கிரகங்கள் படுத்தும் பாடு
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
தனது பிள்ளைகளுக்கு வரன்தேடும்போது கடைபிடிக்கவேண்டிய விபரங்களை ஆலோசனையாக தொடர்பதிவாக எழுதி வருகிறேன்.இது ஐந்தாவது பதிவாகும்.
தம்பதிகள் இருவரும் ஒரே நட்சத்திரமாகவும்,அதே நேரத்தில் ஒரே ராசியாகவும் வரும்போது (சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசிகள் வரும் ) அவர்களுக்கு ஜெனன காலத்தில் ஒரே திசையாகவும் இருக்கும்.விவாக பொருத்தம் பார்க்கும்போது இருவருக்கும் ஒரே திசையாக இருக்கும்பட்சத்தில் அவ்விரண்டு திசைகளும் யோகதிசையாக இருந்து கோசரப்படி ஏழரை மற்றும் அட்டமசனி இல்லாதபட்சத்தில் வேண்டுமானால் திருமணம் செய்துவைக்கலாம்.
ஆனால் அதேநேரத்தில் இருவருக்கும் சித்திரை மூன்றாம் பாதமாக இருந்து திருமண நேரத்தில் குரு திசை நடப்பில் இருப்பின் குருவானவர் துலாராசிக்கு மூன்று மற்றும் ஆறுக்குடையவனாக இருப்பதால் இருவருக்கும் குருவானவர் பலம் பெற்றிருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் இருவரும் ஒத்து வாழமாட்டார்கள்.எனவேதான் நமது முன்னோர்கள் "ஒத்த ராசி,ஒத்ததிசை நடந்தால் ஒத்துவாழ நியதியில்லை"என்றார்கள்.
மேலூம் இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தால் கோசாரப்படி வரக்கூடிய அட்டம சனி மற்றும் ஏழரை சனி இருவருக்கும ஒரே நேரத்தில் நடக்கூடிய சூழல் இருப்பதால் அளவுக்கதிகமான கஷ்டங்கள் தரும் என்பதால் பெரும்பாலும் ஒத்த ராசியில் விவாகம் செய்யக்கூடாது என்கிறார்கள்.
ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் தம்பதிகள் இருவருக்கும் மேஷம்,விருட்சகம் மற்றும் சிம்மம் போன்ற ராசிகளாக இருக்கும்போது இருவருக்கும் ஆதிக்ககுணமும்,போராட்ட குணமும் மிகுந்து இருப்பதால் அவர்களுக்கிடையே இனிமையான இல்லறம் அமைய வாய்ப்பில்லை.தம்பதிகளாகுவதற்கு மட்டுமல்ல வியாபார கூட்டணிக்கு கூட சரியாக அமைவதில்லை.
அதேநேரத்தில் இருவருக்கும் யோகதிசை நடைபெறும் காலங்களில் அதிக வளர்ச்சியை தரும்.எனவே திருமண காலத்திலிருந்து ஒரு ஐந்து ஆண்டுகளுக்குமேல் யோக திசை நடைபெறுவதாக இருந்தால் ஒத்த திசையாக இருந்தாலும் விவாகம் செய்து வைக்கலாம்.
.அதற்கு பிறகு வரும் திசை கெட்ட திசையாக இருப்பினும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும்.பிறந்த குழந்தைகளது சாதகங்களின் திசையமைப்பும் இவர்களது வாழ்வை மாற்றிவிடும்.
திருமணமாக கூடிய ஆடவருக்கோ /பெண்டீருக்கோ அவர்களது சாதகங்களில் களத்திரதோஷம்,மங்கல்யதோஷம் இருப்பவர்களுக்கோ அல்லது ஒருவருக்கு லக்கனம்,இரண்டாமிடம் (குடும்பஸ்தானம்) ,ஏழாமிடமான களஸ்திரஸ்தானம் மற்றும் மாங்கல்யஸ்தானமான எட்டாமிடம் போன்ற ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் பலமிழந்து காணப்பட்டாலோ இவர்களுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைக்ககூடாது என ஜோதிடர்களாகிய நாங்கள் கூறுவதன் உள்நோக்கம் "இன்றைய இளைஞர்களிடம் அறிவும்,திறமையும் இருக்கும் அளவிற்கு பொறுமையும்,சகிப்பு தன்மையும் குறைவு.எதையும் உழைக்காமல் குறுகியகாலத்தில் பெற்று அதனை மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும் என்ற உந்துதலே மேல்நோக்கி உள்ளது.
எனவே இதுபோன்ற திருமணயோகமில்லாத தம்பதிகள் திருமண பந்தத்தத்தில் இணையும்போது அளவுகதிகமான எதிர் பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு அவ்வாறு இல்லாத பட்சத்தில் பொறுத்துக்கொண்டு விட்டு கொடுத்து போகும் தன்மை இளவயதில் காணப்படாததால் குடும்ப வாழ்வில் பூகம்பம் உண்டாகி விவாகரத்துவரை சென்றுவிடுகிறார்கள்.ஆதலால் காலம் தாழ்த்தி திருமணம் செய்து வைக்கும்போது ஒருவித மனபக்குவம் அடைந்து எதிர்பார்ப்புகளை குறைத்துகொண்டு விட்டு கொடுத்து வாழ்ந்துவிடுவார்கள் என்பதே ஜோதிடர்கள் கூறும் உள்நோக்கம் ஆகும்.
நன்றி.தொடரும்....
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் நிலையம்.
புதுக்கோட்டை மாவட்டம்..
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் நிலையம்.
புதுக்கோட்டை மாவட்டம்..
வாட்ஸ்அப்
97 151 89 647.
97 151 89 647.
எனது செல் : 97 151 89 647
செல்: 740 257 08 99
செல்: 740 257 08 99
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
AstroRavichandran. blogspot. com
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment