Monday, 4 November 2024

கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள்

 கேது பகவான் தரும் சிறப்பு பலன்கள். 




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


    ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதில் 

செம் பாம்பு என்றும் மற்றும் 

ஞான காரகன் என்றும் அழைக்கப்படக்கூடிய கேது பகவான் தரக்கூடிய சிறப்பு பலன்களை பற்றி இந்த சோதிட பதிவில் விரிவாக பார்ப்போம்.


   கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகங்களின் பலனை நன்மை தரக்கூடிய வகையில் உயர்த்தி தரக்கூடிய நிலையில் இருக்கும்.எனவே நிழல் கிரகங்கள் பொதுவாக பாவ கிரகங்கள் என்றாலும் கேது பகவானை மட்டும் சுப கிரகம் தருவதற்கு சமமான பலனை தரும் என்பதால் இதனை சுப கிரகமாகவே எடுத்துக் கொண்டு பலன் ஜாதகருக்கு அளிக்கலாம்.


    கேது பகவான் பாவ கிரகங்களாக இருந்தாலும் சனி மற்றும் செவ்வாயுடன் தனித்தனியாக இணையும் பொழுது சூட்சும பலத்தினை ஜாதகருக்கு தருகிறது . கேது பகவான் உடன் இணைந்த சனி‌ பகவான் தனது தசையில் நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு மாறுகிறது. கேது உடன் இணைந்த சனி பகவானுடைய பார்வை பெரிய அளவுக்கு பாதிப்பை தருவதில்லை.


      இதே போல கேது பகவான் செவ்வாயுடன் இணையும் பொழுது சூட்சும பலத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது. கேது உடன் இணைந்த செவ்வாய் பகவான் கூட தனது தசையில் நல்ல பலனை தருகிறது. மேலும் அதன் பார்வையும் பெரிய அளவுக்கு சாதகரை பாதிப்பதில்லை.


இங்கு விதிவிலக்காக கேது செவ்வாயுடன் இணைந்து சனி பகவான் பார்வை செய்தாலும், சனி பகவான் கேது பகவான் உடன் இணைந்து செவ்வாய் பகவான் பார்வை செய்தாலும் மற்றும் சனி ,செவ்வாய் ஆகிய இருவரும் கேது பகவான் உடன் இணைந்து இருந்தாலும் மேற்கண்ட வகையிலான சூட்சும பலத்தை ஜாதகருக்கு கொடுப்பதில்லை அவற்றை இயல்பான பாவ கிரகமாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.


  கேது பகவான் ஜாதக கட்டத்தில் சிம்மம், விருச்சகம் மற்றும் கும்பம் ஐயம் மூன்று இடங்களில் இருக்கும் பொழுது மிகுதியான யோக பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 கேது பகவானை ஞான காரகன் என்று அழைக்கப்படுகிறது ஒரு ஜாதகத்தில் கேது பகவான் லக்னத்தில் இருக்கும் பொழுது உள்ளுணர்வு (intuition ) தன்மை ஜாதகரிடம் மிகுதியாக காணப்படும்.

இரண்டாம் இடத்தில் இருக்கும் போது வாக்கு வன்மை மிக்கவராக இருப்பார். 


கேது பகவான் ஒரு ஜாதகத்தில் ஐந்து , ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் இருக்கும் பொழுது ஆன்மீகத் தன்மை மிகுதியாக காணப்படும். அதிலும் குறிப்பாக சனி கேது உடன் இணைந்து குரு பகவானால் பார்க்கக்கூடிய நிலையில் இருந்தால் நிச்சயமாக முழுமையான மற்றும் நேர்மையான ஆன்மீக வாதியாக ஜாதகர் திகழ்வார்.


பன்னிரெண்டாம் இடம் ஒரு நாளின் இறுதி நிலை,ஒரு வாழ்வின் இறுதி போன்றவற்றைக் குறிக்கும் இடமாகும். ஒரு மனித வாழ்வின் இறுதி நிலை முக்தி நிலை என்பதால் அந்த இடத்தில் கேது பகவான் இருக்கும் பொழுது முக்தி நிலை அடையக்கூடிய தன்மை ஜாதகருக்கு உண்டாகும்.


  கேது பகவான் ஏழாம் இடத்தில் இருக்கும் போது ராகு பகவான் போல திருமணத்தடையை தருவதில்லை. ஆனா அதே நேரத்தில் ஏழாம் இடத்தில் கேது இருக்கும் பொழுது லக்னத்தில் ராகு இருப்பார் என்ற வகையிலும் இரண்டாம் இடத்தில் கேது மகான் இருக்கும் பொழுது எட்டாம் இடத்தில் ராகு பகவான் இருக்கும் என்ற வகையிலும் அவை நாக தோஷத்தை தந்து ஜாதகருக்கு திருமண வாழ்வில் தடை உண்டாக்குகிறது.


    புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது பகவான் இருக்கும் பொழுது புத்திர தோஷத்தை ராகு பகவான் அளவிற்கு மிகுதியாக தருவதில்லை.

   .

   ஒளி கிரகமான சூரிய பகவானுடன் கேது பகவான் இணையும் பொழுது ஒரு ஆன்மீக சபைக்கு தலைமையேற்று நடத்தக் கூடிய அளவிற்கு ஒரு வித தலைமை பண்பை ஜாதகருக்கு கொடுக்கும்.


மற்றொரு ஒளிக்கிரகமான சந்திர பகவான் உடன் கேது பகவான் இணையும் பொழுது ஒருவருக்கு முன்னுணர்வு தன்மை உருவாகும்.


புதன் பகவானுடன் கேது இணையும் போது வித்தையில் சாதுரியத்தை தரும். சுக்கிரனும் கேது பகவான் இணையும் பொழுது மிகப்பெரிய அளவுக்கு திருமணத்தடையை சாதகருக்கு கொடுப்பதில்லை..


குரு பகவான் ஆனவர் ஞான காரகன் கேது பகவான் உடன் இணையும் போது "கேள யோகம்" என்ற ஒரு வகை கோடீஸ்வர யோகத்தை ஜாதகத்தை கொடுக்கிறது.


 ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் சூரியனுடன் அல்லது சந்திரனுடன் பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் இணையும்போது மிகப்பெரிய கிரகண தோஷத்தை ஜாதகருக்கு தந்து விடுவதில்லை.


கேது பகவானால் தரக்கூடிய தொல்லைகளைப் போக்க மயிலாடுதுறை அருகில் உள்ள #கீழப்பெரும்பள்ளம் என்ற கேது ஸ்தலத்தையும் மற்றும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள #காளகஸ்தி என்ற இடத்திலும் உள்ள நாகநாத சுவாமிக்கு வெள்ளியால் செய்யப்பட்ட நாக படம் அடித்து வைத்து எமகண்ட நேரத்தில் பரிகாரம் செய்ய இதனால் உண்டாகும் கெட்ட பலன்கள் நீங்கும்.


நன்றி.

Online appointment 


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே


  097151 89647 


மற்றுமொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: