Saturday, 4 August 2018

சோதிடர்களால் கூறப்படும் சோதிட பலன்கள் நூறு சதவீதம் சரியா ?-ஆய்வுப்பகுதி.

சோதிடர்களால் கூறப்படும் சோதிடபலன்கள் நூறு சதவீதம் சரியா ?- ஆய்வுப்பகுதி


                                                                 

                                         கிரகங்கள் படுத்தும் பாடு - ( 88 )
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
         சாதக பலன் என்பது யாராலும் நூறு சதவீதம் துல்லியமாக கூறிவிட முடியாது.அப்படி துல்லியமாக கூற இயலாததற்கு    பல காரணங்கள் உள்ளது.அவற்றுள் சிலவற்றை உங்களோடு பகிரலாம் என உள்ளேன்.


           1).பிறந்தநேரம் சரியாக அமையும்பட்சத்தில்தான் அந்நேரத்தைக்கொண்டு கணிக்கப்படும் சாதக கட்டம் சரியானதாக அமையும்.சரியான நேரத்தை ஒருவர் தர தவறினால் அதனை கொண்டு கணிக்கப்பட்ட சாதகமும், தரப்படும் பலன்களிலும் மாறுதல்கள் நிகழலாம்.


           2) கணிதம் செய்யும் முறைகளில் சற்று கவனக்குறைவாக சோதிடர் சாதகம் கணித்து எழுதி இருக்கும் பட்சத்தில் அச்சாதகத்தை கொண்டு சோதிடர் தரப்படும் பலன்களில் மாற்றமோ அல்லது தவறோ நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

        3) சில கிரகங்கள் லக்கன சந்தியில் இருக்கும்போது அதை எந்த ராசியில் சேர்ப்பது எனும் அனுபவம் வாய்ந்த சோதிடர்களிடம் காட்டும்போது அவர்கள் இவற்றையெல்லாம் கவனித்து அதற்கு தகுந்தாற்போல பலனளிப்பர். இதற்குத்தான் ராசியை மட்டும் வைத்து பார்க்காமல் சாதகபார்க்கும்போது  பாவகம் ,அம்சம் மற்றும் பாதசாரம் ஆகியவைகளை  பார்தது பலனளிக்கும் சோதிடரை நாடவேண்டும்..இவ்வாறு பார்க்க தவறும் பட்சத்தில்  இதன்வழியாகவும்  தவறு நிகழலாம்.


           4) ஒரு சாதகத்தில் ஒரு கிரகம் உச்சமோ/நீசமோ  பெற்றிருக்கும்போது அவை ஒரு குறிப்பிட்ட பாகை வரைதான் உச்சநிலை/நீசநிலை  அந்த பாகை தாண்டியநிலையில் அக்கிரகம் சாதரன நிலையைத்தான் பெற்றிருக்கும்.எனவே இதுபோன்ற நிலையில் ஒரு கிரகத்தை உச்சம் என வைத்து புகழ அதற்கு மாறான பலன் அளிப்பதை பார்த்திருப்பீர்கள். இதேபோல நீசம் என வைத்து அக்கிரகம் பலமிழந்துவிட்டது என பலனளிக்க அவை நல்ல பலனை தருவதையும் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.


             5) ஒரு கிரகம் உச்சம் பெற்று வக்கி
ரம் பெற்றிருந்தாலோ அல்லது ராசியில் ஒரு கிரகம் உச்சம் பெற்று அம்சத்தில் நீசம் பெற்றிருந்தாலோ அவை நீச பலனையே தருகிறது.எனவே ராசியில் ஒரு கிரகம் உச்சம் பெற்றிருக்கும் அவை வக்கிரம் பெற்றிருக்கிறதா ?  அம்சத்தில் நீசம் அடைந்துள்ளதா?  உச்ச வரம்பிற்குள்ள பாகையில் உள்ளதா ? என பலவற்றை ஆராய்ந்து அதற்கு பிறகே அக்கிரகம் உச்சமடைந்துள்ளது என முடிவுக்கு வரவேண்டும். இதைதவிர்த்து மேலோட்டமாக பார்த்து நன்கு ஆராயாமல் சோதிடர்களாகிய நாம் பலனளிக்கும் பட்சத்தில் நல்லது நடக்கும் என கூறி நடக்காமல் போனால் பரவாயில்லை.கெட்டது நடக்கும் என கூறி அவர்களை மனசஞ்சலத்திற்கு உட்பட நேர்வது எவ்வளவு சிரமம் ஆகும்.

          ஒருவருக்கு மேம்போக்காக பார்க்கும்போது அட்டமாதி திசை நடந்து அதுவும் பாவியாக இருந்து அக்கிரகம் உச்சமடைந்திருப்பதால் சரியாக ஆழ்ந்து கவனிக்காமல் அட்டமாதி உச்சம் பெற்றிருப்பதால் உயிருக்கே ஆபத்து என பலன்பார்த்த ஏதோ ஒரு சோதிடர் சொல்லிய நிலையில் அவரும் மற்றும் அவரது குடும்பமும் சொல்ல இயலாத வேதனையான சூழலில் என்னிடம் அவர்கள் சாதகம் பார்க்க வந்தார்கள் பார்த்தால் அந்த உச்ச கிரகம் உச்சம் பெற்ற நிலையில் இருந்தாலும் அம்சத்தில் நீசமடைந்து இருப்பதால் பலம் குறைவு .எனவே  உயிருக்கு ஆபத்து என்ற வகையில் பயப்பட தேவையில்லை.ஒரு சில சிறு கஷ்டங்களை தரும் பயப்பட தேவையில்லை என கூறி இறைவழிபாடு செய்ய சொல்லி அனுப்பினேன்.


          6) பலன் அளிக்கப்படும் சோதிடர்கள் முழுநேர அர்பணிப்போடு திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.எல்லா துறைகளிலும் அத்துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளாத பட்சத்தில் அவரால் அத்துறைக்கு கெட்ட பெயர் வர இயலும்.


.      கவிஞர் தாகூர் கூறுவார்
"தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் விளக்கால்தான் மற்ற விளக்குகளை பற்றவைக்க இயலும்.அதுபோல தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் ஆசிரியரால்தான் மற்ற மாணவர்களுக்கு அறிவுதீபம் ஏற்றமுடியும்"
         இது ஆசிரிய துறைக்கு மட்டுமல்ல சோதிடதுறைக்கும் பொருந்தும்.சரியான புலமையும்,ஆராய்ச்சி சிந்தனையும் மற்றும் அனுபவமும் பெற முயலாத சோதிடர்களால் தரப்படும் பலன்களிலும் தவறு நிகழ வாய்ப்பு  உண்டு.


           மேலே குறிப்பிட்ட இதுபோன்ற இன்னும் பல காரணங்களால் சோதிட பலனில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பலன் மாறுபட வாய்ப்பு உண்டு.எனவே ஒரு சோதிடர் உங்கள் வீட்டில் யாரோ ஒரு உயிருக்கு ஆபத்து என கூறியவுடன் ஓவேன வீட்டில் ஒப்பாரிவைத்து ஊரை கூப்பிடாமல் நின்று நிதானமாக அந்த சாதகத்தை  நன்கு ஆராய்ந்து பார்க்கும் சோதிடரை நாடி ஆராய்ந்து பாருங்கள்.அதற்குரிய பரிகார பூஜை செய்யுங்கள்.நம்மையும் மீறிய ஒரு சக்தி உண்டு அவனிடம் சரணடையுங்கள்.


         ஒரு சோதிட பலனை அதவாது கெட்ட பலனை நல்ல பலனாக மாற்றும் உரிமை கடவுளுக்கும் , நமது நல்ல சிந்தனை,நாம் மேற்கொள்ளும் தர்மம் மற்றும் தியானவலிமையால் மாற்ற இயலும்.எல்லாம் விதிப்படி மட்டுமே நடக்கும் எனில் நாட்டில் கேவில் குளங்கள் எதற்கு ?முயற்சி செய்வது எதற்கு ?கிரகபலனையையே மாற்றிபடைக்கும் வல்லமை உன் அகத்தினில் மறைந்துள்ளது.தேடி கண்டறியுங்கள்.


         " நமக்கு பிறக்கும் குழந்தைகள் நம்மூலம் பிறந்தாலும் அவர்கள் நமக்காக மட்டும் பிறந்தவர்கள் அல்ல .அவர்கள் சில காரண காரியங்களுக்காக இப்புவியில் சிருஷ்டிக்கப்படுகிறார்கள்."
                                                                               

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்,
   M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
    செல்
97 151 89 647
740 257 08 99
  வாட்ஸ்அப்
97 151 89 647
(தங்களது சாதகபலன் , விவாகப்பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து எழுதுதல் போன்ற சேவைகளை நீங்கள் எந்தநாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே செய்து தரப்படும்.இவை நேரில் பலன் பெற இயலாதவருக்கான அறியவாய்ப்பு.நீங்கள் பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்தமாவட்டம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸைஸ் செய்யவும் )
My email I'd
   masterastroravi@gmail.com
My website. Google search
 AstroRavichandran. blogspot. com
  AstroRavichandransevvai.blogspot. com
,................................
.

No comments: