Saturday, 4 August 2018

சோதிடம் அறிவோம்--(1)

சோதிடம் அறிவோம் !-(1)

                              
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !
  கிரகங்கள் படுத்தும் பாடு.


    ஒருவரது சாதக பலன் துல்லியமாக பெற வேண்டுமாயின் சாதகரது பிறந்த நேரமானது சரியாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.இன்றைய கால கட்டத்தில் எல்லோரது கைகளிலும் கை கடிகாரம் இல்லாமல் இருந்தாலும் அலைபேசி கட்டாயம் இருப்பதால் பிறந்தநேரத்தினை குறிப்பதை  பொறுத்தவரையில்  தவறு நிகழ வாய்ப்பு இல்லை.


  பிறகு சாதகத்தினை எழுதுவதற்கு இருவேறு கணித முறைகள் இருந்தாலும் வாக்கிய கணித முறையினைவிட திருக்கணித முறையில் சாதகம் கணித்து பலன் சொல்லும் முறையே மிகவும் சிறந்த ஒன்றாகும்.


        ஒரு சாதகம் எம்முறையில எழுதப்பட்டாலும் பலன் அளிக்கும் முறையினை பொறுத்தவரையில் ஒரேவிதமான முறையே ஆகும்.பலன் அளிப்பதை பொறுத்தவரையில் சோதிடரின் தனித்திறமையும்,பரம்பொருள்  அவருக்கு அளித்த வரமும் குறிப்பிட தக்கதாகும்.

      வெறும் ராசி கட்டத்தினை மட்டுமே வைத்துத்கொண்டு பலன் அளிப்பது என்பது துல்லியமான பலனாக இருக்காது.ஒருவரது சாதக கட்டத்தில் பலன் அளிக்க " குறைந்தபட்சம்  ராசி,அம்சம்,பாவகம் மற்றும் பாதசாரம் இவைகளோடு, ஒவ்வொறு கிரகங்களும் எந்த பாகையில் நிற்கின்றன என்பவையும் அத்தியாவாசமான ஒன்றாகும்.


  இவை மட்டுமல்லாமல் கிரகங்கள் தான் பெற்றுள்ள ஸ்தான பலன் அடிப்படையில் அக்கிரகங்களானது அந்த சாதகருக்கு நற்பலன்களை தருமா ? அல்லது தீய பலன்களை தருமா ? என கவனிக்கப்படவேண்டும்.


  ஒரு கிரகம் அவரது சாதக கட்டத்தில் உச்சம்,மூலதிரிகோணம்,ஆட்சி,நட்பு,பகை,நீசம் ,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் ஆகிய மேற்கண்ட ஒன்றில் எந்த நிலையில் கிரகங்கள் உள்ளது எனவும் கவனிக்கப்படவேண்டும்.


 ஒரு கிரகமானது தான் பெற்ற நட்சத்திர சார அதிபதியையும்,அவை எந்த பாகையில் நிற்கிறார் எனவும்,கிரகத்தின் சார அதிபதியின் வலிமை முதலானவற்றை ஆராய்ந்து அறியப்படவேண்டும்.


  ஒரு கிரகம் தரும் பலன்களை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை அக்கிரகத்துடன் சேர்ந்துள்ள அல்லது பார்வை பெறும் கிரகங்களால் இயலும்.நற்கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையானது  நற்பலன்களை கூட்டியும்,பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வை அவை தரும் நற்பலன்களை குறைத்தும் தருகிறது.


   ஒரு சுப கிரகத்தின் பார்வையானது மற்றொரு கிரகத்தின் மீது விழுவதை கொண்டு அக்கிரகமானது பார்வை பெற்றதனால் அக்கிரகத்தின் திசையில் நல்ல பலன்களை தர போகிறது என சோதிடர்கள் கூறியும் அவர்கள் கூறியபடி பலன் தரப்படவில்லை எனில் பார்க்கின்ற கிரக நிலையினை சரியாக ஆராய்ந்து அறியவில்லை என கொள்ளலாம்.
 உதாரணமாக "குரு பார்த்தால் கோடி நன்மை " என்றாலும் மகர வீட்டிலிருந்து குரு பகவான் பார்க்கின்றது எனில் அவை நீசம் பெற்ற குரு பகவான் என்பதால் பார்வை பலம் கிடையாது.இதுபோல கவனித்து பார்வை பலன்களை முடிவு செய்யப்படவேண்டும்.


மேலும் மிகவும் நுண்ணிய முறையில் ஆய்வு செய்து பார்க்கும்போது ஒரு கிரகமானது சம சப்தமாகவே ஏழாம் இடத்தினை பார்க்கின்றது என வைத்துக்கொண்டாலும் அக்கிரகமானது தனது ஏழாம் இடத்தில் உள்ள கிரகத்தினை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள்தான் பார்க்கின்றது.அக்குறிப்பிட்ட பாகையை விட்டு விலகி ஏழாம் இடத்தில் ஒரு கிரகமானது நின்றால்  அக்கிரகமானது சாதக கட்டத்தில் ஏழாம் இடத்தினை பார்வை பெறுவதுபோல தெரிந்தாலும் இதுபோல ஆய்ந்து நோக்கும்போது அப்பார்வையால் பார்வை பலன்  கிடையாது.


  இதேபோல ஒரு கிரகமானது சேர்ந்து நின்றாலும் ,சேர்ந்து நிற்பதை கொண்டு சேர்க்கை பலன்களை புகழ்ந்து கூறிவிடக்கூடாது.உதாரணமாக "சூரியபகவானும்,புதன்பகவானும் இணைந்திருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு " புத-ஆதித்ய யோகம் " உள்ளது.சாதகர் கல்வியில் புலமை மிக்கவனாக பல பட்டங்களை பெறுவான்" என புகழ்ந்து விடக்கூடாது.
 ஏனெனில் இணைந்திருக்கும் இரு கிரகங்களும் முழு பலத்துடன் இருந்தால் மட்டுமே மேற்கண்ட யோக பலன்களை தரும் வாய்ப்பு உண்டு.


அதேநேரத்தில் இணைந்திருக்கும் இரு கிரகங்களில் ஒன்று நீசம்,பகை,அஸ்தமனம்,வக்கிரம் மற்றும் மறைவிட அதிபதியாக இருப்பின் மேற்கண்ட வகையில் பலன் கூறியதற்கு மாறாக பலன்களை தர வாய்ப்பு உண்டு.


             ஒரு கிரகமானது ராசியில் பலம் இழந்து நின்றாலும் அக்கிரகமானது அம்ச பீடத்தில் பலமடைந்து நிற்கும்போது அக்கிரகம் தரக்கூடிய பலன்களில் குறைவு  இருக்காது.


              ஒரு கிரகம் நீசம் அடைந்து இருந்தாலும் அக்கிரகமானது நீசபங்கம் அடைந்து உள்ளதா ? என கவனிக்கப்படவேண்டும்.


    ஒருவரது சாதகத்தில் என்னதான் யோகம் தரக்கூடிய கிரகங்கள் பலமடைந்து இருப்பினும் அக்கிரக திசை நடப்பில் வரக்கூடிய காலங்களில் மட்டுமே யோக பலன்களை தரும். அக்கிரக திசையானது சாதகரது வாழ்வில் வராது எனில் அவை பலமடைந்து இருப்பினும் பலனற்றது.


 ஒருவருக்கு சாதக பலன்களை கூறும்போது நடப்பில் இருக்கும் திசையானது நற்பலன்களை தருமா ? தராதா ? என்பதனை லக்கன அடிப்படையில் மட்டுமே வைத்து முடிவு செய்துவிடக்கூடாது.


     விதி( லக்கனம்) ,மதி (ராசி ) மற்றும் கதி (சூரியன் ) என மூவித கோணங்களில் ஆய்வு செய்து பலன் அளிக்கப்படவேண்டும்.
  ஒருவரது சாதகத்தில் சாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டனாக திகழக்கூடிய லக்கனாதிபதி வலிமையடைந்து இருக்கவேண்டும்.


   அதேபோல சாதகத்தில் ஒருவருக்கு நடக்கூடிய திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாக இருப்பின் நற்பலன்களை அதிகமாக அதன் திசை காலங்களில் கொடுக்கிறது.
     ராசியிலும்,அம்சத்திலும் ஒரு கிரகமானது ஓரே ராசியில் இருப்பின் "வர்க்கோத்தமம்" ஆகும்.இவ்வாறு வர்க்கோத்தமம் அடைந்த கிரகங்கள்  இயற்கையாக தான் பெற்ற கிரக பலன்களைவிட சற்று கூடுதலான பலன்களை கொடுக்கிறது. வர்க்கோத்தமம் அடைந்து உள்ள கிரகங்களின் ஸ்தான பலன்களை பொறுத்து நற்பலன்களையோ அல்லது தீய பலன்களையோ கூட்டி  தருகிறது.


  சாதகத்தில் இரு வீட்டு அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி கொண்டால் அவை "பரிவர்தனை யோகம் ஆகும். பரிவர்தனையில் சுப பரிவர்தனை ,அசுப பரிவர்தனை என இரு வகை உண்டு. பரிவர்தனை பெறும்  கிரகங்கள் நீசமே பெற்றிருந்தாலும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும்போது நீச பலன்களை இழந்து விடுவதுண்டு.


  குரு, செவ்வாய்,சனி போன்ற கிரகங்களுக்கு  ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடங்களை சூரியன் கடந்து செல்லும்போது 'வக்கிரம்" உண்டாகிறது.பொதுவாக வக்கிரம் பெற்ற கிரகங்கள் தனது இயல்பாக தரும் பலனிலிருந்து மாறுபாடு அடைகிறது.


 1- ல் அஸ்தங்கம்

2,11-ல் சீக்கிர கதி

3-ல் சமகதி

4-ல் மந்தகதி

5,6-ல் வக்கிர கதி

7,8-ல் அதிவக்கிர கதி

9,10-ல் குடிலகதி

12-ல் அதிசீக்கிர கதி


 பாவ கிரகங்கள் வக்கிரம் அடைய நற்பலன்களை தர முயல்கிறது.அதேநேரத்தில் சுப கிரக வக்கிரம் யோக பலன்களை சற்று பங்கப்படுத்தும்.உச்சம் பெற்ற கிரகமானது வக்கிரம் பெற நீச பலன்களை சாதகருக்கு தருகிறது.ஆட்சியடைந்த கிரகம் வக்கிரம் பெறக்கூடாது.


 நன்றி. அனுபவம் தொடரும்.......


 வாட்ஸ் அப்     97 151 89 647


           செல்
 .        740 257 08 99
       97 151 89 647.
               😈(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம், மற்றும் பிரச்சினைகளை போக்கும் பரிகாரம் போன்ற சேவைகளை போன் வழியாகவே பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)


    

 அன்புடன்சோதிடர்ரவிச்சந்திரன்  M.Sc, MA,BEd.ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My emailmasterastroravi@gmail.com
Google search my blog
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. Com.........

No comments: