Saturday, 16 November 2024

சனி பகவான் எப்படி இருந்தால் நல்லது ?

 கிரகங்கள் எப்படி இருந்தால் யோகத்தைத் தரும் ?-பகுதி -( 1 )




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     1. ஒரு ஜாதகத்தில் ஒரே கிரகம் கேந்திர மற்றும் திரிகோண அதிபதியாக இருந்தால் அந்த கிரகம் தனது தசையில் சாதகருக்கு நன்மையை தரும்.


       உதாரணமாக துலா லக்னத்திற்கு சனி பகவான் கேந்திர மற்றும் திரிகோண அதிபதியாக வருவதால் அந்தத் தசை சாவதற்கு வரும் பொழுது யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக அமைகிறது.


      2. ஒரு ஜாதகத்தில் தர்மாதிபதி எனப்படும் ஒன்பதாமிட அதிபதியும் மற்றும் கர்மாதிபதி எனப்படும் பத்தாமிட அதிபதியும் பரிவர்த்தனை  பெற்று நின்றாலும்,ஒன்றாக கூடி நின்றாலும் அல்லது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம கர்மா ராஜயோகம் ஆகும் .இது ஜாதகருக்கு நல்ல யோகத்தை தரக்கூடிய ராஜ யோகமாகும்.


     3. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் யோகத்தை அள்ளித் தரும். இவற்றை பாவ கிரகங்கள் பார்க்காமல் அல்லது சேராமல் இயற்கை சுபகரங்கள் பார்வையை பெற்றிருந்தால் மிகுந்த யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


     4) சூரியன் புதன் செவ்வாய் எங்கு கூடி நின்றாலும் சாதகருக்கு யோகம் தான் இந்த அமைப்பை பாவ கிரகமான  சனி, ராகு சேர்ந்திடாமல் அல்லது சனியால் பார்க்கப்படாமலும் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு இருக்க வேண்டும்.


    5) குரு சுக்கிரன் உச்சம் பெற்றாலும், ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் யோகத்தை தரக்கூடிய வகையில் இருக்கும்.


    6) சுக்கிர பகவான் பாக்கியாதிபதியாகி ஜன்ம லக்கனம் ஏற ராஜயோகத்தை கொடுக்கும்.


    7) மூன்று ஆறு மற்றும் 10-ஆம் இடங்களில் லக்கனாதிபதி இருக்க அவரை இயற்கை சுபக்கோள் பார்க்க மாபெரும் யோகத்தை சாதகருக்கு கொடுக்கும்.


   8) பத்தாம் இடத்தில் ராகு பகவான் இருந்து அந்த வீட்டோட அதிபதி லக்கின கேந்திரம் ஏற‌அல்லது உச்சம் பெறவோ அதன் தசையில் சாதகருக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


    9) ஒன்பதாம் இட அதிபதி பாக்கிய அதிபதி எனப்படும் இந்த பாக்கிய அதிபதி ராசிக்கு 9ஆம் இடத்தில் இருக்க சாதகருக்கு அதன் தசையில் யோகத்தை கொடுக்கும்.


   10) சுகஸ்தானாதிபதி எனப்படும் நான்காம் இட அதிபதி உச்சம் பெற அந்த உச்சம் நின்ற ராசிநாதன் ஐந்தாம் இட

 அதிபதியோடு கூடி ஒன்பதாம் இடத்தில் இருந்தால் சாதகருக்கு ராஜயோகம்.


   11) ராகு நின்ற வீட்டிற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இருப்பது ஜாதகருக்கு யோகத்தை அள்ளி தரும்.


    12) சந்திரனுக்கு பத்தில் குரு நின்று அதன் திசை நடக்கக்கூடிய காலங்களில் சாதகருக்கு யோகத்தை தரும்.


     13 )  சூரியனுக்கு முன்னும் பின்னும் சுப கோள்  இருப்பது யோகத்தை அள்ளித்தரும்.


      14)  திரிகோண அதிபதிகள் திரிகோணத்தில் இருப்பதும் நல்ல யோகத்தை தரக்கூடிய நிலையாகும்.


     15) நீசம் நின்ற ராசிநாதன் ஆட்சி ,உச்சம் பெற்றாலும் அல்லது சந்திர கேந்திரத்தில் நின்றாலும் நீச பங்க ராஜயோகம் ஆகும்.


     16) லக்கினாதிபதி இருந்த ராசிநாதன் உச்சம் பெற்றாலும் அல்லது கேந்திரம் ஏறி நின்றாலும் யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.


     17 )  குரு சந்திரன் மற்றும் சுக்கிரன் லாப ஸ்தானம் ஏற யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


      18)  லக்னத்தை உச்சக்கிரகம் பார்த்தால் அல்லது இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்த்தால் யோகத்தை தரக்கூடிய நிலையாகும்.


      19) குரு ,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் திரிகோணம் ஏற யோகத்தை அளித்து தரக்கூடிய உள்ளதாகும்


      20) சந்திரன் இருக்கும் இடத்திற்கு முன்பின் அதாவது ஜென்ம ராசியை சுற்றி இரண்டு புறமும் இயற்கை சுப கிரகங்கள்  இருப்பதும் சுப கர்தாரி யோகம் .அது ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாகும்.


      21 ) வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை சுப  குரு புதன் சுக்கிரன் இருப்பது சந்திராதி யோகமாகும் இது குரு புதன் மற்றும் சுக்கிர திசையில் சாதகருக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கும்.


      22) லக்கனாதிபதி, தனாதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் லாப அதிபதி ஆகிய நால்வரும் சேர்ந்து நின்றாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் அல்லது  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் மகா தன யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.


     23) ஒரு ஜாதகத்தை லக்கனாதிபதி 9ஆம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடவாதிபதி லக்னத்தில் இருந்தாலும் நல்ல பலனை தரும் அமைப்பாகும்.


     24) சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று சம சப்த்தமாக பார்த்துக் கொள்ளக்கூடிய நிலை பௌர்ணமி யோகம் ஆகும் அதேபோல சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அமாவாசை யோகம் ஆகும் .இது எழுத்து, கவிதை, காவியத்தில் புகழ் பெறக்கூடிய அமைப்பாகும்.. உயரிய பதிவில் அமரக்கூடிய யோகமாகும்.


    25) சந்திர குரு தொடர்பு குரு சந்திர யோகம் , சந்திரன், செவ்வாய் சேர்க்கை அல்லது தொடர்பு சந்திர மங்கள யோகமாகும். சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை அல்லது தொடர்பு பிருகு மங்கள யோகம் ஆகும்.


    26) வளர்பிறை சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் இருப்பதும் சுனபா யோகம் ஆகும். இது பிறந்தது முதல் இறப்பு வரை நல்ல புகழையும், தனத்தையும் தரக்கூடிய அமைப்பாகும் .இதேபோல வளர்பிறை சந்திரனுக்கு 12ஆம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பது அனாப யோகமாகும்.


     27) ஒருவர் ஜாதகத்தில்  தனம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் லட்சுமி கடாட்சம் அமையும். முற்கால  வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.


   28) மேசம், ரிஷபம் ,மகரம் ,கடகம் மற்றும் கன்னி ஆகிய  ஐந்து  ராசிகளில் ராகு பகவான் இருப்பது நல்ல நிலையாகும். இவ்வாறு இருந்து அந்த ஸ்தானம் லக்கினத்திற்கு உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு, பத்து  மற்றும் பதினொன்றாம் இடமாக இருந்து ராகுவுக்கு கேந்திரத்தில் மற்ற கோள்கள் இருந்தால் அது பர்வதா யோகம் ஆகும் மிகுந்த ராஜயோகத்தை சாதகருக்கு கொடுக்கும்.


    29) தனுஷின் ராகு இருப்பது கோதண்ட யோகம் எனப்படும் .சிம்மத்தில் குரு இருப்பது வளைய குரு எனப்படும். இவ்வாறு இருந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் அதன் தசையில் யோகத்தை சாதகருக்கு கொடுக்கும்.


  30) சூரியன் புதன் ஆகிய இருவரும்  சேர்ந்திருந்து லக்னத்திற்கு ஒன்று நான்கு மற்றும் எட்டாம் இடங்களில் இருந்தால் மன்னனுக்கு நிகரான ராஜயோகம் ஆகும் .இந்த ராஜயோகம் வேலை செய்ய இவர்களை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் பார்வை பெறாமலோ அல்லது சனி , செவ்வாய்  மற்றும் ராகு சேர்ந்திருக்காமலோ இருக்க வேண்டும்.


     31) குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பது கஜகேசரி  யோகம் ஆகும் இது எதிரியை வெல்லக்கூடிய யோகமாகும்.


   யோக அமைப்பு தொடரும்.....


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


  097151 89647 


மற்றொரு செல் 

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: