புதிய கோணத்தில் புதன் பகவான் தரும் பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதக கட்டத்தில் புதன் பகவான் தனித்து நின்றாலோ அல்லது இயற்கை சுப கிரகமான குரு , வளர்பிறை சந்திரன், மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பை பெறும் பொழுது அவை இயற்கை சுபக்கிரகமாக செயல்படுகிறார் .
அதே நேரத்தில் சனி, செவ்வாய், ராகு கேது , தேய்பிறைச்சந்திரன் போன்ற இயற்கைப் பாவக் கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் புதன் பகவான் இயற்கை பவராகவே செயல்படுகிறார். எனவே புதன் பகவான் ஒரு பச்சோந்தி கிரகம் ஆகும். சேரக்கூடிய அதாவது தொடர்பு கொள்ளக்கூடிய சுப அல்லது பாவ கிரகத்தைப் பொறுத்து அதனுடைய சுபத் தன்மை அல்லது பாவத்தன்மை அமைகிறது.
புதன் பகவான் மிதுனம் கன்னி ஆகிய இரண்டு வீடுகளுக்கு அதிபதியாக செயல்படுகிறார். புதன் பகவான் பாவ கிரகமான செவ்வாய் அல்லது சனியுடன் நெருக்கமாக இணையும் போது அல்லது பார்வை செய்யும் போது மிகுதியான பாவத்தன்மையை அடைகிறார்..
புதன் பகவான் லக்னத்தில் திக் பலம் பெறுகிறார். லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தாலும் அதை பெரிய மறைவாக எடுத்துக் கொள்ள தேவையில்லை
அவை திக் பலத்திற்கு அருகில் இருக்கிறார் என்று வகையில் பலம் பெற்ற கிரகமாகவே கருதப்படுகிறது.
புதன் பகவானுக்கு சனி சுக்கிரன் ஆகியவை நட்பு கிரகமாக செயல்படுகிறது . புதன் பகவானுக்கு குரு மற்றும் செவ்வாய் பகவான் பகைக்கிரகமாக கருதப்படுகிறது.
புதன் பகவான் ஆயில்யம் ,கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக திகழ்கிறார் .புதன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாத காலம் வாசம் செய்வார் .புதன் பகவான் சூரியனுடன் சேர்ந்தோ அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசியிலே சுற்றி வருவார் எனவே தான் புதன் பகவானை உள்வட்ட கிரகமாக கருதப்படுகிறது.
புதன் பகவான் தரும் யோக விவரங்கள்.
புதன் பகவான் சூரியனுக்கு அருகில் வரும் பொழுது அஸ்தங்க
தோஷத்தை பெரும்பாலும் அடைவது கிடையாது. புதன் சூரியனுடன் இணையும் பொழுது " புத ஆதித்ய யோகம் " என்னும் பல பட்டங்களை பெறக்கூடிய யோகம் ஆகும்.
புதன் பகவான் சூரியனுடன் இணைந்து ஒன்று, நாலு எட்டாமிடங்களில் இருந்தால் அந்த காலத்தில் ராஜா ஆனால் இந்த காலத்தில் அரசாங்கத்தில் உயரிய பதவிகளில் இருக்க கூடிய யோகத்தை தருகிறார்..
புதன் பகவான் கேந்திர ஸ்தலமான ஒன்று, நான்கு, ஏழு எட்டாம் இடங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருந்தால் "பத்திர யோகம்" என்னும் மிகப்பெரிய பஞ்சமுக புருஷ யோகத்தை தருகிறார்.
பத்ர யோகத்தை பெற்றவர் மதியுகி மந்திரியாக, மிகுந்த அறிவாளியாகவும், கணித, சோதிட துறைகளில் வல்லவராகவும் திகழ்வார். கதை ,கவிதை கட்டுரை ,இலக்கண இலக்கியங்கள் போன்றவற்றை படைக்க கூடிய ஆற்றல் பெற்றவராக திகழ்வார்.
வளர்பிறை சந்திர கேந்தரத்தில் புதன் பகவான் இருக்கும் பொழுது ஒருவர் புகழ்பெற்ற சோதிடராக திகழ்கிறார் இவருக்கு ஜோதிட ஞானம் சிறப்பாக வந்து ஒரு நல்ல ஒரு தொழில் முறை ஜோதிடராக வலம் வருவார்.
உங்க ஜாதகத்தில் புதன் பகவான் அதிக சுபத்துவமான நிலையில் இருந்து ராசி மற்றும் லக்கினத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் ஜாதகர் புதன் சார்ந்த தொழில்களை நடத்துவார்கள்.
புதன் பகவான் கணிதம் கம்யூட்டர் துறை, தகவல் தொழில்நுட்ப தொடர்பு, இசையில் நாட்டம், எழுதுவதில் ஆர்வம், படைப்பாற்றல் மிக்கவர், இலக்கண இலக்கியங்களை படைப்பவர், கண்டுபிடிப்பாளர் ,புள்ளி விவரங்களை சேகரிப்பவர், செய்திகளை சேகரிப்பவர், ஆலோசனை வழங்குவதில் மந்திரியாக திகழ்வார்.
மற்றவருடைய சிந்தனையில் இருந்து மாறுபட்டு சிந்திக்க கூடியவர் . வேறுவகையில் கூறின் இவரது சிந்தனை சரியான நிலையில் இருக்கும்.
கதை கவிதை கட்டுரை பாடல்கள் தலையங்கம் வசனம் போன்றவற்றை படைப்பதில் வல்லவராக திகழ்வார்கள்.
சிறந்த கண்டுபிடிப்பாளர் ஆக ,விஞ்ஞாணியாகவும் திகழ கூடியவர். பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவர். நிதி மற்றும் வங்கி துறைகளில் வேலை பார்க்கக்கூடியவர்.
புதன் பகவானுடன் சனி அல்லது ராகு சேர்ந்திருந்தாலும் அல்லது புதன் பகவானை சனி பகவான் பார்வை செய்தாலும் புதன் பகவான் பாவ தன்மையை அடைந்து விடுகிறார். இதுபோன்ற அமைப்பு பெற்ற சாதகர் தான் பெற்ற திறமையை தவறான வழிகளில் பயன்படுத்தி பொருள் ஈட்டக் கூடிய தன்மை படைத்தவராக இருப்பார்.
புதன் பகவானுடன் நிழல் கிரகமான செம் பாம்பு என்று அழைக்கக்கூடிய கேது பகவான் இணைவது ஜாதகருக்கு புதன் பகவான் தரக்கூடிய பலனை அதிகரிக்க செய்வார்.மதியுகி மந்திரியாக அறிவுத்திறன் மிகுந்தவராக மற்றும் ஞான உடையவராக திகழ வைப்பார்.
புதன் பகவான் பலம் பெற்ற நிலையில் நல்ல மேடைப் பேச்சாளராக எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவ்வளவு பேரையும் கட்டி போட்டு பேச்சை கவனிக்க கூடிய அதாவது கவனிக்க வைக்கக்கூடிய பேச்சாளராக திகழ்வார்.
புதன் பகவான் வலிமை பெற்றவர்கள் படிக்காமல் நல்ல மேதையாக திகழ வைப்பார். இவர்கள் குறைவாக படித்திருந்தாலும் மெத்தப் படித்த மேதாவிகளை விட மிகுந்த அறிவு படைத்த படைப்பாளியாக திகழ்வார்கள்..
ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் பலம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலையில் நல்ல எழுத்தாளராக, பாடல் எழுதக் கூடியவராக, ஒரு கவிஞராக ,கதை வசனம் எழுத கூடியவராக திகழ்வார். சுருக்கமாக சொல்லப்போனால்
இவர் ஒரு பல்கலை வித்தகராக திகழ்வார் .
மனதை என்றும் இளமையாகவும் மற்றும் புதுமையாகவும் வைத்திருக்க உங்கள் ஜாதகத்தில் முதலில் பகவான் வலிமையடைந்த நிலையில் இருக்க வேண்டும்.
புதன் பகவான் வலிமை பெற்று சுப தன்மை அடைந்த நிலையில்
இலக்கண இலக்கியங்களை படைப்பவராக ,அதன் மீது நாட்டம் உடையவராக, அதை விரும்பி படிப்பவராகவும் இருப்பார் .இவ்வாறு படைப்பாற்றல் மிக்கவர் மனதை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் இருப்பார்.
நன்றி
ONLINE APPOINTMENT
CELL & WHATSAPP AND GPAY
097151 89647
ANOTHER CELL NO 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment