Saturday, 26 May 2018

எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருடைய சாதகத்தில் உண்டு ?

எதிர்பாராத அதிர்ஷடம் யாருடைய சாதகத்தில் உண்டு?

                               
      
கிரகங்கள் படுத்தும் பாடு--(212 )

செவ்வாய்பட்டிஸ்ரீ பத்ரகாளியம்மன்
துணை!

                சாதாரன நிலையில் சராசரிக்கு கீழ் வாழும் ஒரு சிலருக்கு தமது வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கை தரத்தினையே ( Life Style ) உயர்த்தி சமூகத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நபர்களில் தானும் ஒருவராக உயர்வடையக்கூடிய அளவிற்கு கிரக நிலைகள்  அமைந்து  இருப்பதை சாதகத்தில் காணலாம்.

விபரீத ராஜயோகம்

  ஒருவரது சாதகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தனது தசையில் தந்து மற்றவர்கள் பார்த்து பொறாமையும்,ஆச்சர்யமும் படும் அளவிற்கு ஒரு சிலரை "குப்பையில் இருப்பவர்களை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று விடுவதுண்டு". இவ்வகையில் ஒருவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் விபரீத ராஜயோகத்திற்கு அலாதியான பங்கு உண்டு.

                  " விபரீத ராஜயோகம் என்பதை "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்பார்கள்.அதாவது ஒருவரது சாதகத்தில் கெட்ட ஸ்தானமான மூன்று,ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் அதிபதிகள் தனது திசையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சாதகருக்கு தரவேண்டும் எனில் இந்த கெட்ட ஸ்தான அதிபதிகள் கேந்திர ,கோணங்களில் ஏறி பலப்பட்டு நிற்காமல் மறைவிடங்களில் சென்று கெட்டுவிட்டால் யோக பலன்களை தனது திசையில்  தந்துவிடும் என்பது சோதிட ஆராய்ச்சியின்பால் கண்டறியப்பட்ட முடிவாகும்.

                மூன்றாம் அதிபதி ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் இடத்தில் மறைந்திருக்க வேண்டும்.ஆறாம் அதிபதி மூன்று, எட்டு மற்றும் பணிரெண்டாம் இடத்திலும் ,இதேபோல எட்டாம் அதிபதி மூன்று, ஆறு மற்றும் பணிரெண்டாம் இடத்திலும் ,பணிரெண்டாம் அதிபதி மூன்று, ஆறு மற்றும் எட்டாம் இடத்திலும் மறைந்திருக்க தனது திசையில் திடீர் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

                  இன்னும் விளக்கமாக சொல்லபோனால் அதாவது உதாரணமாக மீன லக்கனத்திற்கு மூன்று மற்றும் எட்டுக்குரிய சுக்கிரன் ஆறாம் இடமான சிம்ம வீட்டிலோ அல்லது பணிரெண்டாம் வீடான கும்பத்திலோ நின்றால் தனது திசை காலங்களில் யோக பலன்களை தந்துவிடுகிறது.

               எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் ஒருவருக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஸ்தானங்கள் இரண்டு,ஐந்து ,ஒன்பது மற்றும் பதினொன்றாம் இடங்கள் ஆகும்.
இந்த ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் பலம் பெற்று தங்களுக்குள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டு பலமடைந்து சுபர் தொடர்பு பெற்று நின்று அதன் தசை நடைபெறும் காலங்களில் சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

            சாதகருக்கு திடீர் பணவரவு தரும் ஸ்தானங்களாக கருதப்படுபவை மூன்று, ஆறு,பத்து மற்றும் பதினொன்றாம் இடங்கல் ஆகும்.இந்த ஸ்தானங்கள் பலம்பெற்று தனது திசை நடைபெறும் காலங்களில் லாட்டரி,ரேஸ்.... போன்ற வகையிலோ தான் மேற்கொண்ட தொழில் மூலமாகவோ சாதகருக்கு திடீர் எதிர்பாராத பண வரவுகளை தந்துவிடுகிறார்.

               சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் நவகிரகங்களில் குருபகவான் மற்றும் சுக்கிரனபகவான் ஆகிய இரு கிரகங்களுக்கும் உரிமை உண்டு.இதில் குருபகவான் தனது எதிர்பாராத அதிர்ஷ்டங்களை நேரிய வழிகளில் சாதகருக்கு ஈட்டி தருவார்.

               ஆனால் சுக்கிரன் பகவான் சாதகருக்கு மறைமுகமான வாழிகளில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சாதகருக்கு வாரி வழங்குவதில் வல்லவர் ஆவார்.

                 சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருவதில் திரிகோண அதிபதிகளான லக்கனம், ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் ஆகிய அதிபதிகள் பலமடைந்து நிற்க தனது திசை காலங்களில் எதிபாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

               ஒன்பதாம் மற்றும் பத்தாம் இட அதிபதிகள் பலமடைந்த தங்களுக்குள் பரிவர்தனை, சேர்க்கை ,சார பரிவர்தனை மற்றும் பார்வை பெறின் "தர்ம-கர்மாதிபதி யோகம் " அளிக்கிறது.தர்ம-கர்மாதிபதி யோகம் சாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தருகிறது.

நன்றி

(தங்களது சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

   வாட்ஸ்அப்
  97 151 89 647

      செல்
   740 257 08 99
      97 151 89 647

                                    
அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
        M.Sc,MA,BEd
ஆய்வாளர்,சோதிட ஆசிரியர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My blogspot
AstroRavichandran. blogspot. Com
astroravichandransevvai.blogspot. com

No comments: