Monday, 27 August 2018

 குலதெய்வ வழிபாட்டை தெரிந்து கொள்வது எப்படி?


                                      

கிரகங்கள் படுத்தும் பாடு -( 104 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
*******************************
           ஒருவருக்கு குலதெய்வ வழிபாடு என்பது மிக அவசியம்.நாம் எவ்வளவு தெய்வத்தை வழிபாட்டாலும் முதலில் குலதெய்வ வழிபாடு என்பது அவசியம் ஆகும்.

      கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடுபட நாம் முதலில் குலதெய்வ வழிபாடு செய்தாகவேண்டும்.நாம் பிறந்த மண்ணைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தாலும் நமது வீடுகளில் எந்த இன்பமான மற்றும் துன்பமான சூழல்களில் சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம் செய்துவரவேண்டும்.

          ஒருவரது சாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் பாதிகப்பட்டவர்கள் அவசியம் குலதெய்வத்தை கண்டறிந்து வழிபாட அதன் வழியாக உருவான பாதிப்பிலிருந்து விடுபடலாம்.ஒருவருக்கு குலதெய்வம் என்பது வேறு ,இஷ்ட தெய்வம் என்பது வேறு.

           குலதெய்வங்களாக சிலருக்கு சப்பானி கறுப்பு,நொண்டி முனி,பேச்சியம்மாள்,சன்னாசியப்பச்சி,காவல்காரன்,எல்லைமுனி ,மதுரைவீரன் .....போன்ற பெயர்களில் அழைக்கப்படுவதுண்டு.

          நமது முன்னோர்கள் இதனால்தான் பிறந்தகுழந்தைக்கு முதல் முடி இறக்குவதை தனது குலதெய்வத்திற்கு உறவினர்கள் சூழ சென்று முடி இறக்குவதை முதல் விழாவாக குழந்தைக்கு வைத்தார்கள்.அவ்வாறு  இறக்கும்போது தாய்மாமன் மடியில் வைத்து முடி இறக்குவார்கள்.

           நமது குலதெய்வத்தை தெரிந்து வழிபடுவதுபோல நமது இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்யவேண்டும்.இதனை நமது சாதக கட்டங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
எனவே ஜாதகப்படி நமது இஷ்ட தெய்வத்தை தெரிந்து கொள்ள ஐந்தாமிடம்,அதிபதி மற்றும் ஐந்தில்
உள்ள கிரகம் முதலியவற்றின்மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஐந்தாமதிபதி சூரியன் ஆகில் சிவனையும்,

சந்திரனாகில் சக்தியையும்,

செவ்வாயாகில் முருகனையும்,

புதனாகில் விஷ்ணு எனப்படும் பெருமாளையும்,

குருவாகில் தெட்சிணாமூர்த்தியையும்

சனியாகில் விநாயகரையும்

ராகுவாகில் அனுமானையும்

கேதுவாகில் விநாயகரையும்

சுக்கிரனாகில் சக்தியையும்

வழிபடவேண்டும்.

                            


அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்                   M.SC,MA,BEd
முதுநிலை ஆசிரியர்
Om sakthi jothida nillayam.

வாட்ஜ் அப்; 9715189647

Cell; 9715189647
செல்: 740 257 08 99

(போன் வழியாக சாதகபலன் பெற தொடர்பு கொள்ளவும்.பார்வை கட்டணம் உண்டு.எனது வாட்ஸ்அப் எண் 
97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை தெரிவிக்கவும்)

My blogspot.

AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com
................................................................

No comments: