Sunday, 3 November 2024

கம்யூட்டர் துறையில் வேலை (பலன் சொல்லும் முறை)

 கம்யூட்டர் துறையில் வேலை 

(பலன் சொல்லும் முறை)




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


பிறந்த தேதி: 28.04.1994

பிறந்த நேரம் : 9.20 am


  மிதுன லக்னம், விருச்சிகம் ராசி 

கேட்டை நட்சத்திரம்.


   இவரது  ஜாதகத்தை பார்த்தவுடனே நீங்க கம்ப்யூட்டர் துறையில் ஒர்க் பண்ணுவீங்க ? அப்படின்னு சொன்னேன் சொன்ன அடுத்த நிமிஷமே சரி என்று கூறி விட்டார் .

எவ்வாறு சொன்னேன் அப்படிங்கறத நீங்களும் தெரிஞ்சுக்கணும்.


     இவருடைய ஜாதகத்துல அதிக சுபத்துவமான கிரகம் எது என்று ஆராய்ந்து பார்க்க புதன் பகவான் தான்  அதிக சுபத்துவமான‌ கிரகம் ஆகும். எப்படின்னு நீங்க  கேள்வி கேட்பது எனக்கு பிடித்து இருக்கிறது. புதன தான் சனி பகவான்  மூன்றாம் பார்வையாக பார்த்து இருக்காரு அப்படின்னு நீங்க கேள்வி கேட்பது எனக்கு புரிகிறது.


 புதன  பகவானே சனி பகவான் பார்த்தாலும் அந்த சனிய குரு பகவான் பார்த்திருக்கிறார் அதற்கு அடுத்தபடியாக குருபகவானே சமசப்தமாக ஏழாம் இடத்தில் உள்ள சூரியனுடன் இணைந்த புதன் பகவானை பார்வை செய்கிறார். எ இது மட்டும் இல்லாம குருபகவான் ஜீவன ஸ்தானானாதிபதி அதாவது பத்தாம் இடத்து அதிபதி வேற. எனவே பத்தாம் இட அதிபதியுடன் தொடர்பும் புதனுக்கு கிடைத்திருக்கிறது எனவேதான் கம்யூட்டர் துறையில் வேலை பார்க்கிறார்.


இவருடைய ஜாதகத்தில் தந்தை ஸ்தானம் வலுவாக இருப்பதால் தந்தையால் ஆதாயம் இருக்கும் தந்தை நீண்ட ஆயுளுடன் இருப்பார். தந்தையால் ஆகாயம் கிட்டும் . ஆனால் தாய் இறந்து இருப்பார் என்று கூறினேன் அதை 100% உண்மை என்று ஒத்துக் கொண்டார்.


 நீங்கள் இந்த ஜாதகத்தை மேம்போக்காக பார்க்கும்போது நினைக்கலாம் ஒன்பதாம் இடத்தில் தந்தை ஸ்தானத்தில் சனி பகவான்  ஆட்சி  நிலையில இருந்து தனது மூன்றாம் பார்வையால் தந்தைக்கு காரகரான உச்சம் பெற்ற சூரியனை பார்வை செய்கிறார் .இவை மட்டுமல்லாமல் சிம்ம வீட்டையும் பார்க்கிறார் என்பதால் தந்தை உயிரோடு இருக்க மாட்டார் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் விதிவிலக்காக தந்தை  ஸ்தானாதிபதியையும் மற்றும் காரகரான சூரியன் பகவானையும்  இயற்கை சுபகரமான குரு பகவான் தனது ஐந்து மற்றும் ஏழாம் பார்வையால் பார்வை செய்வதால் அவருடைய தந்தை நீண்ட ஆயுளோடு நல்லபடியாக இருக்கிறார். தந்தை மகன் உறவு நிலை பாதிக்கப்படவில்லை.


ஆனால் நீங்கள் கேள்வி கேட்கலாம். நீங்கள் தந்தை  விஷயத்தில் சொன்னது சரி. ஆனால் தாய் ஸ்தானாதிபதியான புதன்  பகவானையும் குரு பகவான் பார்க்கிறாரே ஏன் தாய் இறந்து விட்டாள்‌? என்று என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கலாம் .அதற்கான விளக்கத்தையும் தருகிறேன்.


நீங்கள் சொல்வதும் முற்றிலும் சரி மேற்கூறியவாறு லக்கன அதிபதியும் தாய் ஸ்தான அதிபதியுமான புதன் பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் தான் தாய் இள வயதில் இறக்காமல் கொஞ்ச காலம் அவனை வாலிப வயதில் வரும் வரை வளர்த்து விட்டு இறந்திருக்கிறார். 


 இவருடைய ஜாதகத்தில் மாதுர் ஸ்தானாதிபதி ஆன சந்திர பகவான் நீசம் அடைந்து ராகுவுடன் இணைந்து பாவத்துவமாகி குரு பார்வை பெற்ற சனியின்  பார்வையாக இருந்தாலும்  தனது பத்தாம் பார்வையால் நீச பாவத்துவம்  அடைந்த சந்திரன்+ ராகு பகவானை பார்வை செய்வதால் தாய் ஜாதகருக்கு திருமணம் செய்வதற்கு முன்பாகவே இறந்துவிட்டார்.


 என்னிடம் இவர் சாதகம் பார்க்க வரும்போது 30 வயதை கடந்து இருந்தாலும் இதுவரை இவருக்கு திருமணமும் ஆகி இருக்காது என்று கூறினேன் அதையும் முற்றிலும் உண்மை என கூறினார்.


திருமண ஸ்தானமான ஒன்றாம் இடமான லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம்  இடங்களையும், அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்து பார்த்ததில் எனக்கு கிடைத்த பலனாகவும் மேலும் நடக்கும் தசா புத்திகளும் உகந்ததாக இவருக்கு இல்லாததால் அவ்வாறு கூறினேன்.


     இவருடைய  ஜாதகத்தில் லக்னத்தை இயற்கை பாவ கிரகமும் மற்றும் லக்கன அசுபருமான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்வை செய்கிறார். இது மட்டுமல்லாமல் குடும்ப அதிபதியான சந்திரன் நீசம் அடைந்து ராகுவுடன் இணைந்து பாவத்துவமாகி  ஆறாம் இடத்தில் மறைந்து சனியின் பத்தாம் பார்வையை பெறுகிறார்.


 ராசியுடன் ராகு ,கேது மற்றும்  சனியின் தொடர்பு. ராசிக்கு இரண்டாம் இடம் அதிபதி குரு பகவான் ராசிக்கு 12 ல்  மறைவு.


தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் உடன் கேது இணைந்து உள்ளார் உத்திர காரகன் குருபகவான் சித்ர ஸ்தானமான அஞ்சாம் இடத்தில் இருப்பது காரகபாவ நாஸ்தியை தரும். புத்திர பாக்கியம் காலதாமதமாக இருக்க வேண்டும் உத்திர ஸ்தாபனமான அஞ்சாமிடத்தை செவ்வாய் பகவானுடைய பார்வையும் வேறு. 


நீ மட்டுமல்லாமல் என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பொழுது சுக்கிர திசையில் செவ்வாய் புத்தி இதை தொடர்ந்து ராகு புத்தி வருவதாலும் 34 வயதுக்கு மேல் திருமணம் நடக்கும் என்று கூறிய அனுப்பி வைத்தேன். ராகு திசை தொடர்ந்து சுக்கிர திசையில் குரு புத்தி சுக்கிரனுக்கு குரு ஆறாம் இடத்தில் மறைவு. சுக்கிர திசையில் குரு புத்தியில் தாம்பத்திய சுகம் மறுக்கப்படும். இது போன்ற காரணங்களால் திருமணம் மிகவும் காலதாமதமாக நடக்கும்.


நன்றி.


Online consultation 


Cell & WhatsApp & gpay or phone pay 

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: