செவ்வாய்பகவான் பார்வை மற்றும் சேர்க்கை தரும் பலன்கள்
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
நவகிரகங்களில் செவ்வாய் பகவான் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் ஒரு முக்கால் பாவர் என்று அழைக்கப்படுகிறது.
இவை இயற்கை பாவ கிரகம் என்ற போதிலும் இதனுடைய சேர்க்கை மற்றும் பார்வை சனி பகவானை போல் எல்லா கிரகங்களையும் பாதித்து விடுவதில்லை.
செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களுடன் பார்வை மற்றும் சேர்க்கை செய்யும்பொழுது பாவராக செயல்படுவதில்லை மாறாக நல்ல பலனை தருகிறது.
செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகு உடன் இணையும் பொழுது முழுமையான பாவ தன்மையை அடைகிறார்.
செவ்வாய் பகவான் நிழல் கிரகமான செம்பாம்பு என்று அழைக்கப்படும் கேது பகவானுடன் இணையும் பொழுது சூட்சும வலுவை பெறுகிறது. கேதுவுடன் இணைந்த செவ்வாய் பகவான் பார்வை ஆனது பாவ தன்மையை ஜாதகருக்கு கொடுப்பதில்லை.
செவ்வாய் பகவான் கேதுவுடன் இணைந்து முழு பாவ கிரகமான சனி பகவானின் இணைவு அல்லது பார்வையை பெறும் போது செவ்வாய் பகவான் தனது மறைமுக வலிமையை இழப்பார்.
செவ்வாய் பகவான் குருடன் இணையும் பொழுது #குருமங்களயோகம் ஜாதகருக்கு வழங்குவார்.
செவ்வாய் பகவான் சந்திரனுடன் இணைவானது #சசிமங்களயோகம் தருவார்.
செவ்வாய் பகவான் சுக்கிரன் உடன் இணையும் பொழுது #பிருகுமங்களயோகம் தருவார்.
செவ்வாய் பகவான் ஒளி கிரகமான சூரியனுடன் சேர்க்கை அடையும் பொழுது அதிலும் குறிப்பாக 10-ஆம் இடத்தில் திக்பலம் பெற்று நிற்கும்போது ராணுவம், போலீஸ் ,மருத்துவம் போன்ற துறைகளில் பதலிகளில் அமர வைப்பார்.
செவ்வாய் பகவான் பாவ கிரகமான சனி அல்லது ராகு உடன் இணைய கூடாது. அவ்வாறு செவ்வாய் பகவான் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் கடுமையான பாவ தன்மையை அடைந்து அதன் சேர்க்கை அல்லது பார்வை கடுமையான பாதிப்பை தருகிறது.
செவ்வாய் பகவான் ராகு உடன் நெருக்கமாக இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் கடுமையான பாவத்தன்மை அடைந்து விடுகிறது இவ்வாறு பாவத்தன்மை அடைந்த செவ்வாய் பகவான் உடைய பார்வை பெரும் இடங்கள் கடுமையான பாவத்தன்மை அடைகிறது.
பொதுவாக செவ்வாய் பகவான் சனியின் வீடுகளான மகர மற்றும் கும்ப வீடுகளில் ராகுவுடன் இணைந்து சனியின் பார்வை பெற்ற நிலையில் அதன் தசை நடப்பு உள்ள காலங்களில் கடுமையான இன்னல்களுக்கு ஜாதகர் உட்படுவார்.
செவ்வாய் பகவான் இருக்கும் இடத்திற்கு நான்காம் இடத்தில் சனி அமர்ந்திருக்கும் பொழுது செவ்வாய் பகவான் தனது நான்காம் பார்வையால் சனியின் மீது விழ செய்வார், அவ்வாறு செவ்வாயின் பார்வையில் பெற்ற சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் செவ்வாய் பகவானை பார்த்து கூடுதல் பாவத்தன்மை அடைய வைப்பார்.இதன் பிறகு சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரின் பார்வயை அல்லது சேர்க்கையை பெறக்கூடிய ஸ்தானங்கள் மற்றும் கிரகங்கள் கடுமையான பாவத்தன்மை அடைந்து அதன் தசை காலங்களில் கடுமையான கெடுபலன்களை கொடுக்கிறது.
செவ்வாய் பகவான் அதிக சுபத்தன்மை அடைந்து அதாவது முதன்மை சுபத்துவம் பெற்று தொழிற் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் சுபத்துவ வலிமைக்கு ஏற்றவாறு எம்பி.பி.எஸ் படிப்பார். இதனை அடுத்த சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப சித்தா ,காது மூக்கு தொண்டை நிபுணர் போன்ற வகையில் படிப்பார்.
செவ்வாய் பகவான் அதிக சுபத்துவ ராணுவம் போலீஸ் சிவில் இன்ஜினியர் அக்ரி போன்ற துறைகளில் படிப்பில் ஈடுபட வைப்பார் .
அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பாவத்தன்மை அடைந்து தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ள முடியவில்லை ரவுடி தீவிராத அமைப்புகளில் ஈடுபட கூடியவராக இருப்பார்.
செவ்வாய் பகவான் அதிக சுபத்துவமான நிலையில் பிறரை சுட்டு வீழ்த்தி அதாவது தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளை பெறக்கூடியவராக இருப்பார். பாவத்துவமான நிலையில் அப்பாவி மக்களை பொது இடங்களில் வைத்து குண்டு வைத்து தகர்த்தி பிறகு பிடிபட்ட நிலையில் சிறையில் அடைத்த துன்பப்படுவார்.
செவ்வாய் பகவான் குறைந்த அளவு சுபத்துவ நிலையில் காய்கறி வியாபாரம், சமையல்காரர்,பேக்கரி வியாபாரம் செய்யக் கூடியவராக இருப்பார்.
திருமண ஸ்தானமான லக்னம் என்ற ஒன்றாமிடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி உடன் செவ்வாய் பார்வை எனது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கால தாமத திருமணத்தை கொடுப்பார்.
லக்னத்தில் செவ்வாய் இருந்தால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தை பார்வை செய்வார் .ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது ஏழாம் இடத்தை பாதிப்பதோடு தனது சம சப்தம பார்வையால் லக்னத்தையும் மற்றும் இரண்டாம் இடத்தையும் அதாவது குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்வார். இரண்டு அல்லது எட்டாம் இடத்தில் இருக்கும் போது செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தையும் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தையும் பாதிப்படையச் செய்வார்.
செவ்வாய் பகலுடன் சுக்கிரன் இணைந்து சுப தன்மை அடைந்த நிலையில் இருந்தால் ஜாதகருக்கு காதல் உணர்வு உருவாகும். இதனை சுப கிரகங்கள் பார்த்த நிலையில் நல்ல முறையான மற்றவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய காதலாக அமையும். அதே நேரத்தில் இந்த செவ்வாய் பகவான் உடன் ராகு இணைந்து சனி பார்த்த நிலையில் காமம் திரிகோண ஸ்தானமான 3,7, 12 ஆம் இடங்களில் தொடர்பு கொள்ள காமம் மிகுதியால் தவறு செய்யும் தன்மை பெற்ற நபராக மாறுவர். இந்த அமைப்பிற்கு இயற்கை சுப கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற கூடிய நிலையில் அவை அப்படியே மாறி நல்ல தன்மை படைத்த மனிதராக ஆகி விடுவார்.
செவ்வாய் லக்னத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் முரட்டு தன்மை உடையவராக காணப்படுவார். செவ்வாய் பாவ கிரக தொடர்பு பெற்ற நிலையில் இலக்கணத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது மற்றவர் வெட்டுவதற்கு முன்பு யோசிப்பார்கள். இவர்கள் வெட்டிய பிறகுதான் யோசிப்பார்கள்.
செவ்வாய் பகவான் சுப தன்மையடைந்து தொழிற் ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக ஒரு உயரிய நிலையை அடையக்கூடிய தன்மை இருக்கும்.
நன்றி.
FOR ONLINE APPOINTMENT
CELL & WHATSAPP & GPAY
097151 89647
ANOTHER CELL NO
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment