Sunday, 3 November 2024

உங்கள் வாழ்க்கையை சம படுத்தி செல்லும் ஜோதிடம்

 உங்கள் வாழ்க்கையை சமப்படுத்தி செல்லும் ஜோதிடம் .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  

  ஒளி கிரகங்கள்: சூரியன் மற்றும் சந்திரன் 

 இருள் கிரகம் ; சனி பகவான் 


நிழல் கிரகங்கள்: ராகு மற்றும் கேது பகவான் 


உள் வட்ட கிரகங்கள்: சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் 


முழு பாவர்: சனி பகவான் 


முக்கால் பாலர் : செவ்வாய் 


அரை பாவர்: சூரியன் 


முழு சுபர் : குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன். 


இரட்டை தன்மை : புதன் (பாவருடன் சேராத வரை சுபர்)


இயற்கை சுப கிரகங்கள்: குருபகவான் வளர்பிறைச்சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆவார் .


இயற்கை பாவ கிரகங்கள் ; சனி பகவான் செவ்வாய் பகவான் ,தேய்பிறை சந்திரன், பாவி உடன் சேர்ந்த புதன், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது.

சொந்த வீடு இல்லாத கிரகங்கள்: ராகு மற்றும் கேது .


    தந்தைக்கு காரகராக சூரிய பகவானும், தாய்க்கு காரகராக சந்திர பகவான், சகோதரனுக்கு காரகராக செவ்வாய் பகவான் ,மாமனுக்கு காரகராக புதன் பகவான் ,மனைவிக்கு கரகராக சுக்கிர பகவானும், குழந்தைகளுக்கு காரகராக குரு பகவான் மற்றும் பாட்டன் பாட்டிகளுக்கு காராக கிரகமாக ராகு மற்றும் கேது பகவானும் விளங்குகிறார்.


  இதே போல சாதகரை வழிநடத்திச் செல்லும் கேப்டனாக லக்கனமும், இளைய சகோதரனுக்கு மூன்றாம் இடம், தாய்க்கு நான்காம் இடமும், 

குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாம் இடமும் ,எதிரி பிணிக்கு ஆறாமிடமும் மனைவிக்கு ஏழாம் இடமும், 

தந்தைக்கு 9ஆம் இடமும் 

ஆகி நின்று மனித உறவுகளை வழி நடத்தி செல்கிறது.


  தனம் -பாக்கியம்- லாபம் ஆகிய மூன்று இடங்கள் ,அதன் அதிபதிகள் மற்றும் இடம் மூன்றுக்கும் காரக கிரகமாக குரு பகவான் நின்று இவற்றின் வலிமையை பார்வை மற்றும் சேர்க்கை முறை அடிப்படையில் ஆய்வு செய்து சுபத்தன்மை/ பாவ தன்மை படி நிலைக்கு உங்கள் வாழ்வின் பொருளாதார நிலை அளிக்கப்படுகிறது. மேற்கொண்ட அடிப்படையில் ஆய்வு செய்து நீங்கள் ஏழ்மையான நிலையான ?  பணக்காரனா?  இல்லை மிகுந்த கோடீஸ்வரரா ? என்பதை ஆய்வு செய்து உங்கள் வாழ்வின் சமநிலையை அறிய பயன்படுகிறது.


நீங்கள் படித்தவரா?  படிப்பின் மூலம் சம்பாதிப்பவரா? போன்ற விஷயங்களை ஆய்வு செய்து கணக்கிட இரண்டாம் இடம், நான்காம் இடம் ,ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் அதன் அதிபதிகள் மற்றும் காரக கிரகமான குரு மற்றும் பகவான் புதன் பகவான் ஆகியவற்றை நடக்கும் தசைகளோடு ஒப்பிட்டு பார்த்து  சுப அல்லது பாவ தன்மை படி நிலைகளுக்கு ஏற்ப உங்கள் வாழ்வின் அறிவு நிலை, கல்வி நிலை மற்றும் கல்வியால் பிழைக்கும் நிலை போன்றவற்றை கண்டறிய உதவுகிறது.


 சிம்மம் மற்றும்  சிம்மம் அதிபதி சூரியன் நடக்கும் தசா புக்தி உடன் ஒப்பிட்டு பார்த்து சுப / பாவ படிநிலைகளுக்கு நீங்கள் அரசு வேலை பார்ப்பவரா என்பதை ஆராய்ந்து கண்டறியப்படுகிறது.


 செக்ஸ் வாழ்வில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காம திரிகோண ஸ்தானமான மூன்று,ஏழு மற்றும் பன்னிரண்டாம் இடம், அதன் அதிபதி மற்றும் காம மற்றும் களத்திர காரக கிரகமான செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் கிரக மற்றும் பார்வை அடிப்படையில் சுப தன்மை மற்றும் பாவ தன்மையின் அடிப்படையில் நடக்கும் தசா புக்திகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படிப்பட்ட காம உணர்வு கொண்டவர் என்பதை கண்டறிய உதவுகிறது. 


உங்கள் திருமண வாழ்வை பற்றி அறிந்து கொள்ள லக்கனம் என்னும் சாதகர், இரண்டாம் இடம் என்னும் குடும்பஸ்தானம், ஏழாம் இடம் என்னும் களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்னும் எட்டாம் இடம் அதன் அதிபதிகள் மற்றும் களத்திர காலக்கிரகம் சுக்கிரன் ஆகியவற்றின் சுப மற்றும் பாவ கிரக பார்வை மற்றும் சேர்க்கை நிலையின் அடிப்படையில் லக்னம் மற்றும் ராசி ஆகிய இருவழியில் ஆய்வு செய்து நடக்கும் தசா புத்திகளுக்கு ஏற்ப உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமையும் என்றும், திருமண வாழ்விற்கு பிறகு உங்களுடைய நிலை எவ்வாறு இருக்கும் போன்ற விஷயங்களை ஆய்வு செய்து அறிய உதவுகிறது.


  உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தை ,அவருடைய கல்வி நிலை , உங்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளால் உயர்வடைய கூடிய நிலை  உள்ளதா ?  கஷ்டப்படக்கூடிய நிலையில் உள்ளீர்களா?  போன்ற விஷயங்களை ஆய்வு செய்து பார்க்க புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாமிடம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குருபகவான் ஆகியவற்றை  சுப/ பாவ  கிரக பார்வை அல்லது சேர்க்கை அடிப்படையில் ராசி  மற்றும் லக்னம் என்னும். இரு வழிகளில் ஆய்வு செய்து நடக்கும் தசா புத்தி அடிப்படையில் கண்டறிய பயன்படுகிறது.


  ஜாதக கட்டத்தில் ஆறாமிடம் மட்டும் எட்டாமிடம் மிகுந்த அவயோகத்தை தரக்கூடிய இடமாக கருதப்படுகிறது இதன் தசைகளும்  மற்றும் இது ஒவ்வொரு தசைகளில் புத்திகளாக வரும் பொழுதும் மனித வாழ்வில் கஷ்டங்களை தரக்கூடிய ஒரு அமைப்பாக இருக்கும்.


     சில நேரங்களில் இந்த ஆறாம் இடத்தில் மூலம் அடிமை வேலை, கடனால் பிழைக்கக்கூடிய தன்மை போன்ற நல்ல விஷயங்களைத் தரக்கூடிய அமைப்பில் இருக்கும் .இதே போல் எட்டாம் இடம் சுபத்துவமாக இருக்கக்கூடிய நிலையில் கடல் கடந்து வெளிநாடு செல்லுதல் ,நீண்ட தீர்க்க ஆயுள், மறைபொருள்  உண்மைகளை கண்டறிதல் போன்ற நல்ல விஷயங்களை நடக்கக்கூடிய தன்மைகளில் இருக்கும். 


ஆறாம் இடத்தில் சத்துரு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. கடன், பிணி, எதிர்ப்பு ,மான அவமான, வம்பு , சண்டை வழக்கு , ஆள அடிமை ,அடிமை வேலை கீழ்மட்ட நிலைகளில் வேலை போனற கீழான விஷயங்களை தரக்கூடிய அமைப்பில் இவைகள் உள்ளன.


 இதே போல எட்டாம் இடம் மரணத்துக்கு நிகரான தொல்லை ,ஆயுள்பங்கம்,  சிறை செல்லல் போன்ற கெட்ட விஷயங்களை அதன் தசைகளில் தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


ஒருவர் தன் வாழ்வில் மூத்த சகோதரன், இளையதாரம் மற்றும் தனக்கு கிடைக்க கூடிய லாபம் போன்ற விவரங்களை ஆய்வு செய்து பார்க்க பதினொன்றாம் இடம் பயன்படுகிறது .இதனை லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.


    இதே போல ஒரு நாளின் இறுதிநிலை காமம் ,வாழ்வின் இறுதி நிலை முக்தி, தன் வாழ்வில் ஒருவன் எவ்வாறு செலவு செய்வான் என்பதை அறிய உதவும் விரய ஸ்தானம் ஆகும்.


 ஒருவர் ஒரு தொழில் செய்வாரா ? அல்லது பல தொழில் செய்வாரா? அல்லது என்ன தொழில் செய்வார்?

 எந்த துறையில் அவருக்கு அதிக நாட்டம் இருக்கும் ? ,அந்தத் துறையில் ஈடுபட்டு வெற்றி பெறக்கூடிய அமைப்பு உண்டா? இது போன்ற விஷயங்களை உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருந்து தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு உருவாகி அந்த தொழிலில் உங்களை ஈடுபட வைக்கும். இதற்கு அந்த கிரக சுபத்துவ அல்லது பாவ தன்மை படிநிலைக்கு ஏற்ப அமைகிறது. மேலும் நடக்கக்கூடிய தசா புத்திகளோடு ஒப்பிட்டு பார்த்து பலன் அறிய வேண்டும்.


    நிழல்  கிரகங்கள் ஆன ராகு ,கேது தவிர ஏனைய கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி நகரக்கூடிய கிரகங்கள் ஆகும். இதனால் நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது பகவானுக்கு வக்ர கதி கிடையாது.


 நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் இருக்கும் வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு தன்னை பார்த்த, சேர்ந்த  மற்றும் வீடு கொடுத்தவன் ஆகியவற்றில் அனைத்தின் வலிமையை தான் எடுத்து அதன் தசையில் தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


ஏனைய கிரகங்கள் ஆன செவ்வாய்க்கு மேஷம் மற்றும் விருச்சகட்டை சொந்த வீடாகவும் ,சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் சொந்த வீடாகவும்,

 புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னியை சொந்த வீடாகவும், குருபகவான் தனுசு மற்றும் மீனத்தை சொந்த வீடாகவும் ,சனிபகவான் மகர மற்றும் கும்பத்தை சொந்தவீடாகவும் கொண்டு செயல்படுகிறது.ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டிற்கும் மற்றும் ஒரே ஒரு வீடுகளாக  கொண்டுள்ளது. அவை முறையே சிம்ம மட்டும் கடகம் ஆகும்.


நன்றி 


 தொடரும்..


Online Astro Consultation 


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே


 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: