12-லக்கனங்களுக்கும் குரு பார்வை தரும் நன்மைகள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
12 ராசி கட்டங்களில் உள்ள நவகிரகங்கள் அனைத்திற்கும் குரு பகவானுடைய பார்வை தரக்கூடிய பலன்
மிகவும் சிறப்பானதாகும்.
குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட தன்னால் பார்க்கப்படும் கிரகங்களும் அல்லது ஸ்தானங்களும் பன்மடங்கு வலிமை பெற்று ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாக மாறிவிடுகிறது.
நிழல் கிரகங்களான ராகு கேது தவிர எல்லா கிரகங்களுக்கும் ஏழாமிடப் பார்வை உண்டு என்றாலும் குரு பகவான் சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்களுக்கு மட்டும் சிறப்பு பார்வைகள் உண்டு.
குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தையும் சிறப்பு பார்வை செய்கிறது.
குரு பகவான் உடைய சிறப்பு பார்வையுடன் தனது சம சப்தம பார்வை 100% சுபத் தன்மையை அடைய செய்கிறது.
குரு பகவான் லக்னத்தில் இருக்கும் பொழுது ஆட்சி மற்றும் திக்பலம் ஆகிய இரண்டு வலிமையைப் பெற்று இருப்பதால் லக்னத்தில் இருந்து தான் பார்க்கக்கூடிய பூர்வ புண்ணியம் அல்லது புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பலமடைய செய்து தான் பெற்ற பிள்ளைகளாலும் , பூர்வ புண்ணியத்தாலும் நல்ல புகழ் அடையச் செய்கிறது. நல்ல புத்தியைத் தந்து அதன் மூலம் பொருள் ஈட்ட வைக்கிறது.
சில நேரங்களில் ஐந்தாமிடத்தில் பாவக் கிரகங்கள் ஆன ராகு அல்லது சனி அல்லது தேய்பிறை சந்திரன் இருந்தாலும் குருபகவனுடைய பார்வையால் அவை தனது பாவத்தன்மை இழந்து சுபத் தன்னை அடைய வைத்து விடுகிறது.
குரு பகவான் உடைய பார்வையைப் பெற்ற சனி பகவான் தனது தீய சக்தி வடிகட்டப்பட்டு அதே நேரத்தில் அது தனது பார்வையால் கெட்ட பற்றும் நல்ல பலன் இரண்டையும் தராத நிலைக்கு ஆட்பட்டு விடுகிறது.
இயற்கை பாவ கிரகமான சனி பகவானை குருபகவான் ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்படும் பொழுது அவை சுபத்தன்மை அடைகிறது. ஆனால் குரு பகவான் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. மாறாக தனது ஏழாம் பார்வையால் குரு பகவான் சனி பகவானை பார்க்க குரு பகவான் சனியை சுபத்துவப்படுத்தி அதே நேரத்தில் தான் பாவத்துவமடைகிறார் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
குரு பகவான் லக்னத்தில் ஸ்தான பலம் மற்றும் திக்பலம் இரண்டையும் பெற்று சம சப்த்தமாக களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது நல்ல மனைவி ,கற்ற மனைவி மற்றும் குணமுள்ள மனைவி அமைவாள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு நிலை சிறப்பாக இருக்கும் .நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
பாக்ய ஸ்தானம் ,பிதுர் ஸ்தானம் மற்றும் தர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஒன்பதாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது தான தர்ம குணம் மிக்கவராகவும் ,கல்வி கேள்வி கேள்விகளில் வல்லவராகவும் ,தீர்த்த யாத்திரைகள் செய்யக்கூடியவராகவும், நல்ல குருமார்களை பெற்றவராகவும் மற்றும் தந்தை வழி ஆதரவை பெற்றவராகவும் இருப்பார்.
குரு பார்வை நன்மை தர வேண்டுமென்றால் அந்த குரு பகவான் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும். குருபகவான் நீசம் பெற்றிருந்தாலும் அதனுடைய பார்வை ஓரளவு நலம் பெறக்கூடியதாக இருக்கும். ஆனால் பாவத்துவமான குரு பகவானுடைய பார்வை ஜாதகருக்கு கோடி நன்மையை தருவதில்லை.
குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுப்பதில்லை மாறாக தாம்பத்திய சுகம் பெறுவதில் தாமதத்தை உண்டு பண்ணும்
ரிஷபம் ,துலா லக்கனங்களுக்கு குரு பகவான் லக்கன அவ யோகராக இருப்பதால் அதன் பார்வை பெரிய அளவுக்கு நன்மை தந்து விடுவதில்லை.
குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சிகம் ,தனுசு ,மீனம் ,கடக மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களுக்கு குருவின் பார்வை மற்றும் சேர்க்கை தொடர்பு மிகுந்த நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.
குருபகவான் சூரியனைப் பார்க்கும் பொழுது சிவராஜ யோகத்தை கொடுக்கிறது . நல்ல ஆளுமை தன்மை உடையவராக, அரசருக்கு நிகரான புகழுடையவராக அல்லது அரசு வேலையில் உயரிய பதவியில் அமரக்கூடியவராக திகழ்வார்.
குரு பகவான் சந்திரனை பார்வை செய்யும் பொழுது அந்த சந்திரன் குருச்சந்திர யோகத்தை கொடுக்கும்.
குரு பகவான் செவ்வாயை பார்வை செய்யும் போது குரு மங்கள யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும். இதனால் மணவாழ்க்கையில் மற்றும் புத்திரம் பேரு முதலியவை மிகவும் சிறப்பாக அமையும்.
குரு பகவான் ராகுவை பார்வை செய்யும் பொழுது ராகுவின் கெடுபலன் நீக்கப்பட்டு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.
குரு பகவான் கேதுவை பார்வை செய்தால் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடையக்கூடிய யோகத்தை கொடுக்கும்.
குரு பகவான் புதனை புதன் பகவானை பார்வை செய்தால் வித்தையில் சாதுரியம் உடையவராகவும், கணிப்பொறி ,படைப்பாற்றல் கலை போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவராக திகழ்வார்.
இதே போல குரு பகவான் லக்னத்தை பார்த்தால் நீதி, நியாயம், நேர்மை உடையவராக, நீண்ட நெடிய ஆர்ப்பாட்டிய உடையவராக திகழ்வார்.
குருபகவான் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் கல்வி ,வாக்கு ,குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்.
குருபகவான் கீர்த்தி புகழ் அடையக்கூடிய மூன்றாம் இடத்தை பார்வை செய்யும் போது நல்ல புகழ் உடைய மைந்தராக திகழ்வார் இளைய சகோதரத்தால் ஆதரவு உண்டாகும். நல்ல காம வீர்யம் உடையவராக படைப்பாற்றல் மிக்கவராக திகழ்வார்.
குரு பகவான் நான்காம் இடத்தை பார்வை செய்யும் போது தன் சுகம் ,தாய் சுகம் ,கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போண்டாற்றால் நன்மை உண்டாகும்.
குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்வை செய்யும் போது பூர்வ புண்ணிய சொத்துகளால் நல்ல ஆதரவு கிடைக்கும், மாமன் வர்க்கத்தால் நன்மைகள் உண்டாகும், நல்ல புத்திரங்களை பெற்றெடுப்பீர்கள்.
சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் சுப கடன்கள் உருவாகும். நோயே உருவானாலும் அவற்றிலிருந்து பிழைத்துக் கொள்வார்.
குரு பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்யும் போது நல்ல கற்ற அழகான , அன்பான மனைவி அல்லது அமைவாள்.
குரு பகவான் எட்டாம் இடத்தை பார்வை செய்யும் போது ஆயுள் நீடிக்கும்.
பாக்கிஸ்தானமான ஒன்பதாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்யும் போது தான தர்ம குணங்கள், சத்திரங்களில் அன்னதானம், தீர்த்த யாத்திரைகள் செய்தல், மேல்நிலைக் கல்வி, அப்பாவழி உறவுகளால் ஆதரவு போன்றவை கிடைக்கும்.
ஜீவனஸ்தானம் ஆன பத்தாம் இடத்தை பார்வை செய்வதால் நல்ல நேர்மையான ஒயிட் கலர் ஜாப் கிடைக்கும்.
லாப ஸ்தானமான பதினோராம் இடத்தை பார்வை செய்யும் பொழுது மூத்த சகோதரர் தான் ஆதரவு எல்லாவற்றிலும் லாபத்தை தரக்கூடிய நிலை போன்றவை உருவாகும்.
விரய ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்யும் பொழுது வெளிநாடு செல்லுதல், சுப செலவுகள் செய்தல் ,நித்திரை சுகம், படுக்கை சுகம் நேரிய வழியில் பொருள் கட்டுதல்.ஒருவனுக்கு ஒருத்தியான வாழுதல் போன்ற அமைப்புகள் உருவாகும்.
குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு வீதம் 12 ராசிகளை சுற்றி வர பன்னிரெண்டு எடுத்துக் கொள்வார்.
நன்றி.
For online appointments
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,aM.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment