பிறப்பிலிருந்து தொடர்ந்து கஷ்டப்படக் கூடிய ஜாதக அமைப்பு.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!
ஒருவர் பிறப்பிலிருந்து தொடர்ந்து கஷ்டப்படக்கூடிய ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை முதலில் கூறிவிட்டு அதற்குப் பிறகு உதாரண ஜாதகத்தோடு விளக்குகிறேன்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் ராசி மற்றும் அதன் அதிபதிகள் பாவருடைய பார்வையைப் பெற்று அல்லது பாவரின் சேர்க்கையைப் பெற்று இருப்பின் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் திராணியற்ற நிலை ஏற்படும். மேலும் இது போன்ற அமைப்பில் பிறந்தவர் தொடர்ந்து நடக்கக்கூடிய தச அமைப்புகளும் அவ யோகத்தை தரக்கூடிய தசா அமைப்புகளாகவே வரும்பொழுது அவர்கள் முற்பிறவியில் செய்த ஊர்வினைப் பயனால் தொடர்ந்து கசப்படக்கூடிய நிலையை அடைகிறார்கள் என்பதை இந்த பதிவு மூலம் உங்களுக்கு விளக்குகிறேன்.
உதாரண ஜாதக விளக்கம்
பிறந்த தேதி: 14.05.1980
பிறந்த நேரம்: 7.53 am
ஜென்ம லக்னம்:ரிஷபம்
ஜென்ம ராசி: மேஷம்
ஜென்ம நட்சத்திரம் :பரணி நான்காம் பாதம்.
மேற்கண்ட ஜோதிட கருத்தை விளக்கக்கூடிய ஒரு உதாரண ஜாதகம் நான் பலன் பார்க்கும்போது சற்று மனதை கழட்டி வைத்துவிட்டு தான் இது போன்ற ஜாதகங்களுக்கு பலன் சொல்லக்கூடிய நிலை உருவாகும்.
உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தை சிம்ம வீட்டில் செவ்வாய் ராகு உடன் இணைந்து கூடுதல் பாவத்துவம் அடைந்த சனியின் பத்தாம் பார்வை லக்னத்தை பார்வை செய்து பாவ தன்மையை அடைய செய்துள்ளது.
ராசியோ தேய்பிறை சந்திரனாக இருந்து அந்த ராசி ராசிநாதன் செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகுவுடன் நெருக்கமாக இணைந்து பாவத்தன்மை அடைந்துள்ளார்.
லக்கனாதிபதியான சுக்கிரன் மற்றும் புதன் பரிவர்த்தனை அடைந்து ஒரளவு லக்கனாதிபதி பலம் பெற்றிருப்பதால் தான் இவரால் வாழ்க்கையில் ஓரளவு தாக்குப் பிடித்து நிற்க முடிந்தது.
இவருடைய ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் சூரியன் மற்றும் சந்திரன் சேர்ந்து இருப்பது புகழுடைய தந்தையாக இருந்தாலும் இவர் பிறந்த பின்பு அவர்கள் கடுமையான கஷ்டத்திற்கு உள்ளாகி நிறைய சொத்துபத்துகளை இழந்து ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக வாழக்கூடிய நிலையை தரக்கூடிய அமைப்பை தரக்கூடிய அமைப்பாகும்.
இக்கருத்தை விளக்கும் பாடல் ஒன்று
ஆறுமீ ஆறுதன்னில் அம்புலி கதிரோன் சேர
கூறுவாய் ஈனமென்று
கொடும் பிணி விரோதனன்று சீருள்ள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதோடு
வேறு வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு"
பாடல் விளக்கம் ஆறுமீ ஆறு தன்னில்(6+6) என்பது 12ஆம் இடத்தில் சூரியன் சந்திரன் சேர்ந்து இருப்பதால் வரக்கூடிய பலனை மேற்கண்ட பாடல் விளக்குகிறது இதற்கு ஏற்றார் போல் உதாரண ஜாதகம் உள்ளதை நாம் பார்க்கிறோம் .
அவ்வாறு பலன் கூறி சாதகரைக் கேட்ட பொழுது நீங்கள் சொல்வது நூறுக்கு நூறு உண்மை என்று ஒத்துக் கொண்டார்.
இவருக்கு பிறப்பிலிருந்து தொடர்ந்து அவ யோகத்தை தரக்கூடிய தசா புத்திகளும் வந்து கொண்டுள்ளது.
பிறக்கும்போது இவர் சுக்கிர திசை இருப்பு மூன்று வருடம் 5 மாதம் 25 நாட்கள் ஆகும் .அது "குட்டிச்சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்ற வகையில் பெரிய அளவுக்கு நல்ல பலனை தந்து விடவில்லை.
அதனைத் தொடர்ந்து ரிஷப லக்னத்திற்கு வரக்கூடாத தசைகளான சூரிய ,சந்திர மற்றும் செவ்வாய் தசைகள் வந்து விட்டது
அதன் பிறகு சிம்ம வீட்டில் சனி செவ்வாயோடு இணைந்த ராகு தசையும் மிகுந்த கஷ்டங்களை மற்றும் நஷ்டங்களை ஜாதகருக்கு கொடுத்து விட்டது.
என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பொழுது ராகு தசை நிறைவான அதாவது மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார் .
இன்னும் சில மாதங்களில் ராகு திசை முடியக்கூடிய காலகட்டமாக இருந்தது இவருடைய கேள்வி அடுத்து வரக்கூடிய குரு தசை எனக்கு நன்றாக இருக்குமா என்று கேட்ட பொழுது என்னால் உண்மையைச் சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் ரிஷப லக்னத்திற்கு வரக்கூடாத தசையான குரு தசை அந்த குரு பகவான் செவ்வாய் ,சனி மற்றும் ராகு உடைய இணைந்து பாவத்துவ அமைப்பை அடைந்த நிலையில் அந்த தசை சாதகருக்கு நல்ல பலனை தந்து விடாது. அதற்கு அடுத்து வரக்கூடிய ரிஷப லக்னத்திற்கு யோக தசையாக சனி பகவான் இருந்தாலும் சனி பகவான் செவ்வாய்மற்றும் ராகு சேர்க்கை என்ற வகையிலே அந்த தசையில் சிறப்பாக இருக்காது இவராக பிறப்பிலிருந்து இறப்பு வரை ஜாதகர் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நிலையை தந்த ஜாதகம் அமைப்பாகும்.
ராசி லக்னம் இரண்டும் கெட்டு விட்ட நிலையில் லக்கனாதிபதி ஒன்றின் வலிமையை வைத்து ஜாதகர் ஓரளவுக்கு பிரச்சனையை சமாளித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார்.
நன்றி!.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே :
097151 89647
மற்றொரு செல்; 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்._
No comments:
Post a Comment