Saturday, 4 August 2018

இன்றைய காலகட்டங்களில் சில திருமணங்கள் தோல்வியில்முடிவதன் காரணம் என்ன ?

"இன்றைய காலகட்டங்களில்  சில திருமணங்கள் தோல்வியில் முடிவதன் காரணம் என்ன?
                             
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!


      "கிரகங்கள் படுத்தும் பாடு"
            நவீன காலம்  என்று சொல்லக்கூடிய இன்றைய கால கட்டத்தில் யுவஞர்களும்,யுவதிகளும் தங்களுக்குள் சமூக ஊடகங்களின் வாயிலாகவும்,தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமும் தொடர்பினை உண்டாக்கி அதிலேயே ஒரு நாளின் பெரும்பாலன நேரத்தில் பணத்தினையும்,நேரத்தினையும் செலவளித்து தங்களுக்குள் ஒருவித கற்பனை நிலையினை வடிவமைத்துக்கொள்கிறார்கள்.


        இவ்விதமாக தனக்குள் கற்பனை உணர்வினையும்,ஒருவிதமான எதிர்பார்ப்பினையும் வளர்த்துக்கொண்டவர்கள் இல்லற பந்தந்தில் இணைந்த பிறகு கற்பனை செய்ததுபோல எதிர்பார்ப்புகள் கிடைக்காதபோது அப்பந்தத்தினை எளிதாக தூக்கியெறிந்து வெளிவரக்கூடிய சூழலில் இன்றைய  ஒரு சில இளைஞர்கள/இளைஞிகள் இருக்கின்றார்கள்.பெரும்பாலோனோர் சமூக நிந்தனைக்கு பயந்து உழன்டுகொண்டிருப்போர் பலர்.
        இதுபோன்ற நெருக்கடியான சூழலில் தமது பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்கள் தம்பதிகள் இருவரது சாதகங்களை அலசி ஆராய்ந்து பார்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.


          பொதுவாக இருவரது சாதகங்களிலும் தாரதோஷம்  இருக்கிறதா ? என ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். அதாவது யாருடைய சாதகத்தில களத்திர ஸ்தான அதிபதியான ஏழாம் அதிபதி பலம் இழந்து பதினொன்றாம் அதிபதியான லாபாதிபதி பலம் அடைந்து காணப்பட்டு லக்கனம், குடும்ப ஸ்தானம், களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இடங்களும் பலம் இழந்து காணப்படும் சாதகங்கள் தார யோகத்தினை தர வாய்ப்பு உண்டு.
          லக்கனம், குடும்ப, களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானங்கள் பலம் எவ்விதங்களில் தங்களது பலத்தினை இழந்து நிற்கும் என்பதனை பின்வரும் வகையில் கவனிக்கப்படவேண்டும்.


          1) ஒருவரது சாதகத்தில் லக்கனத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம் பயக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது சாதகரது குணநலன்களையும் பாதிக்கும் என்பதோடு களத்திர ஸ்தானம் என அழைக்கப்படும் ஏழாம் இடத்தினை சமசப்தமாக பார்க்கும் வாய்ப்பு  இருப்பதால் அது களத்திர ஸ்தானத்தினையும் பாதிக்க செய்கிறது.


         சாதகரை வழி நடத்தி செல்லக்கூடிய கேப்டன் என அழைக்கப்படும் லக்கனாதிபதி நீசம்,அஸ்தமனம்,பகை மற்றும் மறைவிடம் போன்ற வகையில் பாதிக்கும் வகையில் இருப்பின் சாதகர் வாழ்வின் போராட்டங்களுக்கு துணிவுடன் எதிர்நீச்சல் போட  தகுதி அற்ற கோழையாக இருப்பர்.இவ்வித அமைப்பினரின் ஒருவித கையாளகாதனம் அவரது வாழ்க்கை துணையை வழிநடத்தி செல்லக்கூடிய தகுதி அற்றவராக இருப்பர்.


          2)இரண்டாம் இடம் சாதகருக்கு குடும்ப ஸ்தானமாகவும்,தனது வாழ்க்கை துணை ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு ஆயுள் ஸ்தானமாக இருப்பதால் இவ்வீட்டு அதிபதி பலம் இழப்பதோ அல்லது இந்த இடங்களில் உச்சம் மற்றும் பாவ கிரகங்கள் அமர்வதோ உகந்ததல்ல.இரண்டாம் இடத்தில் அமரும் பாவகிரகம் தனது மாங்கல்ய ஸ்தானத்தினை பார்க்கின்ற சூழல் உண்டு என்பதாலும் ஆகும்.


  3) ஒருவரது சாதகத்தில் ஏழாம் இடம் என்பது தனக்கு கணவனாக/மனைவியாக வரக்கூடியவர்களை பற்றி அறிந்துகொள்ள உதவும் ஸ்தானம் ஆகும். எனவே சாதகத்தில் ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் அமரக்கூடாது.இவ்வாறு அமையக்கூடிய கிரகங்கள் ஏழாம் இடத்திற்கு களத்திர ஸ்தானமான லக்கனத்தினை பார்பதால் அது சாதகரை பாதிக்ககூடிய வாய்ப்புகள் உண்டு.
        உபய ராசியை கொண்டவர்களை( மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் ) தவிர ஏனையோருக்கு ஏழாம் அதிபதி நீசம்,அஸ்தமனம் ,பகை மற்றும் மறைவிடம் போன்ற வகையில் பலம் இழந்து நிற்க கூடாது.


        4)  சாதகருக்கு மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம், தனது வாழ்க்கை துணைவியாருக்கு குடும்ப ஸ்தானமாகவும் உள்ளதாலதான் இவ்விடத்திலும் பாவ கிரகங்ளோ,உச்சமடைந்த கிரகங்களோ இருக்க கூடாது. அதேநேரத்தில் சாதகரின் "ஆயுள் ஸ்தானம் "எட்டாம் இட  அதிபதியும் பலம் இழந்து நிற்க கூடாது.


  திருமண பந்தத்தில்  இணைக்கும்போது மேற்கண்ட வகையில் பலமிழந்த அமைப்பினை பெற்று இருக்கும் தம்பதிகளை நல்ல வகையில் ஆராய்ந்துதான் ஜோடி சேர்க்க வேண்டும்.
           இவை மட்டுமன்றி ஒருவரது சாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன்,காம காரகர் செவ்வாய் மற்றும் மனநிலைகாரகர் சந்திரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களை நீள் ஆய்வு செய்து திருமண பந்தத்தில் இணை சேர்க்க வேண்டும்.


        யார் ஒருவர் சாதகத்தில் மனநிலை காரகர் சந்திரன் பலமிழந்து நிற்க காம காரகர் செவ்வாய் உடனோ அல்லது களத்திர காரகர் சுக்கிரன் உடனோ அரவான ராகு மற்றும் சனி சேர்ந்து நிற்கின்ற சூழல் உடைய சாதகங்களை இணை சேர்க்கும்போது நன்றாக ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகிறது.
     சாதகரது லக்கன,குடும்ப, களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானங்களுடன் அரவுகளான ராகு, கேது,மற்றும் சனி,செவ்வாய் கலப்பு உள்ள சாதகங்களையும் நன்கு ஆராய்ந்து பொருத்தம் போட வேண்டும்.


       தம்பதிகள் இருவரது சாதகங்களில் புத்திர ஸ்தானம், மற்றும் புத்திரகாரகர் குரு பகவான் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.
           இவை அனைத்தும் லக்கனம்,ராசி என இரு வேறு கோணங்களில் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
  ஒரு சிலருக்கு பூர்வ புண்ணிய பலனால் அதாவது அவனது/அவளது கர்ம வினைப்பயனால் என்னதான் திறமை மிகு சோதிடராக இருப்பினும் அவர்களது கண்ணையும் மறைத்து திருமணபொருத்தம் உண்டு என கூற வைத்து அவர்களை வாழ்க்கை பந்தயத்தில் போரட வைக்கும் அல்லது விலகி திரும்ப பழைய இடக்திற்கே செல்ல வைக்கும்.
நன்றி
                          வாட்ஸ் அப்                        97 151 89 647
                                செல்                     740 257 08 99                      97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
                        
    அன்புடன்
    சோதிடர்ரவிச்சந்திரன்         M.Sc ,MA ,BEd,   ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email   masterastroravi@gmail.com
My blogspot.Season Google Chrome
  AstroRavichandransevvai. blogspot. com
    AstroRavichandran. blogspot. com
...........................................................................

No comments: