Monday, 4 November 2024

கிரகம் தரும் பலன்களை கண்டறிய தேவையான விதிமுறைகள்.

 கிரகம் தரும் பலன்களை கண்டறிய தேவையான விதிமுறைகள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


     ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தரும் பலன்களை நிர்ணயிப்பதில் முதன்மையான இடம் லக்கனாதிபதி உடைய வலிமையாகும். இதனை தொடர்ந்து ஒரு கிரகம் இருக்கக்கூடிய வீட்டின் அதிபதி, அந்த  கிரகத்துடன் சேர்ந்திருக்கக்கூடிய கிரகங்கள் அல்லது பார்வை செய்யக்கூடிய கிரகங்கள் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.


   பார்வை  அல்லது சேர்க்கையானது 

சுப கிரகங்களா ? அல்லது பாவ கிரகங்களா ?  என்பதை பொறுத்தும் பலன் தருவதில் மாற்றம் ஏற்படுகிறது.


       சேர்க்கை மற்றும் பார்வையானது

 சுப கிரகங்களால் நிகழ்ந்தால்  சுப பலனையும்  மற்றும் பாவ  கிரகங்கள் உடன் தொடர்பு பட்டால் பாவத்துவமான பலனையும் ஜாதகருக்கு தருகிறது.


  ஒரு கிரகம் ஆனது பாவருடைய வீட்டில் அமர்ந்து ,பாவ கிரகங்களின் சேர்க்கை  மற்றும் பார்வையினை பெற்றிருந்தால் மிகவும் கெடுப்பலன்களைதானே ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒரு கிரகம் ஆனது சுபர் வீட்டில் அமர்ந்து மற்றும் சுப கிரகங்களுடைய பார்வை மற்றும் சேர்க்கை நிலையை பெற்று இருந்தால்  மிகவும் நல்ல பலனை ஜாதகருக்கு அதன் தசையில் கொடுக்கிறது.


 ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அடைந்து இருப்பின் அதன் தசையில் மிகவும் நல்ல பலனை அந்த கிரக தன்மைக்கு ஏற்றவாறு ஜாதகருக்கு கொடுக்கும்.


 ஒரு கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீச்சம் அடைந்திருந்தால் அந்த கிரக தசையில் ஜாதகருக்கு நல்ல பலனை தருவது கிடையாது.


 ஒரு சுப கிரகம் நீசம் அடைந்த வீட்டில் இருந்து தசை நடத்தும் போது அந்த சுப கிரகம் தரக்கூடிய நல்ல பலனை அந்த தசையும் கொடுப்பதில்லை. இதே போல பாவ கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி நீச்சமடைந்திருந்தால் மிகவும் கடுமையான கெடுபலனை சாதகருக்கு கொடுக்கிறது. 


   ஒரு சுப கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி பாவ கிரகமாக இருந்து உச்சமடைந்து இருந்தாலும் அந்த சுப கிரகம் அந்த தசையில் நல்ல பலனை தருகிறது. உதாரணமாக குரு பகவான் மகரா அல்லது கும்பம்  வீட்டில் நின்று அதன் அதிபதியான சனி பகவான் துலாத்தில் உச்சம் பெற்று இருந்தால் குரு பகவான் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறார்.


    ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தாலும் அதன் தசையில் நல்ல பலனை தருவார். ஆனால் அந்த நீசம் அடைந்த கிரகத்துடன் பாவ கிரகம் சேர்க்கை அல்லது பார்வை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அது அதன் தசையில் மிகவும் கெடுப்பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


      பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாய் உச்சம் அடைந்து இருந்தால் அவை அதன் தசையில்  நன்மையை தராமல் அதன் தன்மையை ஜாதகருக்கு கொடுப்பார் .


   எப்பொழுதும் ஒரு கிரகம் பலவீனம் (நீசம், பகை ,வக்கிரம் மற்றும் அஸ்தமனம்) அடைந்திருந்தால் மிகுந்த அளவு கெடுபலனை அதன்  தசையில் தர மாட்டார். ஆனால் அதே நேரத்தில் பாவத்தன்மை அடைந்திருந்தால் அதன் தசையில் கடுமையான கெடுபலனை ஜாதகருக்கு கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


 ஒரு கிரகம் ராசியில் பலவீனம் அடைந்திருந்தாலும் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் அதன் தசையில் நல்ல பலனை ஜாதகம் இருக்க கொடுப்பார். அதே நேரத்தில் ஒரு கிரகம் ராசியில் நல்ல நிலையில் அமர்ந்து அம்சத்தில் பாபவர்க்கம் ஏறி இருந்தால் அதன் திசையில் மிகுந்த நல்ல பலனை ஜாதகர் அடைவதில்லை. 


 மேற்கண்ட இந்த பல விதிகளை மனதில் கொண்டு ஒரு குறைந்த நேரத்தில் ஜாதகர் தரக்கூடிய சாதகத்தை கணித்து பலன் சொல்லும் பொழுது அவ்வாறு தரக்கூடிய பலன் ஆனது நிச்சயமாக துல்லியமாக 100% இருக்கும் . மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது தசா புத்திகளே அந்த தசா புத்திகளுடைய பலனை மேற்கூறிய விதிமுறைகளை மனதில் கொண்டு சோதிடர்கள் ஆய்வு செய்து சாதகர்களுக்கு பலம் சொல்ல வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே 

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: