Monday, 4 November 2024

வாழ்க்கை ஒரு போராட்டமா? பூந்தோட்டமா ?

 வாழ்க்கை ஒரு போராட்டமா ? பூந்தோட்டமா?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவன் தன் வாழ்வில் ஏதோ ஒன்றை தேடி எதற்காகவோ அழைந்து கடைசியில் ஏதோ ஒன்றை பெற்று வாழ்க்கையை நகர்த்திச் செல்வது நடுத்தர வர்க்க மனிதனின் நடைமுறைச் செயலாகும்.


 ஒரு மனிதன் அறிவும் திறமையும் இருந்தாலும் அதற்குரிய கால நேரம் ஒத்துழைப்பு இல்லை என்றால் அவன் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண துறும்பைப் போல் ஆகி விடுகிறான். சில நேரங்களில் சாதாரண அறிவைப் படைத்தவன் நல்ல உகந்த தசை புத்திகள் தொடர்ந்து அவனுக்கு வந்து அவனை வாழ்வில் உச்சாணி கொம்புக்கு ஏற்றி அழகு பார்த்து விடுகிறது.


 ஒருவரை எந்த இடத்தில் வைப்பது என்பதை அவனது லக்னம் அதன் அதிபதி ,தொடர்ந்து நடக்கக்கூடிய தசா புத்திகள் மற்றும் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் இவை அனைத்துமே முடிவு செய்கிறது.


 ஒருவருக்கு நல்ல யோக தசா அமைப்புகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அவர் குப்பையில் கிடந்தாலும் கோபுர கலசமாக திகழ்வார். 


அதே நேரத்தில் கோபுரத்தின் உச்சியில் இருந்த வரையும் உகந்த தசா அமைப்புகள் வராத நிலையில் அல்லது தொடர்ந்து அவயோக தசைகள் வரக்கூடிய நிலையில் கீழ் மட்ட நிலைக்கு வந்து விடுவது உண்டு.


 ஒருவருக்கு தொடர்ந்து லக்கன யோக தசைகள் அல்லது சுப கிரக பார்வை பெற்ற தசைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் லக்கனாதிபதியும் வலிமையை பெற்ற நிலையில் அவர் அந்த யோகத்தை முழுமையாக அனுபவித்து நல்ல முறையில் சொகுசான வாழ்வை வாழக்கூடிய நிலையை அடைவார்.


 ஒருவருக்கு ஆறு மற்றும் எட்டுக்குரிய தசைகள் அல்லது அவயோக தசைகள் அல்லது பவர் சேர்க்கை மற்றும் பார்வையை பெற்ற தசைகள் நடப்பில் வரக்கூடிய காலங்களில் கடுமையான கஷ்டங்களையும் மற்றும் நஷ்டங்களையும் அனுபவிக்க கூடிய நிலையில் தள்ளப்படுவார். இத்தகைய சூழ்நிலையில் அவருக்கு லக்கனாதிபதி வலிமை அடைந்து இருக்குமாயின் அவர் அந்த கஷ்டங்களில் போராடி எதிர்நீச்சல் போட்டு பிறகு நல்ல தசை அமைப்புகள் வரக்கூடிய காலங்களில் வெற்றி பெற்று விடுவார்.


 ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட வகையிலான தசா புத்திகள் நடக்கக்கூடிய காலங்களில் லக்கனாதிபதியும் வலிமை இழந்த நிலையில் அவர் போராட திராணியற்று மிகுந்த கஷ்டங்களுக்கு உட்பட்டு மிகவும் தாழ்வான நிலையை அடைந்து வாழ்வில் தாழ்ந்து விடுவார்.


   ஒருவருக்கு வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு திறம்பட போராடி வெற்றி பெற்று சமூகத்தில் ஒரு உயரிய நிலையை அடைவதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கனாதிபதியின் வலிமை குறிப்பிடத்தக்கதாகும்.


   ஒரு மனிதன் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரை யோகத்தை அனுபவிப்பதற்கும், ஒரு சிலர் பிறந்தவுடன் கஷ்டங்களை அனுபவித்து ஒரு மத்திம வயதில் போராடி ஒரு உயிரிய நிலையை அடைவதற்கும் மற்றும் ஒரு சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டமான சூழ்நிலை கஷ்டத்திலே வாழ்ந்து மறைவதற்கும் அவருடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுடைய சேர்க்கை ,பார்வை, இருக்கும் இடம் மற்றும் நடக்கும் தசா புத்திகள் இவற்றைச் சார்ந்தே அமைகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை அடைந்து 

தனம்- பாக்கியம்_ லாபம் என்று சொல்லக்கூடிய மகா தன யோகத்தை தரக்கூடிய இந்த ஸ்தானங்களும் அதன் அதிபதிகள் நல்ல முறையில் தனகாரகன் குருவுடன் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு தன-பாக்கிய-லாப அதிபதி திசையில் ஏதோ ஒன்று சரியான நேரத்தில் வரும் பட்சத்தில் கோடிக்கணக்கான பணங்களை சம்பாதித்து வாழ்வில் உயர்ந்த கோடீஸ்வரன் நிலையை அடைய இயல்கிறது.


   லக்கனாதிபதி வலிமை அடைந்து பௌர்ணமி யோகத்தில் ஒருவர் பிறந்து சிம்மமும் வலுப்பெற்ற நிலையில் ஆட்சி மற்றும் அரசியலில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒரு மனிதன் பிறப்பிலிருந்து குரு பகவான் பார்த்த தசா தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அவர் பிறப்பிலிருந்து யோகத்தை அனுபவிக்க கூடிய நிலையில் இருப்பார் ‌ லக்கனாதிபதியும் வலிமை அடைந்து சுபத்துவ தன்மையை பெற்றிருக்க வேண்டும்.


 ஒரு மனிதனுக்கு லக்கனாதிபதி வலிமையடைந்த நிலையில் பிறப்பிலிருந்து மத்திய வயது வரை உகந்த தச அமைப்புகள் நடக்காமல் மத்திம வயதுக்கு பிறகு யோக தசைகள் நடப்பில் வரக்கூடிய காலங்களில் மனிதன் கஷ்டப்பட்டு போராடி தான் பெற்ற மற்றும் கற்ற துறை மூலமாக வாழ்வில் உயரிய நிலையை அடைந்து விடுகிறான்.


     ஒருவர் ஜாதகத்தில் லக்கனாதிபதி பாவத்தன்மை அடைந்து தொடர்ந்து பிறப்பிலிருந்து இறப்பு வரை சனியின் பார்வை பெற்ற தசை ,அவ யோக தசைகள் மற்றும் ஆறு மற்றும் எட்டு தசைகள் தொடர்ந்து நடப்பில் வரக்கூடிய மனிதனாக இருந்து அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு கஷ்டத்தோடு தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.


  ஒருவன் எவ்வளவு தான் கஷ்டம் வந்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் இன் முகத்தோடு வரவேற்று கஷ்டங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு ஒரு நல்ல இடத்தை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கையோடு போராடி அதேபோல ஒரு உதாரண புருசராக உயர்ந்த நிற்க கூடிய நபர்களை நம்ம பார்க்கிறோம். நிச்சயமாக அவருடைய ஜாதகத்துல லக்கனம் மற்றும் லக்கனாதிபதி வலிமை அடைந்து சுப தன்மை உடன் நின்று ஆரம்ப காலத்திலிருந்து அவயோகத்தை தரக்கூடிய தசைகள் நடந்து பின்பு அந்த சாதிக்கக்கூடிய நேரத்தில் நல்ல தசா புத்திகள் வந்து ஒரு ஒத்துழைப்பு தந்து அவரை அந்த உயரிய இடத்துல அமர வைத்து அழகு பார்க்கும்.


    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்ன ஒரு கவிதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உள்ளேன் .


   "வானம் என்றும் நீல நிறமாக இருக்கும் என்றோ ? .பாதை முழுவதும் பூக்களே நிரம்பி இருக்கும் என்றோ? இறைவன் வாக்கு தரவில்லை "


உங்கள் ஜாதக கட்டத்தில் 12 ராசிகளில் 27 நட்சத்திர சாரத்தை பெற்று கிரகங்கள் எங்கு எந்த இடத்தில் எப்படிப்பட்ட பார்வை ,சேர்க்கையில் இடம்பெற்று தசா புத்திகளை லக்னாதிபதி வலிமையை கொண்டு நடத்திச் செல்கிறதோ அவற்றைப் பொறுத்தே நம் வாழ்வில் நிலை அமைகிறது என்பதை விளக்கவே இந்த பதிவை முழுவதும் பயன்படுத்திக் கொண்டேன்.


நன்றி 


For online appointment 


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே 

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி.

No comments: