Tuesday, 12 September 2017

சாதகம் பார்க்க வருபவர்களுக்கான பதிவு

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

சாதகம் பார்க்க வருபவர்களுக்கான பதிவு

                                                        ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களுக்காக இந்த பதிவை செலவிடலாம் என என் மனதில் எழுந்ததன் விளைவாக உங்களோடு என் அறிவுக்கு எட்டிய விஷயங்களை உற்ற நண்பனாக உங்களோடு பகிர ஆரம்பிக்கிறேன்.

                                                சோதிடம் என்பது குறி கூறும் வித்தையல்ல. இது மை வைத்துக்கொண்டு மந்திர வித்தை செய்யும் இடமல்ல. இது மனித வாழ்வில் நடக்ககூடிய விஷயங்களை
கோளாராய்ச்சி செய்து தமது சோதிட ஞானத்தோடு தெய்வ அனுகூலத்தின் உதவியுடன் முற்றிலும் கணித அறிவோடு தமக்கு நடந்த நடக்கக்கூடிய விஷயங்களை காரண காரியத்தோடு விளக்கும் அறிவியல்.
இதில் தவறேதும் நடப்பின் அது சோதிடரின் குறைவான ஞானமும்,அரைகுறை கணித அறிவாக இருக்கலாம்.

                                              ஜாதகம் பார்க்கவரும் நபர்கள் முதலில் கேட்கும் கேள்வி உடன்பிறப்புகள்,சாதகரின் அம்மா மற்றும் அப்பாவோடு பிறந்தவர்கள் எண்ணிக்கை பற்றிய கேள்விதான் முதலானதாக இருக்கிறது.
இந்த கேள்விக்கு ஒரு சோதிடர் சரியாக பதில் வழங்கி விட்டால் பிறகு எந்த பலனையும் சரியாக சொல்லாவிட்டாலும் அந்த சோதிடர் தலை சிறந்த சோதிடராக கொடிகட்டி பறக்கிறார்.

                                       உடன் பிறந்த பிறப்புகளை சரியாக கணித்து கூறலாம் என்றால் அதில் சில நடைமுறை சிக்கல் அதாவது மறைமுக விஷயங்கள் பல உள்ளது.

                                          ஒரு பிறந்த குழந்தையின் உடன்பிறப்பு பற்றி தம்பதிகள் இருவரும் இணைந்துவந்து ஜாதகம் பார்க்கும்போது கேட்ட கேள்விக்கு இரண்டு ஆண்,ஒரு பெண் இருக்கலாம் என கூறும்போது இல்லை எங்களுக்கு ஒரு ஆண்,ஒரு பெண்தானே உள்ளது என எதிர்வாதம் புரியும் பெண்ணிடம் இன்றைய அறிவியல் உலகில் இன்னொரு குழந்தை பிறப்பதற்குள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டாய்   அதனால்தான் இருக்கும் என உண்மையை கூறாமல் சொல்லி மழுப்ப வேண்டியுள்ளது.( இந்த பையனின் தந்தைக்கு இரண்டு ஆண் குழந்தை என்பது உண்மை .ஒரு ஆண் குழந்தை மனைவியோடும்,மற்றோரு ஆண் குழந்தை வேறொரு பெண்ணோடு கொண்ட தகாத உறவால் உருவாகியிருககும் வாய்ப்பு உண்டு
இதை அந்த பெண்ணிடம் கூறி வம்புமூட்டிவிடக்கூடாது.இது சோதிட ரகசியம்.இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளது எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச முடியாது.)

                                           இன்றைய பல கிராம சோதிடர்கள் பலருக்கு இது பிறப்பு எண்ணிக்கை சரியாக சொல்லிவிட்டால் கூட்டம் கலைகட்டி நல்ல வசூல் வேட்டை ஆரம்பித்துவிடுகிறது.இந்த பிறப்பு வளர்ப்பு பற்றி கூற சில தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் அறியாததே காரணம் ஆகும்.

                                         இன்னும் வரன் தேடும் சிலர் குறி கேட்பதுபோல் பெண் வீட்டிற்கு முன் என்ன மரம் இருக்கும் ,வீடு எந்த திசையில் இருக்கும் ,பெண்ணுடன் பிறந்த உடன்பிறப்புகள் இதுபோன்ற பல கேள்விகள் கேட்டு இதற்கு பல சோதிடர்கள் பலவிதமான பதில்களை கூறியதும் என்ன சோதிடர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க.வரன்தேடும் தனக்கு வரக்கூடியவள் அறிவானவளா?நல்ல கற்புநிலை உடையவளா?எனக்கு வரும் துணைவி உள்ளூரா அல்லது வெளியூரா?குடும்பத்தை அனுசரித்து இது போன்ற கேள்விகளை கேட்டு எப்பொழுது கல்யான நேரம் வரும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு சோதிடத்தில் விடையளிக்கமுடியும்.
இதை தவிர்த்து சோதிடரை ஒரு சாமியார்போல் நினைத்து கேள்விகேட்காதீர்கள்.

                                   மேலும் சாதகத்தில் சாதகமான விஷயங்களை மட்டும் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.பாதகமான விஷயங்களையும் சொல்லும்போது ஏற்றுக்கொண்டு இது விதிப்பயன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார்போல் மனதை பக்குவப்படுத்தி வாழ பழகுங்கள்.அதைவிட்டு விட்டு நிறை குறை இரண்டையும் கூறும் சோதிடரை தவிர்க்காதீர்கள்.

                                             எனக்குதெரிந்த சோதிட நண்பர் ஒருவர் கூறியது.ஜாதக பொருத்தம் பார்க்க வருபவர்கள் பொருத்தம் இருக்கிறது என்றால் மகிழ்சியாக கேட்கிற தொகையை தருகிறார்கள்.பொருத்தம்.இல்லையென்றால் உரிய தொகைகூட தரமறுக்கிறார்கள் என வருததப்பட்டார்.(ஆதலால் பொருத்தம் இல்லாததற்குக்கு  கூட பொருத்தம் உள்ளது என கூற வாய்ப்பிருக்கிறது.).
ஒருவருக்கு பொருத்தம் இல்லை என கூறி உங்கள் பெண்ணைக்காப்பாற்றிய பெறும்பேறு அந்த சோதிடருக்கு உண்டு.நிச்சயம் இதுபோன்ற நேரங்களில் தட்சணை தர யோசிக்கும்போது தவறு நடைபெற வாய்ப்பு உள்ளது.

                                எனவே ஜாதகம் பார்க்க செல்லும் அன்பர்கள் கீழ்கண்டவை போன்ற நல்ல கேள்விகேட்டு பயன்பெறுங்கள்.

1)குழந்தையின் உடல்நலம்


2)அவர்களது கல்விநிலை


3)பொருளாதர நிலைஜ, வேலைவாய்ப்பு


4)உணவு ,உடை,உறைவிடம் பற்றிரய நிலை


5)குழந்தையின் எதிர்காலம்


6)பெற்றோர்களின் நிலை


மேற்கண்ட ஆக்கப்பூர்வமான கேள்விகளோடு சாதகம் பார்த்து பயனடையுங்கள்.

எல்லோருடைய சாதகங்களிலும் நிறைகளும்,குறைகளும் கலந்தே உள்ளது.
சிலருக்கு தனமிருந்தும்,சுகமிருந்தும்,திருமணம் நடந்தும் கொஞ்சி விளையாட குழந்தையில்லாமல் போய்விடுகிறது.(2,4,7 -மிடம் பலம் பெற்றிருந்தாலும் 5-மிடத்தில் பாவிகள் சூழ்ந்து,ஐந்தாமிட அதிபதியும்,குருவும் நீசம்,பகை பெற்று பாதிக்கப்படுதல்)

சிலருக்கு நிறைய குழந்தைகளையும்,சுகத்தை கொடுத்திருந்தாலும் அள்ளிதின்ன பருக்கையில்லாமல் கஷ்டம்( 5,4 ம் இடம் பலமடைந்தாலும்,தனஸ்தானம் பாதிக்கப்படல்)
பலருக்கு அழகானவர்களாகவும்,கற்றவர்களாகவும் மற்றும் பண்பானவர்களாக இருந்தும் ராட்சசி போன்ற மனைவி அல்லது குணம் குறைந்த அழகற்ற மனைவி அமைந்துவிடுகிறது(ஏழாமிடம் கெட்டு,அதன் அதிபதி பாவிகளுடன் சேரல்)

                        ஒரு சிலர் ஒரு பைசாகூட சம்பாரிக்காமல் யாரோட காசில் சுகமாக வாழ்வார்கள்( 2-மிடம் கெட்டு 4-மிடம் ஆட்சி உச்சம் சுபர் பார்வை)
சிலர் இவர்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க யாரோ சுகம் அணுபவிப்பார்கள்( 2-மிடம் ஆட்சி உச்சம் சுபர் சாரம் மற்றும் பார்வை பெற்று 4-ம் இடம் நீசம் மற்றும் மறைவு ஸ்தானம் பெறல்.).

                                        சிலர் எவ்வளவு லட்சக்கணக்கில் சம்பாரித்தாலும் கடைசியில் கணக்கு பார்த்தால் எல்லாம் விரய செலவாகி கடன்காரராகும் நிலை (2-ம் அதிபதி ஆட்சி உச்சம் அது போல் 6-மற்றும் 12 -ம் அதிபதியும் வலுப்பெற்றதால்)
சிலர் ஜாதகத்தில் அறிவுக்கூரிய குரு,புதன் வலுப்பெற்றதால் படித்து அறிவாளியாக இருந்தாலும் நல்ல தசை புத்தி உரிய நேரத்தில் நடக்காததால் அரசு போட்டித்தேர்வில் தோல்வியுற்று முட்டாளாகிவிடும் நிலை.
சிலருக்கு குரு,புதன் போன்ற கிரகங்கள் பலமிழந்து இருந்தாலும் அரசு கிரகமான சூரியன் வலுப்பெறுவதோடு உரிய நேரத்தில் நல்ல தசையும் நடைபெற்றதால்  அரசு போட்டித்தேர்வில் வெற்றிபெற்று அறிவாளி என சமுகம் பாராட்டும் நிலை.

                                        சிலருக்கு எவ்வித தொழில்நுணுக்கம் தெரிந்தும் தொழிலில் தோல்வியுற்று கடன்காரர் ஆகும் நிலை( சரியான தசை நடைபெறாததாலும்,முயற்சிஸ்தானம் பலமுள்ளதாக இருந்தாலைம் (3-மிடம்),தொழில் ஸ்தானம் கெடல்(10-மிடம்) )
படிக்காதவனுக்கு படித்த அறிவுள்ள மனைவி(2 மற்றும்4-மிடம் கெட்டு இருந்தாலும் 7-மிடம் ஆட்சி உச்சம் சுபர் பார்வை)
இதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிறைகளையும் ஏதாவது ஒரு குறைகளையும் இறைவன் வைத்து அதை அடையும் முயற்சியில் மனிதனை உட்படுத்தி வாழ்வை ருசியுள்ளதாக செய்கிறான்.

                                            எனவே பற்றற்று இறைவன் பாதம் பணிந்தோர்க்கு இவை அனைத்தும் ஒரு வேடிக்கையாக, உலக,நாடகத்தின் ஒரு கதா பாத்திரமாக தெரியும்.

                                  எனவே வாழ்க்கை என்பது ஓரு கலை.அதை அழகாக ஒவ்வொறு கணமும் ரசிப்போம்.இந்த வாழ்க்கை கலை நமக்கு இன்ன பணி என்பதை அறியும் கலையே சோதிடம் என்ற நோக்கோடு சோதிடத்தை அணுகுவோம்.எனவே சோதிடர்களை பிரச்சினையை தீர்த்து வைக்கும் மந்திரவாதியாக எண்ணி கேள்விகேட்காமல் தனக்கு சாதகமாக அமையவில்லை என்பதால் சோதிட துறையை சபிக்காமல் வாழ்வோம்.இது எதிர்காலத்தில் எல்லோரும் அறிந்த கலையாக இளந்தலைமுறையை மாற்றுவதே எம்போன்ற சோதிடர்களின் உன்னத பணியாகும்.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு குல தொழிலாக இருந்தது.இன்று எல்லா குலத்தவரிடமும் பரவி காணப்படுகிறது.

                                          அரிய பல கலைகள் நம்மிடைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிந்தாலும்,இனி இருக்கின்ற கலைகளை தொழில்நுட்ப உதவியோடு உலகறியச்செய்வோம்.
நீங்களும் இம்முயற்சியில் பங்குபெற உளப்பூர்வமான மனமிருப்பின் இப்பதிவை பகிர்ந்து பலர் அறிய செய்யுங்கள்.

                                                                         
அன்புடன்
ரவிச்சந்திரன் M.SC,MA,BEd.
சோதிடர்&ஆசிரியர்
ஓம்சக்தி சோதிட ஆராய்சி மையம்
செல் : 9715189647
               740 257 08 99
whatsup ; 97 151 89 647

(message your details of DATE OF BIRTH,TIME AND BIRTH PLACE in my WHATSUP NO and also get how to pay the fees detail)

No comments: