Tuesday 26 March 2024

ஜோதிடம் என்பது குறி சொல்வது அல்ல.அது ஒரு விஞ்ஞானம்

 ஜோதிடம் என்பது குறி சொல்வது அல்ல .அது ஒரு விஞ்ஞானம்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதகம் பலன் பார்க்க வரும் உங்களுக்கு ஒரு சில ஜோதிட அடிப்படையான  உண்மையான விவரங்களை சொல்லி தருவதற்கு இந்த பதிவினை பயன்படுத்தி கொள்கிறேன்.


உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கு  ஜாதக பலன் பார்க்க செல்லும் போது நீங்கள் செய்ய வேண்டிய சில விவரங்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.


 ஜாதக பலன் பெற செல்லும் ஜோதிடரிடம் சென்று ஜோதிடரை பரிசோதனை செய்யும் பொருட்டு குழந்தை உடன் பிறந்த பிறப்பு , குழந்தையின் தாய் உடன் பிறந்த பிறப்பு மற்றும் தந்தை உடன் பிறந்த பிறப்பு விவரங்கள் அதாவது எண்ணிக்கையை கேள்வியாக நீங்கள் கேட்டு அந்த எண்ணிக்கையை சரியாக சொல்லும் சோதிடர்  சிறந்த ஜோதிடராக நீங்கள் முடிவு செய்து விடுவதால் இதுபோன்ற பிறப்பு விவரங்களை ஒரு சில சங்கேத  குறிகளால் சாதகம் எழுதும் ஜோதிடர் அல்லது எங்காவது பலன் பார்க்கும்போது அந்த சோதிடர் ஏதாவது  ஒரு மூலையில் குறித்து விடுவார்கள் அதை வைத்துக்கொண்டு சரியாக பிறப்பு விவரங்களை தந்து விடுவார்கள் .இதை தந்தாலே அவர்கள் சொல்லக்கூடிய ஏனைய முக்கிய பலன் அனைத்தும் சரியான பலனாக இருக்கும் என்று நீங்கள் நம்பி விட நேரிடுகிறது.


   ஒரு சிலர் ஜாதகம் பார்க்க சோதிடரிடம்  சென்றவுடன், அவர்களிடம் தங்களது மேதமை தன்மையை காட்டிக்கொள்வதற்காக தமக்கு எல்லாம் தெரியும் என்ற வகையில் அந்த சோதிடர் பலனை சொல்ல விடாமல் தாங்களே அதிக பிரசிங்கத்தனமாக பேசி சரியான பலனை பெறாமல் சென்று விடுவதும் உண்டு.


     ஒரு சிலர் ஜாதகம் பார்க்க போனவுடன் அந்த சோதிடர் ஒரு பலனை சொல்ல ஆரம்பித்த உடன் அந்த சோதிடர் அப்படிச் சொன்னார். இந்த சோதிட இப்படிச் சொன்னார் என்று சொல்லி யாரிடம் பலன் பார்க்க சென்றோமோ அவரை முழுமையாக சரியாக பலனை சொல்ல விடாமல் அல்லது சரியான பலனை பெறாமல் தட்சணை கொடுத்து சென்று விடுவதும் சிலர் உண்டு.


     ஒரு சிலருக்கு ஓரளவு சோதிட ஞானம் இருக்கும் அந்த ஜோதிட ஞானத்தை கொண்டு சாதக பலன் சொல்லக்கூடிய நபரை சொல்ல விடாமல் பதிலுக்கு பதில் இவர் பேசி கடைசியில் அவர் சொல்வதையே கேட்டு ஆமாம் சாமி போட்டு அனுப்பி விட நேரிடுவதும் ஆன தர்ம சங்கடமான  நிலை எழுவதும் உண்டு.


 ஒரு சில நபர்கள் சோதிட பலன் செல்லும் பொழுது அந்த ஜோதிடர் ஒரு கோயிலுக்கு செல்ல பரிந்துரைத்தால்  இவர் இவர் சென்ற கோயில் அனைத்தும் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு விடுவார் .

அதிகமான கோயிலுக்கு சென்று விடுவதாலோ அவ்வாறு அந்த கோயிலுக்கு சென்று நிறைய பணம் செலவழித்து பெரிய மாலை, பூஜை  மற்றும் அதிக எண்ணிக்கையில் தேங்காய் உடைத்து விடுவதாலோ உங்கள் கஷ்டங்களை கடவுள் குறைத்து விடுவதில்லை .


     மனதளவில் நீங்கள் செய்யக்கூடிய தனிமையான ஒரு பிரார்த்தனை கூட சில நேரங்களில் உங்கள் கஷ்டங்களை குறைத்து விட  வாய்ப்பு உள்ளது. பக்தியில் காட்டும் ஆடம்பரம் நிச்சயமாக உங்களை கிரக பாதிப்பில்  இருந்து நல்ல நிலைக்கு கொண்டு சென்று விடாது என்ற அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கூட சிலர் அதிக பக்திமான் போல் தங்களை காட்டிக் கொண்டு அதே நேரத்தில் மனதில் அழுக்கு படிந்து இருக்கக்கூடிய நபர்களிடம் சோதிடம் பார்க்கக் கூடிய ஜோதிடர்கள் பேச்சு சில நேரங்களில் எடுபடாமல் போய்விடும் உண்டு.


  கிரக பலனை குறைக்க உண்மையான மனதளவில் அகம் நோக்கி மனதை ஒரு முக படுத்தி செய்யப்படும் தியான நிலையிலான வழிபாடு கூட கிரகங்கள் தரும் கஷ்டங்களை குறைத்து விடுவதில்லை.ஆனால் மனதளவில் அதனை தாங்கி செல்லும் மன பக்குவத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.


  இங்கு" யாரும் மந்திரத்தால் மாங்காய் பறித்து விட முடியாது" என்ற அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.இங்கு உள்ள பலரது வாழ்வியல் பிரச்சினைகள் ஆன்மீகவாதிகள் அல்லது பூசாரிகள் என்று சொல்லி கொள்ளக் கூடியவர்களுக்கு ஆன்மீகம் என்பது வருமானத்தை உருவாக்கி தரும் களமாக உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.


   ஒரு சிலர் என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பொழுது எந்த பரிகாரம் செய்தால்தான் எனக்கு லாட்டரியில் லட்சம் அல்லது கோடி ரூபாய் விழும்  என்று கேட்டு வருகிறார்கள். நிச்சயமாக பரிகாரத்தின் மூலம் ஒருவருக்கு பத்து ரூபாய் விழ செய்ய இயலாது.


   லாட்டரி யோகம் என்று உங்கள் ஜாதகத்தில் இருந்து அதற்கு உரிய தசா புத்திகள் வரக்கூடிய நபருக்கு மட்டுமே விழக் கூடிய நிலை உண்டு. மற்றபடி எந்த பரிகாரத்தாலோ பூஜைகளாலோ அதிர்ஷ்டத்தை வர வைக்க முடியாது .


      ஒரு கரடி ஓட்டிக் கொண்டு செல்லும் ஒரு நபர் அவர் கரடி முடியை ஒரு தாயத்தில் வைத்து அதிர்ஷ்ட கயிறை விற்பார். அந்த கயிறை வாங்கிக் கொண்டு சென்றால் உங்க வீட்டில் ஐஸ்வர்யம் பொங்கிப் பெருகும் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு இந்த கயிறு பெற்று தரும் என்பார் . ஆனால் அவரோ அந்த கரடி வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பார் அவர் நினைத்தால் அந்த கயிறை அவர் வீட்டில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய கோடீஸ்வரராக ஆகி இருக்கலாம் ஆனால் அவர் இதுபோன்று கரடியை  ஓட்டிக்கொண்டு வீதி வீதியாக அலைந்து திரிய தேவையில்லை.


  ஜோதிடம் என்பது கணித அடிப்படையிலான அறிவியல்.இங்கு ஆன்மிகத்திற்கும் மற்றும் ஜோதிடத்திற்கும் பெரிய அளவில் தொடர்பு கிடையாது.ஜோதிடம் பலன் சொல்ல கடவுள் அனுகிரகம் வேண்டுமே ஒழிய ஜோதிட அடிப்படை அறிவு இல்லாமல் சாமி பக்தியை மட்டும் வைத்து கொண்டு ஜோதிட பலன் சொல்லி விட முடியாது.


 ஒரு சிலருக்கு சாஸ்திரம் நன்றாக தெரிந்து இருக்கும்.வெறும் சாஸ்திர அறிவை மட்டும் வைத்து கொண்டு ஜோதிட பலன் கூறி விட முடியாது. இது போன்ற நபர்கள்தான் நட்சத்திரம், திதி கரணம், யோகம் இது போன்ற விஷயங்களை வைத்துக் கொண்டு சாதக பலன்  சொல்வார்கள் .ஆனால் ஜாதக பலன் என்பது திதி கரணம் திதி சூனியம் போன்றவற்றில் இல்லை.


இது போன்ற மிகக் குறைவான ஜோதிட ஞானம் கொண்டவர்கள் அதே நேரத்தில் சாஸ்திர அறிவு பெற்றவர்கள் இந்த பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம் ,நட்சத்திர தோஷம் மற்றும்  நாக தோஷம் இது போன்ற விவரங்களையும் மட்டும் வைத்துக் கொண்டு பெரிய சோதிடராக ஜோதிட பலன் சொல்லுவார்கள் அவ்வாறு தரக்கூடிய பலன்கள் நிச்சயமாக சரியான பலனாக அமையாத போது தான் ஜோதிடத்தின் மீது ஒரு நம்பகத்தன்மை இல்லாத நிலை வந்திருக்கிறது.


  ஒரு சோதிட பலனை துல்லியமாக தர ராசி, பாத சாரம், அம்சம் இது போன்ற நிலைகளை வைத்துக்கொண்டு ஒரு கிரகம் ஒரு ராசியில் எத்தனை பாகையில் உள்ளது போன்ற விவரங்களை கொண்டு ஷட் பல  வரிசையில் ஆராய்ந்து அந்த கிரகத்தின் சுப தன்மை பாவத்தன்மைக்கு ஏற்ப நடக்கக்கூடிய தசாபுத்தி கோச்சார பலன்களுடன் ஆய்வு செய்து தரக்கூடிய பலன்களை நிச்சயமாக 100% துல்லியமான பலனாக இருக்கும் இது போன்ற வகையில் ஆய்வு செய்து தான் திருமண பொருத்தத்தையும் பார்க்க வேண்டும். வெறும் பத்து பொருத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு பார்க்கக்கூடிய திருமணங்கள் இன்று பெரும்பாலும் விவாகரத்து அல்லது பிரிவு நிலையில் கொண்டு சென்று விடுகிறததை பெரும்பாலான பிரச்சினைக்குரிய ஜாதகங்களில் பார்க்க நேரிடுகிறது.


    நிச்சயமாக உங்கள் குழந்தைகளுக்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது எத்தனை பொருத்தம் உள்ளது என்று கட்டாயம் கேட்காதீர்கள். அவ்வாறு வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யும்போது ஒருசில சாதகங்களை தவிர பெரும்பாலான ஜாதகங்கள் தோல்விகளில் முடிந்து விடுவது உண்டு. ஒரு காலகட்டத்தில் 

 "கல் ஆனாலும் கணவன்

 புல் ஆனாலும் புருஷன்"   என்ற மனநிலை இன்றைய இளைஞர்களிடம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை  இல்லாததால் மேலும் ஆணும் பெண்ணும் தனித்தனியாக அதிக அளவில் சம்பாதித்து தற்சார்பு  பெற்ற நிலை அதிகமாக இருப்பதாலும் சிறு பிரச்சனை கூட பெரிய பிரிவை தந்து விடக்கூடிய சூழல் இன்று உள்ளது. இதுபோன்ற நிலையில் வெறும் நட்சத்திர பொருத்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யாமல் இருவருடைய ஜாதக கட்டத்தில் உள்ள அவர்களுடைய குணநலன்கள் ஆய்வு செய்து பார்ப்பதற்கும் அவருடன் அன்பாக இருப்பார்களா என்பதை பார்த்து நடக்கக்கூடிய தசா புத்தி கோச்சார பலன் நன்றாக உள்ளதா ? என்பதை எல்லாம் ஆய்வு செய்து பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும்.


 பரிகாரம், கடவுள் வழிபாடு இவை அனைத்தும் தேவையான ஒன்றுதான்.இவைகளால் கிரக பலன்களை முற்றிலும் மாற்றி விட இயலாது.ஆனால் அதேநேரத்தில்  பிரச்சினையை தாங்கி கொண்டு  எதிர் நீச்சல் போட கூடிய மன வலிமையை மற்றும் பிரச்சினையின் வீரியத்தை குறைக்க உதவும்.


 உங்களுக்கு எந்த கிரகத்தால் பிரச்சினையோ அதற்கு உரிய கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு சிறிது நேரம் தனிமையாக அமர்ந்து அகம் நோக்கி பிரச்சினை தீர வேண்டும் என்று மனமாற உருகி உருகி வேண்டி வந்தால் அந்த பிரச்சினையின் தன்மையை பிரபஞ்சம் மாற்றி தரும்.இதை தவிர்த்து ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து தான் பரிகாரம் மற்றும் கோவில் வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே :  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)




அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email: masterastroravi@gmail.com


......

No comments: