மணமாலை சூடும் வேளை- கிரகங்கள் ஆற்றும்தொடரும்
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
'"கிரகங்கள் படுத்தும் பாடு -( 213 )
"திருமணம் என்பது
ஆயிரம் காலத்து பயிர் "
ஆயிரம் காலத்து பயிர் "
"திருமணம் சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகிறது என்பர்.ஆனால் பெரும்பாலான திருமணங்கள் ரொக்கத்தில்தான் நிர்ணயிக்ப்படுகிறது "
ஒரு சோதிடர் ஆனவர் திருமணத்திற்கு
பொருத்தம் பார்க்கும்போது
வெறும் நட்சத்திர பொருத்தங்களை
மட்டும் வைத்துக்கொண்டு
திருமணம் செய்ய கூடாது.
பொருத்தம் பார்க்கும்போது
வெறும் நட்சத்திர பொருத்தங்களை
மட்டும் வைத்துக்கொண்டு
திருமணம் செய்ய கூடாது.
இரண்டு ஜாதக கட்டங்களை
நன்கு ஆராய்ச்சி செய்து ,கட்ட ரீதியாக பொருத்தம் இருந்தால்
மட்டுமே விவாகம் செய்யலாம்
என கூற வேண்டும்.
நன்கு ஆராய்ச்சி செய்து ,கட்ட ரீதியாக பொருத்தம் இருந்தால்
மட்டுமே விவாகம் செய்யலாம்
என கூற வேண்டும்.
நட்சத்திர அடிப்படையில் நிறைய
பொருத்தங்கள் இருப்பினும்
தினம்,கணம்,ராசி,ரட்சு,யோனி,பால்
என ஆறு பொருத்தங்கள் அவசியம்.
பொருத்தங்கள் இருப்பினும்
தினம்,கணம்,ராசி,ரட்சு,யோனி,பால்
என ஆறு பொருத்தங்கள் அவசியம்.
என்னைபொருத்தவரை நட்சத்திர
பொருத்தம் இல்லாவிட்டாலும்,
கட்ட அடிப்படையில்
இருவருடைய ஜாதகத்திலும்
வாக்குஸ்தானம்(2ம் இடம்),கற்புஸ்தானம் அல்லது சுகஸ்தானம்(4-மிடம்),களஸ்திரஸ்தானம்(7-மிடம்) ,ஆயுள்ஸ்தானம்(8-மிடம்) போன்ற
மேற்கண்ட இடங்கள் வலுப்பெற்று இருக்கவேண்டும்.
பொருத்தம் இல்லாவிட்டாலும்,
கட்ட அடிப்படையில்
இருவருடைய ஜாதகத்திலும்
வாக்குஸ்தானம்(2ம் இடம்),கற்புஸ்தானம் அல்லது சுகஸ்தானம்(4-மிடம்),களஸ்திரஸ்தானம்(7-மிடம்) ,ஆயுள்ஸ்தானம்(8-மிடம்) போன்ற
மேற்கண்ட இடங்கள் வலுப்பெற்று இருக்கவேண்டும்.
மேலும் இவை மட்டும் இல்லாது புத்திரஸ்தானம் என அழைக்கப்படும் ஆண்களுக்கு ஐந்தாமிடம் பெண்களுக்கு ஐந்தாமிடத்தோடு பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடங்கள் மற்றும் புத்திரகாரகனான குருபகவான்
வலுப்பெற்று இருக்கவேண்டும்.
வலுப்பெற்று இருக்கவேண்டும்.
ஏனைய தோஷங்களுக்கு தோஷத்திற்கு இணையான தோஷம் இருந்தால்தான் மணம் புரிவேண்டும்.உதாரணமாக ஒருவருக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரை இணைக்கவேண்டும்.ஆனால் புத்திரதோஷம் உள்ள ஒரு நபருக்கு புத்திரதோஷம் உள்ள நபரையையே இணை சேர்க்ககூடாது.அவ்வாறு இருப்பின் புத்திரபாக்கியமே இல்லாமல் போய்விடும்.
புத்திரதோஷம் உள்ள ஒரு நபருக்கு தோஷமில்லா நபரை இணைக்கும்போது யாரோ ஒருவரது யோகத்தில் புத்திரபாக்கியம் அமைந்துவிடும்.
களத்திரஸ்தானதிபதி சுக்கிரன் நல்ல இடத்திலும் இருந்து
செவ்வாய் தோஷம்,களத்திர தோஷம்,புத்திரதோஷம்
இல்லாமல் இருந்தால்
நட்சத்திரபொருத்தம்
இல்லாவிட்டாலும்
திருமணம் செய்யலாம்
என்பது என் கருத்து.
செவ்வாய் தோஷம்,களத்திர தோஷம்,புத்திரதோஷம்
இல்லாமல் இருந்தால்
நட்சத்திரபொருத்தம்
இல்லாவிட்டாலும்
திருமணம் செய்யலாம்
என்பது என் கருத்து.
இது தொடர்பாக
இனிவரும் கட்டுரைகளில்
நீள் ஆய்வு செய்யலாம் என
உள்ளேன் எனவே முகநூல்
நண்பர்கள் லைக்,கமாண்ட்
மூலமாக தொடர் ஆதரவு
தரும்படி அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
இனிவரும் கட்டுரைகளில்
நீள் ஆய்வு செய்யலாம் என
உள்ளேன் எனவே முகநூல்
நண்பர்கள் லைக்,கமாண்ட்
மூலமாக தொடர் ஆதரவு
தரும்படி அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
முதலில் அமங்கலியோகம்
சூரியனும்,செவ்வாயும் ஒன்றுசேர்ந்து நின்றாலும்,
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும்,பரிவர்தனை செய்து நின்றாலும்,நட்சத்திர காலில் நின்றாலும்
பெண்ணாணனவள் இளமையிலேயே விதவை.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும்,பரிவர்தனை செய்து நின்றாலும்,நட்சத்திர காலில் நின்றாலும்
பெண்ணாணனவள் இளமையிலேயே விதவை.
"இடுசெவ்வாய் கதிர் கூடி
எங்கு நின்றாலும் இவளும்
வாலிபம்தன்னில் அமங்கலியாவாள்.
எங்கு நின்றாலும் இவளும்
வாலிபம்தன்னில் அமங்கலியாவாள்.
லக்கனத்திற்கு ஏழில்
சூரியனும்,ராகுவும்
நின்றால் விதவை.
சூரியனும்,ராகுவும்
நின்றால் விதவை.
லக்கனத்திற்கு ஏழில் சனி,செவ்வாய்,ராகு இருப்பின் ஒருவருக்கு எத்தனை திருமணம் செய்தாலும் ஒருவருக்கு மனைவி நிலைக்காமல் போகும்.
ஒருவருக்கு சாதகத்தில் திருமணம் தொடர்பான முழு தகவல்களை பெற அவர்களது சாதகத்தில் நான்கு ஸ்தானங்களை ஆய்வு செய்து பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழப்படும் லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழான் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் ஆகிய நான்கு இடங்களை கட்டாயம் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
இந்த நான்கு ஸ்தானண்களுடன் மறைவிட ஸ்தான அதிபதிகள் தொடர்பு கொள்வது கூடாது அல்லது இந்த ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களுக்கும் செல்ல கூடாது.
இந்த நான்கு ( 1,2,7,8 ) ஸ்தான அதிபதிகள் நீசம்,வக்ரம்,பகை போன்ற வகைகளில் பலமிழக்ககூடாது.
இந்த நான்கு ஸ்தான அதிபதிகளுடன் அரவுகளான ராகு,கேது மற்றும் பாவிகளான சனி,செவ்வாய் தொடர்பின்றி இருத்தல் அவசியம் ஆகும்.
களத்திர காரகர் சுக்கிரன் மற்றும் மங்களகாரகன் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களை பொறுத்தும் திருமண வாழ்வு அமைகிறது.இவ்விரு கிரகங்கள் சேர்ந்தோ அல்லது சனி,ராகு ஆகிய இரு கிரகங்கள் சேர்ந்தோ இல்லாமல் இருத்தல் சுபம் ஆகும்.
ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி பலம் இழந்து பதினொன்றாம் இட அதிபதி பலமடைந்து இருப்பின் தாரதோஷம் ஆகும்.
"சட்டமாய் சனி ஏழாம் இடம் இருந்தால் தாரம் இரண்டு தப்பாமல் கிட்டுமே"
"சுக்கிரன்தான் கேந்திரத்தில்
இருந்தாலப்பா சொல்லுகிறேன்
சாதகருக்கு தாரம் இரண்டு"
இருந்தாலப்பா சொல்லுகிறேன்
சாதகருக்கு தாரம் இரண்டு"
ஏழாம் இட அதிபதி உடன் சனி,ராகு,செவ்வாய் சேர்க்கை கால தாமத திருமணத்தினை தருகிறது.
(தங்களது சாதகங்களை ஆய்வு செய்து பலனை போன்வழியாகவே தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன்பெறலாம்.பலன்பெற விரும்புவோர் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணவிபரங்களை பெறலாம்.)
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd(ஆசிரியர்)
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
அலைபேசி :9715189647
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
No comments:
Post a Comment