கிரகப் பார்வை மற்றும் சேர்க்கை தரும் பலன்களை துல்லியமாக கண்டறிவது எப்படி?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதக கட்டத்தில் ஒரு ஸ்தானத்தை அல்லது கிரகத்தை இயற்கை பாவ கிரகங்கள் ( சனி ,செவ்வாய், ராகு, கேது தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியுடன் சேர்ந்த புதன்) பார்த்தாலோ அல்லது சேர்ந்து நின்றாலோ அந்த கிரகம் பாவத்தன்மை அடைந்து அதன் தசையில் நல்ல பலனை தர இயலாமல் போய் விடுகிறது. பார்க்கப்படும் அந்த ஸ்தானமும் தனது ஸ்தான பலனை இழந்து நிற்கிறது.
இதே போல இயற்கை சுப கிரகங்கள் ( குரு, வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ) பார்த்தாலும் அல்லது சேர்ந்து நின்றாலும் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு சுபத்தன்மை என்ற அடிப்படையில் நல்ல பலனை தருகிறது.
ஒரு இயற்கை சுப கிரகம் பாவருடன் இணைந்து தனது பலத்தை இழந்த நிலையில் இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அவை அதன் தசையில் நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு மாறுகிறது.
உதாரணமாக சுக்கிரன் பகவான் ராகு உடன் இணைந்து தனது பலத்தை சுக்கிரன் இழந்த நிலையில் குரு பகவான் என்ற சுபர் பார்வை சுக்கிரன் இழந்த வலிமையை மீண்டும் பெற்று அதன் தசையில் நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு மாறுகிறது.
ஒரு இயற்கை பாவ கிரகம் மற்றொரு பாவ கிரகத்துடன் இணைந்து பாவரால் பார்க்கப்படும் பொழுது அந்த கிரகம் கூடுதலான பாவத்தன்மை அடைந்து அதன் தசையில் கடுமையான வேதனையை ஜாதகருக்கு கொடுக்கும்.
உதாரணமாக சனி பகவான் ராகுவுடன் இணைந்து கடுமையான பாவத்தன்மை அடைந்த நிலையில் செவ்வாய் பகவானுடைய பார்வையை பெற்றால் "கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கு ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிக்கான்னு ஆடுது" என்பார்களே அந்த நிலையில் கூடுதலான கெடுபலனை ஜாதகருக்கு கொடுக்கும்.
சிலரது சாதகங்களில் பாவத்தன்மை மற்றும் சுபத் தன்மை ஆகிய இரண்டும் கலந்த நிலையில் அவை எவ்வாறு பலனைத் தரும் என்பதை கண்டறிவதற்கு மிகுந்த ஜோதிட ஞானம் தேவைப்படுகிறது.
இது போன்ற நிலையில் சுப மற்றும் பாவத்தன்மை கண்டறிந்து அந்த கிரக தசை எப்படி நல்ல பலனை தருமா ? அல்லது கெட்ட பலனை தருமா ? என்பதை நிர்ணயிக்க அந்த கிரகங்களுக்கு இடையே ஏற்பட்ட டிகிரியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரு. கிரகங்களுக்கு இடையே எட்டு பாகை அளவில் நெருக்கமாக இருந்தால் அவை தன்னோடு இணைந்த கிரகத்தினை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள் .
13 பாகை அளவில் இருந்தால் தன்னோடு இணைந்த கிரகத்தை 50% பாதிக்கிறது என்று பொருள்.
22 பாகைக்கு மேல் இருந்தால் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்று பொருள் .எனவே தன்னோடு இணைந்த கிரகத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும்.
இந்த அடிப்படையில் ஒரு வீட்டில் இரண்டு மூன்று பாவ மற்றும் சுப கிரகங்கள் இணைந்து இருக்கும் பொழுது மேற்கூறிய வகையில் கணக்கில் எடுத்துக் கொண்டு பிறகு அவை சுபர் பார்வையை பெறுகிறதா? அல்லது பாவர் பார்வையை பெறுகிறதா? அல்லது எவ்வித பார்வையும் பெறவில்லையா? என்பதை பொறுத்து அதன் பலனை நிர்ணயிக்க வேண்டும்.
சில நேரங்களில் பார்வையை கணிக்கும் பொழுதும் டிகிரி அடிப்படையில் கட்டாயம் பார்க்க வேண்டும்.
உதாரணமாக மீன வீட்டில் உள்ள குரு பகவான் கடக வீட்டில் உள்ள ராகு பகவானை நாம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது கடகத்தில் உள்ள ராகு பகவானை குரு பகவான் தனது ஐந்தாவது பார்வையால் பார்வை செய்து சுப தன்மையை அடைய வைத்து விட்டது எனவே ராகு தசை மிகுந்த நல்ல பலனை தரும் என்று நாம் பலன் சொன்னால் சில நேரங்களில் அவ்வாறு நல்ல பலனை தராமல் போய்விடுவது உண்டு. ஏன் என்று நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மீன வீட்டில் உள்ள குரு பகவான் 29 பாகையில் இருக்க கடக வீட்டில் ராகு பகவான் தொடக்க இரண்டு பாகை இருக்கும்பொழுது குருபகவானின் பார்வை ராகு மீது விழுவது இல்லை.
இதே போல சேர்க்கை அடிப்படையிலும் ஒரு கிரகத்தின் சுபத் தன்மை மற்றும் பாவத்தன்மை கணக்கிட டிகிரி அடிப்படையில் கட்டாயம் கணிக்க வேண்டும்.
சில நேரங்களில் ஒரு சுப கிரகம் ஒரு வீட்டில் இருக்க அடுத்த வீட்டில் பாவ கிரகம் இருக்க நாம் அந்த சுப கிரகம் தனது ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை நல்ல முறையில் தரும் என்று கூறுவோம். .ஆனால் அவை நல்ல பலனை தன் தசையில் தராமல் போய்விடுகிறது.ஏன் இவ்வாறு தரவில்லை என்று நன்றாக உற்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது தான் உண்மை புலனாகும்.உதாரணமாக மேஷ வீட்டில் குரு பகவான் இருந்து, ரிஷப வீட்டில் சனி பகவான் இருப்பதாக வைத்துக் கொள்வோம் .
மேஷ வீட்டில் குரு பகவான் 28 பாகையிலும் மற்றும் ரிஷப வீட்டில் சனிபகவான் இரண்டு பாகையில் இருக்க இந்த குருவுக்கும், சனிக்கும் இடையே நான்கு பாகை வித்தியாசம் இருப்பதால் இரண்டு கிரகங்களும் அடுத்தடுத்த வீட்டில் இருந்தாலும் குரு பகவானை அந்த சனி பகவான் பாவத்தன்மைக்கு உட்படுத்தி விடுகிறது எனவே குரு தசை நல்ல பலனை தராமல் போய்விடுகிறது.
உதாரணமாக மேஷ லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சூரியன், சந்திரன் குரு புதன் சுக்கிரன், ராகு ஆகியவை சேர்ந்து நின்று கும்பம். வீட்டில் இருந்து சனி பகவான் தனது பத்தாம் பார்வையாய் அந்த இடத்தை பார்க்கும் போது எவ்வாறு பலன் எடுப்பது என்பதையும் மற்றும் அதே லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் மேற்கூறியவாறு கிரகங்கள் என்று குரு பகவான் மீன வீட்டில் இருந்து ஒன்பதாவது பார்வையாக பார்வை செய்யும் பொழுது அப்பொழுது பலன் எடுப்பதற்கும் நிறைய சோதிட ஞானம் அல்லது அனுபவம் தேவைப்படுகிறது.
ஒற்றைச் சனியின் பார்வை அந்த ஒட்டுமொத்த அமைப்பை பாவத்தன்மை அடைய வைத்து மிகவும் மோசமான நிலைக்கு அந்த ஜாதகரை கொண்டு சேர்க்கும். எட்டாம் இடத்தில் ஒற்றை குருவின் பார்வை அந்த ஒட்டுமொத்த ஜாதக அமைப்பையும் சுபத் தன்மை அடைய வைத்து சாதகரை நல்ல நிலையில் நகர வைக்கும்.
இவ்வாறு சுபர் மற்றும் பாவர் பார்வைக்கு ஏற்பவும் அந்த கிரகங்களுக்கு இடையே உள்ள பாவர் மற்றும் சுபர் சேர்க்கைகளுக்கு ஏற்பவும் பலனை எடுப்பதற்கு மிகுந்த அனுபவம் தேவைப்படுகிறது.
ஒரு இயற்கை சுப கிரகத்தை சனி மற்றும் செவ்வாய் பகவான் தனித்தனியாக பார்வை செய்து குரு பகவானும் பார்வை செய்கிறார் என்ற நிலையில் அந்த கிரகம் பாவத்தன்மை அடைகிறதா ? சுபத் தன்மை அடைந்துள்ளதா ? என்பதை கண்டறிவதற்கும் மிகுந்த அனுபவம் தேவைப்படுகிறது.
உதாரணமாக மீனம் லக்கினத்தில்
மீன வீட்டில் குரு பகவான் மிதுன வீட்டில் செவ்வாய் பகவான் கடக வீட்டில் சனி பகவான் கன்னி வீட்டில் புதன் பகவான்.
இங்கு புதன் பகவானுக்கு சனி மற்றும் செவ்வாய் தனது மூன்றாம் மற்றும் நான்காம் பார்வையால் புதனைப் பார்வை செய்கிறது. குருபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்ற நிலையில் சம சப்தமாக பார்வை செய்கிறது.
லக்கனத்தில் உள்ள குருபகவான் தனது ஐந்தாம் பார்வையால் சனி பகவானை பார்வை செய்வதால் குரு பார்த்த சனியின் பார்வை புதனுக்கு நல்ல மற்றும் கெட்ட பலனை தருவதில்லை. செவ்வாயின் பார்வை புதனை பாதிக்கும் என்றாலும் அவை லக்கன யோகர் என்ற வகையிலும் மேலும் லக்னத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் பெற்ற குருபகவான் சமசப்தமாக புதனை பார்வை செய்வதால் ஏழாம் பார்வைக்கு அதிக வலிமை என்ற வகையில் இந்த புதன் பகவான் அதிக சுபத் தன்மை அடைந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறாக ஒரு கிரக பலனை கணிப்பதற்கு பலவாறு ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட நிமிடத்திற்குள் பலனை சாதகருக்கு கொடுக்க வேண்டும். அந்த கிரக பலன் அல்லது அந்த கிரக தசை பலனை முடிவு செய்யும் பொழுது லக்கனாதிபதியின் வலிமையையும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் அந்த கிரகம் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளதா? பாவர் வர்க்கம் ஏறி உள்ளதா ? சுபருடன் சேர்ந்துள்ளதா? பாவருடன் சேர்ந்துள்ளதா ? என்பதையும் கவனிக்கப்பட வேண்டும் .
குரு மற்றும் சுக்கிரன் மனை ஏறுவது சுப வர்க்கம் என்றும் ,சனி மற்றும் செவ்வாய் வீடுகள் ஏறுவது பாவர் வர்க்கம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அம்சத்திற்கு எண்கள் கிடையாது .உச்சம் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது .திருக்பலம் என்ற பார்வை பலம் மற்றும் திக்பலம் போன்றவை கிடையாது.கிரக சேர்க்கை பலனை மட்டுமே எடுத்து கொள்கிறது.
நன்றி
Online Astro Consultation
Cell & WhatsApp & gpay & phone 📱 pay
All in one mophile
097151 89647
My other cell no
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment