சனியின் சேர்க்கை மற்றும் பார்வை தரும் பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை.
ஒருவருடைய ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய தசையின் பலன்களை கூட சனியின் பார்வை மற்றும் சேர்க்கை தர விடாமல் செய்து விடுகிறது. ஒரு கிரகம் இலக்கண யோகராக இருந்தாலும் அந்த கிரகத்துடன் சனி சேர்ந்தோ அல்லது சனியின் பார்வையைப் பெற்றோ இருந்தால் அவை பாவ தன்மையை அடைந்து அந்த கிரகத்துக்கு உரிய ஆதிபத்திய மற்றும் காரக பலனை சிறப்பாக செய்ய விடாமல் செய்து விடுகிறது.
சனிபகவான் இருக்கும் இடத்தை மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் பாவத்தன்மை அடைய வைத்து அதன் தசை காலங்களில் நல்ல பலனை தர விடாமல் செய்துவிடுகிறது.
தன்னோடு இணைந்த கிரகத்தின் காரகத்துவ பலனையும் வாழ்நாள் முழுவதும் செய்யவிடாமல் செய்துவிடுகிறது.
சனிபகவான் இயற்கை சுப கிரகங்களோடு இணையும் போது தான் சுபத் தன்மை அடைந்து தன்னோடு இணைந்த கிரகத்தை பாவத்தன்மை அடைய வைத்து அதன் தசை காலங்களில் அந்த கிரக அதிபதி பலனை சிறப்பாக செய்ய விடாமல் செய்துவிடுகிறது.
சனியின் சேர்க்கை ஒரு விதமான பலனையும் மற்றும் அதன் பார்வை வேறு ஒரு விதமான பலனையும் ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.
சனியின் சேர்க்கை தரும் பலனை கணிப்பதற்கு முன்பாக அந்த கிரகத்துடன் இணைந்த கிரகம் பாவத்தன்மை படைத்த கிரகமாக இருந்தால் கூடுதலான கெடுபலனை சேர்க்கை பலனை அதன் தசையில் தருகிறது. அவரோடு இணைந்த சனி தனது மூன்று, ஏழு மற்றும் பத்தாம் பார்வையால் பார்வை செய்யும் இடத்தையும் அந்த கிரகத்தையும் கெடுபலனை தரவைக்கிறது.
உதாரணமாக சனி உடன் தேய்பிறை சந்திரன் செவ்வாய் மற்றும் ராகு இணையும் போது கூடுதலான கெடுபலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
சனி பகவானுடன் சுப கிரகங்கள் இணையும் போது சனி சுபத்தன்மை அடைந்து தன்னோடு இணைந்த கிரகம் பாவத்தன்மை அடைந்து அந்த கிரகம் தன் தசை முழுவதும் கெடுபலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
சனி பகவான் உடன் இணைந்த கிரகத்தை எந்த அளவு கெடுக்கிறது என்பதை டிகிரி அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும். சனியுடன் இணைந்த சுப கிரகம் எட்டு பாகைக்குள்ளாக இணைந்தால் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுகிறது.
ஒரு 13 பாகை அளவில் இணைந்தால் 50 சதவீதம் மட்டும் பாதிக்கப்படுகிறது .
22 பாகைக்கு மேல் இருந்தால் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்ற அடிப்படையில் பெரிய அளவிலான பாதிப்பை அந்த சுப கிரகம் அடைந்து விடுவதில்லை.
ஒரு ராசியானது இரண்டே கால் நட்சத்திரத்தை கொண்டது .அதாவது ஒன்பது பாதம் ஒரு ராசியில் அடங்கி வருகிறது. ஒரு நட்சத்திர பாதம் 3 பாகை 20 கலையாகும் .ஒரு முழு நட்சத்திரம் 13 பாகை 20 கலை ஆகும் .இந்த கணக்கீடு சனி உடன் இணைந்த கிரகத்தின் பாவத்தன்மை அளவிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
சனியின் பார்வை சர்வ நாசம் என்பார்கள். எனவே சனி இருப்பை விட அதன் பார்வை அதிகமான கெடுபலனை ஜாதகருக்கு அதன் தசை காலங்களில் அள்ளிக் கொடுக்கிறது. சனி பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து மூன்று,ஏழு மற்றும் பத்தாம் பார்வையால் பார்வை செய்கிறது.
சனி பகவான் லக்னத்தில் இருக்கும் பொழுது லக்கினத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அதாவது சோம்பேறித்தனம் சுறுசுறுப்பு இல்லாத நிலை ,மந்த நிலை அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய நிலை மற்றும் குள்ள தன்மை போன்ற வகையிலான பாதிப்பை ஜாதகருக்கு கொடுக்கிறது.
மூன்றாம் பார்வை சகோதர ஸ்தானத்தை பாதிக்கிறது
ஏழாம் பார்வையா தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை மற்றும் நட்பு நிலை போன்றவற்றை பாதிப்பை உண்டாக்குகிறது. தனது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பாதிக்கிறது.
சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது ஜாதகரின் குடும்ப நிலை கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத தன்மை கல்வி நிலை போன்றவற்றை பாதிப்பதோடு தனது மூன்றாம் பார்வையால் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் ,வண்டி வாகன சுகம் போன்றவற்றை பாதிப்படையை செய்கிறது.
சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் ஆயுள் ஸ்தானத்தை பாதிக்கிறது.
இரண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தை பார்வை செய்கிறது.. மூத்த சகோதர இல்லாத இலை மறு திருமணம் தராத நிலை, லாபத்தை அடைய இயலாத தன்மை போன்றவற்றை உருவாக்குகிறது.
மூன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் சகோதர தோஷத்தையும் ,கீர்த்தி ,புகழ் அந்தஸ்து அடைய இயலாத நிலையையும் சாதகருக்கு கொடுப்பார் என்று சொல்லப்பட்டாலும்
சில நேரங்களில் பாவ கிரகம் மூன்றாம் இடத்தில் இருக்கும் போது நல்ல பலனை தருவார் என்ற விதிப்படி ஓரளவேனும் சில நல்ல பலன்களையும் தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.
மூன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்து புத்திர தோஷத்தை அதாவது புத்திர தடையை தருவார். பூர்வீக சொத்துகளில் வசிக்க இயலாத நிலை அல்லது பூர்வீக சொத்துக்காக சண்டை ,வழக்கு போன்றவை உண்டாகும்.
மூன்றாம் இடத்தில் சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் விரைய ஸ்தானமான 12 ஆம் இடத்தை பார்வை செய்து அயன ,சயன சுகம் மற்றும் படுக்கை சுகம் போன்றவற்றை தர இயலாது நிலையில் இருப்பார். கஞ்சத்தனம் உடையவராக இருப்பார்.
நான்காம் இடத்தில் உள்ள சனி பகவான் சுகம் ,தாய் சுகம் ,கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பை தருவதோடு தனது மூன்றாவது பார்வையால் சத்ரு ஸ்தானமான இடத்தை அதாவது சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். தனது மூன்றாம் பார்வை ஜாதகருக்கு கடன், பிணி மற்றும் எதிர்ப்பு இல்லாத நிலையை உருவாக்குகிறார்.
தனது ஏழாம் பார்வையால் லக்கினத்திற்கு பத்தாம் இடத்தை பார்வை செய்து சுயதொழில் செய்ய விடாமல் செய்கிறார்.
தனது பத்தாம் பார்வையால் லக்னத்தை பார்வை செய்கிறார் லக்னத்தை பார்வை செய்தால் திருமண தடை, சோம்பேறித்தனம் ,சுறுசுறுப்பு இல்லாத நிலை, அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய தன்மை மற்றும் குள்ளத்தன்மை போன்றவை உருவாக்கும்..
ஐந்தாம் இடத்தில் சனி பகவான் இருந்தால் புத்திர தடை ,பிள்ளைகளால் பலன் பெற இயலாது நிலை, மாமன் வர்க்கத்தால் பாதிப்பு ,பூர்விக இடத்தில் வசிக்க இயலாத நிலை,ஏனைய பிற அமைப்புகளை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படலாம்.வம்பு சண்டை வழக்கு பிரச்சனைகளை சந்திக்க கூடிய தன்மை போன்றவை உருவாகும்.
ஐந்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்து திருமண தடை உருவாக்குகிறார். தனது சம சப்தம பார்வையால் பதினொன்றாம் இடத்தை அதாவது லாப ஸ்தானத்தை பார்வை செய்து மூத்த சகோதரன் , லாபம் கிடைக்க இயலாத நிலை போன்றவற்றை உருவாக்குகிறார். தனது பத்தாம் பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்து கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது நிலை, தன வரவு குறைவு, திருமண தடை போன்றவற்றை உருவாக்குகிறார்.
ஒருவர் ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் இடத்தில் மட்டும் சனி பகவான் இருந்தாலும் அல்லது சனி பகவான் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய நிலையில் இருக்கும். அதாவது கடன் ,பிணி, எதிர்ப்பு போன்றவை உருவாக இயலாத நிலையை கொடுக்கும்.
ஆறாம் இடத்தில் இருந்து தனது மூணாவது பார்வையால் சனி பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்வை செய்து ஆயுள் பங்கம் தருவார். தனது சம சப்தம ஸ்தானமான ஏழாம் இட பார்வையால் விரைய ஸ்தானமான 12 ஆம் இடத்தை பார்த்து அயன, சயன, படுக்கை சுகம் மற்றும் நித்திரை சுகம் போன்றவற்றில் பாதிப்பு மற்றும் கஞ்சத்தனம் போன்றவற்றை தருவார்.
ஆறாமிடத்தில் உள்ள சனி பகவான்தனது பத்தாவது பார்வையால் லக்னத்திற்கு மூன்றாம் இடமான இளைய சகோதர ஸ்தானத்தை பார்வை செய்து இளைய சகோதரர்கள் பாதிப்பு ,கீர்த்தி புகழ் அடைய இயலாத நிலை போன்றவற்றை உருவாக்குவார்.
களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி பகவான் இருப்பது காலதாமத் திருமணம், மனதுக்கு பிடித்த மனைவி அமைவில் சிக்கல், நண்பர்கள் பாதிப்பு, கூட்டு தொழில் ஆகாது போன்றவற்றை கொடுப்பார். சனி பகவான் தனது மூன்றாவது பார்வையால் பாக்கிய. ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை பார்வை செய்து பாக்கிய தடையையும் தந்தை ஸ்தானத்தையும் பார்வை செய்வதால் தந்தை வழி உறவுகளால் சிக்கல்களையும் தருவார் .
தனது சம சப்தம பார்வையால் லக்கனத்தை பார்வை செய்து ஜாதகரின் குண நலன்களை பாதிப்பார்
பத்தாம் பார்வையால் நான்காம் இடத்தை பார்வை செய்து தன் சுகம் , தாய் சுகம்,கல்வியால் சுகம் , வாகன சுகம் போன்றவற்றை தடுப்பார்.
அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் ஆயுள் காரகன் ஆன சனி பகவான் இருப்பது ஆயுளை பலப்படுத்தும் என்பதை தவிர வேறு எந்த நல்ல பலனையும் கொடுத்து விடுவதில்லை.
அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பார்க்கக்கூடிய சனி பகவான் தனது கடின கொடூர பார்வையால் பார்வை செய்வதால் மிகவும் பாதிக்கக் கூடிய இடங்கள் மிகவும் பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கும்.
எட்டாமிடத்தில் இருந்து தனது மூணாம் பார்வையால் தொழிற் ஸ்தானத்தை பார்த்து தொழிலை கெடுப்பார்.
தனது சமசப்த்தம பார்வையால் குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் பார்வை செய்து திருமண தடை உருவாக்குவார் .கல்வியில்தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நிலை போன்றவற்றையெல்லாம் உருவாக்குவார்.
தனது பத்தாவது பார்வையால் பூர்வீக ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தாளமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்து புத்திர தடை, பூர்வ புண்ணிய இடங்களில் பிரச்சனை மற்றும் பூர்வீக இடத்தில் வசிக்க இயலாது நிலை போன்றவை உருவாக்குவார் .
ஒன்பதாம் இடமான தந்தை ஸ்தானத்தில் சனி பகவான் அமரும்பொழுது அந்த ஸ்தான அதிபதி, மற்றும் தந்தை காரக கிரகமான சூரியன் ஆகியவற்றை பொறுத்து தந்தையின் நிலை அமையும் .ஏனைய பிற ஸ்தானங்களும் பாதிக்கக்கூடிய நிலையில் தந்தையை விட்டு பிரிவு, தந்தையே பிரிவு, தந்தை மரணம் ,
தந்தை வழி உறவுகளால் ஆதரவு இல்லாத நிலை ,சரியான பாக்கியம் கிடைக்காத நிலை, மேல்நிலை கல்வி தடை தான தர்ம குணம் அற்ற நிலை போன்றவை ஏற்படலாம்.
ஒன்பதாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாவது பார்வையால் லாப ஸ்தானத்தை பார்வை செய்து லாபத்தை கெடுப்பார் .மூத்த சகோதரத்தை பாதிக்கக்க்கூடிய நிலை போன்றவை உருவாகும்.
தனது ஏழாம் பார்வையால் கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்தை தரக்கூடிய இடமான மூன்றாம் இடத்தை பார்வை செய்து இளைய சகோதரன் புகழ் பெற இயலாத நிலை, வீரியமற்ற நிலை போன்றவற்றை உருவாக்கும்
தனது பத்தாம் பார்வையால் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்து கடன், பிணி மற்றும் எதிர்ப்பு அற்ற நிலை போன்றவற்றை உருவாக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பது "பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும்" என்ற கருத்தின் படி மிகவும் நல்லதாகும். பத்தாம் இடத்தில் சனி பகவான் சுபத்துவமான நிலையில் இருந்தால் சனியின் தொழிலான ஆட்டோ மொபைல், ஏரோனாட்டிக்ஸ், மெக்கானிக் குடிக்க இயலாத திரவ தொழிலான பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற தொழில் அமைப்புகள் உருவாகும் . உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை உருவாகும்.
அதே பாவத்துவமான நிலையில் சொல்லிக் கொள்ள வெட்கப்படக்கூடிய தொழிலான சாரய கடையில் வேலை,,பிணம் எரித்தல் ,செப்டிக் டாங் அள்ளுதல், சாக்கடை அள்ளுதல், பழைய இரும்பு கடை, அழுக்கான இடங்களில் வேலை பார்த்தல் போன்றவை உருவாகும். அரசு வேலைகளில் யுவன் வாட்ச்மேன் போன்ற கீழ்மட்ட வேலை.
பத்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் 12ஆம் இடத்தை பார்வை செய்து நித்திரை சுகம் , படுக்கை சுகத்தை தடுப்பார். கஞ்சத்தனம் உடையவராக, கெட்ட விரயத்தன்மை உடையவராகவும் இருப்பார்..
தனது சம சப்தம பார்வையால் நான்காம் இடத்தை பார்வை செய்து தன் சுகம், தாய் சுகம் ,கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பை உருவாக்குவார்.
தனது பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்து குடும்ப வாழ்க்கை ,திருமண வாழ்வை பாதிப்பார். நல்ல நட்பு அற்ற நிலை உருவாகும் .கூட்டுத் தொழில் ஆகாது.
சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருப்பது ஜாதகருக்கு மிகப்பெரிய கெடுதலை தருவது கிடையாது .ஆனால் அதே நேரத்தில் மூத்த சகோதரத்தை பாதிப்பார். பதினொன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் லக்கினத்தை பார்வை செய்து சாதகருடைய குலநலன்களை கெடுப்பார். சோம்பேறித்தனம், எதையும் தள்ளி போடக்கூடிய நிலை போன்றவற்றை உருவாக்கும்.
பதினொன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது ஏழாம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வசிக்க இயலாத நிலை, பூர்வீக சொத்துகளால் வில்லங்கம் மற்றும் பிரச்சினைகளை உருவாக்குதல் .புத்திர பாக்கியத்தை காலம் தாழ்த்தி செய்தல் போன்றவற்றை உருவாக்குவார்.
பதினொன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தை பார்வை செய்து ஆயுள் பங்கம், மரணத்துக்கு நிகரான தொல்லை போன்றவற்றை கொடுப்பார் .வெளிநாடு செல்ல இயலாது நிலைப்பாட்டை உருவாக்குவார்.
விரய ஸ்தான பன்னிரெண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் இருப்பது நித்திரை சுகம், படுக்கை சுகம் போன்றவற்றை கெடுப்பார் வீண் செலவு கஞ்சத்தனம் போன்றவற்றை உருவாக்குவார்.
பன்னிரண்டாம் இடத்தில் உள்ள சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்த்து செய்து குடும்பத்தை அமைப்பதில் காலதாமதம் ஆக்குவார் ,கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது நிலை, கல்வியில் தடை போன்றவற்றை உருவாக்குவார்.
12ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது ஏழாம் பார்வையால் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்தால் நல்ல பலனையை தருவார் கடன், பிணி ,எதிர்ப்பு அற்ற நிலை உருவாக்குவார்.
பன்னிரண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை பார்வை செய்து தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் போன்றவற்றில் பாதிப்பு , தந்தை பிரிவு ,தந்தையால் மன கஷ்டம் மற்றும் தந்தை இல்லாத நிலை
மேல்நிலைக் கல்வி செல்ல இயலாத நிலை, தான தர்ம குணம் அற்ற நிலை போன்றவற்றை உருவாக்குவார்.
இவ்வாறாக லக்னம் முதல் பன்னிரண்டு பாவகத்தில் சனி பகவான் இடம்பெறக்கூடிய பலன்களை நான் தந்தாலும் இந்த பலன்களில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு .எவ்வாறு எனில் அந்த சனி பகவானை சுப கிரகங்கள் பார்வை எனது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால் அதிக நல்ல பலனைத் தரும். பாவக் கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால் கூடுதலான கெடு பலன்களை தரும். மேலும் அந்த ஸ்தான அதிபதி மற்றும் காரக கிரகம் போன்றவற்றை பொருத்தும் பலனில் மாற்றம் ஏற்படும்.
நன்றி.
FOR ONLINE APPOINTMENT
CELL & WHATSAPP AND GOOGLE PAY :
097151 89647
MY ANOTHER CELL NUMBER
74025 708 99
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.