Saturday, 16 November 2024

சனி பகவான் எப்படி இருந்தால் நல்லது ?

 கிரகங்கள் எப்படி இருந்தால் யோகத்தைத் தரும் ?-பகுதி -( 1 )




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     1. ஒரு ஜாதகத்தில் ஒரே கிரகம் கேந்திர மற்றும் திரிகோண அதிபதியாக இருந்தால் அந்த கிரகம் தனது தசையில் சாதகருக்கு நன்மையை தரும்.


       உதாரணமாக துலா லக்னத்திற்கு சனி பகவான் கேந்திர மற்றும் திரிகோண அதிபதியாக வருவதால் அந்தத் தசை சாவதற்கு வரும் பொழுது யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக அமைகிறது.


      2. ஒரு ஜாதகத்தில் தர்மாதிபதி எனப்படும் ஒன்பதாமிட அதிபதியும் மற்றும் கர்மாதிபதி எனப்படும் பத்தாமிட அதிபதியும் பரிவர்த்தனை  பெற்று நின்றாலும்,ஒன்றாக கூடி நின்றாலும் அல்லது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம கர்மா ராஜயோகம் ஆகும் .இது ஜாதகருக்கு நல்ல யோகத்தை தரக்கூடிய ராஜ யோகமாகும்.


     3. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் யோகத்தை அள்ளித் தரும். இவற்றை பாவ கிரகங்கள் பார்க்காமல் அல்லது சேராமல் இயற்கை சுபகரங்கள் பார்வையை பெற்றிருந்தால் மிகுந்த யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


     4) சூரியன் புதன் செவ்வாய் எங்கு கூடி நின்றாலும் சாதகருக்கு யோகம் தான் இந்த அமைப்பை பாவ கிரகமான  சனி, ராகு சேர்ந்திடாமல் அல்லது சனியால் பார்க்கப்படாமலும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு இருக்க வேண்டும்.


    5) குரு சுக்கிரன் உச்சம் பெற்றாலும், ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் யோகத்தை தரக்கூடிய வகையில் இருக்கும்.


    6) சுக்கிர பகவான் பாக்கியாதிபதியாகி ஜன்ம லக்கனம் ஏற ராஜயோகத்தை கொடுக்கும்.


    7) மூன்று ஆறு மற்றும் 10-ஆம் இடங்களில் லக்கனாதிபதி இருக்க அவரை இயற்கை சுபக்கோள் பார்க்க மாபெரும் யோகத்தை சாதகருக்கு கொடுக்கும்.


   8) பத்தாம் இடத்தில் ராகு பகவான் இருந்து அந்த வீட்டோட அதிபதி லக்கின கேந்திரம் ஏற‌அல்லது உச்சம் பெறவோ அதன் தசையில் சாதகருக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


    9) ஒன்பதாம் இட அதிபதி பாக்கிய அதிபதி எனப்படும் இந்த பாக்கிய அதிபதி ராசிக்கு 9ஆம் இடத்தில் இருக்க சாதகருக்கு அதன் தசையில் யோகத்தை கொடுக்கும்.


   10) சுகஸ்தானாதிபதி எனப்படும் நான்காம் இட அதிபதி உச்சம் பெற அந்த உச்சம் நின்ற ராசிநாதன் ஐந்தாம் இட

 அதிபதியோடு கூடி ஒன்பதாம் இடத்தில் இருந்தால் சாதகருக்கு ராஜயோகம்.


   11) ராகு நின்ற வீட்டிற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இருப்பது ஜாதகருக்கு யோகத்தை அள்ளி தரும்.


    12) சந்திரனுக்கு பத்தில் குரு நின்று அதன் திசை நடக்கக்கூடிய காலங்களில் சாதகருக்கு யோகத்தை தரும்.


     13 )  சூரியனுக்கு முன்னும் பின்னும் சுப கோள்  இருப்பது யோகத்தை அள்ளித்தரும்.


      14)  திரிகோண அதிபதிகள் திரிகோணத்தில் இருப்பதும் நல்ல யோகத்தை தரக்கூடிய நிலையாகும்.


     15) நீசம் நின்ற ராசிநாதன் ஆட்சி ,உச்சம் பெற்றாலும் அல்லது சந்திர கேந்திரத்தில் நின்றாலும் நீச பங்க ராஜயோகம் ஆகும்.


     16) லக்கினாதிபதி இருந்த ராசிநாதன் உச்சம் பெற்றாலும் அல்லது கேந்திரம் ஏறி நின்றாலும் யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.


     17 )  குரு சந்திரன் மற்றும் சுக்கிரன் லாப ஸ்தானம் ஏற யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


      18)  லக்னத்தை உச்சக்கிரகம் பார்த்தால் அல்லது இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்த்தால் யோகத்தை தரக்கூடிய நிலையாகும்.


      19) குரு ,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் திரிகோணம் ஏற யோகத்தை அளித்து தரக்கூடிய உள்ளதாகும்


      20) சந்திரன் இருக்கும் இடத்திற்கு முன்பின் அதாவது ஜென்ம ராசியை சுற்றி இரண்டு புறமும் இயற்கை சுப கிரகங்கள்  இருப்பதும் சுப கர்தாரி யோகம் .அது ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாகும்.


      21 ) வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை சுப  குரு புதன் சுக்கிரன் இருப்பது சந்திராதி யோகமாகும் இது குரு புதன் மற்றும் சுக்கிர திசையில் சாதகருக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


      22) லக்கனாதிபதி, தனாதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் லாப அதிபதி ஆகிய நால்வரும் சேர்ந்து நின்றாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் அல்லது  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் மகா தன யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.


     23) ஒரு ஜாதகத்தை லக்கனாதிபதி 9ஆம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடவாதிபதி லக்னத்தில் இருந்தாலும் நல்ல பலனை தரும் அமைப்பாகும்.


     24) சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று சம சப்த்தமாக பார்த்துக் கொள்ளக்கூடிய நிலை பௌர்ணமி யோகம் ஆகும் அதேபோல சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அமாவாசை யோகம் ஆகும் .இது எழுத்து, கவிதை, காவியத்தில் புகழ் பெறக்கூடிய அமைப்பாகும்.. உயரிய பதிவில் அமரக்கூடிய யோகமாகும்.


    25) சந்திர குரு தொடர்பு குரு சந்திர யோகம் , சந்திரன், செவ்வாய் சேர்க்கை அல்லது தொடர்பு சந்திர மங்கள யோகமாகும். சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை அல்லது தொடர்பு பிருகு மங்கள யோகம் ஆகும்.


    26) வளர்பிறை சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் இருப்பதும் சுனபா யோகம் ஆகும். இது பிறந்தது முதல் இறப்பு வரை நல்ல புகழையும், தனத்தையும் தரக்கூடிய அமைப்பாகும் .இதேபோல வளர்பிறை சந்திரனுக்கு 12ஆம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பது அனாப யோகமாகும்.


     27) ஒருவர் ஜாதகத்தில்  தனம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் லட்சுமி கடாட்சம் அமையும். முற்கால  வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.


   28) மேசம், ரிஷபம் ,மகரம் ,கடகம் மற்றும் கன்னி ஆகிய  ஐந்து  ராசிகளில் ராகு பகவான் இருப்பது நல்ல நிலையாகும். இவ்வாறு இருந்து அந்த ஸ்தானம் லக்கினத்திற்கு உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு, பத்து  மற்றும் பதினொன்றாம் இடமாக இருந்து ராகுவுக்கு கேந்திரத்தில் மற்ற கோள்கள் இருந்தால் அது பர்வதா யோகம் ஆகும் மிகுந்த ராஜயோகத்தை சாதகருக்கு கொடுக்கும்.


    29) தனுஷின் ராகு இருப்பது கோதண்ட யோகம் எனப்படும் .சிம்மத்தில் குரு இருப்பது வளைய குரு எனப்படும். இவ்வாறு இருந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் அதன் தசையில் யோகத்தை சாதகருக்கு கொடுக்கும்.


  30) சூரியன் புதன் ஆகிய இருவரும்  சேர்ந்திருந்து லக்னத்திற்கு ஒன்று நான்கு மற்றும் எட்டாம் இடங்களில் இருந்தால் மன்னனுக்கு நிகரான ராஜயோகம் ஆகும் .இந்த ராஜயோகம் வேலை செய்ய இவர்களை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் பார்வை பெறாமலோ அல்லது சனி , செவ்வாய்  மற்றும் ராகு சேர்ந்திருக்காமலோ இருக்க வேண்டும்.


     31) குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பது கஜகேசரி  யோகம் ஆகும் இது எதிரியை வெல்லக்கூடிய யோகமாகும்.


   யோக அமைப்பு தொடரும்.....


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


  097151 89647 


மற்றொரு செல் 

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Friday, 15 November 2024

செவ்வாய் பகவான் பார்வை மற்றும் சேர்க்கை தரும் பலன்கள்

 செவ்வாய்பகவான் பார்வை மற்றும் சேர்க்கை தரும் பலன்கள் 




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  நவகிரகங்களில் செவ்வாய் பகவான் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் ஒரு முக்கால் பாவர் என்று அழைக்கப்படுகிறது. 


      இவை இயற்கை பாவ கிரகம் என்ற போதிலும் இதனுடைய சேர்க்கை மற்றும் பார்வை சனி பகவானை போல் எல்லா கிரகங்களையும் பாதித்து விடுவதில்லை. 


     செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களுடன் பார்வை மற்றும் சேர்க்கை செய்யும்பொழுது பாவராக செயல்படுவதில்லை மாறாக நல்ல பலனை தருகிறது.


  செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகு உடன் இணையும் பொழுது முழுமையான பாவ தன்மையை அடைகிறார்.


செவ்வாய் பகவான் நிழல் கிரகமான செம்பாம்பு என்று அழைக்கப்படும் கேது பகவானுடன் இணையும் பொழுது சூட்சும வலுவை பெறுகிறது. கேதுவுடன் இணைந்த செவ்வாய் பகவான் பார்வை ஆனது பாவ தன்மையை ஜாதகருக்கு கொடுப்பதில்லை.


செவ்வாய் பகவான் கேதுவுடன் இணைந்து முழு பாவ கிரகமான சனி பகவானின் இணைவு அல்லது பார்வையை பெறும் போது செவ்வாய் பகவான் தனது மறைமுக வலிமையை இழப்பார்.


செவ்வாய் பகவான் குருடன் இணையும் பொழுது #குருமங்களயோகம் ஜாதகருக்கு வழங்குவார்.


செவ்வாய் பகவான் சந்திரனுடன் இணைவானது #சசிமங்களயோகம் தருவார்.


செவ்வாய் பகவான் சுக்கிரன் உடன் இணையும் பொழுது #பிருகுமங்களயோகம் தருவார்.


செவ்வாய் பகவான் ஒளி கிரகமான சூரியனுடன் சேர்க்கை அடையும் பொழுது அதிலும் குறிப்பாக 10-ஆம் இடத்தில் திக்பலம் பெற்று நிற்கும்போது ராணுவம், போலீஸ் ,மருத்துவம் போன்ற துறைகளில் பதலிகளில் அமர‌ வைப்பார்.


செவ்வாய் பகவான் பாவ கிரகமான சனி அல்லது ராகு உடன் இணைய கூடாது. அவ்வாறு செவ்வாய் பகவான் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் கடுமையான பாவ தன்மையை அடைந்து அதன் சேர்க்கை அல்லது பார்வை கடுமையான பாதிப்பை தருகிறது.


செவ்வாய் பகவான் ராகு உடன் நெருக்கமாக இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் கடுமையான பாவத்தன்மை அடைந்து விடுகிறது இவ்வாறு பாவத்தன்மை அடைந்த செவ்வாய் பகவான் உடைய பார்வை பெரும் இடங்கள் கடுமையான பாவத்தன்மை அடைகிறது. 


பொதுவாக செவ்வாய் பகவான் சனியின் வீடுகளான மகர மற்றும் கும்ப வீடுகளில் ராகுவுடன் இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் அதன் தசை நடப்பு உள்ள காலங்களில் கடுமையான இன்னல்களுக்கு ஜாதகர் உட்படுவார்.


செவ்வாய் பகவான் இருக்கும் இடத்திற்கு நான்காம் இடத்தில் சனி அமர்ந்திருக்கும் பொழுது செவ்வாய் பகவான் தனது நான்காம் பார்வையால் சனியின் மீது விழ செய்வார், அவ்வாறு செவ்வாயின் பார்வையில் பெற்ற சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் செவ்வாய் பகவானை பார்த்து கூடுதல் பாவத்தன்மை அடைய வைப்பார்.இதன் பிறகு சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரின் பார்வயை அல்லது சேர்க்கையை பெறக்கூடிய ஸ்தானங்கள் மற்றும் கிரகங்கள் கடுமையான பாவத்தன்மை அடைந்து அதன் தசை காலங்களில் கடுமையான கெடுபலன்களை கொடுக்கிறது.


செவ்வாய் பகவான் அதிக சுபத்தன்மை அடைந்து அதாவது முதன்மை சுபத்துவம் பெற்று தொழிற் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் சுபத்துவ வலிமைக்கு ஏற்றவாறு எம்பி.பி.எஸ் படிப்பார். இதனை அடுத்த சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப சித்தா ,காது மூக்கு தொண்டை நிபுணர் போன்ற வகையில் படிப்பார்.


  செவ்வாய் பகவான் அதிக சுபத்துவ ராணுவம் போலீஸ் சிவில் இன்ஜினியர் அக்ரி போன்ற துறைகளில் படிப்பில் ஈடுபட வைப்பார் .


அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பாவத்தன்மை அடைந்து தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ள முடியவில்லை ரவுடி தீவிராத அமைப்புகளில் ஈடுபட கூடியவராக இருப்பார்.


செவ்வாய் பகவான் அதிக சுபத்துவமான நிலையில் பிறரை சுட்டு வீழ்த்தி அதாவது தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளை பெறக்கூடியவராக இருப்பார். பாவத்துவமான நிலையில் அப்பாவி மக்களை பொது இடங்களில் வைத்து குண்டு வைத்து தகர்த்தி பிறகு பிடிபட்ட நிலையில் சிறையில் அடைத்த துன்பப்படுவார்.


செவ்வாய் பகவான் குறைந்த அளவு சுபத்துவ நிலையில் காய்கறி வியாபாரம், சமையல்காரர்,பேக்கரி வியாபாரம் செய்யக் கூடியவராக இருப்பார்.


திருமண ஸ்தானமான லக்னம் என்ற ஒன்றாமிடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி உடன் செவ்வாய் பார்வை எனது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கால தாமத திருமணத்தை கொடுப்பார்.


லக்னத்தில் செவ்வாய் இருந்தால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தை பார்வை செய்வார் .ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது ஏழாம் இடத்தை பாதிப்பதோடு தனது சம சப்தம பார்வையால் லக்னத்தையும் மற்றும் இரண்டாம் இடத்தையும் அதாவது குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்வார். இரண்டு அல்லது எட்டாம் இடத்தில் இருக்கும் போது செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தையும் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தையும் பாதிப்படையச் செய்வார்.


செவ்வாய் பகலுடன் சுக்கிரன் இணைந்து சுப தன்மை அடைந்த நிலையில் இருந்தால் ஜாதகருக்கு காதல் உணர்வு உருவாகும். இதனை சுப கிரகங்கள் பார்த்த நிலையில் நல்ல முறையான மற்றவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய காதலாக அமையும். அதே நேரத்தில் இந்த செவ்வாய் பகவான் உடன் ராகு இணைந்து சனி பார்த்த நிலையில் காமம் திரிகோண ஸ்தானமான 3,7, 12 ஆம் இடங்களில் தொடர்பு கொள்ள காமம் மிகுதியால் தவறு செய்யும் தன்மை பெற்ற நபராக மாறுவர். இந்த அமைப்பிற்கு இயற்கை சுப கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற கூடிய நிலையில் அவை அப்படியே மாறி நல்ல தன்மை படைத்த மனிதராக ஆகி விடுவார்.


செவ்வாய் லக்னத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் முரட்டு தன்மை உடையவராக காணப்படுவார். செவ்வாய் பாவ கிரக தொடர்பு பெற்ற நிலையில் இலக்கணத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது மற்றவர் வெட்டுவதற்கு முன்பு யோசிப்பார்கள். இவர்கள் வெட்டிய பிறகுதான் யோசிப்பார்கள்.


செவ்வாய் பகவான் சுப தன்மையடைந்து தொழிற் ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக ஒரு உயரிய நிலையை அடையக்கூடிய தன்மை இருக்கும்.


நன்றி.


FOR ONLINE APPOINTMENT 


CELL & WHATSAPP & GPAY 

  097151 89647 


ANOTHER CELL NO 

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

புதிய கோணத்தில் புதன் பகவான் தரும் பலன்கள்

 புதிய கோணத்தில் புதன் பகவான் தரும் பலன்கள்.



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதக கட்டத்தில் புதன் பகவான் தனித்து நின்றாலோ அல்லது இயற்கை சுப கிரகமான குரு , வளர்பிறை சந்திரன், மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பை பெறும் பொழுது அவை இயற்கை சுபக்கிரகமாக செயல்படுகிறார் .


     அதே நேரத்தில் சனி, செவ்வாய், ராகு கேது , தேய்பிறைச்சந்திரன் போன்ற இயற்கைப் பாவக் கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் புதன் பகவான் இயற்கை பவராகவே செயல்படுகிறார். எனவே புதன் பகவான் ஒரு பச்சோந்தி கிரகம் ஆகும். சேரக்கூடிய அதாவது தொடர்பு கொள்ளக்கூடிய சுப அல்லது பாவ கிரகத்தைப் பொறுத்து அதனுடைய சுபத் தன்மை அல்லது பாவத்தன்மை அமைகிறது.


புதன் பகவான் மிதுனம் கன்னி ஆகிய இரண்டு வீடுகளுக்கு அதிபதியாக செயல்படுகிறார். புதன் பகவான் பாவ கிரகமான செவ்வாய் அல்லது சனியுடன் நெருக்கமாக இணையும் போது அல்லது பார்வை செய்யும் போது மிகுதியான பாவத்தன்மையை அடைகிறார்..


     புதன் பகவான் லக்னத்தில் திக் பலம் பெறுகிறார். லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தாலும் அதை பெரிய மறைவாக எடுத்துக் கொள்ள தேவையில்லை 

அவை திக் பலத்திற்கு அருகில் இருக்கிறார் என்று வகையில் பலம் பெற்ற கிரகமாகவே கருதப்படுகிறது.


புதன் பகவானுக்கு சனி சுக்கிரன் ஆகியவை நட்பு கிரகமாக செயல்படுகிறது . புதன் பகவானுக்கு குரு மற்றும் செவ்வாய் பகவான் பகைக்கிரகமாக கருதப்படுகிறது.

 புதன் பகவான் ஆயில்யம் ,கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக திகழ்கிறார் .புதன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாத காலம் வாசம் செய்வார் .புதன் பகவான் சூரியனுடன் சேர்ந்தோ அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசியிலே சுற்றி வருவார் எனவே தான் புதன் பகவானை உள்வட்ட கிரகமாக கருதப்படுகிறது. 


புதன் பகவான் தரும் யோக விவரங்கள்.


    புதன் பகவான் சூரியனுக்கு அருகில் வரும் பொழுது அஸ்தங்க

தோஷத்தை பெரும்பாலும் அடைவது கிடையாது. புதன் சூரியனுடன் இணையும் பொழுது " புத ஆதித்ய யோகம் " என்னும் பல பட்டங்களை பெறக்கூடிய யோகம் ஆகும்.


       புதன் பகவான் சூரியனுடன் இணைந்து ஒன்று, நாலு எட்டாமிடங்களில் இருந்தால் அந்த காலத்தில் ராஜா ஆனால் இந்த காலத்தில் அரசாங்கத்தில் உயரிய பதவிகளில் இருக்க கூடிய யோகத்தை தருகிறார்..


புதன் பகவான் கேந்திர ஸ்தலமான ஒன்று, நான்கு, ஏழு எட்டாம் இடங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருந்தால் "பத்திர யோகம்" என்னும் மிகப்பெரிய பஞ்சமுக புருஷ யோகத்தை தருகிறார்.


   பத்ர யோகத்தை பெற்றவர் மதியுகி மந்திரியாக, மிகுந்த அறிவாளியாகவும், கணித, சோதிட துறைகளில் வல்லவராகவும் திகழ்வார். கதை ,கவிதை கட்டுரை ,இலக்கண இலக்கியங்கள் போன்றவற்றை படைக்க கூடிய ஆற்றல் பெற்றவராக திகழ்வார்.


   வளர்பிறை சந்திர கேந்தரத்தில் புதன் பகவான் இருக்கும் பொழுது ஒருவர் புகழ்பெற்ற சோதிடராக திகழ்கிறார் இவருக்கு ஜோதிட ஞானம் சிறப்பாக வந்து ஒரு நல்ல ஒரு தொழில் முறை ஜோதிடராக வலம் வருவார்.


  உங்க ஜாதகத்தில் புதன் பகவான் அதிக சுபத்துவமான நிலையில் இருந்து ராசி மற்றும் லக்கினத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் ஜாதகர் புதன் சார்ந்த தொழில்களை நடத்துவார்கள்.


 புதன் பகவான் கணிதம் கம்யூட்டர் துறை, தகவல் தொழில்நுட்ப தொடர்பு, இசையில் நாட்டம், எழுதுவதில் ஆர்வம், படைப்பாற்றல் மிக்கவர், இலக்கண இலக்கியங்களை படைப்பவர், கண்டுபிடிப்பாளர் ,புள்ளி விவரங்களை சேகரிப்பவர், செய்திகளை சேகரிப்பவர், ஆலோசனை வழங்குவதில் மந்திரியாக திகழ்வார்.


மற்றவருடைய சிந்தனையில் இருந்து மாறுபட்டு சிந்திக்க கூடியவர் . வேறுவகையில் கூறின் இவரது சிந்தனை சரியான நிலையில் இருக்கும். 

கதை கவிதை கட்டுரை பாடல்கள் தலையங்கம் வசனம் போன்றவற்றை படைப்பதில் வல்லவராக திகழ்வார்கள்.


சிறந்த கண்டுபிடிப்பாளர் ஆக ,விஞ்ஞாணியாகவும் திகழ கூடியவர். பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவர். நிதி மற்றும் வங்கி துறைகளில் வேலை பார்க்கக்கூடியவர்.


புதன் பகவானுடன் சனி அல்லது ராகு சேர்ந்திருந்தாலும் அல்லது புதன் பகவானை சனி பகவான் பார்வை செய்தாலும் புதன் பகவான் பாவ தன்மையை அடைந்து விடுகிறார். இதுபோன்ற அமைப்பு பெற்ற சாதகர் தான் பெற்ற திறமையை தவறான வழிகளில் பயன்படுத்தி பொருள் ஈட்டக் கூடிய தன்மை படைத்தவராக இருப்பார்.


    புதன் பகவானுடன் நிழல் கிரகமான செம் பாம்பு என்று அழைக்கக்கூடிய கேது பகவான் இணைவது ஜாதகருக்கு புதன் பகவான் தரக்கூடிய பலனை அதிகரிக்க செய்வார்.மதியுகி மந்திரியாக அறிவுத்திறன் மிகுந்தவராக மற்றும் ஞான உடையவராக திகழ வைப்பார்.


 புதன் பகவான் பலம் பெற்ற நிலையில் நல்ல மேடைப் பேச்சாளராக எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவ்வளவு பேரையும் கட்டி போட்டு பேச்சை கவனிக்க கூடிய அதாவது கவனிக்க வைக்கக்கூடிய பேச்சாளராக திகழ்வார்.


 புதன் பகவான் வலிமை பெற்றவர்கள் படிக்காமல் நல்ல மேதையாக திகழ வைப்பார். இவர்கள் குறைவாக படித்திருந்தாலும் மெத்தப் படித்த மேதாவிகளை விட மிகுந்த அறிவு படைத்த படைப்பாளியாக திகழ்வார்கள்..


ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் பலம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலையில் நல்ல எழுத்தாளராக, பாடல் எழுதக் கூடியவராக, ஒரு கவிஞராக ,கதை வசனம் எழுத கூடியவராக திகழ்வார். சுருக்கமாக சொல்லப்போனால்

இவர் ஒரு பல்கலை வித்தகராக திகழ்வார் .


மனதை என்றும் இளமையாகவும் மற்றும் புதுமையாகவும் வைத்திருக்க உங்கள் ஜாதகத்தில் முதலில் பகவான் வலிமையடைந்த நிலையில் இருக்க வேண்டும்.

 புதன் பகவான் வலிமை பெற்று சுப தன்மை அடைந்த நிலையில் 

இலக்கண இலக்கியங்களை படைப்பவராக ,அதன் மீது நாட்டம் உடையவராக, அதை விரும்பி படிப்பவராகவும் இருப்பார் .இவ்வாறு படைப்பாற்றல் மிக்கவர் மனதை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் இருப்பார்.


நன்றி 


ONLINE APPOINTMENT 

CELL & WHATSAPP AND GPAY 

  097151 89647 

ANOTHER CELL NO 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

 சனியின் சேர்க்கை மற்றும் பார்வை தரும் பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை. 


  ஒருவருடைய ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய தசையின் பலன்களை கூட சனியின் பார்வை மற்றும் சேர்க்கை தர விடாமல் செய்து விடுகிறது. ஒரு கிரகம் இலக்கண யோகராக இருந்தாலும் அந்த கிரகத்துடன் சனி சேர்ந்தோ அல்லது சனியின் பார்வையைப் பெற்றோ இருந்தால் அவை பாவ தன்மையை அடைந்து அந்த கிரகத்துக்கு உரிய ஆதிபத்திய மற்றும் காரக பலனை சிறப்பாக செய்ய விடாமல் செய்து விடுகிறது.


     சனிபகவான் இருக்கும் இடத்தை மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் பாவத்தன்மை அடைய வைத்து அதன் தசை காலங்களில் நல்ல பலனை தர விடாமல் செய்துவிடுகிறது.

தன்னோடு இணைந்த கிரகத்தின்  காரகத்துவ  பலனையும்  வாழ்நாள் முழுவதும் செய்யவிடாமல்  செய்துவிடுகிறது.


 சனிபகவான் இயற்கை சுப கிரகங்களோடு இணையும் போது தான் சுபத் தன்மை அடைந்து  தன்னோடு இணைந்த கிரகத்தை பாவத்தன்மை அடைய வைத்து அதன் தசை காலங்களில் அந்த கிரக அதிபதி பலனை சிறப்பாக செய்ய விடாமல் செய்துவிடுகிறது.


     சனியின் சேர்க்கை ஒரு விதமான பலனையும் மற்றும் அதன் பார்வை வேறு ஒரு விதமான பலனையும் ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.


சனியின் சேர்க்கை தரும் பலனை கணிப்பதற்கு முன்பாக  அந்த கிரகத்துடன் இணைந்த கிரகம் பாவத்தன்மை படைத்த கிரகமாக இருந்தால் கூடுதலான கெடுபலனை சேர்க்கை பலனை அதன் தசையில் தருகிறது. அவரோடு இணைந்த சனி தனது மூன்று, ஏழு  மற்றும் பத்தாம் பார்வையால் பார்வை செய்யும் இடத்தையும் அந்த கிரகத்தையும் கெடுபலனை  தரவைக்கிறது. 


 உதாரணமாக சனி உடன் தேய்பிறை சந்திரன் செவ்வாய் மற்றும் ராகு இணையும் போது கூடுதலான கெடுபலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


சனி பகவானுடன்  சுப கிரகங்கள் இணையும் போது சனி சுபத்தன்மை அடைந்து தன்னோடு இணைந்த கிரகம்  பாவத்தன்மை அடைந்து அந்த கிரகம்  தன் தசை முழுவதும் கெடுபலனை  ஜாதகருக்கு கொடுக்கிறது.


   சனி பகவான்  உடன் இணைந்த கிரகத்தை எந்த அளவு கெடுக்கிறது என்பதை டிகிரி அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும். சனியுடன் இணைந்த சுப கிரகம் எட்டு பாகைக்குள்ளாக இணைந்தால்  முழுவதும் பாதிக்கப்பட்டு விடுகிறது.

 ஒரு 13 பாகை அளவில் இணைந்தால் 50 சதவீதம் மட்டும் பாதிக்கப்படுகிறது .

22 பாகைக்கு மேல் இருந்தால் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்ற அடிப்படையில் பெரிய அளவிலான பாதிப்பை அந்த சுப கிரகம் அடைந்து விடுவதில்லை.


ஒரு ராசியானது இரண்டே கால் நட்சத்திரத்தை கொண்டது .அதாவது ஒன்பது பாதம் ஒரு ராசியில் அடங்கி வருகிறது. ஒரு நட்சத்திர பாதம் 3 பாகை 20 கலையாகும் .ஒரு முழு நட்சத்திரம் 13 பாகை 20 கலை  ஆகும் .இந்த கணக்கீடு சனி உடன்  இணைந்த கிரகத்தின் பாவத்தன்மை அளவிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.


சனியின் பார்வை சர்வ நாசம் என்பார்கள். எனவே சனி இருப்பை விட அதன் பார்வை அதிகமான கெடுபலனை ஜாதகருக்கு அதன் தசை காலங்களில் அள்ளிக் கொடுக்கிறது. சனி பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து மூன்று,ஏழு மற்றும் பத்தாம் பார்வையால் பார்வை செய்கிறது.


சனி பகவான் லக்னத்தில் இருக்கும் பொழுது லக்கினத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அதாவது சோம்பேறித்தனம் சுறுசுறுப்பு இல்லாத நிலை ,மந்த நிலை அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய நிலை மற்றும் குள்ள தன்மை போன்ற வகையிலான பாதிப்பை ஜாதகருக்கு கொடுக்கிறது.

மூன்றாம் பார்வை சகோதர ஸ்தானத்தை பாதிக்கிறது 

ஏழாம் பார்வையா தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை மற்றும் நட்பு நிலை போன்றவற்றை பாதிப்பை உண்டாக்குகிறது. தனது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பாதிக்கிறது.


 சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது ஜாதகரின் குடும்ப நிலை கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத தன்மை கல்வி நிலை போன்றவற்றை பாதிப்பதோடு தனது மூன்றாம் பார்வையால் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் ,வண்டி வாகன சுகம் போன்றவற்றை பாதிப்படையை செய்கிறது.


 சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் ஆயுள் ஸ்தானத்தை பாதிக்கிறது. 


இரண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தை பார்வை செய்கிறது.. மூத்த சகோதர இல்லாத இலை மறு திருமணம் தராத நிலை, லாபத்தை அடைய இயலாத தன்மை போன்றவற்றை உருவாக்குகிறது.


மூன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் சகோதர தோஷத்தையும் ,கீர்த்தி ,புகழ் அந்தஸ்து  அடைய இயலாத நிலையையும் சாதகருக்கு கொடுப்பார் என்று சொல்லப்பட்டாலும்

 சில நேரங்களில் பாவ கிரகம் மூன்றாம் இடத்தில் இருக்கும் போது நல்ல பலனை தருவார் என்ற விதிப்படி ஓரளவேனும் சில நல்ல பலன்களையும் தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


மூன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்து புத்திர தோஷத்தை  அதாவது புத்திர தடையை தருவார். பூர்வீக சொத்துகளில் வசிக்க இயலாத நிலை அல்லது  பூர்வீக சொத்துக்காக சண்டை ,வழக்கு போன்றவை உண்டாகும்.


மூன்றாம் இடத்தில் சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் விரைய ஸ்தானமான 12 ஆம் இடத்தை பார்வை செய்து அயன ,சயன சுகம்  மற்றும் படுக்கை சுகம்   போன்றவற்றை தர இயலாது நிலையில் இருப்பார். கஞ்சத்தனம்  உடையவராக  இருப்பார்.


நான்காம் இடத்தில் உள்ள சனி பகவான் சுகம் ,தாய் சுகம் ,கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பை தருவதோடு தனது மூன்றாவது பார்வையால் சத்ரு ஸ்தானமான இடத்தை அதாவது சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். தனது மூன்றாம் பார்வை ஜாதகருக்கு கடன், பிணி மற்றும் எதிர்ப்பு இல்லாத நிலையை உருவாக்குகிறார்.


தனது ஏழாம் பார்வையால் லக்கினத்திற்கு பத்தாம் இடத்தை பார்வை செய்து சுயதொழில் செய்ய விடாமல் செய்கிறார். 


  தனது பத்தாம் பார்வையால் லக்னத்தை பார்வை செய்கிறார் லக்னத்தை பார்வை செய்தால் திருமண தடை, சோம்பேறித்தனம் ,சுறுசுறுப்பு இல்லாத நிலை, அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய தன்மை மற்றும் குள்ளத்தன்மை போன்றவை உருவாக்கும்..


ஐந்தாம் இடத்தில் சனி பகவான் இருந்தால் புத்திர தடை ,பிள்ளைகளால் பலன் பெற இயலாது நிலை, மாமன் வர்க்கத்தால் பாதிப்பு ,பூர்விக இடத்தில் வசிக்க இயலாத நிலை,ஏனைய பிற அமைப்புகளை பொறுத்து பலனில் மாற்றம்  ஏற்படலாம்.வம்பு சண்டை வழக்கு பிரச்சனைகளை சந்திக்க கூடிய தன்மை போன்றவை உருவாகும்.


ஐந்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்து திருமண தடை உருவாக்குகிறார். தனது சம சப்தம பார்வையால் பதினொன்றாம் இடத்தை அதாவது லாப ஸ்தானத்தை பார்வை செய்து மூத்த சகோதரன் , லாபம் கிடைக்க இயலாத நிலை போன்றவற்றை உருவாக்குகிறார். தனது பத்தாம் பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்து கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது நிலை, தன வரவு குறைவு, திருமண தடை போன்றவற்றை உருவாக்குகிறார்.


ஒருவர் ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் இடத்தில் மட்டும் சனி பகவான் இருந்தாலும் அல்லது சனி பகவான் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய நிலையில் இருக்கும். அதாவது கடன் ,பிணி, எதிர்ப்பு போன்றவை உருவாக இயலாத நிலையை கொடுக்கும்.


     ஆறாம் இடத்தில் இருந்து தனது மூணாவது பார்வையால் சனி பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்வை செய்து ஆயுள் பங்கம் தருவார். தனது சம சப்தம ஸ்தானமான  ஏழாம் இட பார்வையால் விரைய ஸ்தானமான 12 ஆம் இடத்தை பார்த்து அயன, சயன, படுக்கை சுகம் மற்றும் நித்திரை சுகம் போன்றவற்றில் பாதிப்பு  மற்றும் கஞ்சத்தனம் போன்றவற்றை தருவார். 


   ஆறாமிடத்தில் உள்ள சனி பகவான்தனது பத்தாவது பார்வையால் லக்னத்திற்கு மூன்றாம் இடமான இளைய சகோதர ஸ்தானத்தை பார்வை செய்து இளைய சகோதரர்கள் பாதிப்பு ,கீர்த்தி புகழ் அடைய இயலாத நிலை போன்றவற்றை உருவாக்குவார்.


களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி பகவான் இருப்பது காலதாமத் திருமணம், மனதுக்கு பிடித்த மனைவி அமைவில் சிக்கல், நண்பர்கள் பாதிப்பு, கூட்டு தொழில் ஆகாது போன்றவற்றை கொடுப்பார்.  சனி பகவான் தனது மூன்றாவது பார்வையால் பாக்கிய. ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை பார்வை செய்து பாக்கிய தடையையும் தந்தை ஸ்தானத்தையும் பார்வை  செய்வதால் தந்தை வழி உறவுகளால் சிக்கல்களையும் தருவார் .


   தனது சம சப்தம பார்வையால் லக்கனத்தை பார்வை செய்து ஜாதகரின் குண நலன்களை பாதிப்பார் 

பத்தாம் பார்வையால் நான்காம் இடத்தை பார்வை  செய்து தன் சுகம் , தாய் சுகம்,கல்வியால் சுகம் , வாகன சுகம் போன்றவற்றை தடுப்பார்.


அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் ஆயுள் காரகன் ஆன சனி பகவான் இருப்பது ஆயுளை பலப்படுத்தும் என்பதை தவிர வேறு எந்த நல்ல பலனையும் கொடுத்து விடுவதில்லை. 


  அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பார்க்கக்கூடிய சனி பகவான் தனது கடின கொடூர பார்வையால் பார்வை செய்வதால் மிகவும் பாதிக்கக் கூடிய இடங்கள் மிகவும் பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கும். 


   எட்டாமிடத்தில் இருந்து தனது மூணாம் பார்வையால் தொழிற் ஸ்தானத்தை பார்த்து தொழிலை கெடுப்பார்.


 தனது சமசப்த்தம பார்வையால் குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் பார்வை செய்து திருமண தடை உருவாக்குவார் .கல்வியில்தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நிலை  போன்றவற்றையெல்லாம் உருவாக்குவார்.

   தனது பத்தாவது பார்வையால் பூர்வீக ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தாளமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்து புத்திர தடை, பூர்வ புண்ணிய இடங்களில் பிரச்சனை மற்றும்  பூர்வீக இடத்தில் வசிக்க இயலாது நிலை போன்றவை உருவாக்குவார் .


  ஒன்பதாம் இடமான தந்தை ஸ்தானத்தில் சனி பகவான் அமரும்பொழுது அந்த ஸ்தான அதிபதி, மற்றும் தந்தை காரக கிரகமான சூரியன்  ஆகியவற்றை  பொறுத்து தந்தையின் நிலை அமையும் .ஏனைய பிற ஸ்தானங்களும் பாதிக்கக்கூடிய நிலையில் தந்தையை விட்டு பிரிவு, தந்தையே பிரிவு, தந்தை மரணம்  ,

தந்தை வழி உறவுகளால் ஆதரவு இல்லாத நிலை ,சரியான பாக்கியம் கிடைக்காத நிலை, மேல்நிலை கல்வி தடை தான தர்ம குணம் அற்ற நிலை போன்றவை ஏற்படலாம்.


 ஒன்பதாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாவது பார்வையால் லாப ஸ்தானத்தை பார்வை செய்து லாபத்தை கெடுப்பார் .மூத்த சகோதரத்தை பாதிக்கக்க்கூடிய நிலை போன்றவை உருவாகும்.


    தனது ஏழாம் பார்வையால் கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்தை தரக்கூடிய இடமான மூன்றாம் இடத்தை பார்வை செய்து இளைய சகோதரன் புகழ் பெற  இயலாத நிலை, வீரியமற்ற நிலை போன்றவற்றை உருவாக்கும் 


    தனது பத்தாம் பார்வையால் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்து கடன், பிணி மற்றும் எதிர்ப்பு அற்ற நிலை போன்றவற்றை உருவாக்கும்.


ஒருவர் ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பது "பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும்"  என்ற கருத்தின் படி மிகவும் நல்லதாகும். பத்தாம் இடத்தில் சனி பகவான் சுபத்துவமான நிலையில் இருந்தால் சனியின் தொழிலான ஆட்டோ மொபைல், ஏரோனாட்டிக்ஸ், மெக்கானிக் குடிக்க இயலாத திரவ தொழிலான பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற தொழில்  அமைப்புகள் உருவாகும் . உள்ளாட்சி  அமைப்புகள் போன்றவை உருவாகும்.


   அதே பாவத்துவமான நிலையில் சொல்லிக் கொள்ள வெட்கப்படக்கூடிய தொழிலான சாரய கடையில் வேலை,,பிணம் எரித்தல் ,செப்டிக் டாங் அள்ளுதல், சாக்கடை அள்ளுதல், பழைய இரும்பு கடை, அழுக்கான இடங்களில் வேலை பார்த்தல் போன்றவை உருவாகும். அரசு வேலைகளில் யுவன் வாட்ச்மேன் போன்ற கீழ்மட்ட வேலை. 


பத்தாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் 12ஆம் இடத்தை பார்வை செய்து நித்திரை சுகம் , படுக்கை சுகத்தை தடுப்பார். கஞ்சத்தனம் உடையவராக, கெட்ட விரயத்தன்மை உடையவராகவும் இருப்பார்..


தனது சம சப்தம பார்வையால் நான்காம் இடத்தை பார்வை செய்து தன் சுகம், தாய் சுகம் ,கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பை உருவாக்குவார்.


தனது பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்து குடும்ப வாழ்க்கை ,திருமண வாழ்வை பாதிப்பார். நல்ல நட்பு அற்ற நிலை உருவாகும் .கூட்டுத் தொழில் ஆகாது.


சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருப்பது ஜாதகருக்கு மிகப்பெரிய கெடுதலை தருவது கிடையாது .ஆனால் அதே நேரத்தில் மூத்த சகோதரத்தை  பாதிப்பார். பதினொன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் லக்கினத்தை பார்வை செய்து சாதகருடைய குலநலன்களை கெடுப்பார். சோம்பேறித்தனம், எதையும் தள்ளி போடக்கூடிய நிலை போன்றவற்றை உருவாக்கும்.


பதினொன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது ஏழாம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வசிக்க இயலாத நிலை, பூர்வீக சொத்துகளால் வில்லங்கம் மற்றும் பிரச்சினைகளை உருவாக்குதல் .புத்திர பாக்கியத்தை காலம் தாழ்த்தி செய்தல் போன்றவற்றை உருவாக்குவார்.


 பதினொன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானமான  எட்டாம் இடத்தை பார்வை செய்து ஆயுள் பங்கம், மரணத்துக்கு நிகரான தொல்லை போன்றவற்றை கொடுப்பார் .வெளிநாடு செல்ல இயலாது நிலைப்பாட்டை உருவாக்குவார்.


விரய ஸ்தான பன்னிரெண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் இருப்பது நித்திரை சுகம், படுக்கை சுகம் போன்றவற்றை கெடுப்பார்  ‌வீண் செலவு கஞ்சத்தனம் போன்றவற்றை உருவாக்குவார்‌.


பன்னிரண்டாம் இடத்தில் உள்ள சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்த்து செய்து குடும்பத்தை அமைப்பதில் காலதாமதம் ஆக்குவார் ,கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது நிலை, கல்வியில் தடை போன்றவற்றை உருவாக்குவார்.


12ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது ஏழாம் பார்வையால் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்தால் நல்ல பலனையை தருவார் கடன், பிணி ,எதிர்ப்பு அற்ற நிலை உருவாக்குவார்.


  பன்னிரண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை பார்வை செய்து தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் போன்றவற்றில் பாதிப்பு , தந்தை பிரிவு ,தந்தையால் மன கஷ்டம்  மற்றும் தந்தை இல்லாத நிலை

மேல்நிலைக் கல்வி செல்ல இயலாத நிலை, தான தர்ம குணம் அற்ற நிலை போன்றவற்றை உருவாக்குவார்.


இவ்வாறாக லக்னம் முதல் பன்னிரண்டு பாவகத்தில் சனி பகவான் இடம்பெறக்கூடிய பலன்களை நான் தந்தாலும் இந்த பலன்களில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு .எவ்வாறு எனில்  அந்த சனி பகவானை சுப கிரகங்கள் பார்வை எனது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால்  அதிக நல்ல பலனைத் தரும். பாவக் கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால்  கூடுதலான கெடு பலன்களை தரும். மேலும் அந்த ஸ்தான அதிபதி மற்றும் காரக கிரகம் போன்றவற்றை பொருத்தும் பலனில் மாற்றம் ஏற்படும்.


நன்றி.


FOR ONLINE APPOINTMENT 

CELL & WHATSAPP AND GOOGLE PAY :


  097151 89647 


MY ANOTHER CELL NUMBER 

74025 708 99 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Monday, 4 November 2024

12-லக்கனங்களுக்கும் குரு பார்வை தரும் நன்மைகள்

 12-லக்கனங்களுக்கும் குரு பார்வை தரும்  நன்மைகள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


   12 ராசி கட்டங்களில் உள்ள நவகிரகங்கள் அனைத்திற்கும் குரு பகவானுடைய பார்வை தரக்கூடிய பலன்

மிகவும் சிறப்பானதாகும். 


குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட தன்னால் பார்க்கப்படும் கிரகங்களும் அல்லது ஸ்தானங்களும் பன்மடங்கு வலிமை பெற்று ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாக மாறிவிடுகிறது. 


  நிழல் கிரகங்களான ராகு கேது தவிர எல்லா கிரகங்களுக்கும் ஏழாமிடப் பார்வை உண்டு என்றாலும் குரு பகவான் சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்களுக்கு மட்டும் சிறப்பு பார்வைகள் உண்டு. 


குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தையும் சிறப்பு பார்வை செய்கிறது.


குரு பகவான் உடைய சிறப்பு பார்வையுடன் தனது சம சப்தம பார்வை 100% சுபத் தன்மையை அடைய செய்கிறது.


  குரு பகவான் லக்னத்தில் இருக்கும் பொழுது ஆட்சி மற்றும் திக்பலம் ஆகிய இரண்டு வலிமையைப் பெற்று இருப்பதால் லக்னத்தில் இருந்து தான் பார்க்கக்கூடிய பூர்வ புண்ணியம் அல்லது புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பலமடைய செய்து தான் பெற்ற பிள்ளைகளாலும் ,  பூர்வ புண்ணியத்தாலும் நல்ல புகழ் அடையச் செய்கிறது. நல்ல புத்தியைத் தந்து அதன் மூலம் பொருள் ஈட்ட வைக்கிறது. 


சில நேரங்களில் ஐந்தாமிடத்தில் பாவக் கிரகங்கள் ஆன ராகு அல்லது சனி அல்லது தேய்பிறை சந்திரன் இருந்தாலும் குருபகவனுடைய பார்வையால் அவை தனது பாவத்தன்மை இழந்து சுபத் தன்னை அடைய வைத்து விடுகிறது.


 குரு பகவான் உடைய பார்வையைப் பெற்ற சனி பகவான் தனது தீய சக்தி வடிகட்டப்பட்டு அதே நேரத்தில் அது தனது பார்வையால்  கெட்ட பற்றும் நல்ல பலன் இரண்டையும் தராத நிலைக்கு ஆட்பட்டு விடுகிறது.


இயற்கை பாவ கிரகமான சனி பகவானை குருபகவான் ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்படும் பொழுது அவை சுபத்தன்மை அடைகிறது. ஆனால் குரு பகவான் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. மாறாக தனது ஏழாம் பார்வையால் குரு பகவான் சனி பகவானை பார்க்க குரு பகவான் சனியை சுபத்துவப்படுத்தி அதே நேரத்தில் தான் பாவத்துவமடைகிறார் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

  


குரு பகவான் லக்னத்தில் ஸ்தான பலம் மற்றும் திக்பலம் இரண்டையும் பெற்று சம சப்த்தமாக களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது நல்ல மனைவி ,கற்ற மனைவி மற்றும் குணமுள்ள மனைவி அமைவாள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு நிலை சிறப்பாக இருக்கும் .நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.


பாக்ய ஸ்தானம் ,பிதுர் ஸ்தானம் மற்றும் தர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஒன்பதாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது தான தர்ம குணம் மிக்கவராகவும் ,கல்வி கேள்வி கேள்விகளில் வல்லவராகவும் ,தீர்த்த யாத்திரைகள் செய்யக்கூடியவராகவும், நல்ல குருமார்களை பெற்றவராகவும் மற்றும் தந்தை வழி ஆதரவை பெற்றவராகவும் இருப்பார்.


குரு பார்வை நன்மை தர வேண்டுமென்றால் அந்த குரு பகவான் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும். குருபகவான் நீசம் பெற்றிருந்தாலும் அதனுடைய பார்வை ஓரளவு நலம் பெறக்கூடியதாக இருக்கும். ஆனால் பாவத்துவமான குரு பகவானுடைய பார்வை ஜாதகருக்கு கோடி நன்மையை தருவதில்லை.


குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுப்பதில்லை மாறாக தாம்பத்திய சுகம் பெறுவதில் தாமதத்தை உண்டு பண்ணும் 


  ரிஷபம் ,துலா லக்கனங்களுக்கு குரு பகவான் லக்கன அவ யோகராக இருப்பதால்  அதன் பார்வை பெரிய அளவுக்கு நன்மை தந்து விடுவதில்லை.

குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சிகம் ,தனுசு ,மீனம் ,கடக  மற்றும் சிம்மம் ஆகிய  ஆறு லக்கனங்களுக்கு குருவின் பார்வை  மற்றும் சேர்க்கை தொடர்பு மிகுந்த நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


  குருபகவான் சூரியனைப் பார்க்கும் பொழுது சிவராஜ யோகத்தை கொடுக்கிறது . நல்ல ஆளுமை தன்மை உடையவராக, அரசருக்கு நிகரான புகழுடையவராக அல்லது அரசு வேலையில் உயரிய பதவியில் அமரக்கூடியவராக திகழ்வார்.


குரு பகவான் சந்திரனை பார்வை செய்யும் பொழுது அந்த சந்திரன் குருச்சந்திர யோகத்தை கொடுக்கும். 


குரு பகவான் செவ்வாயை பார்வை செய்யும் போது குரு மங்கள யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும். இதனால் மணவாழ்க்கையில் மற்றும் புத்திரம் பேரு முதலியவை  மிகவும் சிறப்பாக அமையும்.


குரு பகவான் ராகுவை பார்வை செய்யும் பொழுது ராகுவின் கெடுபலன் நீக்கப்பட்டு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும். 


குரு பகவான் கேதுவை பார்வை செய்தால் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடையக்கூடிய யோகத்தை கொடுக்கும். 


குரு பகவான் புதனை புதன் பகவானை பார்வை செய்தால் வித்தையில் சாதுரியம் உடையவராகவும், கணிப்பொறி ,படைப்பாற்றல் கலை போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவராக திகழ்வார்.


இதே போல குரு பகவான் லக்னத்தை பார்த்தால் நீதி, நியாயம், நேர்மை உடையவராக, நீண்ட நெடிய ஆர்ப்பாட்டிய உடையவராக திகழ்வார்.


குருபகவான்  வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை  செய்வதால் கல்வி ,வாக்கு ,குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்.


குருபகவான் கீர்த்தி புகழ் அடையக்கூடிய மூன்றாம் இடத்தை பார்வை செய்யும் போது நல்ல புகழ் உடைய மைந்தராக திகழ்வார் இளைய சகோதரத்தால் ஆதரவு உண்டாகும். நல்ல காம வீர்யம் உடையவராக படைப்பாற்றல் மிக்கவராக திகழ்வார்.


குரு பகவான் நான்காம் இடத்தை பார்வை செய்யும் போது தன் சுகம் ,தாய் சுகம் ,கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போண்டாற்றால் நன்மை உண்டாகும்.


குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்வை செய்யும் போது பூர்வ புண்ணிய சொத்துகளால் நல்ல ஆதரவு கிடைக்கும், மாமன் வர்க்கத்தால் நன்மைகள் உண்டாகும், நல்ல புத்திரங்களை பெற்றெடுப்பீர்கள்.


சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் சுப கடன்கள் உருவாகும். நோயே உருவானாலும் அவற்றிலிருந்து பிழைத்துக் கொள்வார்.


குரு பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்யும் போது நல்ல கற்ற அழகான , அன்பான மனைவி அல்லது அமைவாள்.


குரு பகவான் எட்டாம் இடத்தை பார்வை செய்யும் போது ஆயுள் நீடிக்கும்.


பாக்கிஸ்தானமான ஒன்பதாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்யும் போது தான தர்ம குணங்கள், சத்திரங்களில் அன்னதானம், தீர்த்த யாத்திரைகள் செய்தல், மேல்நிலைக் கல்வி, அப்பாவழி உறவுகளால் ஆதரவு போன்றவை கிடைக்கும்.


ஜீவனஸ்தானம் ஆன பத்தாம் இடத்தை பார்வை செய்வதால் நல்ல நேர்மையான ஒயிட் கலர் ஜாப் கிடைக்கும். 


லாப ஸ்தானமான பதினோராம் இடத்தை பார்வை செய்யும் பொழுது மூத்த சகோதரர் தான் ஆதரவு எல்லாவற்றிலும் லாபத்தை தரக்கூடிய நிலை போன்றவை உருவாகும். 


    விரய ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்யும் பொழுது வெளிநாடு செல்லுதல், சுப செலவுகள் செய்தல் ,நித்திரை சுகம், படுக்கை சுகம் நேரிய வழியில் பொருள் கட்டுதல்.ஒருவனுக்கு ஒருத்தியான வாழுதல் போன்ற அமைப்புகள் உருவாகும்.


குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு வீதம் 12 ராசிகளை சுற்றி  வர பன்னிரெண்டு எடுத்துக் கொள்வார்.


நன்றி.


For online appointments


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே 

‌ 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,aM.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

வாழ்க்கை ஒரு போராட்டமா? பூந்தோட்டமா ?

 வாழ்க்கை ஒரு போராட்டமா ? பூந்தோட்டமா?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவன் தன் வாழ்வில் ஏதோ ஒன்றை தேடி எதற்காகவோ அழைந்து கடைசியில் ஏதோ ஒன்றை பெற்று வாழ்க்கையை நகர்த்திச் செல்வது நடுத்தர வர்க்க மனிதனின் நடைமுறைச் செயலாகும்.


 ஒரு மனிதன் அறிவும் திறமையும் இருந்தாலும் அதற்குரிய கால நேரம் ஒத்துழைப்பு இல்லை என்றால் அவன் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண துறும்பைப் போல் ஆகி விடுகிறான். சில நேரங்களில் சாதாரண அறிவைப் படைத்தவன் நல்ல உகந்த தசை புத்திகள் தொடர்ந்து அவனுக்கு வந்து அவனை வாழ்வில் உச்சாணி கொம்புக்கு ஏற்றி அழகு பார்த்து விடுகிறது.


 ஒருவரை எந்த இடத்தில் வைப்பது என்பதை அவனது லக்னம் அதன் அதிபதி ,தொடர்ந்து நடக்கக்கூடிய தசா புத்திகள் மற்றும் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் இவை அனைத்துமே முடிவு செய்கிறது.


 ஒருவருக்கு நல்ல யோக தசா அமைப்புகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அவர் குப்பையில் கிடந்தாலும் கோபுர கலசமாக திகழ்வார். 


அதே நேரத்தில் கோபுரத்தின் உச்சியில் இருந்த வரையும் உகந்த தசா அமைப்புகள் வராத நிலையில் அல்லது தொடர்ந்து அவயோக தசைகள் வரக்கூடிய நிலையில் கீழ் மட்ட நிலைக்கு வந்து விடுவது உண்டு.


 ஒருவருக்கு தொடர்ந்து லக்கன யோக தசைகள் அல்லது சுப கிரக பார்வை பெற்ற தசைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் லக்கனாதிபதியும் வலிமையை பெற்ற நிலையில் அவர் அந்த யோகத்தை முழுமையாக அனுபவித்து நல்ல முறையில் சொகுசான வாழ்வை வாழக்கூடிய நிலையை அடைவார்.


 ஒருவருக்கு ஆறு மற்றும் எட்டுக்குரிய தசைகள் அல்லது அவயோக தசைகள் அல்லது பவர் சேர்க்கை மற்றும் பார்வையை பெற்ற தசைகள் நடப்பில் வரக்கூடிய காலங்களில் கடுமையான கஷ்டங்களையும் மற்றும் நஷ்டங்களையும் அனுபவிக்க கூடிய நிலையில் தள்ளப்படுவார். இத்தகைய சூழ்நிலையில் அவருக்கு லக்கனாதிபதி வலிமை அடைந்து இருக்குமாயின் அவர் அந்த கஷ்டங்களில் போராடி எதிர்நீச்சல் போட்டு பிறகு நல்ல தசை அமைப்புகள் வரக்கூடிய காலங்களில் வெற்றி பெற்று விடுவார்.


 ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட வகையிலான தசா புத்திகள் நடக்கக்கூடிய காலங்களில் லக்கனாதிபதியும் வலிமை இழந்த நிலையில் அவர் போராட திராணியற்று மிகுந்த கஷ்டங்களுக்கு உட்பட்டு மிகவும் தாழ்வான நிலையை அடைந்து வாழ்வில் தாழ்ந்து விடுவார்.


   ஒருவருக்கு வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு திறம்பட போராடி வெற்றி பெற்று சமூகத்தில் ஒரு உயரிய நிலையை அடைவதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கனாதிபதியின் வலிமை குறிப்பிடத்தக்கதாகும்.


   ஒரு மனிதன் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரை யோகத்தை அனுபவிப்பதற்கும், ஒரு சிலர் பிறந்தவுடன் கஷ்டங்களை அனுபவித்து ஒரு மத்திம வயதில் போராடி ஒரு உயிரிய நிலையை அடைவதற்கும் மற்றும் ஒரு சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டமான சூழ்நிலை கஷ்டத்திலே வாழ்ந்து மறைவதற்கும் அவருடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுடைய சேர்க்கை ,பார்வை, இருக்கும் இடம் மற்றும் நடக்கும் தசா புத்திகள் இவற்றைச் சார்ந்தே அமைகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை அடைந்து 

தனம்- பாக்கியம்_ லாபம் என்று சொல்லக்கூடிய மகா தன யோகத்தை தரக்கூடிய இந்த ஸ்தானங்களும் அதன் அதிபதிகள் நல்ல முறையில் தனகாரகன் குருவுடன் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு தன-பாக்கிய-லாப அதிபதி திசையில் ஏதோ ஒன்று சரியான நேரத்தில் வரும் பட்சத்தில் கோடிக்கணக்கான பணங்களை சம்பாதித்து வாழ்வில் உயர்ந்த கோடீஸ்வரன் நிலையை அடைய இயல்கிறது.


   லக்கனாதிபதி வலிமை அடைந்து பௌர்ணமி யோகத்தில் ஒருவர் பிறந்து சிம்மமும் வலுப்பெற்ற நிலையில் ஆட்சி மற்றும் அரசியலில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒரு மனிதன் பிறப்பிலிருந்து குரு பகவான் பார்த்த தசா தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அவர் பிறப்பிலிருந்து யோகத்தை அனுபவிக்க கூடிய நிலையில் இருப்பார் ‌ லக்கனாதிபதியும் வலிமை அடைந்து சுபத்துவ தன்மையை பெற்றிருக்க வேண்டும்.


 ஒரு மனிதனுக்கு லக்கனாதிபதி வலிமையடைந்த நிலையில் பிறப்பிலிருந்து மத்திய வயது வரை உகந்த தச அமைப்புகள் நடக்காமல் மத்திம வயதுக்கு பிறகு யோக தசைகள் நடப்பில் வரக்கூடிய காலங்களில் மனிதன் கஷ்டப்பட்டு போராடி தான் பெற்ற மற்றும் கற்ற துறை மூலமாக வாழ்வில் உயரிய நிலையை அடைந்து விடுகிறான்.


     ஒருவர் ஜாதகத்தில் லக்கனாதிபதி பாவத்தன்மை அடைந்து தொடர்ந்து பிறப்பிலிருந்து இறப்பு வரை சனியின் பார்வை பெற்ற தசை ,அவ யோக தசைகள் மற்றும் ஆறு மற்றும் எட்டு தசைகள் தொடர்ந்து நடப்பில் வரக்கூடிய மனிதனாக இருந்து அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு கஷ்டத்தோடு தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.


  ஒருவன் எவ்வளவு தான் கஷ்டம் வந்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் இன் முகத்தோடு வரவேற்று கஷ்டங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு ஒரு நல்ல இடத்தை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கையோடு போராடி அதேபோல ஒரு உதாரண புருசராக உயர்ந்த நிற்க கூடிய நபர்களை நம்ம பார்க்கிறோம். நிச்சயமாக அவருடைய ஜாதகத்துல லக்கனம் மற்றும் லக்கனாதிபதி வலிமை அடைந்து சுப தன்மை உடன் நின்று ஆரம்ப காலத்திலிருந்து அவயோகத்தை தரக்கூடிய தசைகள் நடந்து பின்பு அந்த சாதிக்கக்கூடிய நேரத்தில் நல்ல தசா புத்திகள் வந்து ஒரு ஒத்துழைப்பு தந்து அவரை அந்த உயரிய இடத்துல அமர வைத்து அழகு பார்க்கும்.


    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்ன ஒரு கவிதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உள்ளேன் .


   "வானம் என்றும் நீல நிறமாக இருக்கும் என்றோ ? .பாதை முழுவதும் பூக்களே நிரம்பி இருக்கும் என்றோ? இறைவன் வாக்கு தரவில்லை "


உங்கள் ஜாதக கட்டத்தில் 12 ராசிகளில் 27 நட்சத்திர சாரத்தை பெற்று கிரகங்கள் எங்கு எந்த இடத்தில் எப்படிப்பட்ட பார்வை ,சேர்க்கையில் இடம்பெற்று தசா புத்திகளை லக்னாதிபதி வலிமையை கொண்டு நடத்திச் செல்கிறதோ அவற்றைப் பொறுத்தே நம் வாழ்வில் நிலை அமைகிறது என்பதை விளக்கவே இந்த பதிவை முழுவதும் பயன்படுத்திக் கொண்டேன்.


நன்றி 


For online appointment 


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே 

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி.

கிரகம் தரும் பலன்களை கண்டறிய தேவையான விதிமுறைகள்.

 கிரகம் தரும் பலன்களை கண்டறிய தேவையான விதிமுறைகள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


     ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தரும் பலன்களை நிர்ணயிப்பதில் முதன்மையான இடம் லக்கனாதிபதி உடைய வலிமையாகும். இதனை தொடர்ந்து ஒரு கிரகம் இருக்கக்கூடிய வீட்டின் அதிபதி, அந்த  கிரகத்துடன் சேர்ந்திருக்கக்கூடிய கிரகங்கள் அல்லது பார்வை செய்யக்கூடிய கிரகங்கள் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.


   பார்வை  அல்லது சேர்க்கையானது 

சுப கிரகங்களா ? அல்லது பாவ கிரகங்களா ?  என்பதை பொறுத்தும் பலன் தருவதில் மாற்றம் ஏற்படுகிறது.


       சேர்க்கை மற்றும் பார்வையானது

 சுப கிரகங்களால் நிகழ்ந்தால்  சுப பலனையும்  மற்றும் பாவ  கிரகங்கள் உடன் தொடர்பு பட்டால் பாவத்துவமான பலனையும் ஜாதகருக்கு தருகிறது.


  ஒரு கிரகம் ஆனது பாவருடைய வீட்டில் அமர்ந்து ,பாவ கிரகங்களின் சேர்க்கை  மற்றும் பார்வையினை பெற்றிருந்தால் மிகவும் கெடுப்பலன்களைதானே ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒரு கிரகம் ஆனது சுபர் வீட்டில் அமர்ந்து மற்றும் சுப கிரகங்களுடைய பார்வை மற்றும் சேர்க்கை நிலையை பெற்று இருந்தால்  மிகவும் நல்ல பலனை ஜாதகருக்கு அதன் தசையில் கொடுக்கிறது.


 ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அடைந்து இருப்பின் அதன் தசையில் மிகவும் நல்ல பலனை அந்த கிரக தன்மைக்கு ஏற்றவாறு ஜாதகருக்கு கொடுக்கும்.


 ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீச்சம் அடைந்திருந்தால் அந்த கிரக தசையில் ஜாதகருக்கு நல்ல பலனை தருவது கிடையாது.


 ஒரு சுப கிரகம் நீசம் அடைந்த வீட்டில் இருந்து தசை நடத்தும் போது அந்த சுப கிரகம் தரக்கூடிய நல்ல பலனை அந்த தசையும் கொடுப்பதில்லை. இதே போல பாவ கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீச்சமடைந்திருந்தால் மிகவும் கடுமையான கெடுபலனை சாதகருக்கு கொடுக்கிறது. 


   ஒரு சுப கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி பாவ கிரகமாக இருந்து உச்சமடைந்து இருந்தாலும் அந்த சுப கிரகம் அந்த தசையில் நல்ல பலனை தருகிறது. உதாரணமாக குரு பகவான் மகரா அல்லது கும்பம்  வீட்டில் நின்று அதன் அதிபதியான சனி பகவான் துலாத்தில் உச்சம் பெற்று இருந்தால் குரு பகவான் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.


    ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தாலும் அதன் தசையில் நல்ல பலனை தருவார். ஆனால் அந்த நீசம் அடைந்த கிரகத்துடன் பாவ கிரகம் சேர்க்கை அல்லது பார்வை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அது அதன் தசையில் மிகவும் கெடுப்பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


      பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாய் உச்சம் அடைந்து இருந்தால் அவை அதன் தசையில்  நன்மையை தராமல் அதன் தன்மையை ஜாதகருக்கு கொடுப்பார் .


   எப்பொழுதும் ஒரு கிரகம் பலவீனம் (நீசம், பகை ,வக்கிரம் மற்றும் அஸ்தமனம்) அடைந்திருந்தால் மிகுந்த அளவு கெடுபலனை அதன்  தசையில் தர மாட்டார். ஆனால் அதே நேரத்தில் பாவத்தன்மை அடைந்திருந்தால் அதன் தசையில் கடுமையான கெடுபலனை ஜாதகருக்கு கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


 ஒரு கிரகம் ராசியில் பலவீனம் அடைந்திருந்தாலும் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் அதன் தசையில் நல்ல பலனை ஜாதகம் இருக்க கொடுப்பார். அதே நேரத்தில் ஒரு கிரகம் ராசியில் நல்ல நிலையில் அமர்ந்து அம்சத்தில் பாபவர்க்கம் ஏறி இருந்தால் அதன் திசையில் மிகுந்த நல்ல பலனை ஜாதகர் அடைவதில்லை. 


 மேற்கண்ட இந்த பல விதிகளை மனதில் கொண்டு ஒரு குறைந்த நேரத்தில் ஜாதகர் தரக்கூடிய சாதகத்தை கணித்து பலன் சொல்லும் பொழுது அவ்வாறு தரக்கூடிய பலன் ஆனது நிச்சயமாக துல்லியமாக 100% இருக்கும் . மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது தசா புத்திகளே அந்த தசா புத்திகளுடைய பலனை மேற்கூறிய விதிமுறைகளை மனதில் கொண்டு சோதிடர்கள் ஆய்வு செய்து சாதகர்களுக்கு பலம் சொல்ல வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே 

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.