"உங்களது சாதகங்களை முன் ஆய்வு செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

கிரகங்கள் படுத்தும் பாடு-( 158 )
செவ்வாய்ப்பட்டிஅருள்மிகுதேவி ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் துணை!
சில நேரங்களில் ஆறறிவு படைத்த மனிதன் அஃறிணையான விலங்குகளிடமிருந்தும், பறவைகளிடமிருந்தும் பல பாடங்களை கற்றுக்தொள்ளவேண்டிய அவசியம் நேரிடுகிறது.
மனிதன்
" ஒற்றுமை உணர்வினை
காகங்களிடமிருந்தும்,
நன்றி உணர்வினை நாய்களிடமிருந்தும,
உழைப்பையும்,சேமித்து வைக்கும் தன்மையினை எறும்புகளிடமிருந்திம்,
சுறுசுறுப்பினையும்,
கூடிவாழும் சமூகத்தன்மையினையும், தேனீக்கள் இடமிருந்தும்" கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
அதேபோல தமக்கு என வாய்ப்பும்,உரிய காலமும் வரும்வரை காத்திருத்தல் என்பது அவசியமான ஒன்றாகும்.இதற்கு "பொறுமையும்,சகிப்பு தன்மையும் மிக மிக அவசியமாகும்.இப்பண்பிணை கொக்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள லேன்டியுள்ளது.
இதனை ஒளவை மூதாட்டியார் தனது மூதுரை -5 ம் பாடலின் வழியாக கடைசி இரண்டு வரியில்
" ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு ' என்கிறார்.
கொக்கானது எப்படி சிறு குஞ்சு மீன்களையெல்லாம் ஒட விட்டுவிட்டு தவநிலை முனிவரைப்போல ஒற்றைக்காலில் தனக்கு தேவையான பெரிய மீன் வரும்வரை காத்திருப்பதுபோல மனிதர்களாகிய நாமும் உரிய நேரம் வரும்வரை காத்திருக்க பழகிக்கொள்ளவேண்டும்.
உரிய காலம்
மனிதனாக பிறப்பு எடுக்கும் ஒவ்வொறு மனிதனையும் வழிநடத்தி செல்லுவதில் நவகோள்களுக்கு முக்கியமான பங்கு உண்டு.எனவே மனிதன் ஆக பிறப்பு எடுத்த நாம் நமது சாதகத்தினை கோளாராய்ச்சி செய்து தம்மை பலப்படுத்தக்கூடிய கிரகங்கள் எவை ? எவை ? எனவும்,அதேபோல எக்கிரகங்கள் நமது வளர்ச்சியை பலவீனப்படுத்தும் எனவும் அறிந்து கொள்ளுங்கள்.அவ்வாறு தெரிந்துகொண்ட பின் தம்மை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லக்கூடிய திசையானது வரும்வரை பொறுமை காக்க பழகவேண்டும்.
கோணாதிபதிகள்
பொதுவாக ஒருவருக்கு அதிக யோகங்களை தந்து வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதில் கோணாதிபதிகளுக்கு ( 1,5,9 ) அதிக பங்கு உண்டு.இதனால்தான் ஒருவரது சாதகத்தில் லக்கனாதிபதி,ஐந்தாமிட அதிபதி மற்றும் ஒன்பதாமிட அதிபதிகளை லக்கன யோகராக எடுத்துக்கொண்டு அவர்களது திசைகள்
ஆனது மானிடருக்கு நன்மை பயக்கும் திசைகளாக கருதப்படுகிறது.இக்கோணாதிபதிகள் பலவீனப்படாத சூழலில் யோகங்களை தந்து குப்பையில் இருப்பவனையும்,கோபுர கலசமாக உச்சத்தில் வாழவைக்கும்.
No comments:
Post a Comment