Sunday, 5 August 2018

ஒருவரது சாதகம் எவ்வாறு இருந்தால் நல்லது ?- (1 )

ஒருவரது சாதகம் எவ்வாறு இருந்தால் நல்லது ?--( 1 )


                                     

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 87 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும்
உமக்கு கீழே உள்ளவர்கோடி நினைத்து  பார்த்து நிம்மதி தேடு "

ஒருவரது சாதகம் என்பது நூறு சதவீதம் முழுவதும் நல்ல முறையில் அமையாது.
அதேநேரத்தில்  ஒவ்வொறு சாதகங்களிலும் சில கிரகங்கள் பலமான அமைப்பையும்,ஒரு சில கிரகங்கள் பலவீனமான அமைப்பையும் வைத்து இறைவன் நமது வாழ்வில் திருவிளையாடல் நிகழ்த்துகின்றான்.     

.எல்லோருடைய சாதகங்களும் முழுவதும் நல்லபடியாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில  சுவை இல்லாது போய்விடும்.எனவே ஒவ்வொறுவரும் தனது சாதகத்தில் பலமான அமைப்பு எது என கண்டறிந்து அதற்கேற்றாற்போல வாழ்வினை தேர்ந்தெடுத்து நகர்த்தி செல்லவேண்டும்.எந்த கிரகங்களால் பலவீனம் என்பதை    நாம் தெரிந்து எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் நடந்துகொண்டு அதற்குரிய பரிகாரங்களையும்,கடவுள் வழிபாடுகளை செய்துகொள்ளவேண்டும்.

எல்லாம் விதிப்படிதான் நடக்கும்  எனினும் கிரகங்கள் படுத்தும் பாட்டை நல்ல சோதிட ஞானம் உள்ளவர்களிடம் ஆய்ந்தறிந்து இறைவனை இறுக பிடித்துகொள்ளும்போது "கோளறுபதிகத்தில் கூறியபடி "கோள்கள் என்ன செய்யும்'"என நீங்களும் பாடலாம்.எனவே தியான வலிமை பெற்றவர்களை கிரக கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகம் இருக்காது..இலங்கையை ஆண்ட ராவனன் தனது தவவலிமையால் கிரகங்களை தனது கட்டுக்குள் வைத்தான் என்பதை ராமாயணத்தில் படித்திருப்பீர்கள்.அவன் செய்தது தவறு எனினும் தனது தவ வலிமையால் கட்டுக்கொள் கொண்டு வரும் சக்தி கிடைத்ததை பார்க்கிறோம்.

ஒவ்வொறு சாதகங்களின் பலனும் அவனது பூர்வபுண்ணியப்படியே இந்த ஜென்மத்தில் அமைகிறது.ஒருவருக்கு அழகு,அந்தஸ்து ,கல்வி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அவனது வாழ்வில் திருமண வாழ்வில் இன்னல்களை கொடுத்து அதனால் அவனது வாழ்வையே திசை மாற்றிவிடுகிறான்.

இவனது சாதகத்தை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் அவனது சாதகத்தில் லக்கனாதிபதி,தனாதிபதி ,ஜீவனாதிபதி மற்றும் சுகாதிபதி எல்லாம் நன்றாக அமைந்து அவனது சாதகத்தில் குடும்பஸ்தானம்,களஸ்திரஸ்தானம் மற்றும் ஆயுள்ஸ்தானங்களில் பாவிகள் தொடர்பு பெற்று களஸ்திரஸ்தானதிபதி மற்றும் சுக்கிரன் இதுபோன்ற அமைப்புகளில் பாதிப்படைய வைத்து அவனது தகுதிக்கேற்ற மனைவி அமையாமல் சிக்கல்களை உருவாக்கி விளையாடுகிறான்.

மேற்கண்ட நல்ல மனைவி அமையதற்கான எல்லா விதிகளும் பாதிப்படைந்து உள்ளது என்பதை முழுவதும் முன்பு ஆராய்சி செய்து தெரிந்துகொண்டால் அதற்கேற்றாற்போல் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.ஒருவன் தனது சாதக விதிப்படி நல்ல அன்யோன்யமுள்ள நல்ல மனைவி அமைவதில் சிக்கல் என்பதை முன்னரே சாதக ஆராய்ச்சி செய்து பார்த்துக்கொள்ளும்போது அதற்கேற்றால்போல மனதை பக்குவடுத்தி எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு மனசஞ்சலங்களிலிருந்து ஒரு மனிதன் விடுபடலாம்.

இதைவிடுத்து நமக்கு இறைவன் ஏன் இவ்வளவு கஷ்டங்களை தருகிறான் என வருத்திக்கொள்ள தேவையில்லை.உனக்கு இதுபோன்ற கஷ்டம் எனில் மற்றோருக்கு வேறுவிதமான கஷ்டம் இருக்கும்.

ஒரு சிலருக்கு இறைவன் தனஸ்தானம்,வருமானஸ்தானம்,தொழில்ஸ்தானம்  எல்லாம் நல்ல முறையில் அமைந்து அவனது களஸ்திரஸ்தானமும்,களஸ்திரகாரகன் சுக்கிரனும் நல்ல முறையில் அமைந்து அழகான அறிவுள்ள மனைவியும் அமைந்து செல்வ வளங்கள் நிறைந்திருக்கும் ஆனால் அவரது இல்லத்தில் "கட்டில் ஆடியும் தொட்டில் ஆடாமல் இருக்கும் " .

ஆண்டுகள் நகர நகர வீடு நிறைந்த செல்வங்கள் இருந்தும் குழந்தை செல்வம் இல்லாததால் மிகுந்த வேதனைக்கு உள்ளாவார்கள்.இறைவன் சில நேரங்களில் மனிதர்களிடம் விளையாடிதான் பார்க்கிறான் என சொல்லவேண்டும்.வீடு நிறைய குழந்தைகளை தந்து உண்ணும் உணவிற்கும் ,உடுத்தும் உடைக்கும் கஷ்டப்பட வைக்கிறான்.மாறாக வீடு நிறைய செல்வம் தந்து அதை அனுபவிக்கும் குழந்தை செல்வத்தை தராமல் கஷ்டப்பட வைக்கிறான்.

குழந்தை பாக்கியம் இல்லாததற்கு காரணம்  தம்பதிகள் இருவருக்கும்  பால் இல்லாத மரம் வந்து பால்பொருத்தம் இல்லாமல் இருக்கவேண்டும்.மேலும் அவர்களது இருவரது சாதகங்களிலும் புத்திரஸ்தானமான ஐந்தாமிடமும் அதன் அதிபதியும் மற்றும் புத்திரகாரகன் குருவும் பாதிக்கப்பட்டிருக்கும்.தம்பதிகள் இருவரது சாதகங்களில் யாராவது ஒருவருக்கு புத்திரதோஷமிருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்தால் ஒருவரது யோகத்தில் குழந்தை பாக்கியம் இருக்க வாய்ப்பு உண்டு..

இருவரது சாதகங்களும் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் ஒவ்வொறு சோதிடரா தேடி சாதகம் பார்க்க அவர்களும் கிரக பலனையே மாற்றிவிடும் சக்தி கடவுளிடம் உண்டு என்பதால் குழந்தை இருக்காது என உறுதியாக சொல்ல முடியாமல் ஓவ்வொறுவரும் ஒரு பரிகாரங்களை செய்ய சொல்லியும்,ஒரு குறிப்பிட்ட கோவில்களுக்கு போக சொல்லி விடுவார்கள்.இவ்வாறாக பல கோவில் ,குளம் அழைந்து பல ஆண்டுகள் விரயமாகி விரக்தியின் உச்சத்திற்கு சிலர் சென்றுவிடுவதுண்டு.முழுநம்பிக்கையோடு முழுமனதோடு சந்தேகமில்லாமல் சரணகதியோடு செய்யப்படும்  பரிகாரத்திற்கு பலனுன்டு என்பதால் அவ்வாறு எல்லா சோதிடர்களும் செய்ய சொல்வதுண்டு.

இதன்பிறகு குழந்தைபிறப்பு காலதாமதம் ஆகுபவர்கள் விஞ்ஞான யுகத்தில் செயற்கை கருத்தரிப்பு,குழந்தைகளை தத்துஎடுத்து வளர்த்தல் மூலம் வாழ்வினை மாற்றி கொள்ளத்தான் வேண்டுமெயொழிய மனதை  வருத்தியும்,உயிரை மாய்த்துக்கொள்ளவும் தேவையில்லை.
(புத்திர தடைக்கான காரணங்களை விரிவாக அறிய கீழ்கண்ட எனது வெப்சைடை கிளிக் செய்து படிக்க )

 ---தொடரும்

                                        

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை யாவட்டம்.
mail id
masterastroravi@gmail.com

தொடர்புக்கு
செல் 
97 151 89 647
740 257 08 99

     வாட்ஸ்அப்
97 151 89 647

எனது வெப்சைட்..

AstroRavichandransevvai.blogspot.com

.......
.......

( போன் வழியாக தங்களது சாதகபலன் மற்றும் விவாக பொருத்தங்கள் கணித்து நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பிவைக்கப்படும்.பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவொஅகளை வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்யவும் )

No comments: