கிரகங்கள் படுத்தும் பாடு
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
ஒருவரது சாதகத்தில் கோசார பலன்களை பார்க்கும்போது ஜெனன கால கிரக நிலைகளுடன் ஓப்பிட்டு பார்த்துதான் அக்கிரகங்கள் தரக்கூடிய பலன்களை முடிவு செய்யப்படவேண்டும்.
கோசார பலன்கள் ,ஜெனன கால கிரகநிலைகள் மற்றும் நடப்பு திசைகள் ஆகிய மூன்றினையும் ஆய்வு செய்தே ஒரு சாதகருக்கு சாதக பலன் அளிக்கப்பட வேண்டும்.
ஜெனன சாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய ராசி ,அம்சம் மற்றும் பாதசாரம் என்ற வகையில் ஆராயப்படவேண்டும்.
ஒரு சாதகம் யோக சாதகமாக அமைய அவரது சாதகத்தில் லக்கனம் மற்றும் ராசி அதிபதி ஆகிய இருவர் பலமடைந்து தனாதிபதி மற்றும் சுகாதிபதி பலமடைந்து நிற்பின் அவரது சாதகத்தில் எவ்வித யோகம் இல்லை எனினும் அச்சாதகர் ஏதாவது ஒரு வழிமுறையில் பிறர் துணையின்றி வாழ்வில் வெற்றி பெறுவார்.
ஒருவரது சாதகத்தில் கோசார பலன்களான சனி பெயர்ச்சி,ராகு, கேது பெயர்ச்சி ...போன்றவை உகந்ததாக இல்லாதபட்சத்தில் நடைபெறும் ஜெனன கால திசை நல்ல திசையாக இருப்பின் பெரிய பாதிப்புகள் எதனையும் சாதகர் அடைந்து விடுவதில்லை.
ஒருவருக்கு நடைபெறும் திசையானது நல்ல திசையாக இல்லாத பட்சத்தில் கோசார பலன்கள் உகந்ததாக உள்ள காலங்களில் ஜெனன கால திசையிலிருந்து கணக்கிடப்படும் திசையினால் தரப்படும் கெடுபலன்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒருவருக்கு நடைபெறும் கோசார பலன்கள்,,திசை பலன்கள் ஆகிய இரண்டும் நல்லதாக அமையும்பட்சத்தில் சாதகருக்கு யோக பலன்கள் சிறப்பாக அமைய வாய்ப்பு உண்டு.
நமது ஜெனன லக்கனத்தினை லக்கனமாக கொண்டு அதில் உள்ள கிரகங்களின் காரக மற்றும் ஸ்தான பலன்களை ஆராய்ந்து பலன் பார்க்கப்படும் கால கட்டத்தில் வானவீதியில உள்ள கிரகங்களின் நிலையோடு ஒப்பிட்டு அக்கிரகங்கள் தரக்கூடிய பலன்களை ஆராய்ந்து பலன் அறியப்படவேண்டும்.
கோசாரபடி வரும் பொழுது சனிபகவான் செவ்வாய் வீடுகளில் வரும்பொழுது மிகுதியான கெடுபலன்களை தருகிறது.அதேநேரத்தில் மகர மற்றும் கும்ப வீடுகள் தனது சொந்த வீடுகள் என்பதால் அவை தரக்கூடிய கெடுபலன்கள் மிகவும் குறைவுபடும்.
குரு,,சந்திரன்,புதன் மற்றும் சுக்கிரன் போன்ற சுபர்களோடு கோசாரப்படி ராகு, கேது,சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இணைவு உண்டாகக்கூடிய கால கட்டங்களில் அக்கிரகங்களுக்கு உரிய காரக மற்றும் ஸ்தான பலன்களில் பாதிப்பு உண்டாகிறது.
கடந்த ஆடி மாதம் முழுவதும் (2018 ஆம் ஆண்டு) நீர் ராசியான கடக வீட்டில் அரசாங்க காரகன் சூரியன் அரவான ராகு பகவானது சேர்க்கை முக்கிய அரசியல் தலைவர்கள் உயிரிழப்பு ( மரியாதைகுரிய கலைஞர் ,வாஜ்பேயி ) ,நீரால் பாதிப்பு (குறிப்பாக கேரளா ) போன்றவை உருவானது.
இப்புவியியல் நடைபெறும் இயற்கை சீற்றங்கள்,அரசியல் நிலை ,பொருளாதர ஏற்ற இறக்கங்கள்...போன்ற பல்வேறு காரணங்களுக்கு வான வீதியில் பணிரெண்டு ராசிக்குள் கிரகங்கள் இடம்பெறும் நிலையினை பொருத்து அமைகிறது என்பதை நன்கு ஆராய்ச்சி நோக்கில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு பரம்பொருளின் பேரருளால் சூட்சும உண்மைகள் புலப்படும்.
நன்றி!
வாட்ஸ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc, MA ,BEd,
ஆசிரியர் & கிரக ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My Blogspot , Google Search
AstroRavichandran. blogspot
com
AstroRavichandransevvai.blogspot. com
........
No comments:
Post a Comment