Wednesday, 6 September 2017

சாதக அடிப்படையில் கல்வியில்,கலைகளில் வித்தகனாக திகழ ஆய்வு செய்யப்பட வேண்டியது ?

கல்வியில் மற்றும் கலைகளில் வித்தகனாக ...


                                 

கிரகங்கள் படுத்தும் பாடு-( 142 )

செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

               சுக்கிரபகவான் கலைகளுக்கு அதிபதி .இக்கோள் நான்காமிடத்தில் (வித்யாத்தனம் ) ஒருவரை சங்கீதம்,நடனம்,வாத்தியம் மற்றும் பாட்டு போன்ற கலைகளில் ஒருவரை ஈடுபட செய்து அத்துறைகளில் வல்லுணராக மாற்றிக்காட்டும்.

                   அதேநேரத்தில் கல்விக்கு அதிபதி புதன்பகவான் நான்காமிடத்தில் இருப்பின் வேதம்,சோதிடம்,சாஸ்திரம் போன்றவற்றில் ஆர்வப்பட வைக்கும்.

                      இராகுபகவான் விஷக்கோள் என்பதால் சூரியன் அல்லது புதன்பகவான் இருவருள் ஒருவர் உடன் சேர்ந்து சேர்ந்து ஐந்தாம் வீட்டில் சோதிட வல்லுநராவதோடு விஷம் தொடர்புடைய மருத்துவ தொழிலில் ஈடுபடவைக்கும்.மருந்துகள்,இரசாயன பொருள்கள் போன்ற தொழிலில் ஈடுபட வைக்கும்.

                      வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தில் சூரியனும்,புதனும் இருந்து சனி பார்வைபெறின் சோதிட வல்லமையுடன் கணிதத்தில் தேர்ச்சியும் புலமையும் உண்டாகும்.
சனி,சூரியன் ,புதன்  இம்மூன்று கோள்களும் ஐந்தாம் வீட்டில் இருப்பின் தத்துவஞானியாகவும்,வேதாந்தியாகவும் மற்றும் தர்க்கம் செய்பவனாகவும் திகழ்வான்.சூரியனும் ,செவ்வாயும் இரண்டாம் வீட்டில் இருப்பின் சாதகன் தீர்க்கவாதியாக திகழ்வான்.
சூரியன் மற்றும் புதன் இரண்டும் கேந்திரகோணம் பெற்றாலும் அல்லது பதினொன்றாம் வீட்டில் ஏறினாலும் சாதகர் கல்விமானாக திகழ்வான்.

                                  

                    இராகுபகவான் ஆனவர் ஐந்தாம் இடத்தில் பிறரின் உட்கருத்தை அறியும் வல்லமைபடைத்தவராக இருப்பார்.குருபகவான் இரண்டாம் வீட்டில் அந்த  இரண்டாம் வீடும் குருபகவானின் உச்ச ஆட்சி வீடாக இருப்பின் வேதசாஸ்திரங்களில் விற்பன்னராக இருப்பார்.

                   இரண்டாம் வீட்டின் கோளும் மற்றும் குருபகவானும் கேந்திரகோணங்களில் இருப்பின் சாதகர் பல கலைகளை கற்றவராவர்.பொதுவாழ்வில் கொளரவமாகவும் மற்றும் செல்வாக்குடனும் வாழ்பவராக இருப்பர்.

             இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பின் சாதகர் தர்க்க சாத்திரத்தில் வல்லவராக இருப்பார்.அச்செவ்வாயுடன் சந்திரபகவான் சேருமாயின் பெரிய பண்டிதராகவோ மற்றும் கோயில் குருக்களாக இருப்பர்.

                 இரண்டாமிடத்தில் சுக்கிரபகவான் இருப்பின் சாதகர் நடனம்,சங்கீதம் ,சிறந்த கவியாகவோ மற்றும் சொற்பொழிவு ஆற்றும் திறன்படைத்தவராகவோ இருப்பர்.

                  புதன் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற  பலமடைந்து அவை இரண்டாம் வீடாக இருப்பின் கணித வல்லமை,கணிப்பொறியை கையாளும் திறன் ,இசையில்புலமை மற்றும் சோதிடத்தில் புலமை முதலியன உண்டாகும்.

நன்றி

       (தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம்.

தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம் )


தொடர்புக்கு

Cell
740 257 08 99
  97 151 89 647

Whatsup no

97 151 89 647

Email
masterastroravi@gmail.com

                              

By
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை நிலையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.

........................................................................

No comments: