Tuesday, 8 May 2018

ஆறாம் பாவக பலன்கள்

ஆறாம் பாவக பலன்கள்.

                                 
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 59 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           ஒரு மனிதனது சாதக கட்டத்தில் ஆறாம்  பாவகம் மூலம் ஒருவர் பெறக்கூடிய கடன் தொல்லை ,எதிரிகளால் அடையும் கஷ்டங்கள் மற்றும்  நோயால் பெறப்படும் உடல் பலவீனங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

   ஆறாம் பாவகம் ருண,ரோகம் ,கடன் மற்றும் சத்ரு பயங்களை தரக்கூடிய ஸ்தானமாக மட்டும் பார்க்க கூடாது.ஒரு சில நேரங்களில் ஒருவரது வெற்றியை நிர்ணயம் செய்யும் ஸ்தானமாகவும் மூன்றாம் இடம் அடைகிறது.

       ஒரு சிலர்  என்னதான் அறிவாளியாகவும்,கெட்டிக்காரனாகவும் மற்றும் சிக்கனவாதியாக இருந்திருந்தும் அவர்கள் கடன்காரனாகி தொல்லை பெறுவதற்கு காரணம் அவரது சாதகத்தில் இந்த ஆறாமாதிபதி பலன் பெறுவதே ஆகும்.அதிலும் குறிப்பாக ஆறாமாதிபதி பலம் பெற்று சுபர் பார்வை பெறாமல் அத்திசையை பெறின் கடுமையான கடன் தொல்லைகளுக்கு உள்ளாகிறான்.

           இதுபோன்ற திசை காலங்களில் கடன்காரராக இருப்பது ஒருவகையில் பரவாயில்லை.அவ்வாறு கடன தொல்லை இல்லாத பட்சத்தில் சாதகருக்கு நோயினாலோ அல்லது எதிரிகளாலோ தொல்லையை தரவைத்து அதன் மூலம் கடன் தொல்லைகளை தர வைத்துவிடுகிறான்.

          ஆதலால் ஒரு நல்ல சோதிடரை அணுகி தமக்கு ஆறாமாதிபதி பலம் பெற்றிருக்கிறதா ? என்பதை தெரிந்து கொண்டு அதுபோன்ற தசை மற்றும் புத்தி வரும் காலங்களில்  நாமே ஏதாவது ஒரு பொருளையோ அல்லது சொத்தையோ வாங்கி லாப கடன்காரர்களாக மாறிக்கொள்வது சமயோசித புத்தியாகும்.

           எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றால் சாதகம் பார்ப்பது ,பரிகாரம் மற்றும் தெய்வ வழிபாடு அனைத்தும் அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.விதியை மதியால் வெல்லும் வாய்பையும் இறைவன் அருளியிருக்கிறார்.எனவே நல்ல ஒரு குடும்ப சோதிடரை அணுகி சிலவற்றை வருமுன் காத்துக்கொள்ளலாம்.

         சரி பாவக பலனுக்கு வருகிறேன்.இந்த ஆறாவது வீடானாது சுபகிரகங்களான குரு,சுக்கிரன் மற்றும் புதன்பகவான்களுக்கு மறைவிடமாகும்.மறைவிடத்தில் உள்ள சுபகிரகங்கள் நல்ல பலனைத்தருவதில்லை.

         ஆனால் ஆறில் உள்ள தீக்கோள்கள் நல்ல பலனை தருகிறது .ஆறில் தீக்கோள்கள் பலம்பெற்ற அமைப்பை பெற்றவர்கள் உருவத்தில் சிறிதாக உள்ள சிங்கத்தை கண்ட உருவத்தில் பெரிய யாணை பயந்து ஓடுவது போல, எவ்வளவு பெரிய ஆளும் பயந்து நிற்பான்.சாதகர் குபேரனைப்போலவும் வாழ்வான்.

           ராகு பகவான் ஆறில் இருந்து பலம்பெற்றிருந்தால் எதிரியை வெல்லும் அமைப்பாகும்.

          ஆறாமிடத்ததிபதி,ராகு அல்லது சூரியனுடன் சேர்ந்து பணிரெண்டில் இருப்பின் கீழ்தரமான செயல்களில் ஈடுபடுவான்.

          ஆறாம் அதிபதி பாவகிரகத்துடன் சேர்ந்து எட்டாமிடத்தில் இருந்தால் சாதகன் உடல் முழுவதும் காயம்பட்ட தழும்பு இருக்கும்.

          ஆறாமிடத்ததிபதி பலம் பெற்று லக்கனத்திலும், தனாதிபதி நீசம் ,அஸ்தமம் போன்ற பலவீனப்படும் அமைப்பில் இருக்கும்போது உண்ண உணவு ,உடுத்த உடைக்கு கஷ்டப்படுவான்.

         ஆறுககுடையோனும்,   ஆறுக்குடடையவன் இருக்கும் இடத்திலிருந்து ஆறுக்குடையவனிடமும் செவ்வாய்,ராகு மற்றும் சனி சேர்ந்துள்ள அமைப்பை பெற்றவர்கள் கலகம் செய்பவர்களாக இருப்பார்.

            ஆறாமாதிபதி இரண்டாமிடத்தில் குடியேறில் வம்பு மற்றும் வழக்குகளில் எதிரியை வெல்வான்.ஆனால் அதேநேரத்தில் இரண்டாமிதிபதி ஆறில் எதிரி தன்னை வெல்வான்.

            ஆறாமாதிபதி  பத்தாமிட தொடர்பு அரசுவிரோத தொழிலை கொடுக்கும்.வழக்கறிஞராக ஆகலாம்.

               இதேபோல ஆறாமாதிபதி எந்தஸ்தானத்தோடு தொடர்பு பெறும்போது அதன் பலனை குறைக்கும்.உதாரணமாக ஏழாமிட தொடர்பு பெறும்போது திருமணவாழ்வு பாதிக்கப்படும்.

           ஐந்தாமிட தொடர்பு  புத்திர தடை, .ஆறாமதிபதி பதினொன்றாமிட தொடர்பு எதிரியால் லாபம் உண்டாகும்.

நன்றி !

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                   

அன்புடன்
     சோதிடர்ரவிச்சந்திரன்
         M.Sc, MA, BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்
கறம்பக்குடி,
ஓம் சக்தி ஜோதிடநிலையம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

வாட்ஸ்அப் எண்: 97 151 89 647
      செல்:
740 257 08 99
   97 151 89 647.

No comments: