Saturday, 4 August 2018

சோதிடம் அறிவோம்--( 2 )

          சோதிடம் அறிவோம் -(2)

                            

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

              ஒரு நாள் என்பது ஒரு பகலும்,ஒரு இரவும் சேர்ந்தது.ஒரு பகலும்,ஒரு இரவும் சேர்ந்தது 60 நாழிகை ஆகும்.

 1 நாழிகைக்கு -24 நிமிடம் ஆகும்
 21/2 நாழிகை கொண்டது ஒரு மணி ஆகும்.ஆதலால் பகல் 30 நாழிகையும்,இரவு 30 நாழிகையும் கொண்டுள்ளது.

              ஒரு நாள் காலை சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள காலம் 60 நாழிகை ஆகும். அதாவது ஒரு நாள் ஆகும்.

            சூரியன் உதயம் முதல் மறைகின்ற வரை உள்ள நாழிகை "அகசு நாழிகை " ஆகும். இந்த அகசு நாழிகை இராகு காலம்,எம பண்ட காலம் முதலியவற்றை கணக்கிடுவதற்கு பயன்படுகிறது.

              15 நாட்கள்-1 பட்சம்

                2 பட்சம்-1 மாதம்

                 2 மாதங்கள்-1 ருது

              3 ருது---1 அயனம்

              2 அயனம்--1 வருடம் ஆகும்.

                        பட்சம்

1.பூர்வ பட்சம் அல்லது சுக்கில பட்சம்

     அமாவாசை  காலத்திலிருந்து பொளர்ணமி காலம் வரை உட்பட்ட காலம் ஆகும்.இதனை வளர்பிறை காலம் ஆகும்.வளர்பிறை சந்திரபகவானே இயற்கை சுபர் ஆவார்.

2) அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம்

          பொளர்ணமி காலத்திலிருந்து அமாவாசை வரை உள்ள காலம் ஆகும்.தேய்பிறை சந்திரன் பாவராக செயல்படுகிறார்.

                          திதி

   திதி என்பது சூரியனுக்கும்,சந்திரனுக்கும் இடைவெளித் தூரமாகும்.
 அமாவாசை தினத்தன்று சேர்ந்திருந்ச சூரியனும்,சந்திரனும்  பிரதமை திதியன்று பிரிந்து மீண்டும் அமாவாசை தினத்தன்று கூடுவதற்கு 30 நாட்களாகும்.

சந்திரன்

           ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் மட்டுமே தங்குவார் . (12×21/4=30 ).ஆக சந்திரன் ஒரு மாத கால அளவிற்குள் பணிரெண்டு ராசியினையும் சுற்றி வந்துவிடுவார்

சூரியன்

           ஒரு மாத காலம் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.சித்திரை மாதம் மேஷத்தில் தொடங்கி ,பங்குனி மாதம் மீன ராசியில் சஞ்சரிப்பார்.ஆக சூரியன் பணிரெண்டு ராசியினையும் சுற்றி வர ஒரு வருட கால ஆகிறது.

செவ்வாய்

       செவ்வாய் பகவானை பொறுத்த வரையில் ஒரு ராசியில் ஒன்றரை மாத காலம் வாசம் செய்வார்.ஆக ஒரு சுற்று சுற்றி வர 12×11/2=18 மாதங்கள் .அதாவது ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

குரு பகவான்

     ஒரு வருட காலம் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்வார்.

ராகு,கேது

            ஒரு ராசிக்கு ஒன்றரை ஆண்டுகள் வீதம் வாசம் செய்வார்.ராகுபகவான் இருக்கின்ற ராசிக்கு 180 பாகை தள்ளி அதாவது ராகுபகவான் இருக்கும் வீட்டிற்கு ஏழாவது வீட்டில் கேது பகவான் இருப்பார்.எல்லா கிரகங்களும் வக்ர காலங்களை தவிர மற்ற நாட்களில் முன்னோக்கி நகர இவ்விரு நிழல் கிரகங்களும் பின்னோக்கியே நகர்வதால் வக்ர கதி இவ்விரண்டு கிரகங்களுக்கு கிடையாது.

சனி பகவான்

       ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்கிறது.கிரங்களிலே சனிபகவான் மட்டும் ஒரு ராசியில் நீண்ட காலம் வாசம் செய்யக்கூடிய கிரகம் ஆகும்.சந்திரன் பகவான் இருக்கும் ராசிக்கு பணிரெண்டாம் ராசிக்கு சனி பகவான் வரும் காலங்களில் ஒருவருக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது.

          ஒரு மனிதனுக்கு சனி பகவான் முதல் சுற்று  ஏழரை சனி காலத்தினை "மங்கு சனி எனவும்,இரண்டாவது ஏழரைசனி சுற்று " பொங்கு சனி எனவும்,மூன்றாவது ஏழரை சனி சுற்று "மரண சனி " எனவும் அழைக்கப்படுகிறது.

     பணிரெண்டு ராசியினை சனிபகவான் சுற்றி வர முப்பது ஆண்டுகள் ஆகிறது.

          சாதக கட்டத்தில் ஜென்ம ராசிக்கு பணிரெண்டாம் இடத்தில் சனி வரும் காலம் "விரய சனி " என  அழைக்கப்படுகிறது.

        விரயசனி கால  கட்டங்களி்ல்  சாதகருக்கு கடுமையான விரய செலவுகளை தரும் என்பதால் சமயோசித தனமாக சுப விரய செலவுகளாக வீடு கட்டுதல்,திருமண செலவு போன்றவற்றினை தாமாக செய்து விரய செலவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

  ஜென்ம ராசிக்கு சனி வரும் காலம் "   "ஜென்ம சனி "என அழைக்கப்படுகிறது. இக்கால கட்டங்களில் கடுமையான இன்னல்களை தந்தாலும் வாழ்விற்கு தேவையான அனுபவத்தினை தந்து பக்குவப்படுத்தும்.

   ராசிக்கு இரண்டில் சனிபகவான் வரும் காலம் " பாத சனி "என அழைக்கப்படுகிறது.

சூரியன்,புதன்,சுக்கிரன்

  சூரியனைப்போலவே புதன்,சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் ஒரு மாத கால அளவே ஒரு ராசியில் வாசம் செய்யக்கூடிய கிரகங்கள் ஆகும்.

     சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் புதனும்,சுக்கிரனும் உள்வட்ட கிரகங்கள் ஆகும். புதன் பகவான் சாதக கட்டத்தில் சூரியனுடன் இணைந்தோ அல்லது  சூரியன் பகவான் இருக்கும் ராசிக்கு ஒரு ராசி முன்,பின் ராசிக்குள்ளே இருப்பார்.

      இதைப்போலவே சுக்கிரன் பகவானும் சூரியன் உடன் இணைந்தோ அல்லது சூரியன் பகவான் இருக்கும் ராசிக்கு முன்,பின் இரண்டு வீடுகளுக்குள்ளே வாசம் செய்வார்.

       மேற்கண்ட வகையிலான கருத்துக்கள்  அனைத்தும் தெளிவாக தெரியும் பட்சத்தில் ஒரு  சாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் சரியான விதத்தில் அமைந்துள்ளதா ? என எளிதாக கணக்கீடு செய்து  பார்க்காமல் கண்டறியலாம்.

         ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வீதம் பணிரெண்டு லக்கனத்திற்கும் 12×2=24 மணி நேரம் ஆகிறது.அதாவது ஒரு நாள் ஆகிறது.

        ஒரு சாதகத்தில் விதி எனப்படும் லக்கனத்தினை கண்டறிய ஒரு குழந்தை பிறந்த காலத்தின் சூரிய உதயத்தினை கண்டறிய வேண்டும்..ஒரு குழந்தை ஜெனன நேரத்தினை கொண்டு சூரிய உதயத்திலிருத்திலிருந்து கணக்கீடு உதயாதி கண்டறியப்படவேண்டும்.

 பஞ்சாங்கத்தில் அன்றைய நாளின் லக்கன இருப்பிலிருந்து உதயாதி காலம் வரை கணக்கிட்டு லக்கனம் கண்டறியப்படுகிறது.

  உதயாதி நாழிகை அன்று பால் வீதியின் தொடுவானத்தில்  தெரிகின்ற நட்சத்திரத்தினை கண்டறிந்து அந்த நட்சத்திரத்தின் பாத அடிப்படையில் ராசியும்,ஜெனன கால திசை கண்டறியப்படுகிறது.

நன்றி!

  வாட்ஸ் அப்

 97 151 89 647

    செல்
   
    740 257 08 88
      97 151 89 647

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                               


        அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
      M.Sc,MA,BEd
  ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
 ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot
 AstroRavichandran. blogspot. com

  AstroRavichandransevvai.blogspot. com

................

No comments: