Sunday, 27 May 2018

காம வாழ்வில் கிரகங்களின் பங்கு-(2)

காம  வாழ்வும்,கிரகங்களின் பங்கும் -(2)

                            

(கிரகங்கள் படுத்தும்பாடு -(68)

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை'

"காமம் மட்டும் போதும் என்றால் ஒரு விபச்சாரி போதும்!
ஒரு காதல் மட்டும் போதும் என்றால் ஒரு செல்ல பிராணியை வளர்த்தால் போதும் !
எங்கு காதலும்,காமமும் சம அளவில் சந்திக்கிறதோ அதுதான்
உண்மையான வாழ்வு !"

           கவிஞர் வைரமுத்துவின் கவிதை புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.
உண்ணுதல்,உறங்குதல் போன்று காமமும் ஒருவகை உணர்வு.வாழ்வின் சுழற்சியே காமத்தால் அடுத்த தலைமுறைகளுக்கு அழைத்து செல்கிறது.

          உனது காமத்தை முறையான சமூக அங்கீகாரத்துடன் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயரிய கொள்கையோடு வெளிப்படுத்த சமூக அங்கீகாரம் கிடைக்கிறது.

             ஒரு சிலர் இந்த சமூக வரம்பை உடைத்தெறிய அவனது சாதகத்தில் உள்ள கிரக அமைப்பு ஒரு காரணமாகிறது.

          ஒருவனது காம உறவின் வீரியத்தன்மையை அவனது மூன்றாம் வீட்டிலிருந்து அறியப்படுகிறது.சிலர் தனது இணையை திருப்தி படுத்த இயலாமைக்கு காரணம் அவனது மூன்றாமிடமும் அதன் அதிபதியும் பலவீனப்பட்டிருப்பது ஒரு காரணமாகிறது.

          சிலரது அந்தரங்க வாழ்வை பற்றி தெரிந்து கொள்ள நான்காமிடம் முக்கியமானதாகும்.ஒருவரது சாதகத்தில் நான்காமிடம் மற்றும் அதிபதிகளை ஆராய்சி செய்து பார்த்தாலே அவரது கற்புநிலை பற்றி தெளிவாக சோதிடரால் ஆராய்ந்துவிடலாம்.

           நான்காமிடத்தில் சனி+செவ்வாய்,செவ்வாய்+சுக்கிரன் ,செவ்வாய்+ராகு ,சுக்கிரன்+ராகு இதுபோன்ற சேர்க்கைகள் ஆகாது எனினும் இதுபோன்று நான்காமிடத்தில் இணைந்துள்ளதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை தவறாக எடைபோடக்கூடாது.நான்காமாதிபதி சுபராக இருக்கும்பட்சத்திலோ அல்லது சுபர் பார்வைபெறின் பலன் மாறுபடலாம்.

          இந்த நான்காமிடத்தை காமசுகம் முறையாக பெறுவானா? அல்லது முறைதவறிய நிலையா?என்பதை அறியலாம்.

         பொதுவாக சாதக கட்டத்தில் உள்ள நான்காமிடத்தைக் கொண்டு காம சுகத்தை பெறக்கூடிய யோகத்தையும் மற்றும் அவனது அந்தரங்க வாழ்வினையும் சோதிடரால் ஆய்வு செய்து தெரிந்துகொள்ள முடியும்.

         ஒருவரது சிற்றின்பம்,காமம் மற்றும் காதல் போன்ற கற்பனை உணர்வை வளர்க்க கூடிய இடம் அவனது சாதக கட்டத்தில் ஐந்தாமிடமே ஆகும்.
ஒருவன் அழகுணர்ச்சியோடு காதல் கவிதைகள் ,கதைகள் மற்றும் பாடல்கள் இயற்றும் கவிஞராவதற்கும்,
        "காமம் ததும்பும் கதைகள்,கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதும் கவிஞனாவதற்கும் ,
         ஒரு சிலர் உடல் கவர்ச்சியால் காதலில் விழுவதற்கும்,
           காமமிகுதியால் ஒரு பெண்ஆணிற்கோ /ஆண் பெண்ணிற்கோ அடிமையாகி இழப்பதற்கும்,
            மனைவி சொல்லோ மந்திரம் என பெண்டாட்டிதாசர்களாகி உறவுகளையும்,பெற்றோர்களையும் மதிக்காமல் போவதற்கும்
            இந்த ஐந்தாமிட கிரகநிலைகளே காரணமாகும்.

                ஒருவனது கணவன் மற்றும் மனைவிகளுக்கிடையே உள்ள தாம்பத்யு உறவுநிலையும்,தொடுவதால் உண்டாகும் ஸ்பரிச நிலையும்,ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தனக்கு இணையானவர்களை உறவாக்கி கொள்ளும் நிலையும் அவரது சாதககட்டத்தில் ஏழாமிடத்தை கொண்டு அறியலாம்.

              ஒருவருக்கு படுக்கை சுகத்தை பற்றி அறிந்து கொள்ள பணிரெண்டாமிடத்தை கொண்டும் அறியலாம்.

           எனவே ஒருவரது காம வாழ்க்கையைப்பற்றி அறிய நமது சித்தர்களால் உருவாக்கபட்ட கட்டங்கள் முன்றாமிடம்,நான்காமிடம்,ஐந்தாமிடம்,
ஏழாமிடம் மற்றும் பணிரெண்டாமிடம் போன்றவை ஆகும்.

              இதேபோல காமநிலைகள் பற்றி அறிய        கிரகங்களில் மங்களகாரகன் செவ்வாயும்,களஸ்திரகாரகன் சுக்கிரனும் ஆகும்.

             ஒருவனது அலித்தன்மையைப்பற்றி அறிய புதன் பகவான் முக்கியம் ஆகும்.புதனும்,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொண்டால் சாதகருக்கு அலிதன்மை உண்டு  என படித்திருக்கிறேன்..ஆனால் இதில் விதிவிலக்கு உண்டு.நான் பார்த்த பல சாதகங்களில் சனியும்,புதனும் சமசப்தாமாக பார்த்துக்கொண்டுள்ள பலருக்கு குழந்தை பாக்கியம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

               புதன்,சனி சமசப்தம பார்வை அலித்தன்மையை ஏற்படுத்தும் உண்மை என்றாலும் ஏனைய காமஸ்தானங்களும்,காமகிரகங்களும் பலம்பெற்றிருப்பதால் இந்த சமசப்தம பார்வை பலனளிக்கவில்லை.இருநிலைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சாதகர் அலியாகிவிடுவார்.

                  .எனவே பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்கள் இதுபோன்ற நிலைகளை நல்ல சோதிட ஞானம்
நிறைந்த சோதிடர்களை கொண்டு விவாக பொருத்தம் பார்க்கும்போது அறிந்துகொண்டு தம்பதிகளை இணைக்கவேண்டும்.

இந்த காம உறவு நிலைகளை பற்றி அறிய #விவாகதசவதப்பொருத்தத்தில் யோனிப்பொருத்தம்,வசியப்பொருத்தம் மற்றும் பால்பொருத்தம் என மூவித பொருத்தநிலைகள் உள்ளது.

            இதுபோன்ற பலவிஷயங்களை நமது ஞானிகள் சூட்சும வடிவில் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள்.இவைகளை முறையான பயபக்தியோடு படிக்க படிக்க தெய்வகடாட்ஷம் இருப்பின் புலப்படும்.
குரு வாழ்க !குருவே துணை!!

(தங்களது சாதகத்தினை ஆய்வு செய்து சோதிட பலன்கள் மற்றும் பொருத்தம் போன்ற விவரங்களை வீட்டிலிருந்தபடியே போன் வழியாக பலன்பெறலாம்.கட்டணம் உண்டு.விவரங்களுக்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 க்கு "பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

                            
                                    
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்.
புதுக்கோட்டை மாவட்டம்.

செல்: 97 151 89 647
            740 257 08 99
வாட்ஸ் அப்
97 151 89 647

Email id
masterastroravi@gmail.com

My website.
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
@@@@@22@@2@22222@@@@@@@@@@

No comments: