு மட்டுமல்லாமல் மனம் ஒத்த மனைவி அமைய விடாமல் செய்து விடுகிறது.
லக்கனத்தில் ராகு பகவான் இருப்பின் அவர் லக்கனாதிபதியின் தன்மையை மாற்றிவிடும்.லக்கனாதிபதி சுபராக இருந்தாலும் அவை தரக்கூடிய சுபத்தன்மைகளை கூட மாற்றிவிடும்.எப்படி எனில் "பன்றியொடு சேர்ந்த பசுங்கன்றும் மலம் தின்னும்"-என்ற பழமொழிப்படி அந்த லக்கனாதிபதி நடந்துகொள்ளும்.கிரிமினலாக யோசிக்க வைக்கும்.
மேலும் ராகு திசை நடப்பின் அத்திசை காலங்களில் சாதகருக்கு உடல் நலக்கோளாறுகளை தரும்.உடல் பெருக்காமல் ஒல்லியாக இருக்க வைக்கும்.விஷ பயம்,விபத்தில் காயம் ஏற்படுதல்,தியானம்,எதிர் பாராத செல்வம,,அங்க குறைபாடு,மனம் பேதலித்தல்,தண்டனை அனுபவித்தல்,கீழ்தரமான பெண்கள் தொடர்பு,குஷ்ட ரோகம்,வெண்குஷ்டம் போன்றவைகளுக்கு ராகுவே காரகர் என்பதால் அவரவர் சாதகத்தின் ஏனைய அமைப்பை பொறுத்து பலன் உண்டாகும்.
மேற்கண்ட அனைத்தும் நடைபெறும் என எடுத்துக்கொள்ள கூடாது.லக்கனாதிபதி தன்மை மற்றும் பார்க்கப்படும் கிரகங்களை பொறுத்து பலன் மாறுபடும்.
லக்கனத்தில் கேது இருப்பின் சாதகருக்கு ஒரு விஷயம் நடப்பதற்கு முன்னாலே எப்படி நடக்கும் என்பதை யூகிக்கும் ஞானத்தை கொடுக்கும்.ஆன்மீக நாட்டத்தை தரும்.சன்யாசம் பெறுதல்,சக்தியின் அருள் பெற்றவர்கள்,அகங்காரம் உடையவர்கள்,தரித்திர யோகம் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று நடைபெறலாம்.
லக்கனத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் முரட்டுத்தனமாகவும்,ஆணவம் மிக்கவராகவும் ,எதையும் செய்துவிடலாம் என அசட்டு தைரியம் உடையவராகவும் இருப்பர்.இழிவான செயல்களில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுப்பார்.உடலில் காயம் ஏற்படுதல்,விபத்துகளால் காயப்படுதல்,ஆயுதங்களால் விபத்து ,வாயுத்தொல்லை,நெருப்பால் பயம் போன்றவைகளுக்கு செவ்வாயே காரகர் என்பதால் மேற்கண்டவை அதன் தசை ,புத்திகளில் தரலாம்.
செவ்வாய் உச்சம்,ஆட்சி நிலைகளை பெற்றிருந்தால் இரத்தம் தொடர்புடைய மருத்துவராககோ அல்லது துணிச்சல் தொடர்புடைய போலிஸ்,ராணுவம் மற்றும் சர்வாதிகாரி ஆவார்.
லக்கனத்தில் சனி பகவான் இருப்பின் கால தாமத திருமணத்தை உண்டாக்கும்.பிறர் உடைய வார்த்தைகளை கேட்டு நடப்பவராகவும்,அடிமைத்தனமிக்கவராகவும் இருப்பர்.சனி உச்சம் ,ஆட்சி பெற்று லக்கனத்தில் இருப்பின் ஆயுள் பலம் தரும்.தைரியசாலி.தொழிலாளர் தலைவராவார்.அலட்சிய மனப்பான்மை,சோம்பேறித்தனம் தலைதூக்கும்,எதையும் நிதானமாக செய்யும் மனப்போக்கு உருவாக்கும்.எதையும் இதயம் இதயம் உடையவர் ஆவார்.
லக்கனத்தில் குரு பகவான் இருந்தால் நல்ல குணங்கள் மேலோங்கி இருக்கும்.ஆன்மீக நாட்டம் மிக்கவராகவும் இருப்பர்.பெருந்தன்மை படைத்தவராகவும் இருப்பார்.
குரு பகவான் உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் ஆன்மீக தலைவர்களின் தரிசனம்,சொற்பொழிவு ஆற்றல்,புத்திர செல்வத்தால் நன்மை உண்டாகும்,உயர் நிலை உத்தியோகம்,போதகர்,சித்திரம்,கலை,ஆர்வம்,நவரத்தின வியாபாரம் போன்றவை உண்டாகும்.
லக்கனத்தில் சுக்கிரன் இருப்பின் கலை ஆர்வம் மிக்கவராகவும்,இயற்கை ரசனை மிக்கவராகவும்,கைவேலைப்பாடுகளில் ஆர்வம் மிக்கவராக இருப்பர்.பெண் சுகம்,வண்டி வாகன யோகம் ,ரத்தின கற்கள் வியாபாரம்,சக்தியின் அருள்,அரசாங்க தொழில் ஏற்படலாம்.
உச்சம்,ஆட்சி பெற்ற நிலையில் சினிமா தொழில் சம்பந்தப்பட்ட நடனம்,நாடகம் மற்றும் தொலைக்காட்சி தொடர் போன்றவற்றில் பிரகாசிக்க வாய்ப்பு,தொழில் அதிபர்கள் மற்றும் எஸ்டேட் முதலாளிகள் போன்றவற்றை உருவாக்கும்.
லக்கனத்தில் புதன் இருப்பின் கணித ஆர்வமுடையவராக இருப்பர்.வாக்குவன்மை பெறலாம்.ஜோதிடம்,விஞ்ஞானம்,தொழில் கல்வி போன்ற ஏதோ ஒன்றில் புலமை உண்டாகும்.பொது அறிவு உடையவர்கள்,ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் ,வாதநோய் மற்றும் நரம்பு தளர்ச்சி உண்டாகலாம்.
புதன் பலம் பெற்ற நிலையில் சிறந்த அறிவாற்றல் மிக்க கல்வியாளர்களாகுவது உறுதி ஆகும்.
லக்கனத்தில் சந்திரன் இருந்தால் நல்ல உணவு,உடை,நல்ல வீடு,பால் உணவு,நேரம் தவறாமை,தவறாத சாப்பாடு,முக அழகு,தாய் நலம்,வெள்ளி பாத்திரம்,தர்மம் செய்யும் குணம் மற்றும் கணபதி அருள் ஆகியவை உண்டாகும்.
மேலும் சளித்தொல்லை ,சைனஸ் பிரச்சினை,காச நோய்,தண்ணீரில் கண்டம் ஆகியவை ஏற்படலாம்.
லக்கனத்தில் சூரியன் இருப்பின் மகிழ்சியான நிலை,சிவ பிரார்தனை,அரசாங்கத்தில் ஆணையிடும் அதிகாரம்,எப்பொழுதும் உண்மையே பேசுதல்,மாசற்ற மனம்,தந்தையால் சுகம்,
உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள்,சிரங்கு,புண்,கட்டி உண்டாகும்.மொத்தத்தில் நவகிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரியன் பலம் பெற்றால் அரசாளும் யோகம் உண்டாகும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
சோதிட ஆய்வாளர்
முது நிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,
செல் :97 151 89 647
செல்; 740 257 08 99
whatsup no
97 151 89 647
(வீட்டிலிருந்தபடியே போன் வழியாக சாதகம் பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)
97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)
No comments:
Post a Comment