ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு.சோதிடர் மேல் இல்லை.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜோதிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு ஐயா ஆனால் சோதிடர் மேல் நம்பிக்கை இல்லை எனது ஒரு கருத்து பொதுவாக நிலவி வருகிறது. இதனை என்னுடைய முகநூல் கமெண்ட் பாக்ஸில் கூட தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று அரசு ஆராய்ந்து உற்று நோக்கினால் இதற்கு அவர்கள் கூறிய கருத்து சில நேரங்களில் உண்மை என்று கூறும் அளவுக்கு தான் உள்ளது.
காரணம் ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் உதாரணமாக திருமண பொருத்தம் பார்க்கும் ஒரு சில ஜோதிடர்கள் வெறும் நட்சத்திர பொருத்தங்களையும், ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷம் போன்ற விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு சாதகருடன் உள்ள பிறப்பு வளர்ப்பு விவரங்களை துருவ கணித யுக்தியை பயன்படுத்தி பலன் சொல்லி அதன் மூலமாக மக்களின் நம்பிக்கையை பெற்று பொருத்தம் பார்க்க்கூடிய சோதிடர் தரும் பொருத்தத்தால் தம்பதிகள் இல்லற வாழ்வு நிலை சரியாக அமையாமல் அமைந்து விடுகிறது.
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டும் ஆய்வு செய்து பார்க்காமல் ஜாதக கட்டத்தில் 12 ராசிகளில் உள்ள கிரகங்களுடைய பார்வை மற்றும் சேர்க்கை பலன்கள் , லக்கனாதிபதியின் வலிமை, நடக்கும் தசா புத்தி மற்றும் நடக்க இருக்க கூடிய தசாபுத்தி, கோச்சார பலன்கள் போன்றவற்றை தொலைநோக்கு பார்வையில் ஆய்வு செய்து பார்த்து ,தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன், புத்திர பாக்கியம் தரும் குரு பகவான் மற்றும் புத்திர பாக்கிய ஸ்தானம் போன்றவற்றை எல்லாம் ஆய்வு செய்து பார்த்து தான் ஒரு நல்ல முடிவை எடுக்கப்பட வேண்டும்.
ஜாதகம் பார்க்க வரும்பொழுது சிலர் ஜாதகம் தவறான முறையில் எழுதப்பட்டு இருக்கும்.சில வயதான ஜோதிடர்கள் ஜாதகம் எழுதும் போது ஆண் காலம்/ பெண் காலம் பார்த்து பிறந்த நேரத்தை மாற்றி எழுதுவார்கள் அல்லது பிறந்த நேரத்தை ரவுண்டு ஷேப்பில் சொல்லியும் அல்லது குழந்தை பிறந்த பிறகு நர்ஸ் வந்து அரை மணி நேரம் கழித்து வந்து சொல்லி அந்த நேரத்தை குறித்துக்கொண்டு எழுதப்படும் சாதகங்கள் போன்றவை தவறாக கணிக்கப்பட்டு இருக்கும் இவ்வாறு கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து சொல்லக்கூடிய பலன்களும் தவறாக போய் விடுவது உண்டு.
எனவே மேற்கண்ட காரணங்களால் சாதகம் தவறாக அமைந்து அதனால் சாதக பலனும் தவறாகப் போய் விடுவதால் அது போன்று பலன் அளிக்கும் ஜோதிடர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடுவதும் உண்டு .
எனவே ஜாதகத்தை பார்க்கும் பொழுது அவர்களுடைய பிறந்த நேரத்தை வைத்து சாதகத்தை கணித்து பிறகு லக்ன சந்தியில் உள்ளதா ? அல்லது நட்சத்திர சந்தியில் உள்ளதா ? போன்ற விவரங்களை எல்லாம் கண்டறிந்து அவ்வாறு வரும் பட்சத்தில் இரண்டு லக்னங்களையும் வைத்துக்கொண்டு பலன் சொல்லி நடந்து முடிந்த தசா புத்திகள் காலத்தில் எந்த லக்ன த்தை கொண்டு கணிக்கும் பொழுது வாழ்வியல் சம்பவங்கள் சரியாக வருகிறது என்றும் , ஜாதகருடைய குணநலன்கள் லக்னத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் அதனையும் ஆய்வு செய்து பார்த்து நாம் லக்னத்தை சரியாக திருத்த வேண்டும்.
சாதகத்தை கணிக்கும் போது சரியான நேரத்தை கொண்டு துல்லியமாக கணித்து அதனை கொண்டு தரக்கூடிய பலன்கள் நிச்சயமாக 100% துல்லியமாக அமைந்து விடும் .அவ்வாறு 100% துல்லியமாக அமையக்கூடிய பலன்களால் சோதிடர்கள் மீது நம்பிக்கை அவர்களுக்கு வரும். சோதிடர்கள் மேல் நம்பிக்கை வராமைக்கு காரணம் எத்தனை பேரிடம் ஜோதிடம் பார்த்தாலும் சோதிட பலன் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் .அவ்வாறு இல்லாத பட்சத்தில் தான் ஜோதிடர் மீது அவர்களுக்கு நம்பிக்கை வராமல் போய்விடுகிறது.
ஜாதகம் பார்க்க போகக்கூடிய நீங்களும் உங்கள் ஜாதகத்தில் உங்கள் பிள்ளையுடன் பிறந்த பிறப்பு விவரம், உங்களுடன் மற்றும் உங்கள் மனைவியுடன் பிறந்த பிறப்பு விவரங்களை கேள்வி கேட்டு சோதிடர் மேல் ஒரு டெஸ்ட் நீங்கள் வைக்கும் போது தான் அந்த டெஸ்டில் பாஸ் செய்தால் தான் அவர்கள் சொல்லக்கூடிய அனைத்து ஜாதக பலன்களும் சரி என்று நம்பக் கூடியவராக நீங்கள் இருப்பதால் அவர்கள் வேறு வழியின்றி ஜாதகம் எழுதும் போது சில துருவ கணிதங்களை சோதிடர்களுக்கு புரியும் வகையில் ஏதோ ஒரு இடத்தில் குறித்து விடுகிறார்கள். அதை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த ஜோதிடரிடம் பலன் பார்க்க செல்லும் போது அவர்கள் அதை வைத்துக்கொண்டு சரியாக பிறப்பு விவரங்களை சொன்ன பிறகு , அவர்களுக்கு ஜோதிட ஞானம் முழுமையாக இல்லாவிட்டாலும் அவர்கள் யூக அடிப்படையில் சொல்லக்கூடிய பலன்கள் எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்பி அதுபோன்ற சோதிடர்களை நாடி கூட்டம் கூட்டமாக கண்முடித்தனமாக செல்கிறீர்கள். இதுவும் ஒரு தவறுக்கு காரணமாக அமைகிறது.
சில நேரங்களில் பிறப்பு ரகசியம் தேவ ரகசியம் என்று சொல்வார்கள். ஒரு சோதிடர் பிறப்பு விவரங்களை சொல்லும் பொழுது அது உங்களுக்கு தவறாக இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதன் பிறகு அவர்கள் தரக்கூடிய பலன் மீது தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
ஏனெனில் சில நேரங்களில் இந்த பிறப்பு விவரங்கள் சோதிடர் சொல்வது உண்மையாக இருக்கும். ஆனால் அதை உங்கள் முன் நிருபிக்க இயலாது.
எனவே ஜாதகம் பார்க்க வரக்கூடிய நீங்கள் அல்லது உங்களுடைய வாழ்க்கை துணைவியோ சில நேரங்களில் ஏதோ மனசாலனத்தால் மற்றவுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் அவர்கள் மூலமாக அல்லது உங்கள் மூலமாகவோ ஒரு குழந்தை அவர்களுக்கு உருவாகி விடும் .அந்த குழந்தையை உங்கள் லிஸ்டில் கொண்டு வந்து சேர்க்க இயலாமல் போய் விடுவது உண்டு.
மேற்கண்ட இது போன்ற காரணங்களால் பிறப்பு விவரங்களை உங்களுக்கு துல்லியமாக தந்து விட முடியாது அவ்வாறு தர நினைத்தால் உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகி விடும். எனவே நீங்கள் ஜோதிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது அதைக் கேட்டு உங்களுக்கு வாழ்க்கையில் நடந்த மற்றும் நடக்க இருக்கின்ற சம்பவம் போன்ற பல விஷயங்களை கேள்வி கேட்டு அதன் மூலமாக ஜோதிடருடைய அறிவை சோதித்துப் பார்க்கப்பட வேண்டும்.
ஜோதிடத்தின் மீது ஜோதிட அறிவின் மீது அதிகமாக படித்தவர்கள் அதிக விவரமுடையவர்கள் சில நேரங்களில் வெற்றிகரமான சோதிடராக வர முடியாமல் போய்விடுகிறது .ஒரு சிலர் குறைவான ஞானத்தை கொண்டு வாய் பேச்சு திறமையால், பசப்பு வார்த்தை , சரியான கெட்ட அப் மற்றும் அதிகார வார்த்தைகளால் ஜாதகம் பார்க்க வருபவர்களை கவர்ந்து அளவுக்கு அதிகமான குறைவான ஞானத்தைக் கொண்டு சம்பாதித்து. விடுவதும் உண்டு இது போன்று எல்லாத் துறைகளிளுமே அமைவந்து விடுவது உண்டு.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment