Thursday, 30 November 2017

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது எப்படி ?

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது எப்படி ?

                           

                                    
கிரகங்கள் படுத்தும் பாடு   -( 95 )

                ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           "காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும்  இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது
மனமே"
   என்றார் கவிஞர் கண்ணதாசன்
ஆம் வான்புகழ் கொண்ட வள்ளுவரும்
"அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை
பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை"
                            என்றார்.


                  எனவே இவ்வுலகில் இன்பமுற வாழ பணம் என்பது முக்கியம்.அதேபோல் அவ்வுலகில்(மேல் உலகில்) இன்பமுடன் வாழ நாம் செய்யும் புண்ணியம் அவசியம் ஆகும்.

             ஒருவருடைய ஜாதகத்தில் பல யோகங்கள் இருந்தாலும் அந்த யோக தசைகள் அவன் வாழ்விலே வராமலே போய்விடும்.இவ்வாறு யோக கிரகங்கள் எவ்வித பலனுமில்லாமல் அவன் வாழ்வு கழிந்துவிடுவதை நாம் ஒரு சிலருக்கு பார்க்கிறோம்.

                ஒரு சிலருக்கு அனுபவிக்கவேண்டிய உரிய பருவத்தில் யோக திசைகள் வராமல் அந்திம காலத்தில் வந்து அந்த யோக பலனை அவர் அனுபவிக்காமல் அவரது குடும்ப அங்கத்தினர்கள் அனுபவிக்கும்படியாக வரும்.

     .            ஒரு மனிதனுக்கு யோக தசை என்பது
குழந்தை பருவம் அல்லது முதுமை பருவத்தில் வருவதில்  எவ்வித பயனுமில்லை.


              வாழும் இளைஞர் காலத்தில் யோக தசை நடந்தால்தான் நல்லது.அந்த யோகத்திற்கும் மதிப்பு உண்டு.

              ஒரு மனிதனின் மூன்றுவித பொருளாதரநிலை;-

                  1) ஏழையாக பிறந்து ஏழையாக வாழ்ந்து
     மடிவது.
                 2) சாதாரண ஏழையாக பிறந்து தனது கடின உழைப்பால் கோடீஸ்வரனாக மாறுவது.


                   3) கோடீஸ்வரனாக பிறநது கோடீஸ்வரனாக வாழ்வது.

                   மேற்கண்ட மூன்று நிலைகளில் இரண்டாவது நிலையில் உள்ளவரை
ஆய்வுககு எடுத்துக்கொள்வோம்.


                   ஒருவரின. ஜாதகத்தில் லக்கனாதிபதி  மற்றும் ராசி அதிபதி நல்ல பலம் பெற்று இருப்பின் எல்லாவித பயன்களையும்.,
யோகங்களையும் இளம்வயதில் அனுபவிக்க முடியும்.

             மாறாக லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதி பலமிழப்பின்
அந்த ஜாதகனுக்கு எல்லாவித யோகங்கள் இருப்பினும் பயனல்லை.


                         



                 ஒருவரின் ஜாதகத்தில் உள்ள யோகங்களை நடைமுறைக்கு கொண்டு வர பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாம் இடம் பலம் பெற வேண்டும்.இதனுடன் பாக்கியாதிபதியும் சம்பந்தப்பட்டால் யோகம் பல மடங்கு
விருத்தியாகும்.


               எனவே இந்த பிறவியில் கோடீஸ்வரர் ஆக  வேண்டுமெனில் போன பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இதனைத்தான் சிலப்பதிகார புலவர் இளங்கோவடிகள்
*ஊழ்வினை வந்து உறுத்துட்டும்* என சூசகமாக தெரிவிக்கிறார்.

               ஒருவரின் ஐனன ஜாதகத்தில்
அடிப்படை பொருளாதர அதிபதி=இரண்டாம் அதிபதி
லாப அதிபதி=பதிரொண்டாம் அதிபதி
பாக்கியாதிபதி(வருமானம்)=ஒன்பதாம் அதிபதி
ஜீவன அதிபதி(தொழில்)=பத்தாமிட அதிபதி
      ஆகிய மேற்கண்ட தன,பாக்கிய ,ஜீவன மற்றும் லாபாதிபதி 
 (2,,9,10 ,11)மிட அதிபதிகள் பலம் பெற்று இவர்கள் இணைந்தோ அல்லத ஒருவருக்கொருவர் பரிவர்தனையோ பெற்று சுப நட்சத்திர சாரம் ,சுபர் பார்வை மற்றும் சேர்க்கை பெற்று இவர்களின்  தசை இளம் வயதில் வரும்போது நீங்களும் கோடீஸ்வரர்தான்.

        இதேபோல் திரிகோண அதிபதிகள் என அழைக்கப்படும்  1 ,5 ,9 ஆம் அதிபதிகள் பலம் பெற்று தங்களுக்குள் பரிவர்தனை பெற்று இருந்தால் இவர்களுடைய தசை காலத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவிர்கள். 


                           தன காரகர் குரு பகவான் நல்ல இடத்தில் இருந்து(கேந்திராதிபதியாக இருப்பில் கேந்திர ஸ்தானத்தில் இல்லாமல் இருத்தல் நலம்.இல்லை கேந்திரத்தில் இருப்பின் கேந்திராதிபதி தோஷம் பெற்று பலன் மாறி தரும்) பலம் பெறல் நலம்.

                       




அன்புடன்,

சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd (Teacher)
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.


வாட்ஸ்அப்: 9715189 647

                                   செல்
   
                             740 257 08 99
                                 9715189647


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)

My Email ; masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai.blogspot.com


AstroRavichandran .blogspot .com

No comments: