Tuesday 26 March 2024

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது...

 திருமண பொருத்தம் பார்க்கும் போது...





செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது பலர் தேவையில்லா பல விதிகளை கொண்டு பொருத்தம் பார்க்கிறார்கள் . அவ்வாறு பார்ப்பதால் தான் பல திருமணங்கள் தோல்வியலில் முடிந்து விடுகிறது.


    என்னிடம் தனது  பெண்ணிற்கு திருமணம் செய்யலாமா?   என ஜாதகம் பார்க்க வந்த ஒரு வாடிக்கையாளர்  "சார் என்னுடைய பெண்ணின் ஜாதகத்தில் சூரியன், புதன்  மற்றும் சுக்கிரன் எட்டாம் இடத்தில் மறைந்து விட்டது .அதாவது கெட்டுவிட்டது அதனால் என் பெண்ணிற்கு வரணாக பார்க்கக்கூடிய பையனுடைய ஜாதகத்தில் சூரியனுடைய இலக்கணமான சிம்மம், புதனின் லக்னமான மிதுனம், கன்னி மற்றும் சுக்கிரனுடைய லக்னமான ரிஷபம், துலாம் ஆகியவை இருக்கக் கூடாது என்கிறார்கள் சரிதானா" என்று என்னிடம் கேட்டார்.


 மேலும் அவர் சொன்ன ஒரு விதி,

 என்ன விதி என்றால் பையனுடைய லக்கனாதிபதி பெண்ணுடைய ஜாதகத்தில் வலுப்பெற்று இருக்க வேண்டும் . பெண்ணுடைய  லக்கனாதிபதி பையனுடைய ஜாதகத்தில் வலுப்பெற்று இருக்க வேண்டும்அப்படி உள்ள ஜாதகத்தை தானே இணைக்க வேண்டும் என்றும் கேட்டார்.


 மேற்கண்ட வகையிலான பொருத்தம் பார்க்கக்கூடிய அந்த விதிமுறை என்னை பொறுத்தவரை சரியான அணுகுமுறை அல்ல.


 முதலில் சரியான அணுகுமுறையை சொல்வதற்கு முன்பு அந்த பெண்ணின் ஜாதகத்தை கீழே கொடுத்துள்ளேன் அதை நீங்கள்  பார்த்துக் கொள்ளவும்.


  சிம்மம் லக்னம் மற்றும் சிம்மம் ராசி மற்றும் மகம் நட்சத்திரம் ஆகும்.இவர் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசிக்கு எட்டாம் இடத்தில் அதாவது மீனத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இருப்பது தொடர்பான கேள்வி.


    இந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் எட்டில் மறைந்து உள்ளது என்பது சரி தான்.ஆனால் அந்த மூன்று கிரகங்களும் அவர் நினைத்தபடி பலவீனம் அடையவில்லை. மாறாக நன்றாக சுபத்துவமாக வலிமை அடைந்த நிலையில் தான் உள்ளது என்பது தான் சரியான ஜோதிட அணுகுமுறை.எப்படி என்று பார்ப்போம் தொடர்ந்து படியுங்கள்.


 இங்கு சந்திரன் பகவான் பொளர்ணமியை நெருங்கும் வளர்பிறை சந்திரன் ஆகும்.வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் சந்திராதி யோகம் பெறும் என்னும் விதிப்படி சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரும் வலிமை அடைந்து சுபத்துவ நிலையிலும் உள்ளார்கள்.


 புதன் நீச பங்கம் அடைந்து வளர்பிறை சந்திரனுக்கு எட்டில் இருப்பதாலும், புதன் நீசம் அடைந்த வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதாலும் நீச பங்கம் அடைந்து உள்ளது.


 "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டுநாலு ஒன்றில் வளைய கூடினர் மன்னனாம்" ஜோதிட பாடல்


 சூரியன் மற்றும் புதன் ஆகிய இருவரும் சேர்ந்து 1,4,8 ஆம் இடத்தில் இடத்தில் இருந்தால் ராஜாவுக்கு நிகரானவளாக இருப்பாள்.


எனவே சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் கெட்டு விட்டது என்பது தவறான அணுகுமுறை ஆகும்.


பெண்ணின் லக்கண அதிபதி பையனுடைய ஜாதகத்தில் வலிமை  அடைந்து இருக்க வேண்டும் என்பதும், பையனுடைய லக்கனாதிபதி  பெண்ணுடைய ஜாதகத்தில் வலிமையடைந்து இருக்க வேண்டும் என்று பார்ப்பதும் ஒரு தவறான அணுகுமுறையாகும். அவரவர்  லக்கனாதிபதி  அவரவர் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டும் என்பது சரியான விதி ஆகும். 


      ஒரு ஜாதகரின் வாழ்க்கை தேர் நன்முறையில் நகர லக்கனாதிபதி என்ற அச்சாணி அவசியம் தன்னுடைய ஜாதகத்தில் தான் வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


 ஒருவருக்கு திருமணம் செய்யக் கூடிய காலகட்டத்தில் தம்பதிகள் இருவருடைய ஜாதகத்திலும் திருமண யோகம் வந்துவிட்டதா ? என்பதை கணிக்க வேண்டும்.


 இதற்கு தம்பதிகள் இருவருடைய பிறப்பு விவரங்கள் தெளிவாக வாங்கி இருவரது ஜாதகத்தையும் ஒரே கணித முறையில் கணித்து அந்த ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள், அவருக்கு நடக்கக்கூடிய தசா புத்திகள் மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய மூன்றையும் முதலில் கட்டாயம் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 சாதா கட்டத்தைப் பற்றிய ஆய்வில் இருவருடைய குணநலங்களை லக்கனாதிபதியை கொண்டு கணித்து விடலாம் என்பதால் இந்த லக்கனாதிபதியை கொண்டு அவர்களுக்கு இடையேயான உறவுநிலை தொடர்பை அறிந்து கொள்ள முடியும்.


 அடுத்தபடியாக இருவருடைய ஜாதகத்திலும் லக்கனம்  அதன் அதிபதி, குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி வாழ்க்கை துணை ஸ்தானமான ஏழாம் இடம் அதன் அதிபதி தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடம்  அதன் அதிபதி மற்றும் ஆயுள் காரகன் சனி பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  பொதுவாக லக்கனம் இரண்டாம் இடம் ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகியவற்றில்  பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு, கேது இடம் பெறுவதோ அல்லது இந்த இடத்தை ச பார்ப்பதோ நல்லதல்ல .இவற்றை பாகை அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்க பட வேண்டும்.


இதே போல அந்த இட அதிபதிகளையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் அவற்றுடனும் பாவ கிரகங்களாக கிரகங்கள் பார்வை அல்லது  சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கூடாது.இதனையும் பாகை அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்க பட வேண்டும்.


 பிறகு புத்திர ஸ்தானமான லக்கனம் மற்றும் ராசிக்கு ஐந்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகியவற்றை பாகை அடிப்படையாக கொண்டு தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் ஆய்வு செய்து பார்க்க பட வேண்டும்.


 தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் காம திரிகோண ஸ்தானமான 3,7,12 ஆம் இடங்களை ஆய்வு செய்து பார்த்து தனது வாழ்க்கை துணையை எவ்விதத்தில் தாம்பத்திய சுகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்படி வழி நடத்துவார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


மேலும் எல்லாவற்றிற்கு மேலாக மனிதனுடைய வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது தசா புத்திகள் மற்றும் கோச்சார பலன்கள் என்பதால் சாதகர் எப்படிப்பட்டவர், எவ்வளவு யோகம் மிக்கவர் போன்ற விஷயங்களை தசா புத்திகளோடு ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


    தம்பதிகள் இருவரும் திருமணத்திற்கு பிறகு எந்த லக்கன அவயோக தசைகள் அல்லது ஆறு, எட்டுக்குடைய தசைகள் போன்றவை சந்திக்காமல் இருக்கிறதா? கோச்சார் அடிப்படையில் ஏழரை ,அஷ்டம சனி நடப்பில் அல்லது வர  இருக்கிறதா? இது போன்ற விஷயங்களை ஆய்வு செய்து பார்த்து அவர்கள் தொடர்ந்து எப்படி இருப்பார்கள் என்பதை வைத்து அலசி பார்த்து பொருத்தம் போட வேண்டும்.


மேற்கண்ட இந்த வகையில் ஆய்வு செய்து பார்த்து அவர்களுக்கு இடையே பொருத்தம் போட வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்டாயம் பொருத்தம் போடக்கூடாது .என்னைப் பொறுத்த வரையில் நட்சத்திர பொருத்தத்தை விட மேற்கண்ட வகையிலான ஜாதக கட்ட பொருத்தம் தசா புத்தி மற்றும் கோச்சார பணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்து திருமணம் பொருத்தம் போடுவதே சாலச் சிறந்தது ஆகும்.இவை மட்டுமன்றி தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவானையும் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவானையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


E-mail masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: