Sunday, 3 November 2024

நல்ல பலனை தர விடாமல் செய்யும் "ராகு பகவான்"

 நல்ல பலனை தர விடாமல் செய்யும் 

"ராகு பகவான் ".




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் பலன் அறிய  முற்படும்பொழுது நாம்  கட்டாயம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கிரகம் ராகு பகவான் ஆவார்.


     ராகு பகவான் எந்த ஒரு ஸ்தானத்தில் இருக்கும் பொழுது அந்த ஸ்தானத்தை கெடுப்பார் . அதேபோல ராகு பகவான் எந்த இயற்கை  சுப கிரகத்துடன் இணைந்து இருந்தாலும் அந்த கிரகத்தை பாவத்தன்மை அடையச் செய்வார்.


 இயற்கை சுப கிரகமான குரு பகவானுடன் இணையும் பொழுது குரு பகவானை பாவ தன்மையை  அடையச் செய்து தான் சுபத்துவமாகி விடுவார். இவ்வாறு பாவத்தன்மை அடைந்த இந்த குரு பகவான் புத்திர தோஷத்தை தரக்கூடிய நிலைக்கு ஆட்படுவார் ஐந்தாம் இடமும் அதன் அதிபதியும் எப்படி உள்ளது என்பதை பொருத்து பலனில் மாற்றம் ஏற்படும்.


 இவ்வாறு ராகுவுடன் இணைந்த குரு பகவான் தனது காரக பலனை இழப்பதோடு அதற்குரிய ஆதிபத்திய பலனையும் தருவதில் பாதிக்கப்பட்ட

நிலையினை உண்டாக்கும்.


 குரு பகவானுக்குரிய பணம், பதவி ,பட்டம் ,புகழ், கல்வி, ஞானம் செல்வம் ,குழந்தை பாக்கியம் போன்றவற்றை தருவதில் சில குறைபாடுகள் ஏற்படும்.


 இயற்கை சுப கிரகமான சுக்கிர பகவான் களத்திரகாரகன் மற்றும் தாம்பத்திய சுகத்தை ஜாதகருக்கு தரக்கூடிய ஒரு கிரகமாகும். இந்த கிரகத்துடன் ராகு பகவான் இணையும் பொழுது திருமணத்தை தாமதப்படுத்துவார். தாம்பத்ய சுகம் அதாவது பெண் சுகம் அடைவதில் சில பாதிப்புகள் இருக்கும். இவை ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதியை பொறுத்து இந்த பலனில் மாற்றம் ஏற்படும்.


சுக்கிர பகவான் ஒருவருக்கு ஆடை, ஆபரணம், நகை கடை பேன்சி பைனான்ஸ் ,கொடுக்கல் வாங்கல் ஹோட்டல், ட்ரான்ஸ்போர்ட் ,கலை ,நடனம் பொறியியல் ,பைனான்ஸ் போன்ற காரக பலனில் பாதிப்பை உண்டாக்கும்.


 மேலும் சுக்கிர பகவான் அவரவர் லக்னத்தை பொறுத்து அதன் ஆதிபத்திய பலனையும் சுக்கிரன்  உடன் இணைந்த ராகு பகவான் கெடுப்பார்.


சுக்கிர பகவான் நீசமடைந்தால் ஒரு மனைவி  மற்றும் உச்சம் பெற்றால் பல மனைவி என்பது பொதுவான பலனாக இருந்தாலும் சுக்கிரன் நீசம் அடைந்து அதனுடன் ராகு இணையும் பொழுது பென் சுகம் கிடைக்காத நிலை ஏற்படலாம். இன்னும் கூடுதலாக சனி பகவானுடைய பார்வையை பெற்ற நிலையில் ஏழாம் இடமும் கெட்டுப் போனால் சுத்தமாக பெண் சுகத்தை அடைய இயலாது.


‌ மற்றொரு இயற்கை சுப கிரகமான புதனுடன் ராகு இணையும் பொழுது புதன் பகவானும் பாவியாகி விடுவார். தான் பெற்ற வித்தையை தவறாக பயன்படுத்தி பொது மக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய செயல்களை செய்வதில் தனது புத்திக்கூர்மையை பயன்படுத்துவர் .ஆன்லைன் வங்கி கொள்ளை ,பொது இடங்களில் குண்டு வைத்து தகர்த்தல்  மற்றும் அக்கவுண்ட் கைசாக்கிங்  போன்ற இதுபோன்ற தொழில்நுட்ப கொள்ளைகளை  செய்வதில் வல்லவராகவும் அவர் திகழக்கூடிய தன்மையை தரும்.


வளர்பிறை சந்திரனுடன் ராகு பகவான் இலையின் பொழுது ஒரு விதமான பலனையும் தேய்பிறை சந்திரன் ராகு இதையும் பொழுது மற்றொரு விதமான பலனையும் தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


பொதுவாக    தேய்பிறை சந்திரனுடன் ராகு இணையும் பொழுது மனதை பாதிக்க கூடிய செயல்கள்  மற்றும்

தாயை பாதிக்கக்கூடிய செயல்கள் போன்றவை உண்டாகும். சந்திரன் இருக்கும் இடம் என்பது ராசி என குறிப்பிடுவதால் ராசியில் ராகு இருப்பதால், ஏழாம் இடத்திலும் கேது இருந்து திருமணத்தடையை உருவாக்கும் இது ஒரு விதமான சர்ப்ப தோஷம் ஆகும்.


பொதுவாக ராகு ஒரு இயற்கை சுப கிரகத்துடன் இணைந்து அந்த கிரகத்தை பாவத்தன்மை அடையச் செய்து தான் சுபத் தன்மை அடைவதால் சில நேரங்களில் ராகு திசை ஜாதகருக்கு யோகத்தை கொடுத்து தன்னுடன் இணைந்த சுப கிரகத்தின் தசை கடுமையான கெடுபலனை ஜாதகருக்கு கொடுக்கும். 


       இந்த பலனும் மாறுபடுவதற்கு ராகு உதாரணமாக சுக்கிரன்  உடன் இணைந்திருக்கும் பொழுது இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்த்தால் மேற்குரிய பலனில் மாற்றம் ஏற்பட்டு நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு மாறிவிடும்.


ராகு பகவான் இயற்கை பாவ கிரகமும் மற்றும் இரு கிரகமான சனி பகவானுடன் இணையும் போது அந்த இருக்கு வீட்டையும் மற்றும் பார்க்கக்கூடிய இடத்தையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.


உதாரணமாக ராகு பகவான் லக்னத்தில் இருந்து சனியோடு இணையும் போது திருமணத்தடை உண்டாக்குவார். அதே போல்  ராகு பகவான் சனியோடு இணைந்து இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுதும் திருமணத்தடை உருவாக்குவார். ராகு பகவான் மூன்றாம் இடத்தில் சனியுடன் இணையும்போது அல்லது பார்க்கப்படும் பொழுது சகோதர தோஷத்தை கொடுக்கும். 


     ராகு பகவான் நான்காம் இடத்தில் ராகுவுடன் சனி இணைந்து அல்லது ராகுவை சனி பார்க்க கூடிய நிலையில் தன் சுகம் ,தாய் சுகம் ,கல்வியால் சுகம் வண்டி வாகன சுகம் ஆகிய பாதிக்கப்படும்.


 புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு இருந்து சனியும் சேர்க்கை  அல்லது பார்வை பெறக் கூடிய நிலையில் புத்திர தோஷத்தை உண்டாக்குகிறது பூர்வ புண்ணிய இடத்தில் வசிக்க இயலாது நிலை பூர்வீக சொத்துகளில் வம்பு சண்டை வழக்கு பிரச்சனைகளை கொடுக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும்.


சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் ராகு இருந்து சனியும் சேர்ந்து அல்லது சனி பார்வை பெற்ற நிலையில் கடுமையான பாதிப்பை ராகு தசையில் ஜாதகருக்கு கொடுக்கும். ஆறாம் இடத்தில் ராகு மட்டும் தனித்திருந்த நிலையில் எதிரியை வெல்லக்கூடிய நிலை கடன் பிணி போன்றவற்றில் பெரிய பாதிப்பை தராத நிலையில் உண்டாக்கும்


ஏழாமிடத்தில் ராகு பகவான் இருந்து சனி சேர்ந்து அல்லது பார்வை பெற்ற நிலையில் திருமண தடையை உருவாக்கும். கணவன் மனைவிகளுக்கு இடையே ஒரு அன்னியோன்ய தன்மை இருக்காது . ஏழாமிட அதிபதி மற்றும் களத்திரக்காரகன்  சுக்கிரன் ஆகியவற்றைப் பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படும்.


 எட்டாம் இடத்தில் ராகு பகவான் இருந்து சனி சேர்ந்த  அல்லது பார்வை பெற்ற நிலையில் கடுமையான பாதிப்பை ஜாதகருக்கு  கொடுக்கும். ராகு தசை சனிபுத்தியோ அல்லது சனி திசை ராகு புத்தியிலே சாதகருக்கு லக்கனாதிபதி வலிமையை பொறுத்து  சாதகருக்கு மரணத்தையே அல்லது மரணத்துக்கு நிகரான தொல்லைகளை கொடுக்கும்.


 தந்தை ஸ்தானமான ஒன்பதாமிடத்தில் ராகு பகவான் இருந்து சனி  சேர்ந்து அல்லது பார்வை பெற்ற நிலையில் தந்தையுடைய உறவு நிலை கடுமையாக பாதிக்கும்.  பாக்கியத்தில் குறையை ஏற்படுத்தும் .அந்த இட அதிபதியை பொறுத்து இப்பொழுது அந்த இடத்திற்கு சுபம் தன்மையை இருப்பின் பலன் மாறும்.


தொழில்  ஸ்தானமான  பத்தாம் இடத்தில் ராகு இருந்து சனி சேர்க்கை அல்லது பார்வை பெற்றால்  அரசு விரோத தொழிலில் ஈடுபடக்கூடிய நிலை மற்றும் சொல்லிக் கொள்ள வெட்கப்படக் கூடிய தொல்லைகள் ஈடுபட கூடிய நிலை போன்றவை உண்டாகும் அ.ந்த இடத்தில் இருந்து நான்காம் இடத்தை சனி பார்து செய்யக்கூடிய அமைப்பில் இருக்கும் பொழுது தன் சுகம் தாய்சுகம்  போன்ற பாதிக்க கூடிய நிலை உண்டாகும். ஏன் கௌரவத் தொழிலை விட அடிமை வேலை அல்லது சொல்லிக் கொள்ள வெட்கப்படக் கூடிய நிலையில் உள்ள வேலைகளை கொடுக்கும்.திருட்டு,கொள்ளை போன்ற கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வைக்கும்.


    பதினொன்றாம்  இடமான லாப ஸ்தானத்தில் ராகு இருந்து சனி பார்வை அடை சேர்க்கை நிலையில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் மூத்த சகோதரத்தை பாதிக்கும் மறு தார அமைப்பை அடைய விடாது. லாபத் தன்மையை எந்த செயலிலும் அடைய விடாது.


பன்னிரண்டாம் இடமான விரயஸ்தானத்தில் ராகு  இருந்து சனி பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் கடுமையான கஞ்சனாக , தாரளமாக செலவழிக்க கூடிய தன்மை அற்றவனாக எச்சி கையில் கூட காக்கை விரட்டாத தன்மை படைத்தவனாக இருப்பான். கடல் கடந்து வெளிநாடு போன்ற  சென்று நகை கடத்தல் போன்ற விஷயங்கள் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளக்கூடிய தன்மையையும் ஜாதகருக்கு உண்டாகும்.


   ராகு பகவான் மற்றொரு பாவ கிரகமான செவ்வாயுடன் இணைந்து இருக்கும் பொழுது சகோதர உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது .விவசாயம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். நல்ல துணிச்சல் இல்லாத நிலை உருவாக்கும் விளையாட்டு ,மருத்துவம் போலீஸ் மற்றும் ராணுவம்  போன்ற துறைகளில் ஈடுபட வைக்காமல் இருக்கும் சில நேரங்களில் ஜாதகரை காமப்பயப்பட வைக்கும்.


 செவ்வாய்க்குரிய ஆதிபத்திய பலனை கெடுக்கும் .மேலும் செவ்வாய் பார்வை செய்யும் இடங்கள் அனைத்தையும் கெடுக்கும். செவ்வாய்க்குரிய ஆதிபத்திய பலனை அதன் தசைகளில் தராது.


 செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை திருமண ஸ்தானமான ஒன்று, இரண்டு ஏழு  மற்றும் எட்டாம் இடங்களில் இருக்கும் பொழுது திருமணத்தடையை உருவாக்கும்.


இயற்கை சுப கிரகமான குரு, சுக்கிரன் வளர்பிறை சந்திரன் மற்றும் தனித்த புதன் போன்றவை தொடர்பு கொள்ளும் பொழுது கெடுதல் தரும்  தன்மையை குறைக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: