திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு-( 2 )
திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு - ( 2 )
செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன்
துணை!
"திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்"
திருமணம் ஆன தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்து விடுவதற்கு காரணம் "கிரகங்கள் படுத்தும் பாடே" என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் தேவையில்லாத பல பிரச்சினைகள் எழுந்து தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு உருவாதல்,பிரிந்துவாழ்தல் மற்றும் விவாகரத்து போன்ற பிரச்சினைகள் வருவதை அறிவுபூர்வமாக ஆராய்ந்து முன்னரே வராமல் தவிர்த்துவிடலாம் என்பதை திருமணம் ஆனவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும்,நமக்கு மட்டும் இவ்வாறு ஏன் நடக்குது ! என வருத்தப்பட்டு மனம் நொந்துவிடாமல் இருக்கவும்,பிரச்சினைக்கு மற்றவர்களை குறைகூறி பெரிதாக்காமல் இருக்கவும் மற்றும் அதற்குரிய பரிகார வழிபாடுகளை மேற்கொள்ளவும் தொடர்ந்து இரண்டாம் பதிவாக பகிர்ந்துகொள்கிறேன்.
ஒருவரது சாதகத்தில் லக்கனாதிபதியும் மற்றும் ஏழாம் அதிபதியும் ஆட்சி அல்லது உச்சம் போன்ற பலமான அமைப்பை பெறும்போது கிரகயுத்தம் ஏற்பட்டு அவர்களுக்கிடையே ஈகோ தன்மை ஏற்பட்டு நீ பெரியவனா?நான் பெரியவளா ?வினா எழும்பி ஒருவரைவிட தான் பெரியவராக எண்ணி அன்யோன்யம் குறைந்து கருத்து வேறுபாடுகளுடன் வாழவைக்கும்.
உதாரணமாக மேஷம்,ரிஷப லக்கனங்களுக்கு லக்கனாதிபதி செவ்வாயாக இருக்கும் பட்சத்தில் சுக்கிரன் ஏழாம் அதிபதியாக வரும்.அதேபோல லக்கனாதிபதி சுக்கிரானாக இருக்கும் பட்சத்தில் ஏழாம் அதிபதி செவ்வாயாக வருவதால் இருவரும் ஆட்சி சமசப்தமாக பார்த்துக்கொள்ளும தம்பதிகள் கருத்து ஒற்றுமையாக வாழ்ந்ததில்லை.இது என் அனுபவ கருத்து.
இதேபோல சிம்ம லக்கனத்திற்கு லக்கனாதிபதி சூரியனுக்கு ஏழாம் அதிபதி சனிபகவான் ஆகாதவர் என்பதால் இருவரும் ஆட்சி பெறும் பட்சத்தில் தம்பதிகளுகிடையே மட்டுமல்லாமல் தந்தை-மகன் உறவும் சரியாக அமைவதில்லை.
உபய லக்கனகாரர்கள் அதிலும் குறிப்பாக உயய லக்கனத்தையே ராசியாக கொண்டவர்கள் (மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம்) இவர்களுக்கு லக்கனாதிபதி குருபகவான் எனில் ஏழாம் அதிபதி புதன்பகவான் ,புதனாக இருக்கும் பட்சத்தில் ஏழாம் அதிபதி குருபகவான்.இவர்கள் இருவரும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பின் தம்பதிகள் இருவரும் கற்றவர்களாகவும்,அறிவு நிரம்பியவர்களாகவும் ,
அழகானவர்களாகவும் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருவர் மீது அன்பு ஏற்பட வாய்பில்லை.சில நேரங்களில் இவர்களின் வளர்ச்சியை இவர்களது துணைவியார்/துணைவர்களுக்கே பிடிக்காமல் முட்டுகட்டையாக இருப்பார்கள்.
.காரணம் அவர்களை குறைகூறி பயனில்லை.அதாவது லக்கனாதிபதிக்கு ஏழாம் அதிபதியானவர் மூன்றுவிதங்களில் பாதிப்பை தருகிறார்.
1)பாதகாதிபதியாக வருகிறார்.
2) மாரகாதிபதியாகவும் உள்ளார்.
3) ஏழாம் இடத்து அதிபதி கேந்திர அதிபதி என்பதால் அவை ஏழாமிடத்தில் ஆட்சிபெற்று அமரும்போது "கேந்திராதிபதி தோஷத்தை"தருகிறார்.
இதுபோன்ற மூன்றுவித பாதிப்பை தருவதால் ஏழாம் அதிபதி திசையே நடைபெறும் காலங்களில் அவர்களுக்கிடையே பிரிவினையும் தருவார்.
மேற்கண்டவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில் இருவரும் நேர்வலு பெறாமல் சூட்சும வலு பெறல் உகந்தது.
எனவேதான் "ஏழாமிடம் சுத்தமானால் எல்லோருக்கும் நல்லவள்"என்கிறோம்.
இதில் ஏழாமாதிபதி பலமுடன் லக்கனாதிபதி பலமிழப்பின் பெண்டாட்டிதாசர்களாகி" மனைவி சொல்லே மந்திரம் " என சிலர் மாறிவிடுவார்கள்.
ஏழாமாதிபதி பலமிழந்து லக்கனாதிபதி வலுப்பெற மனைவியானவள்"கல்லானலும் கணவன்,புல்லானாலும் புருஷன்"என அன்போடு கணவன் பேச்சை கேட்டு நடப்பாள்.
பொதுவாக நமது முன்னோர்கள் "ஊடலில் தோற்றவர் வென்றார்"என்ற அடிப்படையில் லக்கனாதிபதியோ அல்லது ஏழாமாதிபதியோ நேர்வலு பெறாமல் தோற்று சூட்சும வலு பெற்றவர்களது இல்லறம் இனிக்கும்.
++++++++++++++++++++++++++
(குறிப்பு;தங்களுடைய சாதகங்களை ஆராய்சி செய்து பார்த்து பலனை போன் வழியாகவே பெறலாம்.திருமணபொருத்தம் பார்க்கப்படும்.கட்டணம் உண்டு.நீங்கள் தங்களுடைய பிறந்ததேதி,நேரம்,பிறந்த இடம் போன்ற தகவலை வாட்ஸ்அப்பில் அனுப்பினால் கட்டண தகவல்கள் வாட்ஸ்அப்பில் வழங்கப்படும்.)
""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA ,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்
ஓம்சக்தி சோதிட ஆய்வு மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
வாட்ஸ்அப் எண் : 97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647.
My email
masterastroravi@gmail com
My blogspot
AstroRavichandran. sevvai blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
..........
No comments:
Post a Comment