Wednesday, 16 May 2018

சுய தொழில் தொடங்கும் யோகம் உங்களது சாதகத்தில் உண்டா?

சுய  தொழில் தொடங்கும் யோகம் உங்களது சாதகத்தில் உண்டா?


  கிரகங்கள் படுத்தும் பாடு--( 210 )
செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன்
துணை!
     ஒருவர் சுய தொழில் தொடங்குவதற்கு முன்பாக ,நாம் எந்த தொழில் தொடங்க வேண்டும் என ஆர்வம் இருக்கிறதோ ,அந்த தொழில் தொடர்பாக போதிய அனுபவ அறிவினை முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

      நாம் தொழில் தொடங்கவேண்டிய துறையை கண்டறிந்து பிறகு அத்துறை சார்ந்த விவரங்களையும் ,நுணுக்கங்களையும் முதலில் கற்றுகொள்ள பயிற்சி எடுத்தல் அவசியம் ஆகும்.இதற்கு அந்த இடத்திற்கே சென்று நாமும் வேலை பார்க்கும் நபராக சேர்ந்து களஆய்வு செய்து அனுபவங்களை பெறவேண்டும்.

         ஒரு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதிலிருந்து அதனை தயாரித்து வியாபார சந்தையில் இட்டு பணமாக்கும் நிலை வரை ஒவ்வொறு விஷயங்களையும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும்.

        நாம் மேற்கொள்ளும் தொழிலினை சமூக ஊடகங்கள் மற்றும் இனையத்தின் வழியாக மக்களிடம் சென்றடைய வைப்பதற்கான போதுமான கணிப்பொறி அறிவும்,ஆங்கில புலமையையும் வளர்த்துக்கொண்டு வளர்ச்சி பாதையில் தொழிலினை கொண்டு செல்ல பழகவேண்டும்.

       பணநிர்வாகம் எக்காரணம் கொண்டும் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் தனது மேற்பார்வையில் நடக்கவேண்டும்.

            மேற்கண்ட வகையில் பலவிதங்களில் ஒருவர் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் , அவரது சாதகத்தில் சுய  தொழில் தொடங்குவதற்கான யோகம் இல்லாத சூழலிலும்,அல்லது உகந்த திசை மற்றும் கோசார பலன்கள் ஒத்துழைக்காத சூழலில் புதிய சுய தொழில் தொடங்கி அவரது கிரகநிலைக்கு முன்பாக அறிவுதிறன் தோற்கடிப்பட்டு செய்தொழிலிலை இழந்து பல லட்சத்திற்கு கடன்காரர்கள் ஆகி மானஅவமானம் தாங்கிக்கொள்ள முடியமால் உயிரை மாய்த்திக்கொள்ளும் அளவிற்கு  சூழல்களை உருவாக்கிவிடுவதுண்டு.

  ஆதலால் ஒருவர் சுய தொழில் தொடங்குவதற்கு முன்பாக நல்ல அனுபவமிக்க சோதிடர்களிடம் தங்களது சாதகத்தினை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்த பின்னரே சுய தொழில் தொடங்கும் முயற்சியில் களமிறங்கவேண்டும்.
ஒருவர் சுய தொழில் தொடங்கவேண்டும் அவரது ஜீவனஸ்தானதிபதியான பத்தாம் அதிபதி மற்றும் அவை பெறும் நட்சத்திர அதிபதி ,பத்தாம் இடத்தில் இடம்பெறக்கூடிய அல்லது பார்க்க கூடிய கிரகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே சுயதொழிலினை முடிவு செய்யப்படவேண்டும்.

             பத்தாம் அதிபதி ராசி ,பாவம்,மற்றும் அம்சம் ஆகிய இடத்தில் அதன் நிலையினை ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
பொதுவாக ஒருவர் சுயதொழில் தொடங்க கீழ்கண்ட வகையில் கிரகங்கள் பலமடைந்து நிற்க அவர் சுயதொழிலில் இறங்கலாம்.

     ஒருவர் சுய தொழில் தொடங்க சாதகத்தில் புதன்பகவான் பலமடைந்து இருக்க வேண்டும். சாதகத்தில் புதன் பகவான் இருக்கும் இடத்தினை பொறுத்து சுய தொழில் ஒருவருக்கு அமைகிறது.

        ஒருவரது சாதகத்தில் வித்தைக்காரகர் புதன்பகவான் பலமடைந்து 2-7-10-11 ஆம் இடங்களில் இருந்தால் சுயதொழில் ஒருவருக்கு வெற்றிகரமாக அமையும்.

           ஆத்மாக்காரகன் சூரியன் மூல திரிகோண ராசிகளாகிய 1,5,9 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருக்க அரசு கடன் பெற்று சுய தொழில் தொடங்க வாய்ப்புகள் சாதகருக்கு உண்டு. அல்லது உற்பத்தி செய்த பொருட்களை அரசு நிறுவனங்களுக்கு விற்று அதனால் பயன் அடையும் யோகம் உண்டு.

          சனிபகவைன் உச்சம்,மூலதிரிகோணம், ஆட்சி மற்றும் கேந்திர முதலான ஸ்தான பலம் பெற்றால் சனிபகவானின் வலிமைக்கு ஏற்ப சிறு தொழில் முதல் பெரிய தொழிற்சாலை வரை சொந்தத்தில் வைத்து நடத்தும் யோகம் உண்டு.

          சாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று 1,4,9,11 ஆம் இடங்களில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் நேர்மையான,நாணயமான சுயதொழில் தொடங்கி பொருள் ஈட்டும் யோகம் உண்டு

நன்றி !
( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

     வாட்ஸ் அப்
      97 151 89 647

           செல்
     740 257 08 99
       97 151 89 647

                             .

  அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd
  ஆசிரியர்  மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
   masterastroravi@gmail.com
My blog
   AstroRavichandran. blogspot. com
       AstroRavichandransevvai.blogspot.com

No comments: