விராயாதிபதி எனும் முக்தியோகம்
கிரகங்கள் படுத்தும் பாடு
"விரயத்தோன் எனும் பணிரெண்டாமிடத்தோனின்
விவரங்களை சொல்லி வாரான்
கேளேன் அன்பா"
"வெளிநாடு செல்லல் மற்றும் படுக்கைசுகம்,விநயமான கெட்டகாரியம்,தீய செலவு
தானத்தோடு அன்னதானம்
எனும் சுப செலவு,முக்தியோகம்
விவாதம் செய்தல் யாகம் செய்தல்
இவை யாவும் எனைக்கொண்டு
அறியலாமே.! "
"பாரினிலே என் பலனை கூறவே
ஸ்ரீபத்ரகாளி உமதருளை வேண்டினேனே"
"ஆறுமி ஆறு தன்னில் அம்புலி
கதிரோன் சேர கூறுவாய் ஈனம் என்று கொடும்பிணி விரோதனென்று சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதோடு வேறு வேறு
ஆவாரேன்று வேதியர் உரைத்த வாக்கு"
(விளக்கம்:12-மிடத்தில் சூரியன்,சந்திரன் ஏற்படும் விளைவு)
"திங்களுக்கு வியத்தினில் லக்கனோத்தானிருக்க
லக்கனோத்தனுக்கு விரயத்தில்
திங்களிருக்க தாயுக்கும் பிள்ளைக்கும் தகராறு தரணியிலே
கோள்களாலே வரலாறு."
"வெய்யோனுக்கு விரயத்தில் லக்கனோத்தோன் இவனுக்கு
வியத்தினில் வெய்யோனிருக்க
தந்தைக்கும பிள்ளைக்கும் ஆகாது
தனயா இதுவே உனது விதியாது"
(விளக்கம்:திங்கள்-சந்திரன்
வெய்யோன்-சூரியன்)
விரயம் ,வியம-12 ம் இடம்)
"விரயமும் தனமும் பரிமாற
லக்கனோத்தன் நீசமாக வீட்டினிலே
சேர்த்து வைத்த கால் பணமும்
வில்லங்கமாகி அரசு சப்தி செய்யும்.
"சுப விரயம். வெளிநாடு செல்வதற்கும சொல்லுகிறேன்
பலனைத்தான் கேளு நண்பா
விரயத்திலே சுபகிரகம் குடியேறி
விரயத்தோன் ஆட்சியுச்சமாய்
கேந்திர கோணமேறி நின்றால்
மெச்சப்பா பலனைத்தான் மேதினிலே மேலான சித்தர்களின்
அருளாளே"
"வியத்தினிலே அசயர்கள் ஆள
அல்லது சேர கணக்கோனும்
இவர்களோடு உறவு கொண்டாட
சேர்த்து வைத்த அவனது செல்லமேல்லாம் சிறிதுசிறிதாய்
அழியும் பாரே"
சொற்பொருள்:அசயர்கள் ;-
-பாவிகள்(ராகு,கேது,சனி,செவ்வாய்)
கணக்கோன்-புதன்
"சுகத்தோனுக்கும் விரயோனுக்கும்
சொந்தமுண்டு தாய்சுகம் வாகனயோகம் மனைசுகம் தந்திடுவான் உலகினிலே நான்கோனே
தரணியிலே யாரலும்
தரகூடாத தாரம் தரும் படுக்கைசுகம் தருபவனோருவன்தான்
வியத்தோனே"
"விரயோனும் சுகத்தோனும்
வீரியமாய் தானிருந்தால்
வீடு வாகண யோகமுண்டே
ஆறாமாதி விரயத்தில் குடியேற
அப்பா அவன் வீட்டை சுற்றி
பார்க்க அரைமணியும் போதாதப்பா"
"பாக்கியமும் விரயோனுடன்
வெய்யோன் கூட தந்தைக்கேற்ற
தனயனாய் தரணியிலே அமைவான் பாரே"
"வியத்தினிலே பாபரும் வன்
பகையாய் கூடி திங்களும் சனி சேயும் ஈராரு சேர நோக்க
ஆறுமி ஆறுதன்னில்
அம்புலியும் கதிரோன் சேர
இருமூன்று இருநான்கு
ஈராரே
வியத்தே இந்நால்வர் உறவு கொண்டு வாழ
தகர்ந்திடும் நிலனோடு தனங்கள்யாவும் தானே"
கவி விளக்கம்:-
" 12 ம் இடத்தில் பாவிகள் பகை கொண்டு இருந்து சந்திரன்,சனி,செவ்வாய் இம்முவரும் இருந்தாலும் பார்த்தாலும்,
12ல் சூரியன்,சந்திரன் இருந்தாலும்
சனி,செவ்வாய்,சந்திரன் மற்றும் சூரியன் இந்நான்கு கூடி ஓரு ராசியில் நின்றாலும்
நிலபுலன்கள்,வீடு வாசல் இழந்து
ஜாதகர் நிற்பார்.
சொற்பொருள்
அம்புலி -சந்திரன்
வெய்யோன்-சூரியன்
சேய்-செவ்வாய்
"வியத்திலோ லாபத்திலோ
அந்தனனும் அறிவோன் கூட
அஷ்டலெட்சுமி யோகம்"
சொற்பொருள்
அந்தனன்-குரு
அறிவன்-புதன்
"வியத்தினிலே ஞானகாரகன்
விதிதந்திடும் மோட்சம் முக்தி
முடிந்ததப்பா அவனது ஏழ்பிறப்பும்தானே"
(12-ல் கேது இருப்பின்)
"கடல் போல பலனுண்டு
நாணபா கேளு கரண்டிகொண்டு
கடல் நீரை அள்ள முயன்றேன்
அள்ள அள்ள குறையாத சமுத்திரத்தை என்னாறு அறிவு
கடவுளின் அருளைக்கொண்டு
சிறியேன் நான் ஏதோ கவியால்
சொல்ல முயன்றேன் குறையிருப்பின் நானே பொறுப்பாவேன் நிறையிருப்பின்
நீக்கமற நிறைந்திருக்கும்
பரம்பொருளுக்கே.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd(Teacher)
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல்
9715189647
740 257 08 99
Whatsup no
97 151 89 647
( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
..............................................................
No comments:
Post a Comment